Skip to main content

Posts

Showing posts from August 14, 2022

ஜும்ஆ(குத்பா மற்றும் தொழுகை) யின் முக்கியத்துவம்''

05 ஆகஸ்ட் 2022~06 முஹர்ரம் 1444ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "ஜும்ஆ (குத்பா மற்றும் தொழுகை) யின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பில் ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள். இஸ்லாம் சமூக வாழ்க்கையை சிறப்பிக்கும் ஒரு மார்க்கமாகும். ஐந்து நேரக் கடமையானத் தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை ஒன்று கூடுவதற்காக அழைக்கப்படுகிறார்கள். இந்த சந்திப்புகள் அவர்கள் ஒருவரை யொருவர் நன்கு அறிந்து கொள்ளவும், ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்கவும், அவசியப்பட்டால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்கும் அனுமதிக்கின்றன. உண்மையில, இந்த சமூக இயல்பை மிகவும் சிறப்பிக்கும் நாள் வெள்ளிக் கிழமையாகும். இது முஸ்லிம்களின் மிகவும் போற்றுதலுக்குரிய நாட்களில் ஒன்றாகும். இந்த நாளில் முஸ்லிம் நாடுகளில் வாராந்திர விடுமுறை விடப்படுகின்றன. வெள்ளிக்கிழமை என்பது நமக்கு -மனிதகுலத்திற்கு முக்கியமான ஒரு முதன்மைச் செய்தியாகும். ஏனென்றால் ...

உம்மத்தின் நோய்கள் (பகுதி 3)

17 ஜூன் 2022 |  16 துல் கஃதா 1443 ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "உம்மத்தின் நோய்கள் (பகுதி 3)" என்ற தலைப்பில் தனது ஜும்மா பேருரையை நிகழ்த்தினார்கள். காரணங்கள் முதல் காரணம்: பொதுவாக தப்லீக் பணி என்பது உலமாக்களுக்கான பொறுப்பு என்று நாம் நினைக்கிறோம். ஆனால், குர்ஆனில் உள்ள கட்டளைகள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொருந்தும் என்பதைத் தெளிவுப் படுத்துகிறது. இஸ்லாத்தைப் பற்றி பிரச்சாரம் செய்வது (அதாவது, தாவா/தப்லீக் செய்வது) ஒவ்வொரு முஸ்லிமின் (மீதும்) தலையாய கடமையாகும் என்பதை ஸஹாபா (ரலி) மற்றும் அதற்குப் பின் வந்த அனைத்து உண்மையான முஸ்லிம்களும் (அதாவது, தாபியீன்களும்) செய்த செயல்களும் கடின உழைப்பும் தெளிவாக நிரூபிக்கின்றன. இந்த தப்லீக் பணியை உலமா பெருமக்ககளின் தோள்களில் மட்டும் சுமத்திவிட்டு, அது நமது பொறுப்பல்ல என்று நினைப்பது நமது பெரும் பலவீனமாகும். உண்மையை நமக்கு முன் கொண்டுவந்து, நமக்கு நேர்வழியை எடுத்துக் காட்ட...

உம்மத்தின் நோய்கள் (பகுதி 1)

03 ஜூன் 2022 /  02 துல் கஹ்தா 1443ஹி உலகெங்கிலும் உள்ள அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) தனது ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹுது, தவ்வூத் மற்றும் சூரா அல் பாத்திஹா ஓதிய பிறகு; ஹஸ்ரத் முஹையுத்தீன் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி 1) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள். சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அறியாமை, பாவம் மற்றும் ஒழுக்கக்கேட்டின் இருளில் உலகம் மூழ்கி இருந்த போது, உண்மையான அறிவு மற்றும் வழிகாட்டுதலின் ஒளி (மக்காவைச் சுற்றியுள்ள சிறிய மலைகளான) பத்தாவின் பாறை மலைகளுக்கு மத்தியில் அடிவானத்தில் தோன்றியது. அதன் கதிர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலும் பரவியது.. அவை பூமியின் ஒவ்வொரு மூலையையும் ஒளிரச் செய்துள்ளன; குறுகிய காலத்தில் [இருபத்தி- மூன்று வருடங்களில்], இந்த ஒளி மனிதன் முன்னர் ஒருபோதும் அடைந்திராத உயர்ந்த பதவிகளை அடைவதற்கு வழி வகுத்துள்ளது. இது முஸ்லிம்களை மூட நம்பிக்கையிலிருந்து அகற்றி உண்மையான பாதையைப் பின்பற்றுவதற்கான ஆழ்ந்த விருப்பத்தை அவர்களில் உருவாக்கியது. இந்த ஒளியால் வழி நடத்த...