Skip to main content

Posts

Showing posts from August 4, 2024

மேற்கத்தியமயமாகும் (இஸ்லாமிய) உம்மத்

11 நவம்பர் 2022 ~16 ரபிய்யுல் ஆஹிர் 1444ஹி உலகெங்கிலும் உள்ள தனது ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு ஹஸ்ரத் அமீருல் மூஃமினீன் முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் தஷ்ஹுது, தவ்வூத் மகற்றும் சூரா அல் ஃபாத்திஹாவை ஓதினார்கள். பிறகு 'மேற்கத்தியமயமாகும் உம்மத்' என்ற தலைப்பின் கீழ் தனது ஜும்ஆ உரையை வழங்கினார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருளால், நபி பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் - நாடு துறந்து சென்றவர்களிடம் உரையாற்றிய ஹதீஸ் குறித்த எனது கடந்த வார விளக்கத்தில் இருந்து எனது குத்பாவைத் தொடர்கிறேன்: “நீங்கள் சோதிக்கப்படும் ஐந்து விஷயங்கள் உள்ளன, உங்களது வாழ்வில் அவைகளை காணாமல் இருக்க நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்: எந்த சமுதாயத்தில் மானக் கேடானவை பரவலாகிவிடுமோ அப்போது முன்னர் கேள்விப்படாத "காலரா" போன்ற புதுமையான நோய்கள் பரவும். அளவு, நிறுவைகளில் குறைபாடு செய்பவர்களுக்கு பஞ்சம், சிரமம் ஏற்படும். மேலும், அநியாயக்கார அரசன் சாட்டப்படுவான். ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண...

அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்

05 ஜூலை 2024~28 துல் ஹஜ் 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, ‘அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்’ என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள். அல்லாஹ் எப்போதும் நித்தியமானவனும், நிலைத்திருப்பவனும், தன்னில் பரிபூரணமானவனும் ஆவான். மனிதர்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. [ஆனால், அல்லாஹ்விடத்தில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை]. மனிதன் சிறப்புமிக்கவனாக மாறும்போது, அவனுக்கு இறைவன் ஒரு புதிய வெளிப்படுத்துதலுடன் தன்னைத் தானே வெளிப்படுத்துகிறான். மனிதன் [இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடிய ஆன்மீகத்தில்] முன்னேறும் போது இறைவன் அவனிடத்தில் ஓர் உயர்ந்த வெளிப்படுத்துதலுடன் தன்னை வெளிப்படுத்துகிறான். மனிதன் ஒரு அதிசயமான மாற்றத்திற்கு ஆளாகும்போது இறைவன் தனது சக்தியையும் மகிமையையும் அற்புதமாக வெளிப்படுத்துகிறான். இதுவே அதிசயங்கள் மற்றும் அற்புதங்களின் வேராகும். நமது சர்வவல்லமையுள்ள இறைவனாகிய ...