Friday, August 9, 2024

மேற்கத்தியமயமாகும் (இஸ்லாமிய) உம்மத்

11 நவம்பர் 2022 ~16 ரபிய்யுல் ஆஹிர் 1444ஹி

உலகெங்கிலும் உள்ள தனது ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு ஹஸ்ரத் அமீருல் மூஃமினீன் முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் தஷ்ஹுது, தவ்வூத் மகற்றும் சூரா அல் ஃபாத்திஹாவை ஓதினார்கள். பிறகு 'மேற்கத்தியமயமாகும் உம்மத்' என்ற தலைப்பின் கீழ் தனது ஜும்ஆ உரையை வழங்கினார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருளால், நபி பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் - நாடு துறந்து சென்றவர்களிடம் உரையாற்றிய ஹதீஸ் குறித்த எனது கடந்த வார விளக்கத்தில் இருந்து எனது குத்பாவைத் தொடர்கிறேன்: “நீங்கள் சோதிக்கப்படும் ஐந்து விஷயங்கள் உள்ளன, உங்களது வாழ்வில் அவைகளை காணாமல் இருக்க நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்: எந்த சமுதாயத்தில் மானக் கேடானவை பரவலாகிவிடுமோ அப்போது முன்னர் கேள்விப்படாத "காலரா" போன்ற புதுமையான நோய்கள் பரவும்.

அளவு, நிறுவைகளில் குறைபாடு செய்பவர்களுக்கு பஞ்சம், சிரமம் ஏற்படும். மேலும், அநியாயக்கார அரசன் சாட்டப்படுவான். ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண்டால் வானிலிருந்து வரும் மழை அவர்களுக்கு தடுக்கப்படும். மிருகங்கள் மட்டும் இல்லையெனில் அவர்களுக்கு அறவே மழை பொழியாது. அல்லாஹ் மற்றும் அவனது தூதருடன் செய்து கொண்ட வாக்குறுதியை முறித்துவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் விரோதிகளை சாட்டிவிடுவான். அவர்களிடமுள்ளதை விரோதிகள் கைப்பற்றிக் கொள்வார்கள்.

அல்லாஹ்வின் வேதத்தின்படி இல்லாமல் தங்களின் மனோ இச்சைபடி தலைவர்கள் தீர்ப்பு வழங்கினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே சண்டை சச்சரவுகளை ஏற்ப்படுத்திவிடுவான். (இப்னுமாஜா)

மேற்கத்திய நாடுகள் மிக நீண்ட காலமாக இஸ்லாத்தை ஒரு பலிகடாவாக எடுத்துக் கொண்டன. [அதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் மீது அதிகமான பழிகளைச் சுமத்தி, இன்றைய சமூகத்தில் உள்ள அனைத்து தீமைகளுக்கும் இஸ்லாமே காரணம் என்று கூறுகிறார்கள்] மேலும், முஸ்லிம்களை தங்களின் தேவைகளுக்குப் பயன்படுத்தி கொள்கின்றனர். [அதாவது. நம் காலத்தில் இந்த தற்காலிக உலகில் அவர்கள் விரும்பும் அனைத்தும்]. இஸ்லாம் இப்படித்தான், இஸ்லாம் அப்படித்தான் [என்று ஒரு மோசமான வழியில் ] அல்லாஹ்வின் தூய மார்க்கத்தின் மீது சேற்றைவாரி வீசுகிறார்கள். இஸ்லாம் உலகில் மீண்டும் ஆதிக்கம் செலுத்திவிடுமோ என்ற அச்சத்தில் இஸ்லாத்தின் இருப்பு அவர்களை நடுங்க வைக்கிறது. ஆனால், அவர்கள் அஞ்சுவதுபோல் இன்ஷா அல்லாஹ் நிகழ்ந்து விடும். ஆயினும் அது அவர்கள் பார்க்கின்றவாறான ஒரு

தீய வழியிலும் அல்லது அவர்கள் பொய்யாக சித்தரிக்கும் சாபக் கேடான ஒன்றாகவும் இருக்காது.

அவர்கள் இஸ்லாத்தை சாபக் கேடாகப் பார்க்கின்ற அதே வேளையில், இந்த அழகிய மார்க்கமே உண்மையில் அவர்களின் இரட்சிப்பாகும். [மேலும் தூய்மையான உள்ளம் கொண்டவர்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்]. ஆயினும் அவர்கள் இன்னும் அறியாதவர்களாகவே உள்ளார்கள். [இஸ்லாமோஃபோபியா - இஸ்லாம் அல்லது முஸ்லிம்களுக்கு எதிரான தப்பெண்ணமானது அவர்களது மனதை அச்சத்துடன் ஆக்கிரமித்துள்ளதால் இந்த உண்மையை அவர்கள் இன்னும் அறியாதவர்களாகவே உள்ளனர்].

அவர்களின் கண்ணோட்டத்தை தடுத்துவைத்துள்ள கண்மூடித்தனமானவை அவர்கள் உண்மையை புரிந்து கொள்வதிலிருந்தும் தடுத்துவைத்துள்ளது.

இஸ்லாத்தின் அமைதி அவர்களை வெற்றி கொள்ளும். இஸ்லாத்தின் வசந்த காலம் இந்த உலகில் உள்ள தூய ஆன்மாக்களின் வாழ்வில் புதிய தொரு நாளைக் கொண்டுவரும்.

அரபு மக்கள் தங்கள் அரசாங்கங்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த, மேலும் அதற்காக அவர்களின் அடக்குமுறை செய்யும் தலைவர்களை வீழ்த்திட மேற்கத்திய நாடுகளின் பெயரளவிலான உதவியை பெற்ற "அரபு வசந்தம்" (என்ற என்றழைக்கப்பட்ட பெயருடன்) இதனை குழப்பிக் கொள்ள கூடாது. அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளோ தங்கள் சமூகத்தை, அவர்களது உலகின் (கொள்கையில்) இருந்தும் விலக்கி மற்றுமொரு வடிவில் மூழ்கடித்துள்ளன. அவர்கள் நேரான பாதையில் இருந்தும் விலகிச் சென்றுள்ள ஒரு சமூகமாகும்.

ஆகவே, முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதை விட்டு விட்டு, மேற்கத்திய (நாகரீகத்தின்) பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, அதன்மூலம் அவர்களைப் போன்ற (எந்த) கட்டுப்பாடுகள் இல்லாமலும், இறைத் தண்டனைகள் குறித்து எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமான வாழ்க்கை அவர்களால் வாழ முடியும் என்பதனை அவர்கள் விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் இருந்து விலகிச் செல்லும் இத்தகைய விலகல்கள் மற்றும் மேற்குலகத்தின் நவீனப் போக்குகளை கடை பிடித்தல் போன்றவை இறை கோபத்தையும் தண்டனையையும் கொண்டு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கடந்த வாரம் நான் உங்களிடம் கூறியதைப் போல், பெரும்பான்மையான அரேபியர்கள் முஸ்லிம்கள் என்பதற்காக அமெரிக்கா அரபு உலகத்தையே கவிழ்க்க விரும்புகிறது. அவர்கள் இஸ்லாத்தை கொஞ்சம் கொஞ்சமாக [விஷத்துளிகளை செலுத்துவதை போன்று] அழிக்க விரும்புகிறார்கள்.

பாலஸ்தீனம் போன்ற முஸ்லீம் நாடுகளை வலுவிழக்கச் செய்ய அவர்கள் கையாளும் அனைத்து வகையான உத்திகளும், உலகில் இஸ்லாம் மேலாதிக்கம் பெற்று விடும் - மேலான ஆட்சி செய்யும் - என்று அவர்கள் பயப்படு அஞ்சுவதே இதற்குக் காரணம் ஆகும்.

இஸ்லாம் ஆயுதங்களைக் கொண்டல்லாமல் "சர்வவல்லமையுள்ள இறைவனின் தூய இறை வெளிப்பாடுகள் உண்மையான நம்பிக்கையாளர்கள் தங்கள் காலத்து அல்லாஹ்வின் தூதர்களுக்குக் கீழ்ப்படிதல் அவர்களின் அன்றாட வாழ்வில் குர்ஆனின் போதனைகளை உயிர்ப்பித்தல் ஆகியவற்றைக் கொண்டு இஸ்லாம் வெற்றி பெறும் காலமே இஸ்லாத்தின் வசந்த காலம் ஆகும்" இன்ஷா அல்லாஹ்!

இந்த (வசந்த காலத்தின்)வருகையின் மீது நம்பிக்கை வைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், இஸ்லாம் என்பது எல்லாக் காலங்களிலும் [இவ்வுலகில் மட்டுமல்ல, மறுமையிலும்] நிலைத்திருக்கக் கூடிய உயிருள்ள மார்க்கம் ஆகும். இன்று இஸ்லாத்தின் மீது எல்லா இடங்களில் இருந்தும் தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

இது மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் ஆகும், இருப்பினும் (துருக்கி, பாலஸ்தீனம் மற்றும் பிற முஸ்லீம் நாடுகளில் உள்ளவர்களாக இருக்கட்டும். அதே போல் இஸ்லாம் அல்லாத நாடுகளில் உள்ள முஸ்லிம்களாக இருப்பினும் சரி இந்த உம்மத்தின் பல உண்மையான மற்றும் நேர்மையான தன்னார்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்சியைக் கொண்டு இஸ்லாத்தின் இறுதி வெற்றிக்காக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அணியில் பலரும் இணைந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால், நான் கூறியது போல் இஸ்லாத்தை மேற்கத்திய நாடுகளைப் போன்று நினைக்கவும், கருதவும் கூடாது. இது கீழகத்திய (நாடுகளை சார்ந்ததும்) அல்ல மேற்கத்திய (நாடுகளை சார்ந்ததும்) அல்ல. இந்த உலகத்தில் மக்கள் எங்கு வாழ்ந்தாலும், நிச்சயமாக இது அவர்கள் அனைவருக்குமான உண்மையான வாழ்க்கை வழிமுறையாகும்.

முழு உலகமும் அல்லாஹ்வின் படைப்புகளாகும். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ரஷ்யாவாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த நாடாக இருந்தாலும் சரி இவ்விஷயத்தில் சொந்தமாக்கி உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில், அவர்களே அல்லாஹ்வின் அடிமைகள் மட்டுமே. ஆனால், அல்லாஹ் அவர்களின் இறைவனாக இருக்கும்போது, ​​இரு உலகங்களிலும் உள்ள உண்மையான வெற்றி அல்லது தங்களின் அழிவுக்குரிய அடக்கஸ்தளத்தை தாங்களே தோண்டி கொள்ளுதல் ஆகியவற்றின் வழியை வகுக்கக் கூடிய சுதந்திரத்தையும் அவன் அவர்களுக்கு வழங்கியுள்ளான்.

இன்று முஸ்லிமல்லாதவர்கள், குறிப்பாக உண்மையான அரசியலை அறியாமல் சுயமாக உருவான அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் வாழ்வில் பயங்கரத்தை பரப்பி வருகின்றனர். இஸ்லாத்தை நவீனமயமாக்கல் மற்றும் மேற்கத்தியமயமாக்கல் என்பதன் பக்கம் அவர்களை ஈர்ப்பதற்காக முஸ்லிம்களின் இன்றைய தலைமுறையில் இப்படியான குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

இன்றைய புதிய தலைமுறையினர், ஒரு ஆண் மற்றொரு ஆணை திருமணம் செய்துக் கொண்டு குழந்தையை தத்தெடுக்கலாம் அல்லது மருத்துவ ரீதியாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம். ஆனால், சர்வ வல்லமையுள்ள இறைவனின் (இயற்கை மார்க்கத்தின்) கட்டளைகளுக்கு கீழ்படியாமல் இருத்தலை பழைய ஏற்பாட்டிலோ, புதிய ஏற்பாட்டிலோ, திருக்குர்ஆனிலோ அதே போன்று வேறு எந்த புனித வேதங்களிலோ காணப்பட்டாலும் சரி, ஏதோ ஒரு வகையில் அந்த சமூகத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்.

சோதோம், கொமோரா போன்ற கீழ்ப்படியாத தேசங்களின் அழிவைப் பற்றி நாம் படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். லூத் நபி (அலை) அவர்களிடம் (மக்களிடம்) கடுமையாக நடந்து கொள்ளவில்லை, ஆனால் அவர்கள் தமக்குத் தாமே கடுமையாக நடந்து கொண்டனர்.

முஸ்லீம்களாக இருப்பதனால் அல்லாஹ்வின் விருப்பத்திற்கும் கட்டளைகளுக்கும் ஏற்றவாறு இல்லாமல் இருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களை, அனைத்து பாலின ஈர்ப்புடையவர்களை, திருநங்கைகளை, அல்லது வேறு எந்த பாலின அடையாளம் உடையவர்களையும் கொல்லத் தொடங்க வேண்டும் என்ற பொருள் அல்ல. மாறாக, அவர்களுக்கு உண்மை தூய்மை மற்றும் இரட்சிப்பின் செய்தியை வழங்குவதும் மேலும் அவர்களின் காமம் மற்றும் சரீர இச்சைகளை அவர்களுக்கு உண்மையில் எது அனுமதிக்கப்பட்டுள்ளது அல்லது எது அனுமதிக்கப்படவில்லை என்ற உண்மையான பகுத்தறிவுடன் அவர்களை சிந்திக்கச் வைக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இந்த மக்கள் மனிதர்களாக இருந்த போதிலும், அல்லாஹ்வின் சட்டத்தை ஏற்றுக் கொள்ள வற்புறுத்த முடியாது. ஆயினும்கூட, குடும்ப வாழ்க்கை மற்றும் குடும்ப அழகுகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் ஊடகங்கள் அனைவரின் மனதிலும், குறிப்பாக சிறு குழந்தைகளின் உள்ளத்தில் தவறான விஷயங்களை திணிக்க முயற்சிக்கிறது.

எது சரி, எது தவறு என்பதற்கு இடையே ஒரு எல்லை கோடு இருக்க வேண்டும். மேலும், இன்றைய காலத்தில் பள்ளிப் பாடத்திட்டத்தில் இது நெறிப்படுத்தப்பட்டு இயல்பாக்கப்பட்டு வரும் காரணத்தால் இவை அனைத்தும் சாதாரணமானவை என்று நினைக்கக் கூடிய புதிய தலைமுறையினரை குழப்பிவிடும். ஆனால் அது சாதாரணமானவை அல்ல என்பதால் சிறுவயதிலேயே தங்கள் குழந்தைகளுக்கு இதைக் கற்றுக்கொடுப்பது இன்றைய முஸ்லிம் பெற்றோர்களின் கடமையாகும்.

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் படி, முரட்டுத்தனமாக அல்லாமல் உண்மையான முஸ்லிம்களாக இருப்பதன் மூலம் சமூகத்தில் உள்ள அந்த கடினமான கேள்விகளையும் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள குழந்தைகள் இன்று நன்கு தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இந்த அடிப்படை போதனைகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும். ஏனெனில், ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இஸ்லாம் அல்லாத இன்னும் வேறு எந்த மார்க்கத்தின் மத வரையறையின் படியும் அல்லாத இன்றைய சமூகத்தின் அத்தகைய அம்சங்களை கற்றுக் கொடுக்க பள்ளி பாடத்திட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

அனைத்து நம்பிக்கைகளும் அவற்றின் தோற்றத்தில் உண்மையானதாக இருந்தன, ஆனால் கருத்து வேறுபாடுகள் மற்றும் இறைவனின் வார்த்தைகளின் இடைச்செருகல்கள் காரணமாக, இஸ்லாம் தோன்றி அனைத்து மனிதகுலத்திற்கும் இறுதி வழிகாட்டுதலாக திருக் குர்ஆனை முன்வைக்கும் வரை இந்த நம்பிக்கைகள் அவற்றின் போதனைகளை இழந்தன.

எனவே, இன்று நாம் வாழும் சமூகம் ஒழுக்கக்கேட்டில் ஆழமாக சிக்கிக் கொண்டிருப்பதால், குழந்தைகளின் ஆன்மீகக் கல்வியே மூலதனமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. அனைத்து சமூகங்களும், அரபு நாடுகளும் கூட மேற்கத்தியமயமாக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்கள் பெயருக்கு மட்டுமே முஸ்லீம்களாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் நாத்திகர்களாகவோ அல்லது மார்க்கத்தை நடைமுறைப்படுத்தாத வெற்று முஸ்லிம்மக்களாக மட்டுமே இருக்கின்றார்கள்.

அல்லாஹ் (தபாரக்), திருக்குர்ஆனில் இவ்வாறாக கூறுகிறான்: அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததைக் தங்கள் நாவுகளால் கூறுகின்றனர். (அல்-ஃபாத் 48:12)

அரேபிய உலகம் மேற்கத்திய நாடுகளுக்குத் தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை நாம் பார்க்கும்போது, ​​ நபிகள் நாயகம் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்கள் முன்னறிவிக்கப்பட்ட தஜ்ஜாலின் இன்னல்கள் பற்றி நமக்கு நினைவுக்கு வருகிறது.

அதே வேளையில் சில நவீன வசதிகளானவை பாவங்கள் அல்ல, ஆனால், அவற்றுள் சினிமா அரங்குகள், சூதாட்டம், ஹாலோவீன் பார்ட்டிகள் மற்றும் தங்கள் நாடுகளை மேற்கத்திய நாடுகளுக்கு தோழமையாக காட்டுவதற்காக உள்ள மற்ற கவர்ச்சி போன்ற தீமைகளும் மேலும் அவர்களின் ஆடை அணியும் முறையும் இஸ்லாத்தின் அடிப்படை போதனைகளுக்கு எதிரானதாக உள்ளன. இது வருந்தத்தக்கதாகும். என்னவென்றால், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் அந்த முன்னறிவிப்புகளை அறிந்திருந்தும், ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியது போலவே, மேற்குலக மக்களின் போக்குகளை அவர்கள் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு சயீத் அல்-குத்ரி அறிவித்தார்கள்:

"உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் ஜாணுக்குச் ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ("நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள்") யூதர்களையும் கிறித்தவர்களையுமா?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்த இரண்டு மதத்தை தவிர) "வேறு யாரை?" என்று (திருப்பிக்) கேட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

தற்போது நான் இங்கே நிறுத்திக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ், நான் இதே விஷயத்தை அடுத்த வாரம் தொடர்கிறேன். அல்லாஹ்வின் வழி உண்மையில் மகத்தானவை ஆகும். அவன் தனது ஒளியைத் தேடுபவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறான். மேலும், தீமை செய்பவர்களைப் பொறுத்தவரை, தண்டனை அவர்களை வந்தடையும் முன்பு அவர்கள் மனந்திரும்புவதற்கும் தங்களை சீர்திருத்துவதற்கும் போதுமான அவகாசத்தை வழங்குகிறான். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

Monday, August 5, 2024

அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்


05 ஜூலை 2024~28 துல் ஹஜ் 1445ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, ‘அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்’ என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

அல்லாஹ் எப்போதும் நித்தியமானவனும், நிலைத்திருப்பவனும், தன்னில் பரிபூரணமானவனும் ஆவான். மனிதர்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. [ஆனால், அல்லாஹ்விடத்தில் மாற்றங்கள் ஏற்படுவதில்லை]. மனிதன் சிறப்புமிக்கவனாக மாறும்போது, அவனுக்கு இறைவன் ஒரு புதிய வெளிப்படுத்துதலுடன் தன்னைத் தானே வெளிப்படுத்துகிறான். மனிதன் [இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கக் கூடிய ஆன்மீகத்தில்] முன்னேறும் போது இறைவன் அவனிடத்தில் ஓர் உயர்ந்த வெளிப்படுத்துதலுடன் தன்னை வெளிப்படுத்துகிறான். மனிதன் ஒரு அதிசயமான மாற்றத்திற்கு ஆளாகும்போது இறைவன் தனது சக்தியையும் மகிமையையும் அற்புதமாக வெளிப்படுத்துகிறான். இதுவே அதிசயங்கள் மற்றும் அற்புதங்களின் வேராகும்.
நமது சர்வவல்லமையுள்ள இறைவனாகிய அல்லாஹ் மிகவும் உண்மையுள்ள இறைவன் ஆவான். மேலும் அவன் அற்புதமான செயல்களை [அவனுடைய அடையாளங்கள் மற்றும் வெளிப்படுத்துதல்கள் ஆகியவற்றை] அவனிடம் விசுவாசமாக இருப்பவர்களிடம் வெளிப்படுத்துகிறான். இந்த உலகம் அவர்களை விழுங்கிவிட விரும்புகிறது, எதிரிகள் அவர்களைப் பார்த்து (தங்கள்) பற்களைக் கடித்துக் கொள்கின்றனர், ஆனால் அவர்களின் நண்பனாக இருக்கக்கூடிய அல்லாஹ்வாகிய அவனே அவர்களை அனைத்து ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றி, அனைத்து விஷயங்களிலும் அவர்களை வெற்றிபெற வைக்கின்றான். அல்லாஹ்வை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டதன் பின்னர் அத்தகைய நம்பிக்கையாளர்கள்: 

"நாங்கள் அவன் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் அவனை அடையாளம் கண்டு கொண்டோம். அவனே அனைத்து உலகங்களின் இறைவன் ஆவான்” என்று கூறுகின்றனர்.

அல்லாஹ்வுடைய தூதரின் சகாப்தத்திற்கு சாட்சிபகர்பவர் இரு மடங்கு அருளுக்குரியவர் ஆவார். இறைத்தூதர் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுக்குப் பிறகு, எவரும் ரூஹுல் குத்தூஸ் - பரிசுத்த ஆவியுடன் உலகிற்கு மற்றொரு ஷரீயத் சட்டத்தையும், மற்றொரு குர்ஆனையும் ஒருபோதும் கொண்டு வரப் போவதில்லை.இஸ்லாம் தான் இறுதி மார்க்கம் ஆகும், திருக்குர்ஆன் தான் இறுதி ஷரீஅத் ஆகும், ஆகையால், இதுவே திரு நபி முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களை உலகிற்கு இறுதி ஷரீயத்துடைய நபியாகவும், தூதராகவும் ஆக்குகிறது.

ஆனால், தீமை நீடித்திருக்கும் வரையிலும், உலகம் மனிதர்களால் நிரம்பியிருக்கும் காலம் வரையிலும், இஸ்லாம் மற்றும் மனிதகுலத்தின் சீர்திருத்தவாதிகளான ஷரீஅத்தை கொண்டு வராத நபிமார்களும், தூதர்களும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருப்பார்கள். அதனால், நபி (ஸல்) அவர்களின் போதனைகளின் சாரம்சம் எப்போதெல்லாம் துச்சமாக ஒன்று மற்றதாகக் கருதப்படுகிறதோ (அல்லது கைவிடப் படுகிறதோ அப்போ தெல்லாம்) இந்த போதனைகளைப் புதுப்பித்து இஸ்லாத்தின் உண்மைத்தன்மையை உலகுக்கு வெளிப்படுத்திக் காட்டுவதற்காக எவரேனும் ஒருவர் வருகைதருவார்கள்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் முன்னறிவித்தபடி, இறுதி நாட்கள் தஜ்ஜாலின் [அந்தி கிறிஸ்துவின்) தோற்றத்துடன் கடும் சோதனைகளுக்குரிய நாட்களாகவும், அது போன்றே பெயர் தாங்கிய இஸ்லாமிய அறிஞர்களது இஸ்லாமியமயமாக்கலாகவும் இருக்கும், முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே இருப்பார்கள் என்றும் யூத-கிறிஸ்தவர்களின் வழிமுறைகளையும், நடத்தைகளையும் (அப்படியே) பின்பற்றுவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவித்தார்கள்! இஸ்லாத்தையும், தவ்ஹீதையும் - அதாவது அல்லாஹ்வின் ஏகத்துவத்தையும் அழிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் பரவி வரும் ஷைத்தான்களின் தாக்குதல்களை எதிர்க்க அல்லாஹ் செயல்படாமல் (அப்படியே) இருந்துவிடுவான் என்று நினைக்கிறீர்களா?

அல்லாஹ், சுன்னத்-அல்லாஹ்வாகிய அவனது (முந்தைய) நடைமுறையேப் போன்றே தன்னால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களைத் தொடர்ந்து எழுப்புவான். அவ்வாறான இஸ்லாத்தின் சீர்திருத்தவாதிகள் பரிசுத்த ஆவியினால் (ரூஹுல் குத்தூஸினால்) ஞான ஒளியைப் பெற்று, [அதாவது, எந்த ஒரு புதிய சட்டத்தையும் கொண்டிராத – திருக்குர்ஆனின் கட்டளைகளை மக்களுக்கு நினைவூட்டக் கூடிய அத்தகைய]அல்லாஹ்வின் இறை வெளிப்பாடுகளைப் பெற்று நபிகள் பெருமானார் முஹம்மது(ஸல்) (அவர்களைப் பின்பற்றி) அன்னாரது அடிச்சுவடுகளில் வருகை தருவார்கள்.
அவ்வாறே, (இஸ்லாமிய) மார்க்கத்தைப் புதுப்பிக்க ஒவ்வொரு நூற்றாண்டிலும், வருகை தந்த இஸ்லாத்தின் சீர்திருத்தவாதிகளுக்குப் பிறகு அல்லாஹ், தனது வாக்குறுதியின்படி, இஸ்லாத்தின் அசல் போதனைகளின் பக்கம் மக்களை மீண்டும் கொண்டு வருவதற்காக மஸீஹ் மற்றும் மஹ்தியாக ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களையும் உலகிற்கு அனுப்பினான். இன்று, நமது தற்போதைய சகாப்தத்தில், அல்லாஹ் இந்த எளிய அடியானை, இஸ்லாத்தை நோக்கி (அழைத்து வரும்) உலகின் சீர்திருத்தத்திற்காக எனது சகாப்தத்தின் மஸீஹாகவும், கலீபத்துல்லாஹ் அல்-மஹ்தியாகவும் அனுப்பியுள்ளான், மேலும் (ஷரீஅத் சட்டத்தை கொண்டிராத) நபி மற்றும் தூதர் என்ற உன்னதப் பதவிகளையும் எனக்கு வழங்கியுள்ளான். அல்லாஹ், எனக்கு அவனது அடையாளங்களை இறக்கி வைத்து, வலிமை மிக்க அடையாளங்களையும் எனக்குக் காட்டினான். வானங்களிலும் சரி அல்லது பூமியிலும் சரி, அவனைத் தவிர வேறு எந்த இறைவனும் இல்லை. அவன் மீது நம்பிக்கை வைக்காதவர் அவனது அருள்களை இழந்தவராகவே குழப்பத்தில் வாழ்கிறார்.
அல்ஹம்துலில்லாஹ் இன்று, எனது வருகையுடன், அல்லாஹ் என்னைப் பின்பற்றுபவர்களில் சிலருக்கும் கூட அவர்களின் நம்பிக்கையில் ஆறுதலளிக்கும் வகையில் அவனிடமிருந்து இறை வெளிப்பாடுகளை அவர்களுக்கு வழங்கியுள்ளான். சிலர் கனவுகள், ஆன்மீக தரிசனங்கள் மற்றும் உண்மையான இறை வெளிப்பாடுகளையும் பெற்றுள்ளனர். மேலும் (இவ்வாறு கிடைக்கும்) அல்ஹம்துலில்லாஹ், இந்த அனைத்து இறை வெளிப்பாடுகளுக்கும் மேலாக அல்லாஹ்வின் பிரதிநிதியாகிய அல்லாஹ்வின் தூதர் பெறுகின்ற இறை வெளிப்பாடுகளானது சக்தி வாய்ந்த சூரியனைப் போல், பகலைப் போன்று தெளிவாகவும், பிரகாசமாகவும் இருக்கும். அவனுடைய வெளிப்படுத்துதல்கள் மற்றும் அவனது அடையாளங்களின் மூலம், நம்முடைய அல்லாஹ் எந்த அளவு சக்தி வாய்ந்தவனும், நித்தியமானவனுமாக இருக்கிறான் என்பதை நாம் பார்த்தோம்; அவனுடைய பல அற்புதமான சக்திகளை நாம் உண்மையில் கண்டிருக்கிறோம். உண்மை என்னவென்றால், அவனுடைய சொந்த வாக்குறுதிக்கும், அவனுடைய சொந்த வேதத்துக்கும் எதிரானதைத் தவிர, அவனால் முடியாதது என்று எதுவுமே இல்லை.

ஆகவே, நான் உங்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள்‌ பிரார்த்தனைக்காக எழுந்து நிற்கும்போது, நம்பிக்கையாளர்களாகியநீங்கள், உங்கள் இறைவனாகிய அல்லாஹ் சர்வ வல்லமை கொண்டவன் ஆவான் என்று நம்பிக்கைக் கொள்ள வேண்டும். அப்போது உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும், அவனது சக்தியின் அற்புதங்களையும் நீங்கள் காண்பீர்கள். நான் உங்களுக்குக் கூறுவது எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலானதேத் தவிர செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் அமைந்தவை அல்ல.

அல்லாஹ்வே ஒவ்வொன்றினுடைய அதிபதி ஆவான். ஆனால் அல்லாஹ்வின் வேதமானது பிரார்த்தனை தொடர்பாக ஒரு குறிப்பிட்ட விதியை நிறுவியுள்ளது: அவன் [அல்லாஹ்] தனது எல்லையற்ற கருணையின் காரணமாக ஒரு நபரை (தனது)நண்பனைப் போன்று நடத்துகிறான். 

"என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(களது பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; (முஃமின் 40:61) 

என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியிருப்பதை போன்றே, சில சமயங்களில் அவன் அந்த நபர் கேட்பதை நிறைவேற்றுகிறான், மேலும் 

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், சோதிப்போம்...” (அல்பகரா 2:156) 

என்று அவன் கூறுவது போல், சில சமயங்களில், சில சூழ்நிலைகளில் அவனது விருப்பம் மேலோங்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். இவ்வாறுதான் ஒரு நபரின் பிரார்த்தனைகளுக்கு ஏற்றவாறு அவனால் பிரதிகரிக்க முடியும். ஒரு நபருக்கு இறைவன் மீது இருக்கக்கூடிய உறுதித் தன்மையை அதிகரிக்கச் செய்வதற்காக அவன் அவ்வாறு செய்கிறான். மேலும் சில சமயங்களில் இறைவன் தனது விருப்பத்தை மேலோங்கச் செய்து அந்த நபரின் மீதான நேசத்தின் காரணமாக அவரின் அந்தஸ்தை அவன் உயர்த்திவிடலாம் அல்லது அல்லாஹ் அவரை தனது ஒளியின் பாதைகளில் முன்னேறச் செய்யலாம்.

நமது (இறைவனாகிய) அல்லாஹ் எல்லையற்ற அற்புதங்களையும் கொண்டுள்ளான். ஆயினும் உண்மையுடனும், ஆன்மாவின் வலிமையுடனும் அவன் பக்கம் திரும்புபவர்களால் [அவனுக்கு மட்டுமே உரித்தானவர்களாகிவிடுவதற்காக அவன் பக்கம் திரும்புபவர்களால்] மட்டுமே இந்த அதிசயங்களைக் கண்டு கொள்ள இயலும். அவனுடைய ஆற்றலின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும், அவனிடத்தில் விசுவாசமாக (உறுதியுடன்‌) இல்லாதவர்களுக்கும் அவன் தனது அதிசயங்களை வெளிப்படுத்துவதில்லை. துரதிர்ஷ்டவசமாக, அல்லாஹ்வால் அறிவும் சுதந்திரமும் மனிதனுக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் கூட, எப்போதும் உண்மையையும் பொய்யையும் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதை (மனிதனாகிய) அவனே அறியாதவனாகவும் இருக்கிறான். மேலும் அல்லாஹ் மட்டுமே அவனுடைய எஜமானனும் இறைவனனும் ஆவான் என்பதை அவன் இதுவரையிலும் அறியாதவனாகவே இருக்கிறான்.

உண்மையில் நமது இறைவனாகிய, நமது அல்லாஹ்வே நமது உண்மையான சுவர்க்கம் ஆவான். மேலும் அவனே நமது உண்மையான நல்வாழ்வு ஆவான். நம்முடைய மாபெரும் சந்தோஷங்கள் அவனிடத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அவன் எத்தகையதொரு பொக்கிஷம் என்றால், அதைப் பெறுவதற்காக நாம் நமது உயிரையேத் தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் கூட அந்த பொக்கிஷத்தை உடைமையாக்கிக் கொள்வதானதுத் தகுந்ததாகும். அவன் எத்தகையதொரு ஆபரணம் என்றால் அவனை [அதாவது, அல்லாஹ்வை] அடைந்து கொள்ளவேண்டும். என்பதற்காகவே நாம் சொந்தமாக்கியிருந்த அனைத்தையும் இழந்து போனாலும் கூட, அது வாங்குவதற்கு தகுதியுடைய ஆபரணம் ஆகும்.

நீங்கள் அல்லாஹ்வுக்காக என்று ஆகிவிட்டால், பின்னர் அல்லாஹ்வும் உங்களுக்கானவனாக ஆகிவிடுவான் என்பதில் உறுதியாக இருங்கள். [ஆன்மீக ரீதியாக] அவன் உங்களை விழித்திருக்க வைப்பான், நீங்கள் உறங்கும்பொழுது அவன் உங்களைக் கண்காணிப்பான். ஒரு நம்பிக்கையாளர் என்ற முறையில், ஒரு நபர் தனது பாதுகாப்பைக் குறைத்துக் கொள்ளலாம், ஆனால் அவருடன் அல்லாஹ்வுடைய உதவி இருக்குமேயானால், அவர் அல்லாஹ்வுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய அடியார்களில் ஒருவராக இருப்பாரேயானால், பின்னர் அல்லாஹ்வே எப்போதும் அவன் மீது தனது பார்வையை நிலைநிறுத்தி, அவரது எதிரிகளை விரட்டியடித்துவிடுவான். அவர்களின் சதித்திட்டங்கள் அனைத்தையும் [அதாவது, அவனது அடியார்களின் எதிரிகளது சதித்திட்டங்கள் அனைத்தையும்] தடுத்து விடுவான்.

மனிதர்களே! அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்ற உண்மையான ஆற்றல்களை நீங்கள் அறியவில்லை. இதை நீங்கள் அறிந்திருந்தால், உங்கள் இறைவனை நீங்கள் உண்மையிலேயே அறிந்திருந்தால், நீங்கள் அவனை விட்டும் ஒருபோதும் விலக மாட்டீர்கள், இவ்வுலகத்தின் பிரச்சனைகள் குறித்து ஒருபோதும் கவலை கொள்ளவும் மாட்டீர்கள். இந்த தற்காலிக உலகம் குறித்து நீங்கள் கவலை கொள்ள மாட்டீர்கள். புதையலைக் கொண்டிருப்பவன் ஒரு பைசாவை இழந்து விட்டால், அந்த ஒரு பைசாவை இழந்தால் அவர் மரணித்துப் போய் விடுவார் என்பது போல அவர் அழுவதில்லை. அல்லாஹ் ஒருவனே உங்களுக்குப் போதுமானவனும், உங்களது அனைத்துத் தேவைகளுக்கும் அவனேப் போதுமானவனும் ஆவான் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், இந்த உலக விஷயங்களுக்காக ஒருபோதும் நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள். அல்லாஹ்வே உண்மையில் உங்களது உண்மையான பொக்கிஷமாவான், மிகவும் மதிப்புமிக்க ஒரு பொக்கிஷமாவான்; அதனால் அவனது மதிப்பை அறிந்து கொள்ளுங்கள். (அறிந்து கொள்ள முயலுங்கள்). உங்களது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவனே உங்களது உதவியாளன் ஆவான். அவன் இல்லாமல், (அவனது உதவி இல்லாமல்), நீங்களோ அல்லது உங்களது உலகத் திட்டங்கள் (எவற்றிலும் வெற்றி) இல்லை. ஆகவே, பௌதீக வசதி வாய்ப்புகளை/ வளங்களை மட்டுமே சார்ந்திருக்கும் பிற சமுதாங்களைப் பின்பற்ற வேண்டாம் என்றும், அவர்கள் இறைவனை [அல்லாஹ்வை] மறந்துவிட்டு, தங்களது (சொந்த) வேட்கைகளைக் கொண்டு ஆதிக்கம் செலுத்த அனுமதித்துள்ளதால், அவர்களை நீங்கள் பின்பற்ற வேண்டாம் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

நம்பிக்கையாளர்களாகிய நீங்கள் அல்லாஹ்வின் மீது மட்டுமே (உங்களது) நம்பிக்கையை வைக்க வேண்டும். நிராகரிப்பவர்களோ பௌதீக வசதி வாய்ப்புகளின் மீதே நம்பிக்கை வைக்கின்றார்கள், எனவே அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவர்கள் இந்த பூமியுடன் இணைந்து விட்டார்களோ, அவர்களே ஆன்மீக ரீதியில் மரணமடைந்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் இவ்வுலக விவகாரங்களில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளனர், அல்லாஹ்வை மறந்துவிட்டார்கள்; அவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் புறக்கணித்த அல்லது மறந்துபோய்விட்ட அதே படைப்பாளனிடம் ஒரு நாள் திரும்ப செல்ல வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட்டார்கள்.

ஒரு மனிதனாகவும், கலீஃபத்துல்லாஹ் என்ற நிலையிலும், பௌதீக வசதி வாய்ப்புகளை சரியான வரம்புகளுக்குள் பயன்படுத்துவதை நான் தடை செய்யவில்லை. மற்ற சமுதாயங்கள் செய்து விட்டது போல்‌ (அதாவது) அல்லாஹ்வை முற்றாகப் புறக்கணித்து விட்டு, அவன் அவர்களுக்குச் செய்த அனைத்து உதவிகளுக்காகவும் அவனுக்கு நன்றிகெட்டவர்களாகி விட்டதால், இந்த பௌதீக வசதி வாய்ப்புகளுக்கு நீங்கள் அடிமைகளாக மாறிவிடுவதையே நான் தடுக்கிறேன்.

ஆகவே, உங்களது இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள், உங்களது நம்பிக்கையில் ஏமாந்தவர்களாகி விடாதீர்கள். நீங்கள் நழுவிப் போய், இந்த தற்காலிக உலகத்தை அல்லாஹ்வையும் மறுமையையும் விட மேலானதாக தேர்வு செய்து கொண்டால், பிறகு, நீங்கள் பெரும் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவீர்கள்.

உங்களுக்கு அறிவுரை கூறுவதும், உங்களை எச்சரிப்பதும் எனது கடமையாகும், மேலும் உலுல்-அல்-பாப் [உண்மையான ஞானம் கொண்டுள்ளவர்கள்] மட்டுமே எனது அறிவுரைகளிலிருந்தும் பயனடைவார்கள். இறுதியாக, நான் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கிறேன்.

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

ஹஸ்புன்-அல்லாஹ் வ நிமல் வகீல் (அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், அவனே நமது காரியங்களைச் சிறந்ததாக (ஆக்கி) வழங்குபவன்) [ஆல்-இம்ரான் 3:174]. 

ஆமீன், சும்ம ஆமீன், யா ரப்பல் ஆலமீன்.

Copyright @ 2013 Sahih Al Islam .