04 மார்ச் 2022 / 30 ரஜப் 1443 AH உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் ஸூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள், தாவத்-இ-இலல்லாஹ்: முஸ்லிம்கள் & உண்மை என்ற தலைப்பில் தனது ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள். திருக்குர்ஆன், குஃப்ரை மிகப்பெரிய பொய்யாகக் கருதினாலும் கூட, இஸ்லாத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாடாக உண்மையை உறுதியுடன் பின்பற்றுவதை (அது) முன்வைக்கிறது. பொய்யைக் கொண்டு உண்மையை மறைக்கவோ அல்லது தெரிந்துக் கொண்டே உண்மையை முழுவதுமாக மூடிமறைக்கவோ கூடாது என்பதன் பக்கம் நம்பிக்கையாளரை அழைக்கிறது. உண்மைத்தன்மை என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் தகுதியாக இருந்தது. மேலும் அது அவர்களைப் பின்பற்றுபவர்களின் இறுதி இரட்சிப்பாகும். பொய்யராக இருக்கிற எந்த மனிதனும் தன்னை முஸ்லிம் என்று கூறிக்கொள்ள முடியாது. பொய் சொல்பவர்கள், பொய் சாட்சி கூறுபவர்கள், நம்பிக்கைக்கு மாறு செய்பவர்கள், விபச்சாரம் செய்பவர்கள் என நான்கு வகையான ஆண்களும் பெண்களும் இஸ்லாத்தின் கொள்கையில் இ...