05 ஆகஸ்ட் 2022~06 முஹர்ரம் 1444ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் "ஜும்ஆ (குத்பா மற்றும் தொழுகை) யின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பில் ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள். இஸ்லாம் சமூக வாழ்க்கையை சிறப்பிக்கும் ஒரு மார்க்கமாகும். ஐந்து நேரக் கடமையானத் தொழுகைகளை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை ஒன்று கூடுவதற்காக அழைக்கப்படுகிறார்கள். இந்த சந்திப்புகள் அவர்கள் ஒருவரை யொருவர் நன்கு அறிந்து கொள்ளவும், ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்கவும், அவசியப்பட்டால் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதற்கும் அனுமதிக்கின்றன. உண்மையில, இந்த சமூக இயல்பை மிகவும் சிறப்பிக்கும் நாள் வெள்ளிக் கிழமையாகும். இது முஸ்லிம்களின் மிகவும் போற்றுதலுக்குரிய நாட்களில் ஒன்றாகும். இந்த நாளில் முஸ்லிம் நாடுகளில் வாராந்திர விடுமுறை விடப்படுகின்றன. வெள்ளிக்கிழமை என்பது நமக்கு -மனிதகுலத்திற்கு முக்கியமான ஒரு முதன்மைச் செய்தியாகும். ஏனென்றால் ...