Skip to main content

Posts

Showing posts from August 21, 2022

சீர் திருத்தம் மற்றும் தாயி ஏ இலல்லாஹ்

(26/02/2021~5 முஹர்ரம் 1438 ஹி) உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்துமுஸ்லிம்களுக்கும்) தனது ஸலாத்தினைத் தெரிவித்தப் பின்னர் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹது தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதிய பிறகு “சீர்திருத்தம் & தாயி-ஏ-இல்லல்லாஹ்” என்ற தலைப்பில் தனது சொற்பொழிவை வழங்கினார்கள். அல்லாஹ்விற்காகவும், மனித சமுதாயத்திற்காகவும் சேவை செய்யுங்கள். உங்களை சுற்றியுள்ள மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழையுங்கள். எவ்வாறு “மரணித்துப் போனவர்களுக்கும் மரணித்துக் கொண்டிருந்தவர்களுக்கும்” உயிர் கொடுத்தாரோ அத்தகைய ஹஸ்ரத் இப்ராஹீமின் உதாரணத்தை பின்பற்றுங்கள். மக்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களதுத் தேவைகளை நிறைவேற்றுங்கள மேலும் அவர்களது துன்பம் துயரங்களில் கலந்து கொள்ளுங்கள். இதுவே ஒரு தாயி ஏ இலல்லாஹ்வாக மாறுவதற்குரிய மிகச் சிறந்த வழியாகும். وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَىٰ ۖ قَالَ أَوَلَمْ تُؤْمِن ۖ قَالَ بَلَىٰ وَلَـٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِي ۖ قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَىٰ كُلِ...

விதியின் மீதான நம்பிக்கையும், ஒருவரது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை வைத்தலும்

22 ஜூலை 2022|22 துல் ஹஜ் 1443 ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "விதியின் மீதான நம்பிக்கையும், ஒருவரது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை வைத்தலும்" என்ற தலைப்பில் ஜும்ஆ பேருரையை நிகழ்த்தினார்கள். எது நடந்தாலும், நடப்பதும், நடக்கப் போவதும் அவை அனைத்தும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஞானத்தின் படியும், விருப்பத்தின் படியும் அவனுடைய கட்டளையின் படியுமே நடக்கிறது என்று நம்பிக்கைக் கொள்வது 'தக்தீர்'(விதி) என்றழைக்கப்படும். தக்தீரின் மீது நம்பிக்கை வைப்பது கட்டாயமானதாகும். தக்தீர்(விதி) மற்றும் தவக்குல் (அல்லாஹ்வை மீது நம்பிக்கை வைத்தல்) இவற்றின் மீதான நம்பிக்கையினால் ஏற்படும் நன்மைகள் பின்வருமாறு: தக்தீரை(விதியை) நம்பும் ஒருவருக்கு எந்த கஷ்டமோ அல்லது துன்பமோ ஏற்பட்டாலும், அதனை எந்த பயமுமின்றி ஏற்றுக் கொள்ளும், மேலும் அத்தகைய கஷ்டங்களை எதிர்கொண்டாலும் இதயம் உறுதியாக இருக்கும். தக்தீர்-விதியின் மீதான வலுவான நம்பிக்கை என்பத...