Skip to main content

Posts

Showing posts from June 12, 2022

ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் மாதாந்திர தர்பியத்து கூட்டம் களியக்காவிளை கிளை!

களியக்காவிளை கிளையின் மாதாந்திர தர்பியத் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12/06/2022) நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ் இக்கூடத்தில் தமிழக மாநில அமீர் முக்கராம் ஹஸ்ரத் ஸலீம் ஸாஹிப் அவர்கள், தப்லீக் செயலாளர் முக்கராம் கலீல் ரஹ்மான் ஸாஹிப், தர்பியத் செயலாளர் நூர்தீன் ஸாஹிப், துணை பொதுசெயலாளர் நஸீர் ஸாஹிப், ஊடகத்துறை செயலாளர் ஜஃபருல்லாஹ் ஸாஹிப் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் முஹம்மது ரஃபி ஸாஹிப், அஜ்மல் ஸாஹிப், ஸபீர் ஸாஹிப், அத்தாஸ் ஸாஹிப் உள்ளிட்ட பல கிளைகளைச் சார்ந்த உறுப்பினர்களும் வருகைத் தந்து சிறப்பித்தார்கள். கிளை தர்பியத் செயலாளர் ஜனாப் ஸஜி ஸாஹிப்பின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் களியக்காவிளை ஜமாத்தின் கிளை  உறுப்பினர் ஜலீஸ் சாஹிப் அவர்கள் குர்ஆன் திலாவத் செய்தார்கள். மேலும் களியக்காவிளை கிளை உறுப்பினர் மற்றும் ஸிராஜ் மக்கீன் ஜவஹரத்துல் கமால் மாநில தர்பியத் செயலாளருமான சஃப் னா சாஹிபா அவர்கள், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை)அவர்களின் "துர்ரே ஸமீன்" என்னும் கஸீதா தொகுப்பிலிருந்து "ஹம்தோம் ஸானா உஸிகோ" என்ற நஸம் பாடினார்கள் . நன்னடத்தை என...

உம்மத்தின் நோய்கள் (பகுதி 2)

10 ஜூன் 2022 / 09 துல் கஹ்தா 1443ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி 2) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ். ஸும்ம அல்ஹம்துலில்லாஹ். தற்போதைய‌ காலகட்டத்தில் இஸ்லாத்தை பாதிக்கின்ற காரணங்கள் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாற்றத்தைத் தூண்டுவதற்கு முன்னெடுக்கப்படும் தீர்வுகள் குறித்துத் தொடர்ந்து எனது வெள்ளிக்கிழமை சொற்பொழிவை வழங்கும் தவ்ஃபீக்கை எனக்கு அளித்துள்ளான். இன்ஷா அல்லாஹ் படிப் படியாக நான் இந்தத் தலைப்பின் பக்கம் வருவேன். நான் கடந்த வெள்ளிக்கிழமை உங்கள் முன் மேற்கோள் காட்டியதைப் போன்றே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: " இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்த...

முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்களின் தூதுச்செய்தி

இறை வெளிப்பாடுகள், அறிவுரைகள் மற்றும் எச்சரிக்கைகள்: எனது அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! குழந்தைகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ (சாந்தி, கருணை மற்றும் இறைவனின் அருள்கள் உங்கள் மீது நிலவட்டுமாக!) அல்ஹம்துலில்லாஹ்! மார்ச் 08, 2020 அன்று லுஹர் மற்றும் அஸர் தொழுகைக்குப் பின்னர், என்னைப் படைத்த ரப்புல் ஆலமீனிடம் பல்வேறு துஆக்களை செய்த பிறகு, அல்லாஹ் (தபாரக்) எனக்கு பல இறை வெளிப்பாடுகளை வழங்கினான். இந்த வஹீகள் என்னை துன்பத்திற்குள்ளாக்கிய பல கடினமான சோதனைகளுக்கும், (அதன் காரணமாக) என்னுடைய உடல்நலம் பாதிப்படைந்ததற்குப் பிறகு வெளிப்படுத்தப்பட்டன; அவற்றை எல்லாம் நினைத்து, என் கண்களில் கண்ணீர் மல்க, நான் அல்லாஹ்வை வேண்டி அவனுடைய ஒப்பற்ற (அசாதாரணமான) உதவியை நாடினேன். பிறகு நான் ஒரு பலவீனமான நிலையில் வீழ்ந்து விட்டேன். இந்த நிலையில்தான், அல்ஹம்துலில்லாஹ் ஸும்ம அல்ஹம்துலில்லாஹ், சர்வ வல்லமை மிக்க இறைவன், ஓர் அசாதாரணமான வாசனையை வெளிப்படுத்தி அதன் மூலம் சமஸ்கிருதத்தில் வார்த்தைகளை வெளிப்படுத்தி எனக்கு உள தைரியத்தை வழங்கினான். இந்த நறுமணம் வெளிப்பட்ட பொழுது, நான் புகைப்படலத்தையும்...

யார் மார்க்க சீர்திருத்தவாதி!

வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் கூறினார்கள்: இந்நிலையில் உங்களுக்கு நான் கூறுவேன், உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்! மார்க்க சம்பந்தமான காரியங்களைச் சீர்படுத்தி விருத்தி செய்வதற்காக ஒருவர் உங்களிடம் வந்துவிட்டார். ஆனால் நீங்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இதோ உங்கள் முன்னால் உங்களோடு பேசிக் கொண்டிருப்பவர் அவரே உங்களுடைய கண்கள் கனத்த திரையினால் மூடப்பட்டுள்ளன. உங்கள் உள்ளங்கள் உண்மையைத் தேடுகிறதென்றால் "இறைவனோடு உரையாடுவதாக வாதம் புரியும் ஒருவரைச் சோதிப்பது மிகவும் எளிதாகும்."அவரிடம் வாருங்கள், அவருடன் இரண்டு மூன்று வாரங்கள் வாழ்ந்து பாருங்கள். இறைவன் நாடினால் அவர் மீது பொழிந்து கொண்டிருக்கும் இறையருள்களின் மழையையும், அவர் மீது இறங்கிக் கொண்டிருக்கும் உண்மையான இறைவெளிப்பாட்டின் ஒளிகளையும் நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டு கொள்வீர்கள். தேடுகிறவன் கண்டு கொள்வான். தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படும். மூடப்பட்ட ஓர் இருண்ட அறையினுள் ஒளிந்து கொண்டு சூரியன் எங்கிருக்கிறது என்று குற்றம் சாட்டினால் அது வீணானது. முழுக்க முழுக்க நீயே வீணாக்கிய காரியமாகும். முட்டாளே உனது கண...

காலத்தின் இமாமின் அறிவுரை!

எனது அன்பிற்குரிய ஸஹாபிகளே, முஸ்லீம் பெருமக்களே, மற்றும் ஒட்டு மொத்த மனித சமுதாயமே மிகவும் பணிவுடனும், அமைதியுடனும் இஸ்லாத்தில் நுழையுங்கள். உங்கள் செயல்களால் இந்த அழகிய மார்க்கத்தின் மாண்பை இழக்கச் செய்து விடாதீர்கள். மேலும் உங்கள் செயல்களை உங்கள் உள்ளத்தின் இறையச்சத்துடன் செய்யுங்கள். இவ்வாறு இறையச்சம் எனும் தக்வாவுடன் செய்யும் போது தீமைக் கலவாத நன்மையானச் செயல்களைச் செய்யும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்கின்றது. இஸ்லாம் ஒரு பரிபூரண மற்றும் சிறந்த வாழ்வியல் தத்துவமாகும். இந்த மார்க்கம் நம்மை சீர்ப்படுத்துவதுடன், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் இறைவன் என்ன நாடுகிறானோ அதைநோக்கி வழி நடத்துகிறது. ஏனென்றால் இந்த மார்க்கத்தில் இறைவனுடையக் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்படுவதன் மூலம், நமது வாழ்வை அர்ப்பணித்து இந்த மார்க்கத்தை உலகத்தில் மிளிரச் செய்கின்றோம். மேலும் இறைவனுடன் வேறு எதையும் இணைவைக்காதீர்கள். அல்லாஹ் ஒருவனே உண்மையான இறைவனாவான். இஸ்லாம் என்னும் மார்க்கத்தின் பாதையில் ஞானம், கருணை மற்றும் இறையச்சத்துடன் பயணம் செய்யுங்கள். மேலும் இறையச்சம் மற்றும் அவனது அன்பின் மூலம் அவனது பாதுகாப்பு என்...

சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் இறை அருளின் நோக்கம்!

ஹஸ்ரத் முஹையுதீன் அல்  கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) போதிக்கின்றார்கள்.  அல்லாஹ் தனதுத் தூதருடைய உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்காக, இறை வெளிப்பாட்டைத் தாராளமாக ஒரு சத்தியத்தைத் தேடுபவருக்கு கிடைக்கச் செய்கின்றான். அத்துடன், அவரை "பரிசுத்த ஆவியுடனும் பேச வைக்கின்றான்". இவ்வாறு பரிசுத்த ஆவியை அவர் அடைவதன் மூலம், அவருக்கு அல்லாஹ்வின் மீதும், அவன் அனுப்பிய தூதரின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டு, அந்நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்க்கும் அதுக் காரணமாக அமைகின்றது. எனினும் இத்தகைய அருட்கொடையைப் பெற்றவர்கள், அல்லாஹ்வுடைய தூதரின் மீது பொழியப்படும் இவ்வாறான இறை வெளிப்பாடுகளுக்கு சாட்சியாகவும் இருக்கின்றார்கள். அத்துடன், அல்லாஹ்வுடைய தூதருடைய உண்மைத்துவத்தையும், இறை வெளிப்பாடுகளையும் உறுதிப்படுத்தும் வகையில் தாங்களே அவ்விறை வெளிப்பாடுகளைப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். அவ்வாறு இருந்தபோதிலும், சிலரோ இவ்வாறு பெறப்படும் அவ்விறை வெளிப்பாடுகள் அனைத்தையும் தங்கள் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள வெறும் மாயை என்பதாகக் கருதி, அவை அனைத்திலிருந்தும் தங்களுடைய முகங்களை அவர்கள்...

அஹ்மதி சகோதரர்களின் கவனத்திற்கு!

கொரோனா என்னும் கொடிய உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இந்த நோயை கட்டுபடுத்துவது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று உலக வல்லரசு நாடுகளே கூறும் அளவுக்கு இந்த நோயின் கோரதாண்டவம் உள்ளது. அஹ்மதி சகோதர்கள் இது இறை தண்டனையாகவே கருதி வந்த நிலையில், அஹமதியா ஜமாத்தின் தலைவரான மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் சாஹிப் அவர்கள் இது தொடர்பாக கூறும்போது "இது இறை தண்டனையாக கருத முடியாது" என்றும் "இது இறை தண்டனை என்று நான் அறிவிக்கவில்லை" என்கிறார். அஹ்மதி சகோதரர்களே!, உங்களிடம் பணிவோடு சில கேள்விகள் கேட்கிறோம்! மஸ்ரூர் ஸாஹிப் 2003 கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது 2020, இந்த இடைபட்ட காலகட்டத்தில் இவர் எத்தனை இறை தண்டனைகளை அறிவிப்பு செய்துள்ளார்? இறை தண்டனையை அறிவிப்பு செய்யவேண்டும் என்றால், இறைவன் புறமிருந்து வஹி அதாவது இறை அறிவிப்பை பெறுபவர் மட்டுமே இதை செய்ய முடியும் அல்லவா? இது வரை அவர் தனக்கு இறைவன் புறமிருந்து இறை வெளிப்பாடு ஏதும் வந்ததாகவோ, தான் கஷ்ஃபு காட்சி ஏதும் கண்டதாகவோ, கூறவில்லையே? அப்படி என...

திருகுரானின் அடிப்படையில் நபி வாதம்!

சூரத்துல் ஃபாத்திஹா 6 மற்றும் 7 வது வசனங்களின் விளக்கவுரை:- “இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்.” (நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக! அந்த வழி நம்மை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்படியும் இஸ்லாத்தின் வழியில் அந்த வழி ஈமானின் வழி, அந்த வழி அவனை காணமுடியாவிட்டாலும் அவன் நம்மை பார்க்கின்றான் என்பதை உணர்ந்து அவனை காண்பதைப் போன்று அந்த ஏக இறைவனை வணங்கும் அந்த “இஹ்சானின்” வழியில், அந்த வழி தக்குவாவின் வழி, மேலும் இதன்முலம் அல்லாஹ் நமக்கு என்ன கட்டளையிட்டுள்ளானோ அதை நிறைவேற்ற நாம் போராடும் அதே வேளையில் அவன் நமக்கு எதை விட்டும் விலக்குகிறானோ, அதைவிட்டு நமது மனம் ,கண்கள், காதுகள், வாய், கால்ககள், கைகள் மற்றும் நமது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நாம் பாதுகாக்கின்றோம். அந்த ஏக இறைவன் நமக்கு இவ்வாறு கற்றுக்கொடுக்கின்றான். அதாவது, நாம் அவனிடம் எங்களை நேரான வழியில் அதாவது இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைந்தவர்களின் வழியில் நம்மையும் நடத்த அவனிடம் வேண்டுமாறு கூறுகின்றான். இவ்வாறு அவன் கற்றுக் கொடுத்ததை நாம் வேண்டும்போது அதை ஏற்றுக்கொண்டு அவனது மாபெரும் அருளால் அ...

நபிமார்களின் வருகை இறுதி நாள் வரைத் தொடரும்!

ஆதமின் மக்களே! எனது வசனங்களை உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடிய தூதர்கள் உங்களிடமிருந்தே நிச்சயமாக உங்களிடம் வரும்போது, இறையச்சத்தை மேற்கொண்டு திருத்திக் கொள்வோருக்கு (வருங்காலத்தைப் பற்றிய) எவ்வித அச்சமும் ஏற்படாது; அவர்கள் (சென்ற காலத்தைப் பற்றிக்) கவலையடையவும் மாட்டார்கள். (7:36) ஹஸ்ரத்‌ மிர்ஸா பஷீருத்தீன்‌ மஹ்மூத்‌ அஹ்மத்‌(ரலி) அவர்களின்‌ குர்‌ஆன்‌ விளக்கவுரையான தஃப்ஸீரே கபீர்‌ -ல்‌ வசனம்‌ எண்‌ 7:36க்கு இவ்வாறு விளக்கம்‌ அளித்துள்ளார்கள்‌:- 936. விளக்கவுரை:- இந்த வசனமும்‌ இதற்க்கு முந்தைய வசனங்களைப்‌ போன்றே முக்கியமாக கவனிக்கப்படத் தகுந்ததாக இருக்கிறது ( உ.ம்‌ 7:27,28 & 32). "ஆதமுடைய மக்களே” என்று இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்‌ வார்த்தைகள்‌, முஹம்மது(ஸல்‌) அவர்களின்‌ காலத்திற்குரிய மக்களுக்கும்‌, இன்னும்‌ பிறக்காத (வருங்காலத்‌) தலை முறைகளுக்கும்‌ பொருந்துமே தவிர கடந்த காலங்களில்‌ வாழ்ந்த மக்களுக்கும்‌ ஆதமை நேரடியாகப்‌ பின்பற்றிய (ஆதமுடைய) மக்களுக்கோ பொருந்தாது. இது எந்தக் கண்ணோட்டத்தில்‌ இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறதென்றால்‌, மனித குலத்தின்‌ எதிர்கால தலைமுறை யினருக்குத்‌ தெர...

தூதுச் செய்தி கிடைக்கவில்லை என்று கூறி இறைவன் முன் தப்பிக்க இயலுமா?

நாளை நீங்கள் உங்களைப் படைத்தவன் முன் நிற்கும்போது நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை என்று கூறாதீர்கள். என்னை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இதை ஏற்றுக் கொள்வதோ இறை செய்தியிலிருந்து முகந்திருப்பிக் கொள்வதோ உங்களுடைய விருப்பம். கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) கூறுகின்றார்கள்:- காலத்தின் கலீஃபதுல்லாஹ் என்ற வகையில், நான் செய்ய வேண்டிய (நிர்ணயிக்கப்பட்டுள்ள) வேலையைச் செய்கிறேன். அல்லாஹ்வே இம்முக்கிய செய்தியை அளிக்க என்னை வழிநடத்தி இயக்குகின்றான்; ஏனெனில் நாளை நீங்கள் உங்களைப் படைத்தவன் முன் நிற்கும்போது நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை என்று கூறமுடியாது. “யாரும் எதையும் சொல்லவில்லை; எனக்குச் செய்தி கிடைக்கவில்லை” என்று உங்களால் கூறமுடியாது. உங்களைப் படைத்தவனிடம் உங்களால் இதைக் கூற முடியாது! இறை அறிவுறுத்தலின்படி அல்லாஹ் எனக்குக் கொடுத்துள்ள பணியை நான் செய்கிறேன். என்னை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். இதை ஏற்றுக்கொள்வதோ, இறை செய்தியிலிருந்து முகந்திருப்பிக் கொள்வதோ உங்களுடைய விருப்பம். ந...

இறை வஹீ - 05 மார்ச் 2022

05 மார்ச் 2022 சனிக்கிழமை அன்று இக்காலத்தின் இமாம், மஸீஹ், மஹ்தி மற்றும் முஸ்லிஹ் மவூதுமாகிய மொரீஷியஸைச் சார்ந்த ஹஸ்ரத் முஹையுத்தீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மது அஸீம்(அலை) அவர்கள் பெற்ற இறை வஹி - இறை வெளிப்பாடுகள். "மூன்றாம் உலகப் போர் மிக அருகில் உள்ளது." இந்த செய்திகளை அறிவிப்பதற்காக பறவைகள் என்னிடம் வந்துள்ளன. அதில் அதிகமான மக்கள் மரணித்துப் போவார்கள். இரத்த ஆறுகள் ஓடும். ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்ததைப் போன்றே ஓர் ஆண் ஐம்பது பெண்களுக்குப் பொறுப்பாவான் (என்ற காலம் நெருங்கி உள்ளது) ஏவுகணைகளும் குண்டுகளும் உலகம் முழுவதும் பரவி விடும். பலர் தங்கள் உயிரை விட நேரிடும். எல்லா ஆண்களும் போருக்குச் செல்ல வேண்டும் (என்ற நிலை ஏற்படும்). நீண்ட காலத்திற்கு முன்பு, குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களிடம் அச்சமும் மிகுந்த மரியாதையும் இருந்தது. ஆனால், இன்றோ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோரைக் கொள்கின்றனர். சிலர் தங்கள் பெற்றோரிடம் மோசமான வார்த்தைகளை கூறுகின்றனர், அவர்களை தங்கள் வீடுகளில் இருந்து உதைத்துத் தள்ளுகின்றனர். இப்போ...

இந்த நூற்றாண்டின் தாப்பதுல் அர்ல்! (கோரோனா வைரஸ்)

கொரோனா வைரஸ் பற்றி அன்னாருக்கு வெளிப்பட்ட வஹீ! இந்த வஹி அன்னாருக்கு 20.07.2019 அன்று அரபி மற்றும் கிரியோல் மொழியில் இறங்கியது. Bismillah hir rahman nir raheem After Tahajjud prayers Saturday 20 July 2019 17 Dhul-Qaddah 1440 AH Fatawakkal ‘alallaah. Innaka ‘alal-Haqqil mubeen. Innaka laa tusmi- ‘ul-mawtaa wa laa tusmi-us-summaddu-‘aaa-‘a izaa wallaw mudbireen. Wa maaa anta bihaadil-‘umyi an-zalaalatihim. ‘In tusmi-u ‘illaa may-yu’-minu bi- Aayaatinaa fahum Muslimuun. Wa izaa waqa-‘al-Qawlu ‘alayhim ‘akhrajnaa lahum Daaabbatam-minal-‘arzi tu-kallimuhum ‘annannaasa kaanuu bi- ‘Aayaatinaa laa yuuqinuun. தஹஜ்ஜுத் தொழுகைக்கு பிறகு அரபி மற்றும் கிரியோல் மொழியிலும் இறங்கிய வெளிப்பாடு மற்றும் பொருள்:- நீங்கள் அல்லாஹுவிடத்தில் நம்பிக்கை வையுங்கள் நீங்கள் உண்மையாகவே உண்மையின் மீது இருகிண்றீர்கள். உங்களால் இறந்தவர்களை செவியேற்க செய்ய முடியாது. மேலும் முதுகுக்குப் பின்னால் திரும்பிய அத்தகைய செவிடர்களை உம்மால் கேட்கும்படி செய்ய இயலாது. இன்னும் குருடர்களை உம்மால் அவர்களின் தவறுகளில் இருந்து நேர்வழியி...