Friday, June 10, 2022

உம்மத்தின் நோய்கள் (ஜும்ஆ உரை)

03 ஜூன் 2022

02 துல் கஹ்தா 1443ஹி

உலகெங்கிலும் உள்ள அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) தனது ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹுது, தவ்வூத் மற்றும் சூரா அல் பாத்திஹா ஓதிய பிறகு; ஹஸ்ரத் முஹையுத்தீன் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி 1) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள்.

சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அறியாமை, பாவம் மற்றும் ஒழுக்கக்கேட்டின் இருளில் உலகம் மூழ்கி இருந்த போது,

உண்மையான அறிவு மற்றும் வழிகாட்டுதலின் ஒளி (மக்காவைச் சுற்றியுள்ள சிறிய மலைகளான)

பத்தாவின் பாறை மலைகளுக்கு மத்தியில் அடிவானத்தில் தோன்றியது. அதன் கதிர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலும் பரவியது.. அவை பூமியின் ஒவ்வொரு மூலையையும் ஒளிரச் செய்துள்ளன; குறுகிய காலத்தில் [இருபத்தி- மூன்று வருடங்களில்], இந்த ஒளி மனிதன் முன்னர் ஒருபோதும் அடைந்திராத உயர்ந்த பதவிகளை அடைவதற்கு வழி வகுத்துள்ளது. இது முஸ்லிம்களை மூட நம்பிக்கையிலிருந்து அகற்றி உண்மையான பாதையைப் பின்பற்றுவதற்கான ஆழ்ந்த விருப்பத்தை அவர்களில் உருவாக்கியது. இந்த ஒளியால் வழி நடத்தப்பட்டு, முஸ்லிம்கள் வெற்றிக்கு மேல் வெற்றியை அடைந்தார்கள். மேலும் அவர்கள் வரலாற்றில் மிக உயர்ந்த கௌரவம் மிக்க பதவியை வந்தடைந்தனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் மகத்துவத்துடனும், அதிகாரத்துடனும் உலகை ஆண்டனர்; அந்த நேரத்தில் வாழ்ந்த எந்த தலைவனுக்கும் (அவர்களை) எதிர்க்கும் தைரியம் இருந்ததில்லை; எப்போதாவது எந்த ஆட்சியாளராவது அவ்வாறு செய்யத் துணிந்தார் என்றால், அவர் முற்றிலுமாக அழிக்கப்படும் அபாயம் இருந்தது.

இது ஒருபோதும் எவராலும் அழிக்க முடியாத வரலாற்று உண்மையாகும். ஆனால், இன்றைய காலத்தில் இந்த வரலாற்று உண்மை ஒரு பழங்கால கதைகள் போன்று (மரபு வழிச் செய்தியாக) ஆகிவிட்டது. இதனை ஒரு கடந்த கால கதையாக கூறுவதற்கு மட்டும் நன்றாக இருக்கிறது. (ஆனால் பின்பற்றுவதற்கு அல்ல) என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். [இன்றைய முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களின் பார்வையில் ஒரே மாதிரியாக] இது ஒரு நம்பமுடியாததாகவும் கேலிக்குரியதாகவும் தோன்றலாம். குறிப்பாக, தற்போதைய சூழலில், இஸ்லாத்தின் முதலாவது மற்றும் உண்மையான வீரர்களின் முன்மாதிரியான செயல்திறன் மற்றும் சிறந்த சாதனையின் மீதான முஸ்லிம்களின் (இன்றைய) நடவடிக்கை யானது ஒரு பெரிய கரும்புள்ளி போன்று ஆகிவிட்டது.

முஸ்லிம்களை எந்த நோய் கடந்து வந்துள்ளது?

ஹிஜ்ரி பதின்மூன்றாம் ஆண்டு முடியும் வரை முஸ்லிம்கள் மட்டுமே மரியாதை, கண்ணியம், அதிகாரம் மற்றும் மகத்துவம் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு காட்டுகிறது.ஆனால் நாம் நமது கண்களை வரலாற்றின் பக்கங்களில் இருந்து திருப்பி இன்றைய முஸ்லிம்களைப் பார்க்கும்போது, ​​கஷ்டங்களிலும், அவமானத்திலும் மூழ்கியிருக்கும் ஒரு சமூகத்தை நாம் காண்கிறோம், உண்மையான பலம், அதிகாரம், மரியாதை அல்லது கண்ணியம் இல்லாத, சகோதரத்துவம் இல்லாத, இஸ்லாத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் இல்லாத, மக்களைக் காண்கிறோம். ஒரு காலத்தில் ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருந்த அசாதாரணமான செயல்களின் எந்த தடயத்தையையும் நாம் இன்று காண முடியவில்லை. இப்போதெல்லாம், நாம் அரிதாகவே தூய மற்றும் நேர்மையான மனசாட்சி கொண்ட முஸ்லீமைக் காண்கிறோம்.அதற்கெதிரில், முஸ்லிம்கள் தீமைகள் மற்றும் பாவங்களில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

அவர்கள் நற்செயல்களின் பாதையில் இருந்தும், வெற்றிக்கு எப்போதும் உத்தரவாதம் அளிக்கும் பாதையில் இருந்தும், வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டனர். முஸ்லிம்களின் பலவீனங்களை மகிழ்ச்சி, கேலி மற்றும் வெறுப்புடன் இன்றைய இஸ்லாத்தின் எதிரிகள் பேசவும், விவாதிக்கவும் செய்கின்றனர்.

துரதிர்ஷ்டவசமாக பிரச்சனை அத்துடன் நிற்கவில்லை.இந்த புதிய தலைமுறையின் முஸ்லிம் இளைஞர்கள் நவீன போக்குகள் என்று அழைக்கப்படுபவைகளாலோ, இன்னும் மேற்கத்திய நாகரீகத்தினாலோ (ஃபேஷன்), ஈர்க்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மேற்கத்திய நாகரீகமானது இஸ்லாத்தின் கொள்கைகளை கேலி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. மேலும் அவர்கள் ஷரீஅத்தை, இஸ்லாத்தின் தூய நெறிமுறையை வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள்; ஷரீஅத் பழமையானது என்றும் நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இவர்களின் அத்தகைய நடத்தையால் நாம் ஆச்சரியப்படுகிறோம்! -

வலிமை, ஸ்திரத்தன்மை, செழிப்பு, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றை முழு உலகிற்கும் கொண்டு வந்த மக்கள், தற்போதோ

அவர்கள் மனச்சோர்வு அடைந்தவர்களாகவும், முற்றிலும் உறங்குபவர்களாகவும், ஒன்று மற்றவர் களாகவும், ஆதரவற்றவர்களாகவும் இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்.ஒரு காலத்தில் முழு உலகிற்கும் நல்லொழுக்கப் பாடங்களையும் நல்ல நடத்தையையும் கற்றுக் கொடுத்த மக்களோ, தற்போது இந்த நற் குணங்களில் இருந்து பின்தங்கி விட்டனர்.

நிலைமையை மாற்றுவதற்கான முதல் முயற்சிகள்

நீண்ட காலமாக, அறிஞர்களும், இஸ்லாத்தின் பாதுகாவலர்களும், அவர்களது சமூகத்தின் பேரழிவுக்குரிய நிலைமையை குறித்து ஆழ்ந்து சிந்தித்து முஸ்லீம்களை சீர்திருத்துவதற்காக ஏராளமான முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆயினும் துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் அவர்களின் பணியைச் செய்ய முடியவில்லை!

அவர்கள் பயன்படுத்திய தீர்வுகள் மற்றும் முடிவுகள் நோயை மேலும் மோசமாக்கியது.

நிலைமை மேலும் மேலும் மோசமாகிக் கொண்டே செல்கிறது, வரவிருக்கும் நாட்கள் இன்னும் இருண்டதாக இருக்கும் என்பதாகத் தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டு திருப்தியாக இருப்பது பெரும் பாவமாகவும், மன்னிக்க முடியாத குற்றமாகவும் ஆகிவிட்டது. ஆனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி முடிவு எடுப்பதற்கு முன்பு,அத்தகைய ஒரு மோசமான நிலைமையை

கொண்டுவரும் உண்மையான காரணத்தை நாம் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

இந்த சீரழிவுக்கு மக்கள் பல காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் நிலைமை இன்னும் மோசமடைவதில் இருந்து தடுப்பதற்கு பல தீர்வுகளையும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் இன்னும் அதிகமான விரக்திக்கே வழிவகுத்துள்ளன. முன்னேற்றத்தின் பக்கம் செல்வதற்கு பதிலாக, குறிப்பாக பிரச்சாரம் செய்பவர்கள் மற்றும் உலமாக்களுக்கு மத்தியில் விரக்தியும் குழப்பமும் உள்ளே வந்துவிட்டது. உண்மை என்னவென்றால் இந்த நோய்க்கான உண்மையான வேரைக் கண்டுபிடிக்கத் தவறிவிட்டார்கள் என்பதாகும். இந்த நோய்க்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கப்படாத வரை, முஸ்லிம்களால் எந்த சிகிச்சையையும், அதைப் பயன்படுத்துவதற்கு அதற்கும் குறைவான ஒன்றை பரிந்துரைக்கவும் முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில், சில நிவாரணத்தையோ அல்லது முன்னேற்றத்தையோ நம்மால் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? நோயின் உண்மையான காரணத்தை அறியாமல் பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு சிகிச்சையும் நிலைமையை மேலும் சீர்கெடச் செய்து அதிகமான குழப்பத்தையும் ஊக்கமின்மையையும் கூட கொண்டு வந்து விடும்.

பிரச்சனையை எவ்வாறு பார்க்க வேண்டும்?

‘ஷரீஅத்’ என்பது அல்லாஹ்விடம் இருந்து நேரடியாக வருகின்ற ஒரு புனிதமான செயல்முறை விதிகளாகும் என்பதை இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. இது நமக்கு ஒரு முழுமையான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்வதற்கான ஒவ்வொரு சாத்தியமான வழிவகைகளையும்

உண்மையான வெற்றியையும், நன்மைக்கான பாதையில் முன்னேற்றத்தையும் நமக்கு வழங்குகிறது. நாம் எந்தப் பாதையை மேற்கொள்ள வேண்டும் என்பதை நமக்குத் தெளிவாகச் சுட்டிக் காட்டி, அந்த பாதையை சரிபார்த்து செயல்படுத்துவதற்கான முறைகளையும் நமக்குக் கூறுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஹம்மதிய்ய உம்மத்தின் ஷரீஅத்தானது அனைத்து முஸ்லீம்களின் பௌதீக மற்றும் ஆன்மீக நல்வாழ்விற்கும், வாழ்நாள் முழுவதும் எல்லா சந்தர்ப்பங்களிலும், ஏன் கியாமத் நாள் வரை அவர்களின் முன்னேற்றத்திற்கும் முழு உத்திரவாதம் வழங்குகின்றது. ஷரீஅத்தின் விதிமுறைகளுக்கும் அப்பால் (சென்று), மோசமடைந்துள்ள இந்த தற்போதைய சூழ்நிலையின் காரணத்தையும் தீர்வையும் நாம் தேடினோம் என்றால், நாம் நமது நேரத்தை இழக்க நேரிடும் என்பதுத் தெளிவாகிறது. எனவே, நாம் அவசியமாக குர்ஆன்-ஏ-கரீமை ஆழமாக ஆராய வேண்டும். குர்ஆன்- அதுவே ஷரீஅத்தின் அடிப்படையும் அனைத்து ஞாணங்கள் மற்றும் மனிதகுலம்

அனைத்திற்குமான வழிகாட்டுதலின் மூலாதாரமும் ஆகும்.

நிச்சயமாக மனிதனுக்கான ஞானத்தின் ஒரே மூலாதாரம் குர்ஆன் மட்டுமே ஆகும். நாம் நமது நோயை முழுமையாக குணப்படுத்த வேண்டுமென்றால் நாம் நமது சிரமங்கள் என்ன என்பதை கண்டுபிடித்து அதனை எவ்வாறு அகற்றுவது என்பதற்கு நாம் குர்ஆனின் உதவியை நாட வேண்டும்.

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்தவுடன் நாம் தீர்வைப் புரிந்துகொண்டு அதைப் பயன் படுத்துவதற்கு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். குர்ஆனின் ஞானமும் வழிகாட்டுதலும் குறிப்பாக நாம் கடந்து சென்று கொண்டிருக்கும் தற்போதைய சூழலிலும் நெருக்கடியான சூழ்நிலையிலும் நம்மை ஒருபோதும் கைவிடாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாம் குர்ஆன் மற்றும் சுன்னத்தில் உள்ள உண்மையான தீர்வை [சிகிச்சையைத்] தேடுவோம்.

பிரச்சினைகளை நாம் ஆராய்வோம்!

முழு பிரபஞ்சத்தின் படைப்பாளனாகிய அல்லாஹ் (தபாரக்), ஆட்சி செய்யும் அதிகாரத்தையும், பூமியில் மீதான கிலாஃபத்தையும், உண்மையான முஸ்லிம்களுக்கு அதாவது முஃமீன்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். இது திருக் குர்ஆனின் இந்த வசனத்தின் மூலம் தெளிவாகிறது:

“உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை பூமியில் நிச்சயமாக கலீஃபாக்களாக்கி வைப்பதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்திருக்கிறான்".(அந் நூர் 24:56)

உண்மையான நம்பிக்கையாளர்கள் எப்போதும் நிராகரிப்பவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற உத்தரவாதத்தையும் கூட அவன் வழங்குகிறான், என்றும் அதனால் நிராகரிப்பவர்கள் ஆதரவாளர்களோ அல்லது உற்ற நண்பர்களோ இல்லாமல் பின்தங்கி இருப்பார்கள் என்று இந்த வசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது:

"நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் செய்திருப்பார்களாயின், அவர்கள் புறங்காட்டிப் பின் வாங்கியிருப்பார்கள்; அதன் பின் அவர்கள் தங்களுக்குப் பாது காவலரையோ, உதவி செய்வோரையோ காண மாட்டார்கள்" (அல் ஃபத்ஹ் 48:23)

உண்மையான முஸ்லிம்களுக்கு சாத்தியமான உதவிகள்

அனைத்தையும் வழங்க அல்லாஹ் (தபாரக்) தானே பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதையும், இந்த மக்கள் எப்போதும் கண்ணியத்தையும் புகழையும் பெறுவார்கள் என்பதற்கு அவன் உறுதியளித்துள்ளான் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இது பின்வரும் இந்த வசனங்களின் மூலம் உறுதிப் படுத்தப் படுகின்றது:

“முஃமின்களுக்கு - நம்பிக்கை யாளர்களுக்கு உதவி புரிதல் நம் மீது கடமையாகும்". (அர் ரூம் 39:48)

“எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.” (ஆல இம்ரான் 3: 140)

“கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது” (அல் முனாஃபிகூன் 63:9)

இந்த புனிதமான அறிவிப்புகள் முஸ்லிம்களுக்கு, அவர்களது கண்ணியம்,மகத்துவம், பெருமை, மரியாதை மற்றும் மதிப்பை

மீட்டெடுக்கும் பாதையை தெளிவாக நிரூபிக்கின்றன. அது உண்மையில் திடமான ஈமான்அதாவது நம்பிக்கையில் உள்ளது. அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் அவர்களின் தொடர்பு உறுதியாகவும், உண்மையாகவும் இருந்தால், அவர்கள் பூமியில் உள்ள அனைத்தையும் கட்டுப்படுத்தி வழி நடத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், மறுபுறம், அவர்களின் நம்பிக்கை பலவீனமாகிவிட்டாலோ அல்லது இதயத்திலிருந்து வெளியேறி விட்டாலோ, தானாகவே நாம்அதாவது முஸ்லிம்கள் நிலைகுலைந்து, நமக்குப் பேரழிவு ஏற்பட்டுவிடும். இந்த குர்ஆன் வசனத்திலிருந்து இது தெளிவாகிறது:

"காலத்தின் மீது சத்தியமாக!நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர! (அல் அஸ்ர் 103:2-4)

முன்பு விளக்கியதைப் போன்று, ஆரம்பகால முஸ்லிம்கள் கௌரவத்திலும் மகத்துவத்திலும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அதேவேளையில் நவீன கால முஸ்லிம்கள் எதிர்திசையில் சென்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. ஆரம்பகால முஸ்லிம்களின் ஈமான் திடமாகவும் நேர்மையாகவும் மேலும் அவர்களின் குணாதிசயங்கள் மிகச் சிறந்ததாகவும் இருந்த காரணத்தால் அவர்கள் இந்த உயர்நிலையை அடைந்தார்கள் என்பது இவ்வசனங்களிலிருந்து தெளிவாகிறது.

இன்னொரு பக்கம் முஸ்லிம்களின் நிலை தற்காலத்தில் வருந்தத்தக்கதாக ஆகிவிட்டது. ஏனெனில் ஆரம்பகால முஸ்லீம்களிடம் நாம் காணும் தன்மைக்கு எதிரானதாக அவர்களின் நம்பிக்கையிலும் அவர்களின் குணங்களிலும் பல பலவீனங்கள் உள்ளன.எனவே, இனைறைய முஸ்லிம்கள் பெயரளவில் மட்டுமே முஸ்லீம்களாக உள்ளனர் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

இதே சூழல் நிலவுவதை அல்லாஹ்வின் உண்மையான தூதர் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள்

முன்னறிவித்தார்கள் : "விரைவில் ஒரு காலம் வரும் அப்போது இஸ்லாம் பெயரளவில் மட்டுமே இருக்கும் குர்ஆன் அதன் எழுத்தளவில் மட்டுமே இருக்கும்”.

இன்றைய முஸ்லிம்களுக்கு இது தெளிவாகப் பொருந்தும். இத்தகைய ஒரு சூழ்நிலையில் இந்த குறிப்புகளை கூடிய விரைவில் கவனத்தில் எடுத்துக் கொள்வது அவசியமானதாகும்:

1. அல்லாஹ்வாலும் அவனது தூதராலும் அங்கீகரிக்கப்பட்ட, ஆன்மீக மற்றும் பௌதீக முன்னேற்றத்தை கொண்டுவரக் கூடிய உண்மையான இஸ்லாம் எங்கும் இல்லை என்பது உண்மை. அவ்வாறாயின் எந்த வழிவகைகளில் அந்த உண்மையான இஸ்லாத்தை நம்மால் மீண்டும் கண்டுக் கொள்ள முடியும்?

2. இந்த உண்மையான இஸ்லாத்தின் மறைதல் எதனால் ஏற்பட்டது? அதனுடன் சேர்ந்து 'இஸ்லாத்தின் (ரூஹ்) ஆன்மா' அழிவுக்கு காரணமான முஸ்லிம்களின் வாழ்க்கையை விட்டு ஏன் வெளியேறியது?

நாம் குர்ஆனைப் படிக்கும்போது, ​​உண்மையான ஈமானையும் இஸ்லாத்தையும் தேவையான அளவில் எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைத் தெளிவாகக் காண்போம், பின்னர் கண்ணியம் மற்றும் பெருமையின் பதவிகளை அடைதல் என்பது சிறப்புப் பணியைச் சார்ந்து இருக்கிறது. அதனை அல்லாஹ் (தபார) தனது எல்லையற்ற அருளால் முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்குகிறான். இதன் காரணமாகவே குர்ஆனில் முஸ்லிம்களுக்கு கைருல்-உம்மத் (மக்களில் சிறந்தவர்கள்) என்ற

இந்த உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தீன்-ஏ-இஸ்லாத்தின் படி,

அல்லாஹ்வின் புனிதத்தன்மை, தனித்துவத்தன்மை மற்றும் உன்னத இருப்பை நிறுவி நிரூபித்து மனிதர்கள் மூலம் அவனது எல்லையற்ற ஆற்றல்களையும்,

வரம்பில்லா குணங்களையும் காட்டுவதே பிரபஞ்சத்தை படைத்ததற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் ஆகும்.

உண்மையான அறிவின் ஒளியைக் கொண்டு மனிதனை வழிநடத்த முடியும், ஆனால் அதற்கு முன் அவர்

முதலில் அனைத்து அசுத்தங்கள் மற்றும் ஒழுக்கக்கேடுகளிலிருந்தும் தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தூய்மைப் படுத்துதலுக்குப் பிறகுதான்

மனிதன் தன்னைத் தானே நல்ல குணங்களுடன் சரியாக்கிக் கொண்டு சிறந்த குணத்தையும் நன்மை செய்யும் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும். இந்த காரணத்திற்காகவே அல்லாஹ் (தபாரக) மனிதனை தூய்மைப்படுத்தி [இன்சான்] அவனுக்குள் நன்மை செய்யும் திறனை வளர்த்தான்.மேலும்

முழு மனித இனத்தின் பரிபூரணமானவர் அனைத்து தூதர்களின் தலைவரான, நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள். அன்னார் மூலமாகவே மனித இனம் முழுமையான தூய்மைப் படுத்துதலை அடையும் வரை மனம் மற்றும் உடலின் வளர்ச்சியில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளது.

அப்போதுதான் மனிதன் பின்வரும் வசனத்திலன் (மூலம்) நற்செய்தி கிடைக்கப் பெற்றான்:

"இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது எனது அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்". (அல் மாயிதா 5:4)

மனிதனது படைப்பின் மிக உயர்ந்த நோக்கம் இறுதியாக நிறைவேறியது [இஸ்லாத்தில் நிறைவேறியது]; நன்மையும் தீமையும் தெளிவாக பிரிக்கப்பட வேண்டும்; ஒரு முழுமையான வாழ்க்கை முறை வெளிப்படுத்தப்பட்டது; மேலும் மிக முக்கியமானது (ஷரீஅத்) சட்டத்தைத் கொண்டுள்ள நுபுவ்வத்தின் முன்னறிவித்தலின் சங்கிலி மற்றும் நபித்துவம் [நுபுவ்வத்] - முடிவடைந்து விட்டது, ஆயினும் அல்லாஹ் (தபாரக்) இஸ்லாம் மற்றும் முஸ்லீம்களின் நிலைத்திருத்தலுக்காக, உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் சீர்திருத்தும் பணியை நிறை வேற்றுவதற்காக குர்ஆன் மற்றும் நபி கரீம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் சுவாசத்திலிருந்து வருகிற ஓர் இஸ்லாமிய நுபுவ்வத்தை பாதுகாத்து வைத்துள்ளான்.

தற்போது, ​ அத்தகைய ஒரு தீர்க்கதரிசி-சீர்திருத்தவாதியின் முன்னிலையில், இஸ்லாம் தனது வாழ்வை மீண்டும் பெறுகிறது, ஆனால் அவர் இல்லாத நிலையில், அத்தகைய சீர்திருத்தவாதி இன்னும் தோன்றவில்லை என்றால், பிறகு இஸ்லாத்தைப் பாதுகாப்பது உம்மத்தே முஹம்மதியாவின் (அதில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயம் முழுவதின் கூட்டமைப்பு) இன் கூட்டான பொறுப்பாக உள்ளது.

இந்தப் பொறுப்பு பின்வரும் குர்ஆன் வசனங்களில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது:

"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக (முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றக் கூடிய) நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்". (ஆல இம்ரான் 3:111)

"(மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்". (ஆல இம்ரான் 3:105)

முதல் வசனத்தில், முஸ்லிம்கள் ஏன் 'கைருல் உம்மத்' (மக்களில் சிறந்தவர்கள்) என்று அழைக்கப்பட்டார்கள் என்பதை அல்லாஹ் (தபாரக) குறிப்பிட்டுள்ளான். அவர்கள் நல்லதை ஊக்குவித்து தீமையை தடை செய்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம் ஆகும். இரண்டாவது வசனத்தில் இந்த கடமையை நிறைவேற்றுபவர்கள் [பூமியின் மீதான] இந்த (உலக) வாழ்வில் வெற்றியடைந்து கௌரவத்தை- கண்ணியத்தை பெறுவர் என்பதை அல்லாஹ் (தபாரக) தெளிவுபடுத்தியுள்ளான்.

இந்த கட்டளை இத்துடன் நிற்காது. நாம் இந்த அவசியமான பணியைச் செய்யவில்லை என்றால்,பிறகு சாபமும் பேரழிவும் நம் மீது ஏற்பட்டுவிடக்கூடும் என்று மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளான்.(இறைவனது) இந்தத் தீர்மானத்தை (பின்வரும்)இந்த வசனத்தில் நம்மால் காண முடியும:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்". (அல் மாயிதா 5: 79-80)

ரஸுலுல்லாஹ்(ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் கூட இதனை விரிவாக விளக்கி, இந்த குர்ஆன் வசனங்களை இன்னும் தெளிவாக்குகின்றன.

அடுத்த வாரம் எனது குத்பாவில் இந்த ஹதீஸ்களுடன் வருகிறேன்.

உம்மத்தைப் பாதிக்கும் இந்தப் பிரச்சனைகளை மற்றும் ஒருவருக்கு என்ன தேவை என்பதைப் பற்றி தொடர்ந்து விளக்கவும் இந்தப் பிரச்சனைகளை நீக்கி இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை [மீண்டும் ஒருமுறை] செயல்படுத்த வேண்டும். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

அல்லாஹ் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அனைத்து துன்பங்களிலிருந்தும் காப்பாற்றுவானாக! ஷைத்தான் நம்மைப் பிளவுபடுத்தவும், நம்மிடையே பிரச்சனையையும் குஃப்ரை [அவநம்பிக்கையை]யும் விதைப்பதற்கு,

எல்லா வகையிலும் முயன்று கொண்டிருக்கின்ற நிலையில் முஸ்லீம்களை தமதுத் தூக்கத்திலிருந்தும் எழுந்திருக்க அல்லாஹ் அனுமதிப்பானாக! அல்லாஹ் இந்த முக்காடுகளை அகற்றி, இஸ்லாமியர்களை இஸ்லாத்திற்கு எதிரான போதனைகளைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையுடனும், அச்சத்துடனும்

அவன் நம்மை உண்மையான இஸ்லாதை நோக்கி முன்னேறச் செய்வானாக! ஆமீன்!

Thursday, June 9, 2022

நூற்றாண்டு என்பதை எதனடிப்படையில் கணக்கிடுவது!

1. “நூற்றாண்டு”- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு மிக இன்றியமையாத இடத்தை பெறுகின்றது. முதலில் அன்னார் முன்னறிவித்த ஒரு ஹதீஸ்;

ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் அல்லாஹ் ஒரு முஜத்தித்தை தோன்ற செய்து மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவான்.(அபூதாவூத் 4291)

இது சம்பந்தமாக காலத்தின் இமாம், கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா, முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டியவாறு இவ்வாறு விளக்குகின்றார்கள்:- மஸீஹ் மவூத்(அலை) அவர்கள் இந்த ஹதீதை பற்றி கூறும்போது (ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்கள் வருவார்கள் பற்றிய) இந்த ஹதீஸ் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபிமொழி என்றும், ஷா வலியுல்லாஹ் அவர்களும் இது நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதட்டிலிருந்து தான் உதித்தது என்று சான்றுபகிர்கின்றார்கள். இது ஹதீத் நூல்களில் மிக தெளிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஹதீதை எவரும் புறக்கணிக்கவில்லை.

இந்த ஹதீத் ஒருபோதும் பொய்யானதில்லை. மாறாக இது முற்றிலும் உண்மையான ஹதீத் என்பதை நான் உறுதியளிக்கின்றேன். ஒவ்வொரு நூற்றாண்டும் ஒரு முஜத்தித் வருவதை நாம் இவ்வாறு கூறலாம். அதாவது, ஒரு நூற்றண்டில் நமது பௌதீக உடல் குன்றுவதைபோல் ஒவ்வொரு நூற்றாண்டும் ஆன்மிகமும் அதன் இறப்பை எய்துகிறது. எனவே ஒவ்வொரு நூற்றாண்டு கடந்ததும் ஒரு புதிய தலைமுறை உருவாகின்றது. இந்த புதிய தலைமுறைக்கு ஆன்மிக புத்துயிர் வழங்க ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்களை அனுப்புவது வல்ல ரஹ்மானின் *சுன்னத்துல்லாஹ்* வாகும்.

2. “நூற்றாண்டு”- என்பது பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தின் இமாம்களின் வருகை சம்பந்தமான முன்னறிவிப்பும் நூற்றாண்டுடன் தொடர்புடையது ஆகும்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:- “எவர் காலத்தின் இமாமை அறியாமல் மரணிக்கின்றாரோ அவரது மரணம் அறியாமையின் மரணம் ஆகும்” (Page 96 vol. 4 Musnad Ahmad)

மேலும், மஸீஹ் மஊது ( அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

They do not realize that such a thought is altogether sinful because our Holy Prophet(sa) has testified to the need for an Imam for every century. (Book The Need For The Imam page 5)

இமாம்களின் வருகையை மறுப்பது தண்டனைக்குரிய பாவம் ஆகும். ஏன்னென்றால், ஹஸ்ரத் முஹம்மத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் இந்த இமாமின் தேவை ஒவ்வொரு நூற்றாண்டும் அவசியம் என்று கூறுகின்றார்கள்.

காலத்தின் இமாம் கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா, முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத்(அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:-

என் அன்பிற்குரியவர்களே! இதிலிருந்து இஸ்லாத்தின் அழகிய போதனைகளை எடுத்து செல்வத்திற்கு ஆட்சி அரசாங்கமோ, செல்வமோ அல்லது அதிக எண்ணிக்கை யிலான மக்களோ தேவையில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். மாறாக, இந்த புனித பணிக்கு இறையச்சம் மற்றும் இறை நம்பிக்கையே தேவையானதாகும். அல்லாஹ் வின் அருளால் இந்த பணியை "ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்" பல்வேறு விதமான எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இஸ்லாத்தின் தூய போதனைகளை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கின்றது, இந்த ஜமாத்தில் உலக செல்வச் செழிப்போ அல்லது அதிக எண்ணிக்கையிலான மக்களோ இல்லை. ஆனால் எளிமையான மிக சொற்ப எண்ணிக்கையிலான மக்களே உள்ளனர். இருந்த போதும் இதன் பணியை உண்மை இஸ்லாத்தை முழு உலகத்திலும் பரப்பும் பணியை எவராலும் தடுக்கமுடியாது. ஏனென்றால், இவர்களுடன் வல்ல அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட கலீபஃதுல்லாஹ் இருக்கின்றார். மேலும் அவர் காலத்தின் இமாமாகவும் திகழ்கின்றார். (ஆதாரம்:- http://www.jamaat-ul-sahih-al-islam.com/jusai2016/fseng_29jan16.pdf

3. “திருக்குர்ஆனில் நூற்றாண்டின் குறிப்பு"

நாம் அவர்களை (மக்களின்) தலைவர்களாக ஆக்கினோம். அவர்கள் நமது கட்டளை மூலம் அவர்களுக்கு நேர்வழி காட்டினர். நாம் அவர்களுக்கு நற்செயல்களைச் செய்யுமாறும் தொழுகையை நிலைநாட்டுமாறும் ஸக்காத்து கொடுக்குமாறும் வஹியின் மூலம் அறிவித்தோம். அவர்கள் யாவரும் எம்மை வணங்கும் அடியார்களாகவே விளங்கினர். (திருக்குர்ஆன் 21: 74 )

தஃப்ஸீர் :- பரிசுத்த குர்ஆன் 2:125-ல் குறிப்பிடப்பட்டுள்ள பிரார்த்தனையை நிறை வேற்றுவதற்காக இறைவன் இப்ராஹீமின் சந்ததியினரிடமிருந்து "மார்க்கத்தை போதிக்கும்" இமாம்களைத் தேர்ந்தெடுத்தான். தம்மைப் பின்பற்றுபவர்களிடமிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆன்மீக சீர்திருத்தவாதிகளை எழுப்புவது தொடர்பாக இதே போன்றதொரு வாக்குறுதியே நபி பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

(நிச்சயமாக ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு அவர்களது மார்க்கத்தை புதுப்பிக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான். (அபூதாவுத்).

இந்த வாக்குறுதியானது பிரபலமான பிரார்த்தனையிலும் அடங்கி உள்ளது, அதாவது தரூத் ஷரீஃபில்:-

அல்லாஹ்வே! நீ "(ஹஸ்ரத்) இப்ராஹீமின் மீது எவ்வாறு அருள்புரிந்தாயோ அது போன்று ((ஹஸ்ரத்) முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் அருள்புரிவாயாக!" ஆன்மீக சீர்திருத்தவாதிகள் (ஹஸ்ரத்) இப்ராஹீமின் சந்ததியினரிடையே தொடர்ந்து தோன்றிவந்தார்கள், யூதர்களால் ஈசா(அலை) அவர்கள் நிராகரக்கப்பட்டதன் மூலம், அவர்கள் எல்லா காலத்திற்கும் அந்த அருளை இழந்துவிட்டார்கள், மேலும் மேற்கூறப்பட்ட (2:125) பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான முன்னறிவிப்பு இஸ்மாயிலின் சந்ததிக்கு மாற்றப்பட்டது. இஸ்லாத்தை சீர்திருத்தம் செய்வதற்காக ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களிடமிருந்து ஆன்மீக சீர்த்திருத்தவாதிகள் இப்போது எழுப்பப்ப டுகின்றார்கள், அவர்கள் இறுதி காலம் வரை தொடர்ந்து (அந்த சீர்திருத்தம்) செய்து கொண்டிருப்பார்கள். தரூத்(ஷரீஃபி)ல் உள்ள பிரார்த்தனையின் நிறைவேற்றமானது இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களது மேன்மையை நிலைநிறுத்துகின்றது. ஏனென்றால், ஹஸ்ரத் ஈஸா நபிக்குப் பிறகு இப்ராஹீமின் சந்ததியினரிடையே ஆன்மீக சீர்த்திருத்தவாதிகள் தோன்றுவது நிறுத்துப்பட்டு விட்டது. ,(தற்போது) அவர்கள் அவரை(அதாவது நபி(ஸல்) அவர்களைப்) பின்பற்றுபவர்களிடையே இந்த உலகம் நீடித்திருக்கின்ற வரை தொடர்ந்து தோன்றிக் கொண்டேயிருப்பார்கள்!!!! (English w/5 vol.Commentry(2018) பக்கம்-2101-2111)

தீர்ப்பிற்குரிய இரவு, ஆயிரம் மாதங்களை விட மிகச்சிறந்ததாகும். (திருக்குர்ஆன் 97: 4 )

The verse, however, embodies an allusion to the appearance of Divine Reformers among the Muslims when they would stand in need of them. One thousand months roughly make one century and the Holy Prophet is reported to have said that God would continue to raise from among his followers, at the head of every century, a Reformer who would regenerate Islam and give it new life and new vigour (Mājah). Thus väl all (Night of Destiny) may signify the period of each one of these Divine Reformers. (English w/5 vol.Commentry(2018) பக்கம்-3415)

(1000 மாதம் என்பது ஒரு தோராயமாக ஒரு நூற்றாண்டை குறிக்கும் இதையே ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இறைவன் இந்த உம்மத்திற்கு, அவர்களது மார்க்கத்தை புதுப்பிக்கும் ஒரு சீர்திருத்தவாதியை நியமிப்பான். (அபு தாவூது)

பெருமானார்(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்பதற்கான வலுவான ஆதாரம் அவன்(அதாவது அல்லாஹ்) ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஒரு நபரை நியமிக்கின்றான். அவர் இஸ்லாத்தை மரணிப்பதிலிருந்து காப்பாற்றுகின்றார். அதற்கு புதிய வாழ்க்கையை வழங்குகின்றார். உலகில் உள்ளவர்களை அவர்களிடம் உருவாகின்ற தவறுகள், பித் அத்துகள்(மார்க்கதில் புதிதாக புகுத்தப்படும் விஷயங்கள்) கவனமற்ற நிலைமைகள் சோம்பல்கள் ஆகியவற்றில் இருந்து அவர் காப்பாற்றுகின்றார். "இந்த தனிச்சிறப்பு பெருமானார் (ஸல்)* அவர்களுக்கே கிடைத்திருக்கின்றது. இது அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என்பதற்கான வலுவான சான்றாக இருக்கின்றது". யாரும் அதை எதிர்த்து நிற்வே முடியாது. (அஹ்மதி அவ்ர் கைர் அஹ்மதி மே கியா ஃபரக் ஹே? ரூஹானி கஸாயின் தொகுதி 20 பக்கம் 469)

சகோதரர்களே சற்று சிந்தியுங்கள்‼ "ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஆரம்பத்தில்" அல்லாஹ் அவனிடம் இருந்து ஒரு சீர்திருத்தவாதியை அனுப்புவது அவனது வாக்குறுதியாகும் இதை நாம் 14 நூற்றாண்டுகளாக ஏற்று ஹஸ்ரத் மஸீஹ் மவூத்(அலை) அவர்களை ஏற்றோம் ஆனால், "15 வது நூற்றாண்டு தொடங்கி வாதம் செய்பவர் வந்த பின்னும்" ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்களின் போதனையை கவனமற்று இருப்பது ஏன்? "இறைவன் அவனது சுன்னத்தை ஒருபோதும் மீறமாட்டான்" அவனுடன் போட்டியிட்டு வெல்ல முடியுமா?!

ஆனால், இந்த கூற்றுக்கு மாற்றமாக இந்த நூற்றாண்டில் சில தவறான கொள்கைகள் நம்மிடையே நிலவுகின்றன. அதாவது, கலீஃபதுல் ரஸூல்/மஸீஹ்மார்கள் இன்னும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்த நபிமார்கள் அல்லாத கலீஃபாமார்கள் தான் முஜத்தித், காலத்தின் இமாம் என்று நிஜாமிகளால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், அவர்களின் இந்த கூற்றிற்கு எந்த திருகுர்ஆன் வசனமும் துணை நிற்பதில்லை. மாறாக, ஒரு கலீபாதுல் மஸீஹ் அவருக்கு முன் உள்ள கலீஃபதுல் மஸீஹ் இறந்ததிற்கு பிறகு தேர்வு செய்யப்படுகின்றார். ஆனால் இறைவனோ "ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் இறை வஹீ மூலம் ஒருவரை அவனே நியமிக்கின்றான்." என்பதை அவர்கள் மறந்து விட்டனர். மேலும், நிஜாமிகள் வைக்கும் மற்றும்மொரு ஆட்சேபனை "ஒவ்வொரு நூற்றாண்டும் பல முஜத்தித்மார்கள் வந்துள்ளனர்." என்று கூறுகிறார்கள். திருகுரானின் அடிப்படையில் இந்த ஹதீஸ் மிகத்தெளிவாக ஒவ்வொரு நூற்றாண்டில் தலைமையில் தோன்றும் அந்த முஜத்தித் பற்றியும் அதாவது அந்த நூற்றாண்டின் தலைமை இமாமைப் பற்றி அங்கே மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை சரியான புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் ஏற்க மறுக்கின்றனர். அவர்களின் நோக்கம் இந்த கிலாஃபதே ரஸூலை அதாவது "நபிமார்கள் அல்லாத கலீபாக்களை" இறுதி தீர்ப்புநாள் வரை கொண்டு செல்வதில் தான் உள்ளது என்பதையும் நாம் தெளிவாக உணரலாம்.

இன்னும் மற்றுமொரு வியக்கத்தக்க ஆட்சேபனை என்னவென்றால், நிஜாமிகள் இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் வாதம் செய்வதில்லை என்ற அபத்தமான கூற்றையும் முன் வைக்கின்றனர். ஆனால் திரு குர்ஆன் மற்றும் மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றின் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த கூற்றும் தவறானது எனபதை அறியலாம்.

அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன். அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன்.(திருக்குர்ஆன் 92: 2-4)

“Procreation of man depends upon the coming together of two individuals of opposite sexes. The characteristic quality of the one the (male) is to give and of the other (the female) is to receive. Like the physical world, there are in the spiritual world, males- God’s great prophets and Divine Reformers- who teach and guide, and there are also spiritual females- their followers- who receive and benefit by the Divine Teaching. The verse embodies a hint that by coming together of the perfect Teacher- the Holy Prophet- and the ideal pupils- his Companions- a new world is about to be born”. (HQ, 92: 2-4, pp. 2835)

வருகின்ற முஜத்தித் ஆன்மீக ஆண்கள் என்ற பொருள் வருகின்ற அதாவது முஜத்தித்மார்கள் நபிமார்களை போன்று "ஆன்மீக ஆண்கள்" அதாவது, வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மேலும், ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஹகீகத்துல் வஹீயில் அன்னாரின் வருகையின் முதல் அடையாளமாக நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் வருகையை பற்றி மிகவும் குறிப்பாக நூற்றாண்டின் தலைமையில் தோன்றும் இத்தகைய முஜத்தித்மார்கள் தத்தமது காலத்தில் வாதம் செய்துத்துள்ளனர். என்று தெளிவாக குறிப்பிட்டுளார்கள். (HaqIqatul-WaHI—The Philosophy of Divine Revelation page no:241)

நூற்றாண்டு:-

ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் ஒரு முஜத்தித் தோன்றுவர் என்றும் அத்தகைய முஜத்தித் "வாதம் செய்வார்கள்" என்றும் அவர்களின் வருகை இறுதி தீர்ப்புநாள் வரை தொடரும் என்பதை திருகுரானின் அடிப்படையில் பார்த்தோம். மேலும் நூற்றாண்டு எவ்வாறு கணக்கிடப்படுகின்றது என்பதையும் இப்போது பார்க்கலாம்; நபிகள் கோமான்(ஸல்) அவர்களும் ஒரு சிறந்த முஜத்தித் ஆவார்கள். (Urdu- Roohani Khazain, Volume 20, Page 206)

அன்னாருக்கு பிறகு ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் முஜத்தித்மார்கள் தோன்றுவார்கள். அவர்கள் தோன்றும் காலத்தை பற்றி ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹமத் அஸிம்(அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்; அந்த நாளை பற்றிய அறிவு எவருக்கும் இல்லை. மேலும், அதன் அறிவை அவன் தன்னகத்தே வைத்துள்ளான். இதன் அறிவை அவனது மிகவும் நெருங்கிய அவனது அன்பிற்குரிய ஹஸ்ரத் முஹம்மது ஸல் அவர்களிடம் கூட வெளிப்படுத்த வில்லை. மேலும் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். (https://sahih-al-islam.blogspot.com/2015/10/super-blood-moon-grand-celestial-sign.html)

அவர்கள் உம்மிடம் அந்த நேரத்தைக் (கியாமத்தை) குறித்து அது எப்போது வருமென்று கேட்கின்றனர். நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனையன்றி அதனை அதற்குரிய காலத்தில் வெளிப்படுத்த எவராலும் முடியாது. அது வானங்களிலும் பூமியிலும் பாரமானதாக இருக்கும். (மேலும்) அது உங்களிடம் திடீரென்று தான் வரும். அது குறித்து நீர் அதனை நன்கறிந்திருப்பதைப் போன்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அதனைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை அறிவதில்லை. (திருக்குர்ஆன் 7: 188)

இறுதி காலம் குறித்து மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக அதைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடம்(தான்) உள்ளதென்று நீர் கூறுவீராக. மேலும் அந்த நேரம் நெருங்கியிருக்கலாம் என உமக்குத் தெரிவிப்பது எது? (திருக்குர்ஆன் 33: 64 )

எனவே ஒரு நூற்றாண்டிற்கு பிறகு அடுத்த நூற்றாண்டு என்று கணினியை வைத்து நாளை கணிப்பது அறிவார்ந்த சிந்தனையாக இருக்காது. மாறாக, அல்லாஹ் யாரை அவனது வஹியின் மூலம் எழுப்புகின்றான் எப்போது எழுப்புகின்றான் என்பதை அவன் எவரிடமும் அறிவிப்பதில்லை, எனவே ஒரு நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் ஒருவர் வாதம் செய்பவரை பொறுத்தே உள்ளது. மேலும், வாதம் செய்யும் அந்த புனிதர்கள் அவர்களின் நூற்றாண்டிற்குறிய வாதமும் செய்கின்றனர்.

இதையே ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகின்றார்கள் 13 வது நூற்றாண்டு முடித்து 14 வது நூற்றாண்டு தொடங்கியது. அந்த ஏக இறைவாகிய அல்லாஹ் "எனக்கு வஹியின் மூலம் அறிவித்தான் நான் தான் முஜத்தித்" என்று (கிதாபுல் பரிய்யா பக்கம் 201)

இதையே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் (அலை) அவர்களும் கூறுகின்றார்கள்;-

பாருங்கள்! எனது பிறப்பு ஹிஜிரி 1380 அதாவது 14 வது நூற்றாண்டு ஆகும் மேலும் அந்த ஏக இறைவன் ஹிஜிரி 1421 அதாவது 15 நூற்றாண்டில் என்னை வஹியின் மூலம் எழுப்பினான்.

இவ்வாறே நாம் வாழும் காலத்தில் இறைவனால் 15 வது நூற்றாண்டில் முஜத்தித்தாக எழுப்பட்டவரே "முஹையுத்தீன்" ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவார்கள். அன்னார் இந்த நூற்றாண்டின் இறைவஹீயின் மூலம் வாதம் செய்துள்ளார்கள்.

அன்னாருக்கு இறங்கிய இறை வஹீ (10.09.2010)

Bismillah hir rahman nir raheem

Ya Khalifathullah! Qul: “Annal Mujaddido” (O Khalifathullah! Tell them: ‘I am the Mujaddid’)

கலீபத்துல்லாஹ்வே! அவர்களுக்கு கூறுவீராக! “நான் தான் முஜத்தித் என்று..”

அல்ஹம்துலில்லாஹ்! உண்மையை தேடும் ஒரு இறைநேசருக்கு நிச்சயம் ஒரு சிறந்த ஆன்மீக உணவாக இருக்கும் என்பதில் ஐயமும் இல்லை. மேலும் உங்கள் புரிதலுக்காக அஹ்மதியா ஜமாத்தில் இதுவரை ஏற்றுக்கொண்ட நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் பட்டியலிடப்பட்டுள்ளது. ஜஸக்கல்லாஹ்.

லைலத்துல் கத்ர் : ஒரு முஜத்தித்தின்/கலீஃபத்துல்லாஹ்வின் வருகை!

முஸ்லிம்களின் மனதில் ஆன்மீக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது. மேலும் இம்மாதத்தில் அந்த ஏகஇறைவனுக்காக நோன்பின் கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதத்தில் தான் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியது. மேலும் புனித திருகுரான் பிறந்த மாதமும் இதுவே என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இக்கூற்றை திருக்குரானே இந்த புனிதமிக்க மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்று சான்று பகிர்கின்றது. மேலும் அது இவ்வாறாக நமக்கு கற்பிக்கின்றது.

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது (திருகுரான் 2:185)

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (திரு குரான் 97:1)

நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். (திருக்குரான் 44:3)

இன்னும் புகழ் பெற்ற திருகுரான் மொழிபெயர்பாளர்களும், மார்க்க அறிஞர்களும், திருமறை எங்கெல்லாம் “லைலாஹ”(Lailah) என்று குறிப்பிடுகின்றதோ அதனுடன் "இறை வஹியின் வெளிப்பாட்டிற்க்கும் ஆழமான தொடர்பிருப்பதை குறிப்பிடுகின்றார்கள்" மேலும் இதற்கும் அந்த காலத்தில் தோன்றும் முஹத்தத் அதாவது இறைவஹீயை பெறக்கூடியவர், கலீஃபத்துல்லாஹ் அதாவது அல்லாஹ்வின் கலீபா மற்றும் முஜத்தித் (மார்க்க சீர்திருத்தவாதி)களின் வருகையுடன் மிக ஆழமான தொடர்பிருப்பதை இஸ்லாத்தில் தோன்றிய புனிதர்கள் அறிந்திருந்தனர்.

மேலும் இதன் முக்கியத்துவம் பற்றி ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி(அலை) அவர்கள் முஸ்லிம்களிடம் இந்த இரவை பற்றிய ஞானத்தையும், "சூரா அல் கதரில் பொதிந்துள்ள நுட்பமான ஆன்மீக அறிவையும் போதித்து வந்தார்கள், இதிலும் முக்கியமாக அந்த இரவில் இறைப் புறத்திலிருந்து" அவனால் எழுப்பப்படும், அந்த அந்த காலத்தில் தோன்றக்கூடிய "முகதத் மற்றும் முஜத்தித்மார்களை" பற்றியும் அன்னார் போதித்து வந்தார்கள்,

மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவுது (அலை) அவர்கள் பஃதே இஸ்லாம் அதாவது இஸ்லாத்தில் வெற்றி என்ற புத்தகத்தில் இதைப்பற்றி நமக்கு கூறியதை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன் அன்னார் கூறுகின்றார்கள்:-

திருக்குர்ஆனில் உள்ள சூரத்துல் கத்ர் 97 ஆம் அத்தியாயத்தை நான் குறிப்பிடுகின்றேன். இந்த அத்தியாயத்தில் சர்வ வல்லமையுள்ள இறைவன், அவனது வசனங்களும், அவனது நபியும், லைலத்துல் கதரில் வானத்திலிருந்து இறக்கப்பட்டிருக்கிறது என்ற நற்செய்தியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு வழங்குகின்றான்.

உள்ளது உள்ளவாறு சொல்வதானால் இறைவனிடமிருந்து வரும் ஒவ்வொரு முகதத், மற்றும் முஜத்தித்மார்கள் அத்தகைய வல்லமை மிக்க இரவிலேயே இறங்குகிறார்கள். "லைலத்துல் கத்ர் இரவு என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?" லைலத்துல் கதர் என்பது, இருள் தன் முழு எல்லையை எட்டிவிட்ட அந்த இருண்ட காலத்திற்கு பெயராகும். எனவே அந்த காலத்தில், அந்த இருளை அகற்றுவதற்கு ஓர் ஒளி இரங்க வேண்டும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. அந்தக் காலத்திற்கு உருவகமாக லைலத்துல் கதர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அது இரவு அல்ல. அதனுடைய இருள் காரணமாகவே அக் காலம் இரவு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபியின் அல்லது ஆன்மீக பிரதிநிதியின் மரணத்திற்குப் பிறகு, அதாவது ஆயிரம் மாதங்களுக்குப் பின்னர், அவ்விருள் படரத் தொடங்குகின்றது. ஆயிரம் மாதங்கள் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளுக்கு சமமாகும். இக்கால கட்டத்தின் இறுதியில், மனிதனின் புலன்களும் தளர்ந்து ஓர் இறுதி காலகட்டத்திற்கு வருகின்றது. பின் "புதிய நூற்றாண்டின்" தொடக்கத்தில் ஒரு "சீர்திருத்தவாதி அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சீர்திருத்தவாதிகள்" அதாவது முஜத்தித்மார்கள் தோன்றுவதற்கான விதையை பரலோகமானது விதைக்கின்றது.

இந்த நிகழ்வை தான் எல்லாம் வல்ல இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (திருக்குரான் 97:4)

வல்லமை மிக்க இரவில் இறங்குவதை காண முடிந்தவர்கள், இந்த ஒளி வரும் காலத்தில் இவ்வுலகத்தில் இல்லாமல் போய்விட்ட எண்பது வயதுக்காரர்களை விடச் சிறந்தவர்கள் என்பது இதற்குப் பொருளாகும். இந்த இரவின் போது ஒரு கணப் பொழுதில் பெறப்பட்ட ஒளியானது அந்த "இரவுக்கு முந்தைய ஓராயிரம்" இரவுகளை காட்டிலும் மேலானது. இவ்வாறாக அது மேலானது என்றால்? "அந்த இரவில் இறைவனிடமிருந்து வானவர்களும் பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸும்) மாட்சிமை மிக்க இறைவனின் அனுமதியுடன் அந்த காலத்திற்குரிய முஜத்தித் உடன் இறங்குகின்றார்கள்." அவர்கள் அதாவது பரிசுத்த ஆவியும் (ரூஹுல் குதுஸ்ஸும்) புதிய பாதையைத் திறந்து விட்டு மூடிய திரையை நீக்குகிறார்கள். ஆதலால் அலட்சிய மனோபாவம், அறியாமையாகிய இருள்கள் நீங்குகின்றன. "நேர்வழி என்னும் விடியற்காலை உதயமாகி அவ்விடத்தில் ஆன்மீக ஒளி பரவத் தொடங்குகிறது."

ஆகவே முஸ்லிம்களே! இந்த வசனத்தை படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள். காலத்தின் தேவையை நிறைவேற்றும் வகையில் ஒரு "முஜத்தித்தை இறைவன் உலகிற்கு அனுப்பி வைக்கின்றான். காலத்தை அந்த இறைவன் எவ்வளவு அருமையாக அடையாளமிட்டு காட்டுகின்றான்! நீங்கள் அந்த காலத்துக்கு மதிப்பளிக்க மாட்டீர்களா?" இறைவனின் வாக்குறுதிகளை நீங்கள் ஏளனம் செய்து கொண்டு பார்ப்பீர்களா? [Victory of Islam, pp. 33-35, Qadian: Islam International Publications, (2003) ]

-ஹஸ்ரத் முனீர் அஹ்மத் ஆஸீம் (அலை) அவர்களால் 07.06.2018 அன்று வெளிடப்பட்டது.

"இன்னி மஅக யா மஸ்ரூர்" என்ற இல்ஹாம் பற்றிய விளக்கம்!

முதலில் இந்த வஹீயை பற்றி பார்ப்போம். இந்த வஹீ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு 1907 ம் ஆண்டு இறங்கிய தொடர்ச்சியான வஹீயில் மூன்றாவதாக இறங்கிய அரபு மொழிலனான வஹீயாகும்.

இதன் பொருள்: ”மகிழ்ச்சிக்குரியவரே நான் உம்முடன் இருக்கிறேன்." என்று அல்லாஹ் சுபஹானஹுதாலா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களைப் பார்த்து (இன்னிமாக்கா யா மஸ்ரூர்) கூறியிருக்கின்றான். [Badr, vol. 6, no. 35, August 29, 1907, p. 4 and al-Hakam, vol. 11, no. 31, August 31, 1907, p. 1]

இதே நாளில் அன்னாருக்கு இறக்கிய இறை வஹீயின் மற்றொன்றில் அல்லாஹ் அன்னாரை பார்த்து “இன்னிமாக்கா யா இப்ராஹிம்” என்றும் அழைத்துள்ளான். மேலும், இந்த வஹீ அன்னாருக்கு பல முறை இறங்கி உள்ளது. [Arabic] I am with you, O Ibrahim [al-Badr, vol. 7, no. 3, January 23, 1908, p. 4 and al-Hakam, vol. 12, no. 6, January 22, 1 1908, p. 10]

மேலும் அன்னாருக்கு இவ்வாறும் வஹீ இறங்கியுள்ளது; அதாவது,

“நான் உன்னை விரும்புகிறேன். நான் உம்முடன் இருப்பேன்.”
“I love you. I am with you”.
[Barahin-e-Ahmadiyyah, part 4, pp. 480–481 sub-footnote 3, Ruhani Khaza’in, vol. 1, pp. 571–572 sub-footnote 3]

ஆக இந்த அனைத்து வஹீகளும் அல்லாஹ் அன்னாரை பார்த்து கூறியதாகும். அல்ஹம்துலில்லாஹ்.. இப்போது நிஜாமிகள் இந்த வஹீயை ஐந்தாவது கலீஃபதுல் மஸீஹ் 'மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் சாஹிப்' அவர்களுக்கான முன்னறிவிப்பு என்று கூறுகின்றனர். தவறில்லை. ஆனால், நிஜாமிகளின் எண்ண ஓட்டங்களும் கற்பனைகளும் சான்றாகாது. முதலில் அதற்குறிய விளக்கங்களை தனக்கான முன்னறிவிப்பு என்று யார் கூறவேண்டும்? என்பதே நமது கேள்வியாகும்?

ஒருவேளை மஸீஹ்(அலை) அவர்களுக்கு இறங்கிய அந்த வஹீ இன்னும் குறிப்பாக ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களை பார்த்து அல்லாஹ் கூறிய அந்த வஹீ என்னுடைய வருகையின் முன்னறிவிப்பு என்று அல்லாஹ் கூறினான் என்று மிர்ஸா மஸ்ரூர் சாஹிப் அவர்கள் கூறியுள்ளார்களா? அல்லது இந்த நிஜாமிகளின் சொந்த கூற்றா?

அல்லாஹ் திருகுர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன். அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன். (திருக்குர்ஆன் 92: 2-4)

“Procreation of man depends upon the coming together of two individuals of opposite sexes. The characteristic quality of the one the (male) is to give and of the other (the female) is to receive. Like the physical world, there are in the spiritual world, males- God’s great prophets and Divine Reformers- who teach and guide, and there are also spiritual females- their followers- who receive and benefit by the Divine Teaching. The verse embodies a hint that by coming together of the perfect Teacher- the Holy Prophet- and the ideal pupils- his Companions- a new world is about to be born”. (HQ, 92: 2-4, pp. 2835)

முஜத்தித்மார்களும் நபிமார்களுமே வாதம் செய்யும் ஆன்மீக ஆண்கள் என்றும் மற்றவர்கள் அனைவரும் பெண்கள் என்று அழைக்கப்டுகின்றார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவருமே முஜதித்தமர்களுக்கும் நபிமார்களுக்கும் இறக்கும் வஹியை பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று தெளிவாக விளங்குகின்றது. அதாவது, முஜத்தித்மார்களும், நபிமார்களுமே ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹசரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே கலிஃபதுல் மஸீஹ் அவர்கள் இது தனக்கான முன்னறிவிப்பு என்று வாதம் செய்யாத போது நிஜாமிகள் எவ்வாறு வாதம் செய்ய முடியும்? இதற்கு காரணம் "இறைவஹீயை பற்றியான அடிப்படை ஞானம் இல்லாததே ஆகும்."

இன்னும் சிலரோ கலீஃபதுல் மஸீஹ் அவர்களுக்கு இறை அறிவிப்பு கிடைக்கிறது ஆனால் அவர் வெளியே சொல்லமாட்டார் என்று கூறுகின்றனர். இத்தகைய கூற்றும் திருகுர்ஆனுக்கு மாற்றமான கருத்தாகும். சகோதரர்களே! இன்னும் கூறப்போனால் இது ஒரு பாவமாகும்.

அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

அவன் வானவர்களை "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்" என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான். (திருக்குர்ஆன் 16:3)

இந்த வசனத்திற்கு ஹசரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் விளக்கம் அளிக்கும்போது; "இங்கே الروح (அர் ரூஹ்-இறை வெளிப்ப்பா) ட்டினால் என்பதன் பொருள் இறைவனின் உயிர் வழங்கும் வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் உயிர் வழங்கும் குணங்களை குறிப்பதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது."

'மக்களை எச்சரிக்க' என்ற வார்த்தைகள் இங்கே சுட்டிக் காட்டுகின்ற ' இறை வெளிப்பாடு' என்பதன் பொருள் ஒரு இறைத் தூதருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு வெளிப்பாடாகும். இறை வெளிப்பாடு பொதுவாக இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்:

(1)பெறக்கூடிய நபரைப் பற்றிய அவருடைய சொந்த வெளிப்பாடு. பொதுவாக அதனை வெளியிடுவதற்கு எந்த 'சிறப்பு தடை'யும் இல்லை என்றாலும், அது அறிந்து கொள்ளப்பட்டு வெளியிட வேண்டிய தேவையில்லை.

(2)மனிதகுலத்திற்கான பரந்த (அளவிலான) இறை வெளிப்பாடு. பிந்தைய இந்த வகையிலான இறை வெளிப்பாட்டிற்க்கு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மேலும், அதனை (வலுக்கட்டாயமாக) அடக்குவது என்பது ஒரு உண்மையான பாவத்திற்கு சமமாகும்.

முதல் வகையான வஹீ பொதுவானதாகும் இதையே ஹஸ்ரத் மஸீஹ் அலை அவர்கள் கூறும்போது ஜிப்ராயீலிய ஒளியின் 46-ஆவது பகுதி முழு உலகிலும் பரவி இருக்கிறது. சொல்லப்போனால், வேசிகளின் குழுவைச் சேர்ந்த மிகவும் துர் நடத்தையுடைய- தன் இளமையை முழுவதும் தீய நடத்தையிலேய கழித்த ஒரு பெண், சில நேரத்தில் உண்மையான கனவைப் பார்த்து விடுகிறாள் என்பது அனுபவத்தில் அறிந்த உண்மை என்பது வரை நான் ஏற்றுக் கொள்கிறேன். இத்தகைய பெண் இரவில் குடித்து விட்டு அந்நிய ஆணுடன் படுக்கையில் கிடக்கும் போது கூட ஏதாவதொரு கனவைப் பார்க்கிறாள். அது உண்மையாகி நிறைவேறியும் விடுகின்றது என்பது இன்னும் ஆச்சரியமான விஷயமாகும். (குறிக்கோள் பற்றிய விளக்கம் பக்கம் 73)

ஆனால், இரண்டாவது வகை அறிவிக்கும்படியான வஹீயை மார்க்கத்தின் உயிர் ஆகும். இந்த அருள் இப்போது இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்திற்கும் கிட்டாது.

மேலும் அன்னார் (அலை) கூறுகிறார்கள்:-

இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறைவெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை உண்மையான மார்க்கமாகிய உம்மதே முஹம்மதிய்யாவில் நிலைத்து நிற்பவர்களுக்கு அவன் அளிக்கிறான். இறைவனின் சக்திக்கு மட்டும் உட்பட்ட, மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான். எவர் உண்மையான உள்ளத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, நபிகள் நாயகம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான முழுமை பெற்ற நபி என்றும், எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன் நபிய்யீன் என்றும் உறுதி கொள்கின்றாரோ, அத்தகு நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை இறைவன் அளிக்கின்றான். யூதர்கள், கிறித்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் ஆகியோருக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிட்டாது. எனினும் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்கு அது அப்போதும் கிடைத்தது; இப்போதும் கிடைக்கிறது; இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தைக் கொண்டுள்ள வஹி அவசியமில்லாமையால் அது முடிவு பெற்று விட்டது. எனினும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு அந்த இல்ஹாம் கிடைக்கிறது. அது ஒருபோதும் நிற்காது. நமக்குக் கிடைக்கும் இந்த இல்ஹாம் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மை நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இழிவும் அவமானமும் அடைகிறார்கள். (பராஹீனே அஹ்மதிய்யா தொகுதி 3 பக்கம் 216 அடிக்குறிப்பு 11)

ஆனால், இந்த அருள் இப்போது நிஜாமிகளிடம் கேள்விக்குறியாக்கிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் அப்துல் கபார் ஜனாபா, மஸீஹ் (அலை) அவர்களுக்கு இறங்கிய வஹியை

இன்னீ மஅல் கஃப்பார்” -நான் கப்பார் உடன் இருக்கிறேன். (இதன் அர்த்தம் நான் கருணை உடையவர்களுடன் இருக்கிறேன் என்பதாகும்)

தனக்கானது என்று கூறி ஹஸ்ரத் மிர்சா பஷீரூத்தீன் மஹமூத் அஹ்மத்(ரலி) அவர்கள் ஒரு பொய்யர் (நஊதுபில்லாஹ்) என்று கூறுகிறார். இறை அறிவிப்பு இல்லாமல் இத்தகைய மனோ இச்சைகள் அருளுக்குரிய இந்த சமுதாயத்தை எங்கு அழைத்துச் செல்கின்றது என்று பாருங்கள். சகோதரர்களே!

ஆனால், இறைவன் அருளாக இந்த நூற்றாண்டில் தோன்றிய இறைத்தூதர் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் நமது எஜமானர் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பையும் தனது முஜத்தித் வாதத்தையும் எவ்வாறு செய்கின்றார்கள் என்று சற்று சிந்தியுங்கள் சகோதரர்களே!

அன்னார் தனது வருகையை பற்றி கூறும்போது

…ஹிஜ்ரி 1400 லிருந்து 20 அல்லது 30 வருடங்களை கூட்டிக்கொள்ளுங்கள் அப்போது உங்களிடையே மஹதி தோற்றுவார். (ஆதாரம்:Qalda bin Zayd bin Baraka, Qalda bin Zayd bin Baraka, Asma Masalik Li Ayyam Al-Mahdi: Malik Li Kul Al-Dunya Bi Amr Allah El-Malik, p.216))

மேலும், இந்த ஹதீதின் அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) ஆவார்கள். மேலும், இந்த நபிமொழி பற்றி கலீஃபத்துல்லாஹ் (அலை) அவர்கள் கூறும்போது:- நபி(ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு எனது வருகையை உறுதி செய்கின்றது என்று வாதம் செய்து உள்ளார்கள். (https://sahih-al-islam.blogspot.com/2011/06/divine-manifestation-in-mauritius.html)

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள், அன்னார் இந்த நூற்றாண்டின் இறைவஹீயின் மூலம் முஜத்தித் வாதத்தை இவ்வாறு செய்கின்றார்கள். அன்னாருக்கு இறங்கிய அறிவிக்கும்படியான இறைவஹீ (10.09.2010)

Bismillah hir rahman nir raheem

Ya Khalifathullah! Qul: “Annal Mujaddido” (O Khalifathullah! Tell them: ‘I am the Mujaddid’)

கலீபத்துல்லாஹ்வே! அவர்களுக்கு “நான் தான் முஜத்தித் என்று” கூறுவீராக!

எனவே! இந்த இரண்டு நிலையை பற்றி திருக்குர்ஆன் தெளிவாக நமக்கு எச்சரிக்கின்றது.

எனவே, எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர் எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா? (அல்குர்ஆன் : 47:14)

இந்த காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹமத்(அலை) அவர்கள் மேலும் கூறுகின்றார்கள்:-

மனிதன் மீதான இறை வெளிப்பாடுகளின் இறங்குதல்:

இந்த வனங்கள் மட்டுமல்லாது திருகுர்ஆனின் சூரா அந் நஜ்ம் 53 ஆம் அத்தியாயத்தில் "ரூஹுல் குத்தூஸ்" மிக அழகான மற்றும் மனம் கவர்கிற முறையில் இறங்குவதைக் குறித்து, அசாதாரணமான வழியில் அல்லாஹ் தனது சொந்த சாரத்தை(உள்ளியல்பை) வெளிப்பாடுகளின் வடிவில், தான் தேர்ந்தெடுத்த தூதரின் மீது இறக்குகின்றான் என்பதை விளக்குகின்றான். (அதனால்தான் நாம் அதனை இறை வெளிப்பாடு என்று கூறுகின்றோம்). ஹதீ ஸ்களிலிருந்தும் நாம் அறிவது போல நபி(ஸல்) அவர்களின் மிகப்பெரிய ஆன்மீக தரிசனமாகிய அதாவது இஸ்ரா மற்றும் மிஹ்ராஜ் நிகழ்வின்போது நபி(ஸல்) அவர்களுடன் தூய வெளிப்பாட்டின் உயர் வானவராகிய(மலக்கு) ஹஸ்ரத் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கீழ் வானத்திலிருந்து “சித்ரதுல் முன்தஹா” வரை சென்றார்கள். சூரத்துல் அந்நஜ்ம் லிருந்து ஹஸ்ரத் ஜிப்ரீல்(அலை) அவர்கள், ரூஹூல் குத்தூஸின் ஒரு பகுதி(சாராம்சம்) மட்டும்தான் என்றும் அதனுடைய முழுமையான சாராம்சம் அல்ல என்பதையும் நாம் அறிந்து கொள்கிறோம். ரூஹுல் குத்தூஸின் பல வெளிப்பாடுகளில் அவரும் ஒன்றாவார். அல்லாஹ் இதனை தெளிவான வார்த்தைகளில் குறிப்பிடுகிறான்:-

"நிச்சயமாக அவர்(அதாவது ஹஜ்ரத் முஹம்மது (ஸல்) மற்றொரு முறையும் அவரைக் கண்டார். மிகத் தொலைவிலுள்ள இலந்தை மரத்திற்கு(சித்ரதுல் முந்தஹா)ப் பக்கத்தில்..... மூடக்கூடிய ஒன்று இலந்தை மரத்தை மூடிய போது (அது நிகழ்ந்தது)" (அந் நஜ்ம் 53:14-17)

அல்லாஹ் திருக்குர்ஆனில் மனித இனத்தை (பஷர்) படைப்பது தொடர்பாக இன்னும் மிகக் குறிப்பாக அவனது பிரதிநிதியை(ஒரு கலீபத்துல்லாஹ்வை) அனுப்பி வைப்பதன் மூலம் மனித குலத்திற்க்கு அல்லாஹ் அவனது சிறப்புமிக்க நற்செய்தியினை (பஷர்) வழங்குவதாகக் கூறுகின்றான்:

"நான் அவனை முழுமையாக்கி என் ஆவியை(ரூஹ்) அவனுள் ஊதிய போது நீங்கள்எல்லாரும் அவனுடன் சிரம் பணிந்து விடுங்கள். "(அல் ஹிஜ்ர் 15:30; ஸஅத் 38:73)

இந்த விஷயத்தில் மனிதனுக்கு மிகக் குறைந்த அறிவே வழங்கப்பட்டிருக்கின்றது. அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

"அவர்கள் உம்மிடம் ரூஹ் (ஆன்மாவை)ப் பற்றி வினவுகின்றனர். நீர் அவர்களிடம் ரூஹ் (ஆன்மா) என் இறைவனின் கட்டளையினால் படைக்கப்பட்டுள்ளது, உங்களுக்கு அதுபற்றி மிகக் குறைந்த அறிவே கொடுக்கப்பட்டுள்ளது." எனக் கூறுவீராக. (அல் இஸ்ரா 17:86)

அல்லாஹ் திருக்குர்ஆனில் ரூஹைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம், நம் கவனத்தை தெய்வீக வெளிப்பாட்டின் சாராம்சத்தின் பக்கம் அவனுக்ருகில் நம்மை அழைக்கின்றான். மனிதனுக்கு ஒரு ஆன்மா (நஃப்ஸ்) மட்டுமல்ல ஒரு ரூஹும் உள்ளது.. இந்த இரண்டு சொற்களில் உள்ள வித்தியாசத்தை உங்களுக்கு புரிய வைப்பதற்காக வேறு வகையில் இதுபற்றி கூறுவதானால், நஃப்ஸினை சீர்திருத்தவும், சீர்குலைக்கவும் முடியும். ஆனால், ரூஹினை சீர்குலைத்து விட முடியாது. மனிதன் அல்லாஹ்வுடன் இணைந்திருக்கும்போது, தொழுகைகள் (ஸலாத்), பிரார்த்தனைகள் (துஆக்கள்) மற்றும் திக்ருல்லாக்கள் (அல்லாஹ்வின் நினைவு / தியானம்) மூலம் அவனுடன் ஒரு நீடித்த உறவை தேடுகின்றான். ஆதலால் அவன்(அல்லாஹ்), அவனது (மனிதனின்) நஃப்ஸை ரூஹின் சாரத்துடன் ஒன்றிணைக்கும் வழியினை திறக்கின்றான். அதாவது, இறை வெளிப்பாடுகளை இறக்குவதன் மூலம் அல்லது உண்மையான கனவுகள் மற்றும் ஆன்மீக தரிசனங்களின் வாயிலாக , அல்லாஹ் அவனுடன் ஓர் அருளுக்குரிய தொடர்பைப் பெற்றுக்கொள்வதற்கான வழியைத் திறக்கின்றான்.

நஃப்ஸினைப் பொறுத்தவரையில், அதாவது ஆன்மா அல்லது உள்ளுணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தீகரிக்கப்படும் போது, நஃப்ஸே அம்மாரா (தீமையை தூண்டும் ஆன்மா) மெதுவாக நஃப்ஸே லவ்வாமாவை (குற்றம்சாட்டும் ஆன்மாவை) அடைகிறது. இறுதியாக அவர் அல்லாஹ்வுடனான முழுமையான ஒரு உறவினை அடையும்வரை அவனது பரிசுத்த ஆவியினால் ஈர்க்கப்படுவார். அந்த நிலையினை அடைந்த நபரை, அல்லது அந்த நிலையினை அடைந்த ஆன்மாவை, நஃப்ஸே முத்மயினா (சாந்தியடைந்த ஆன்மா) என அழைக்கப்படுகிறது.

15 ஆகஸ்ட் 2011ல் அல்லாஹ் வெளிப்படுத்திய இறை வெளிப்பாட்டின் செய்தி:

அல்லாஹ்வின் தூதரின் ஆன்மா சாந்தி அடைந்த நிலையிலுள்ளது. பிற மக்களின் இதயங்களில் சாந்தியிணை நுழைய வைப்பதற்கான வழிமுறைகளை அவர் கற்பிக்கின்றார். நிச்சயமாக மனிதன், ஒருவருக்கொருவர் மற்றும் தனிப்பட்ட (ரீதியிலும்) நான் என்னும் அகந்தையில் இருந்து (விடுபட்டு) பல நிலைகளை கடந்து செல்ல வேண்டும்.

அப்போது (மட்டும்தான்) மனம் மற்றும் ஆன்மாவின் மிக அழகிய உயர் நிலையை அவரால் அடைய முடியும். மனது பெளதீகமாக உடலை வழி நடத்துகின்ற அதே வேளையில், ஆன்மா உடலை ஆன்மீக ரீதியில் வழிநடத்துகிறது.

திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான்:

நிம்மதி அடைந்த ஆன்மாவே! நீ உன் இறைவனிடம் திருப்தியடைந்தவாறும், அவன் உன்னிடம் திருப்தியடைந்தவாறும் அவனிடம் திரும்பி வருக! தேர்ந்தெடுக்கப்பட்ட என் அடியார்களுக்கு இடையே நுழைந்து விடுக! (என உன் இறைவன் உன்னிடம் கூறுகின்றான்.) (89:28-31)

மனித மனத்தால் புரிந்து கொள்ள முடியாத, அல்லாஹ்வுடனான ஓர் (மிக நெருங்கிய) உறவின் மூலம் ஆன்மா உயர் நிலையை அடைகிறது. உண்மையில் அது (தன்னை) அறியாமலேயே ஒரு குறிப்பிட்ட நிலையை பற்றி பிடிக்கின்றது. ஆன்மா அல்லாஹ்வுடனான அத்தகையதொரு உறவை அனுபவிக்கிறது; அது அல்லாஹ்விடமிருந்துள்ள இறை அருள் நிறைந்த செய்திகளையோ அல்லது இறை தண்டனை நிறைந்த செய்திகளையோப் பெறுகிறது. ஆன்மாவின் சுத்திகரிப்பானது, ஓர் கட்டம் வரும்போது மனதையும் சுத்தப்படுத்த (அது) உதவுகின்றது. தக்வா (பயபக்தி), இதயத்தின் ஆதிக்கத்திற்குள் நுழைந்து, இறை விருப்பத்திற்கு நறுமணத்துடன் கூடிய அடிபணிதலுடன் மனதை அடைந்து விடும்போது அதுவே மனத்தூய்மை' என்று அழைக்கப்படுகிறது.

அந்த ஆன்மாவே இறை வெளிப்பட்டினைப் பெறுகின்றது. அதனால் தான் ஆன்மா மட்டுமே இறை வெளிப்பாட்டின் நிலையில் அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்கின்றது. ஹஜ்ரத் நபி கரீம்(ஸல்) அவர்களுக்கு ஆன்மீக தரிசனத்தின் கதவு திறக்கப்பட்டபோதும் அதுவே நடந்தது. இதன் மூலம் அவர்களது ஆன்மா இறை வெளிப்பாடுகளின் ஒளியின் அமைதியைக் கண்டறிந்து, அவர்களை தனது இறைவனை நோக்கி வானவ தூதர் ஜிப்ரயில்(அலை) அவர்களின் துணையுடன் படிப்படியாக வழிநடத்திச் சென்றது. அவர்கள் அடைந்த அந்த ஒரு (உயர்) நிலையை இறைவனின் படைப்புகளில் வேறு எவராலும் அடையமுடியவில்லை., வானவர்களும் கூட (அடையவில்லை). ஆகையால், வானவர்கள் கூட தங்கள் ஒளியின் உடலால் இறைவனை அணுக முடியாத போது, பரிபூரணமற்ற பண்புகளைக் கொண்ட மனித மனமானது, ஹஜ்ரத் நபி (ஸல்) அவர்கள் பௌதீக உடலுடன் வானத்திற்கு அல்லாஹ்விடம் சென்றார்கள் என்றும், அவர்கள் கண்ட எல்லாவற்றையும் தனது தற்காலிக பௌதீகக் கண்களால் கண்டார்கள் என்ற கருத்தையும் எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

வானவர்கள் ஆன்மாவைப் பெற்றவர்களாக இல்லை; ஆனால் அவர்களின் அடிப்படை சாராம்சம் இறை ஒளியைக் கொண்டுள்ளது ஏனென்றால், அவர்களுக்கு ஒரே ஒரு அடையாளம் மட்டுமே உள்ளது. அதே சமயம் மனிதனுக்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன, அவை இரண்டு வெவ்வேறு (உலகங்களான) தற்காலிக மற்றும் ஆன்மீக உலகங்களில் இருக்க அனுமதிக்கின்றன. நாம் பூமியிலும் அதே நேரத்தில் (அதற்கு) இணையான, ஆன்மீக உலகிலுமாக இரு விதமான வாழ்க்கை வாழ்கிறோம். மனிதன் பூமியில் நடந்து கொண்டு வேலை செய்யும் போதும், கைகளைக் கொண்டு உழைக்கும்போதும், அவன் தற்காலிகமான (இவ்வுலகில்) வாழ்கிறான், அதேசமயம் அவனது தியானம், பிரார்த்தனை மற்றும் தூக்கம் ஆகியவற்றில் இறைவனை நினைவு கூர்தளின் பிரகாசத்தை கொண்டு நிரப்பும்போது, அவன் ஆன்மீக (உலகில்) வாழ்கிறான்.

ஆன்மீகத்தை உடல் மற்றும் ஆன்மா இரண்டினாலும் உணர்ந்து கொள்ள முடியும். ஆன்மீகம் என்பது நமது உண்மையான உணர்வு நிலையுடனான தொடர்பைக் குறிக்கிறது. அது நமது முழு கவனத்தையும் நம்முடைய படைப் பாளனான அல்லாஹ்விடம் வழிநடத்திச் செல்கிறது. பல்வேறு மதங்களும் ஆன்மீகத்தின் கருத்தை தங்களது சொந்த வழியில் வரையறுக்கின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் தியானத்தில் ஈடுபடும்போது அல்லாஹ்வையே அவர்கள் கண்டு கொள்கின்றனர், அதுவே அவர்களின் வாழ்க்கையை தெய்வீக ஒளியால் நிரப்புகிறதே யன்றி, அவுலியாக்கள், தூதர்கள் மற்றும் பீர்மார்களின் (உதவியைக்) கொண்டு அல்ல. ஏக இறைவனிடமிருந்து அவர்கள் ஒளியை பெற்றிருந்தும் துரதிஷ்டவசமாக அவ்வொளி அவர்களின் பலதரப்பட்ட தெய்வங்கள் தங்களுக்கு வழங்கியது என எண்ணுகின்றனர். அதனால் அவர்கள் குழப்பம் என்ற ஒரு படு குழியில் வீழ்ந்து விடுகின்றனர். இதனால் அவர்கள் அவநம்பிக்கையில் தடுமாறி, இன்னும் அதிக அவநம்பிக்கையில் வீழ்ந்து விடுகின்றனர். ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் பெறுகின்ற இந்த இறை ஒளியானது சர்வ வல்லமையுள்ள (ஏக) இறைவனிடமிருந்து கிடைத்ததல்ல என்றும் அது அவர்கள் சுயமாக எண்ணிக்கொண்ட அல்லது அவர்களின் கற்பனையில் வாழும் தெய்வத்திடமிருந்து கிடைத்தது என்று நம்புகின்றனர்.

இறை வெளிப்பாடு என்பது சிதைக்க முடியாத ஒன்று.. அதேசமயம் ஷைத்தானிய வெளிப்பாடுகளை எளிதில் சிதைக்க முடியும். மேலும், அதன் நிலை நிற்பு குறைவானதும், குறுகிய காலத்தை மட்டுமே.!(கொண்டுள்ளதுமாகும்). இறை வெளிப்பாடுகள் எத்தகையதொரு ஒளியைக் கொண்டுள்ள தென்றால், அது ஆன்மாவை அல்லாஹ்வின் மீது உறுதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது. (அதன் மூலமாக) அவன் தனது நேர்மையான அடியானுக்கே உரித்தான அமைதியினை வழங்குகின்றான். ஏனென்றால், அவர் வானம் மற்றும் பூமியின் இறைவனுடன் (ஆழமானதொரு உறவின் மூலம்) இணைந்திருப்பதால் ஆகும். (அதனால்) ஆன்மா அறியாமலேயே (தன்னுணர்வற்ற நிலையிலும்) சாந்தியடைவது மட்டுமல்லாமல் அந்த சாந்தியானது (அவரை மேலும் முன்னேற்றமடைய செய்யும்) உந்துதல் கருவியாகவும் மாறிவிடுகிறது. அது அவர்களின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதைச் செய்தாலும் அல்லது (எதனை)க்கடந்து சென்றாலும் அதனை முழுமையாக உணர வைக்கிறது. எனவே ஆன்மாவை ஏமாற்றி விட முடியாது. வேண்டுமானால், ஒரு நபர் மீது எப்போதெல்லாம் ஷைத்தானிய வெளிப்பாடுகள் இறங்குமோ (அப்போது) மனதை ஏமாற்றி விடுவதாக இருக்கலாம். மனம், அதன் சரியான நிலைப்பாட்டில் இல்லாமல், ஒரு ஷைத்தானிய வெளிப்பாட்டை பெறும்போது மனம் ஆன்மாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் போது, ஆன்மாவும் அதன் மீது நிலை பெற்று(கீழ்படிந்து) விடுகின்றது. அதுவே தீய மக்களை உருவாக்குகிறது. அதாவது அவர்களின் ஆன்மாக்களின் நிலையை மனது அத்தகைய அளவிற்கு கடந்து செல்லும் போது, அவர்கள் எளிதில் ஷைத்தானிய தாக்குதல்களுக்கு உள்ளாகி, தாய்மார்களின் கருவறைகளில் அவர்கள் இருந்ததிலிருந்து இயல்பாகவே அவர்களிடமிருந்துள்ள அந்த இறைப் பண்புகள் விலகி செல்கிறது. அதனால்தான் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டுமே ஒரு மனிதனிடத்தில் இணைந்திருக்கின்றன. அந்த இரண்டு அம்சங்களும் அவருடையதாகும். ஆனால் அவருடைய சொந்தத் தூண்டுதல்களின் போது நல்ல வழிகளின் பக்கம் அல்லது அழிவின் பக்கம் ஆகிய எந்த திசையில் திருப்பி விட வேண்டும் என்பதைப்பற்றிய முடிவு எடுக்க வேண்டியது அவர்தான். அதனை தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அது குறித்து அவர் செய்யவேண்டியதெல்லாம் அவர்( சுயமே) பகுப்பாய்வு செய்து, (அதைப்) புரிந்து கொண்டு அதனடிப்படையில் செயல்படுவது மட்டுமே. அது ஒரு தீமையான காரியம் என்றால், அது அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு, அவரை வழி தவற செய்வதற்கு முன்பு அதிலிருந்து அவர் விலகி செல்ல வேண்டும். அதாவது அந்த எண்ணத்திற்கு முடிவு கட்ட வேண்டும். மிக நல்ல மனிதர்களின் சீரழிவை கூட நாம் அடிக்கடி பார்க்கிறோம். அது ஒரு நபியின் சீடருக்கோ அல்லது ஒரு இறை அடியாருக்கோ கூட அவ்வாறு நடை பெற்று விடலாம். அவர் பெற்று வரும் இறை ஒளியை தனக்கு மட்டுமே கிடைப்பதாக அந்த சீடர் நினைக்கின்றார். அது அவர் அவரது நபியை விட அல்லாஹ் (தன்னை)அதிகமாக நேசிப்பதாகவும்,(அதுவே) அத்தகைய வெளிப்பாட்டின் ஒளிகளை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும் என்று எண்ணி விடுகின்றார். ஆனால், இது ஒரு தவறான எண்ணமாகும். அதுவே அவரது நிரந்தர அழிவிற்க்கு காரணமாகி விடுகின்றது.

ஓர் அல்லாஹ்வின் தூதரின் காலகட்டங்களில் அவருக்கு விருப்பமானது அல்லாஹ் (அந்த) ஒளியினை மக்கள் மீது பரப்ப வேண்டும் என்பதாகும். அது உண்மையை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே. அந்த ஒளியை அதாவது இறை வெளிப்பாட்டினை மக்கள் பெறுவதன் மூலம் இறைத்தூதருக்கு கிடைக்கும் வெளிப்பாடுகள் உண்மையானது என அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். மேலும், அதனால் அம்மக்கள் (நெருக்கமாக) வநது, அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களின் காலகட்டத்தில் தோன்றிய இறை தூதரின் கைகளில் (பை அத்தும்) செய்துவிடலாம்.

ஓர் அல்லாஹ்வின் தூதரின் முன்னிலையில், பரிசுத்த ஆன்மாவினால் மக்கள் ஞானம் பெறத் தொடங்கும் போது, அது இந்த தூதருக்கு ஆதரவாக விளங்கும் மிகப்பெரிய அடையாளங்களில் ஒன்றாகும். சாதாரண மக்கள் கூட தீர்க்கதரிசனம் செய்யும் ஒரு காலம் வரும் என்று இஞ்சீலில் (இயேசுவின் போதனை) எழுதப்பட்டிருக்கிறது. பிந்தைய(இறுதி) நாட்கள் இதோ உங்களிடத்தில் வந்தடைந்திருக்கிறது. உங்கள் மத்தியில் ஒரு இறைத்தூதர் தோன்றியுள்ளார். அவர் உலகளாவிய அல்லாஹ்வின் அதே தூதர் ஆவார். நான் பிரச்சாரத்திற்காகவோ அல்லது விளம்பரம் செய்யவோ வரவில்லை. மாறாக, நான் மக்களை அல்லாஹ்வை நோக்கி வழிநடத்த வந்திருக்கிறேன். அதாவது அவர்கள் தங்களைப் படைத்த இறைவனை புரிந்து கொண்டு அவனை பிரத்தியேகமாக நேசிக்கவும், அவனே வழிபடுவதில் எந்த ஒரு இணையையும் (அவனுக்கு)இணைவைக்காமல் இருப்பதையும் (போதிப்பதற்காகவே வந்துள்ளேன்).

திருக்குர்ஆன் வரையறுத்துள்ள அல்லாஹ் வழங்கியுள்ள எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படி வதன் மூலமும், அண்ணல் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையினை முழுமையாக பின்பற்றுவதனாலும், மேலும், அவருடைய(தமது) காலகட்டத்தில் தோன்றுகின்ற அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து (அவருக்குக்) கீழ்படிவதனாலும் மட்டுமே ஒருவர் அல்லாஹ்வை அறிந்து கொள்ள முடியும். உண்மையாகவே, இந்நூற்றாண்டில் வாழும் மக்களுக்கு ஒரு சாட்சியாகவே நான் தோன்றியுள்ளேன். நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே கணக்கு கொடுக்க வேண்டுமெயன்றி என்னிடம் அல்ல! உங்களுடைய இதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த என்னால் இயலாது! என்னால் செய்ய முடிந்ததெல்லாம் அல்லாஹ்வின் செய்தியை உங்களிடம் எடுத்து வைப்பது மட்டுமே. எவருடைய இதயத்திற்கு அவன் ஒளியை வழங்குவான் என்பதை மிக நன்கு அறிந்தவன் அல்லாஹ் மட்டுமேயாவான். ஆன்மாவானது இறை தொடர்பின்(மீது கொண்ட) தாகத்தினால் (தானாக)முன் வந்து, அதன் உண்மையான இருப்பு மற்றும் அதன் அடிப்படை சாராம்சம் என்ற குளத்திற்குள் மூழ்கிவிட விரும்பும்போது, பிறகு அந்த ஆன்மா ஒரு குறிப்பிட்ட அளவிற்கு (ஞான ஒளியால்) பிரகாசத்தை பெறும்போது , அல்லாஹ்வின் வழியில் (உதவி) பணி செய்வதற்காக, அல்லாஹ்வின் தூதருக்காக அவனை(அல்லது அவளை) அல்லாஹ் பயன்படுத்துவான். மனம் ஏதோ சிலவற்றை விரும்பலாம்; ஆனால் உடல் பலவீனமாக இருக்கிறது. சிலவேளைகளில் உள்ளம்(மனம்) பலவீனமாக இருக்கும். ஆனால் ஆன்மா வலுவாக இருக்கிறது. (எந்த அளவிற்கென்றால்) மனதின் பலஹீனமான நிலையைத் தோற்கடிக்க போதுமான (அளவிற்கு) வலிமையானது.(அந்ந நேரத்தில் அது)ஒரு வேகமான தானியங்கி வாகனம் (ஆட்டோமொபைல்) போல எப்பொழுதும், அல்லாஹ்வினுடைய மற்றும் அல்லாஹ்வின் தூதருடையக் கட்டளைகளை நிறைவேற்றிட ஆயத்தமாகி செயல்பட ஆரம்பித்து விடுகின்றது

ஆன்மா (ரூஹ்) வானது அதன் முழுமை பெற்ற நிலையில் (எவ்வாறு) இருக்க வேண்டுமோ (அந்த பிரதிபலிப்பின்) உருவமைப்பாக சாந்தியில் இருக்கின்ற 'நஃப்ஸ்' விளங்குகிறது. சாந்தி அடைந்த ஆன்மா, மனித நிலையை மேம்படுத்துவதற்கு தூண்டுகிறது. அந்நிலையில் மனிதன் அல்லாஹ்வின் ஓர் முழுமையான ஊழியனாகி, உண்மையிலேயே அல்லாஹ்வுக்காக சிறந்த வழிகளில் சேவை செய்யக் கூடியவனாகி விடுகின்றான்.

'முத்மயினா' (சாந்தி அடையும் ஆன்மா)வின் காலகட்டத்தில் அதை பூர்த்தி செய்வதற்கு முன்பு, நான் என்னும் ஆணவம் (ஈகோ) வெவ்வேறு சோதனைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. உண்மையில் ஆன்மா என்பது, ஒருவர் இறை ஒளியை (மற்றும்) இறை வெளிப்பாடுகளைப் பெறுவதற்கான வழிமுறையாகும்.

மலக்குகள் மனிதர்களைப் போல இருந்திருந்தால், இறை வெளிப்பாடுகளை கொண்டு வரும் வானவரையும் அல்லாஹ், மனிதன் அடிப்படை இயல்பில் கொண்டுள்ள நஃப்ஸின் (பெயரிலேயே) அழைத்திருப்பான். ஆனால் எஞ்சியுள்ள உண்மை என்னவென்றால், இறை வெளிப்பாட்டின் வானவர் இறங்குவதை அல்லாஹ் தெளிவாக “ரூஹ்” (சூரா அல்-கத்ரில்) என்ற வார்த்தையால் அழைக்கிறான். இதன் மூலம் மனிதனுக்கு தெளிவாக சுட்டிக்காட்டுவது, அவர்கள் பெற்றிருக்கின்ற ' ரூஹ் ' எத்தகையதென்றால் அவர்கள் இறைவனின் எல்லாக் கட்டளைகளுக்கு இணங்கியும், அத்தகைய வரத்தைப் பெறுவதற்கு அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டும் இருந்தால்,அவர்கள் எந்த நேரத்திலும் இறை வெளிப்பாடுகளைப் பெறக் கூடியவர்களாகிவிட முடியும் என்பதுமாகும்.

ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களது விஷயத்தைப் பொறுத்தவரை,' மிஃராஜ் ' மற்றும் இறை வெளிப்படுகளைக் கொண்டு வரும் வானவரைக் காட்டிலும் அவர்களது மேன்மைக்குமான மற்றொரு விளக்கம் தெளிவாக்குகின்றது. அதில், ஏன் அவர்கள் இறைவெளிப்பாடுகளைப் பெறக் கூடியவராக ஆக்குகின்ற' ரூஹை 'மட்டும் கொண்டிருக்காமல் (அத்துடன்) நஃப்ஸ்-ஏ-முத்மயின்னா" இன் (அடிப்படை)சாரத்தையும் கூட முழுமையாக நிறைவு செய்திருந்தார்கள்? (நபி(ஸல்))அவர்கள் பெற்றிருந்த ரூஹ் மற்றும் அவர்கள் வெளிப்படுத்திய நஃப்ஸ் ஆகியவை ஒன்றிணைந்து ஒரே எண்ணங்களின் வரிசையில் இருந்தன. நான் அதை அப்படியே கூறுவதாக இருந்தால், ஆன்மா மற்றும் மனதின் அவ்வாறான மிகச்சரியான ஒத்திசைவை(ஒன்றிணைதலை) வேறு எந்த மனிதரும் அடைந்து வெற்றி பெறவில்லை என்றும் கூறலாம். (நான் என்னும் எண்ணத்தை கட்டுப்படுத்துவதில்). அல்லாஹ்வின் மற்றத் தூதர்களாலும் அதைப் பெற முடியும். ஆனாலும், புனித நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அடைந்ததைப் போன்ற(ஆன்மா மற்றும் மனதின்) சரியான பொருத்தத்தை அவர்களால் அடைய முடியாது. அவர்களுடைய மேன்மையின் அளவு ஒவ்வொரு விஷயத்திலும் எல்லையற்றது. எந்த அளவிற்கென்றால், அல்லாஹ் அவர்களிடம் “நீர் உண்மையிலேயே உயரியப் பண்புகளைக் கொண்டவராக இருக்கின்றீர்.” என்று கூறியிருக்கின்றான். இப்படிப்பட்ட குணங்கள் அவரது மனத்தின் விழிப்புணர்வு நிலை பூமியில் தனது சொந்த இருப்பை மேம்படுத்த இறை விருப்பத்துடன் கைகோர்த்து செயல்படுவதன் மூலம் அவருடைய நான் என்னும் எண்ணத்தை சுத்திகரிப்பதிலிருந்து வருகின்றன. (அந்த நற் பண்புகளை அடைய முடியும்).வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், இறை விருப்பத்திற்கு அடிபணிதல், இறை கட்டளைகளுக்கு அடிபணிதல் என்பதாகும்.

வானவர்கள் ஒரு நஃப்ஸையோ அல்லது ஒரு ரூஹையோ கொண்டிருக்கவில்லை. ஆனால், அவர்கள் சிறப்பாக உருவாக்கப்பட்ட ஒரு ரூஹ் ஆவார்கள். மனிதர்கள் தன்வசம் உள்ள நஃப்ஸால் மகிழ்ச்சியடைகிறார்கள், ஆனால் அந்த நஃப்ஸ் தோண்டி எடுக்கப்பட்ட மூல வைரங்களைப் போன்றது. அவை ஆயத்தம் செய்யப்பட்டு மெருகூட்டப்பட வேண்டும். இதனால் அது அதன் அனைத்து ஒளியுடனும் பிரகாசிக்கவும், அல்லாஹ்வின் பார்வையில் விலைமதிப்பற்றதாகவும் இருக்கும்! ஷெய்த்தான் மனிதனின் கடுமையான எதிரியாவான். அவனுடைய படை நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நம் இரத்தத்தோடு கலந்து நாம் வந்த ஆன்மீக ஊற்றிலிருந்து நம்மை விலகிச் செல்ல வைக்கின்றான். தங்களது நஃப்ஸையும் ரூஹையும் சுத்தீகரிக்காமலும், ஆன்மீகத்தின் சாந்தியை பெறுவதற்கு அவற்றை(நஃப்ஸையும் ரூஹையும்) ஒன்றிணைத்து செயல்படாதவர் மீதும் மட்டுமே ஷெய்த்தானின் படை வெற்றிபெறும். சமாதானம் (சாந்தி) தான் மனிதனை இறைவனிடம் அழைத்துச் செல்கிறது. சாந்தி இல்லாமல் அவர் தனது ஈமானை மேம்படுத்தவோ, அல்லாஹ்வின் திருமறையின் ஞானங்களை பெற்று தனது இலக்காகிய அல்லாஹ்வை அடையவோ முடியாது. அதனால்தான் சூரா அல்-கத்ரில் அல்லாஹ் விடியற்காலை வரை அமைதி இருக்கும் என கூறுகிறான்.

ஒருவர் இந்த பௌதீக உலகிற்கு என்ன நடக்கிறது என்பதையும் அவரின் அன்றாட பிரச்சினைகளையும் உண்மையில் அறியாமலேயே. பொதுவாக(அவர்) இரவில் உறங்கும் போது அமைதி அல்லது சாந்தி ஏற்படும். ஆனால், இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமைதி (அல்லது சாந்தி) என்னவென்றால், அல்லாஹ்வின் அடியான் தான் எந்நிலையில் இருந்தாலும், அல்லாஹ்விடமிருந்து வரும் இந்த அமைதியை அவர் நிச்சயமாகக் கொண்டிருக்கிறார் என்பதாகும். இந்த அமைதியுடன் அல்லாஹ் அவரை பலப்படுத்திய பிறகு, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் அவர் இவ்வுலகில் தனது கடமைகளை நிறைவேற்ற முடிகின்றது. அவரது ரூஹிலிருந்து வருகின்ற அவர் உணரும் அமைதி அவர் மீதான ரூஹுல்-குத்தூஸின் தொடர்பின் காரணத்தால் ஆகும். இந்த விளக்கம் இறைத் தூதரின் காலகட்டத்தில் நிச்சயமாக உண்மையாகின்றது. அதன்படி அவருடைய பரிசுத்த ஆவியின் தொடர்பு ஒரு முறை நிகழ்வாக அல்லாமல், பூமியில் அவரது முழு வாழ்க்கையுமே பரிசுத்த ஆவியின் தொடர்பில் பங்கெடுத்து இறை சக்தியின் ஆதாரமான அல்லாஹ் (swt)வுடன் அவரை இணைக்கிறது.

தெய்வீக ஊற்றிலிருந்து இறை மனிதர் வரும்போது, அவர் ஷெய்த்தானால் சோதிக்கப்படுகிறார், ஏனென்றால் அவருக்குள் உள்ளார்ந்த ஷெய்த்தான், அவரது தூதுத்துவப் பணியிலிருந்து அவரை வழி தவற செய்ய முயற்சிக்கிறான். அல்லாஹ்வின் ஒரு தூதர் ஷைத்தானின் இனிமையான பேச்சுகளை இறைவனின் பேச்சு என்று நினைத்து தடுமாறலாம். ஆனால்(அவ்வாறு) நீண்ட காலத்திற்கல்ல. ஏனென்றால், அல்லாஹ்வின் உண்மையான தூதர் அவரை அனுப்பியவனுடன் விரைவாக ஒன்றிணை க்கப்படுகிறார். எனவே, அவர் தனது பணியை அமைதி, நம்பிக்கை, பொறுப்பு மற்றும் அல்லாஹ்வின் அன்புடன் தொடர முடிகின்றது.

நிச்சயமாக, அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களை ஷெய்த்தானால் ஒருபோதும் வழி தவற செய்ய முடியாது. ஷெய்த்தான் ஒருவரைத் திசை திருப்பி, அவர் ஷெய்த்தானிய நிலையில் இறந்துவிட்டால், ஆட்சேபனைக்குரிய அந்நபர் உண்மையில் அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியாரின் அடிப்படை சாராம்சத்தில் இருந்ததில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் தனது மிகக் கடுமையான எதிரிகளை அவர்களின் சுவடே இல்லாமல் அழித்து விடுகின்றான் என்பதை நிரூபிப்பதற்குரிய கடந்த கால எடுத்துக்காட்டுகள் நம்மிடம் உள்ளன. அவர்கள் மனந்திரும்பினால், இந்த விவகாரம் அல்லாஹ்விடம் உள்ளது. ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் சாபத்தின் நிலையில் இறந்தால், அல்லாஹ் அவ்வாறு தீர்மானித்து விட்டால், அந்த இடத்திலேயே அல்லாஹ்வால் பிடிக்கப்படுவதிலிருந்து அவரை எதனாலும் தடுத்து விட முடியாது.

அல்லாஹ் நமது அறிவாற்றலை தூய்மைப்படுத்தி, அவனது படைப்புகளின் உண்மைகளையும், புனித குர்ஆனில் உள்ள உண்மைகளையும் புரிந்துகொள்ள உதவுவானாக!. ஜமாஅத் உல் சஹிஹ் அல் இஸ்லாத்தின் உங்கள் ஒவ்வொருவருக்கும் புனித குர்ஆனின் உள்ளடக்கங்களை பிரதிபலிக்க அல்லாஹ் நுண்ணறிவை வழங்குவானாக! - குர்ஆனே எல்லையற்ற அறிவின் நீரூற்றாகும் – மற்றும் அதன் தூய்மையான அடிப்படை சாராம்சத்தையும், உண்மையான விளக்கங்களையும் கொண்டு உங்கள் வாழ்க்கையையும் வரவிருக்கும் எல்லா காலத்து மக்களின் வாழ்க்கையையும் விழிப்பூட்ட முடியும். இன்ஷா அல்லாஹ்

இறுதியாக ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கு பலவேறு முறை இறங்கிய இறைவஹீ இதுவாகும் “நான்(அல்லாஹ்) என் நபியுடன் நிற்பேன் அவரை எதிர்ப்பவர்களை நானும் எதிர்ப்பேன்”

என்று எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை எச்சரிக்கின்றான். [al-Hakam, vol. 6, no. 16, April 30, 1902, p. 6–7]

வாதம் செய்யாத வஹீயின் நிலை!

அவன் வானவர்களை "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்" என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான். (திருக்குர்ஆன் 16: 3 )

இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் தஃப்ஸீரே கபீரில் விளக்கம் அளிக்கும் போது இங்கே *الروح* (அர் ரூஹ்-இறை வெளிப்பாடு) என்பதன் பொருள் இறைவனின் உயிர் வழங்கும் வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் உயிர் வழங்கும் குணங்களை குறிப்பதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது.

'மக்களை எச்சரிக்க' என்ற வார்த்தைகள் இங்கே சுட்டிக் காட்டுகின்ற 'இறை வெளிப்பாடு' என்பதன் பொருள் ஒரு இறைத் தூதருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு வெளிப்பாடாகும். இறை வெளிப்பாடு பொதுவாக இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்:

(1) பெறக்கூடிய நபரைப் பற்றிய அவருடைய சொந்த வெளிப்பாடு. பொதுவாக அதனை வெளியிடுவதற்கு எந்த 'சிறப்பு தடை' யும் இல்லை. என்றாலும், அது அறிந்து கொள்ளப்பட்டு வெளியிட வேண்டிய தேவையில்லை.

(2) மனிதகுலத்திற்கான பரந்த அளவிலான இறை வெளிப்பாடு. பிந்தைய இந்த வகையிலான இறை வெளிப்பாட்டிற்க்கு பரந்த வகையில் அறிவிக்க வேண்டும், மேலும் அதனை வலுக்கட்டாயமாக அடக்குவது என்பது ஒரு தெளிவான பாவத்திற்குச் சமமாகும்.

முதல் வகையான வஹீ பொதுவானதாகும், இதையே ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் கூறும்போது ஜிப்ராயீலிய ஒளியின் 46 ஆவது பகுதி முழு உலகிலும் பரவி இருக்கிறது. இன்னும் கூறுவதென்றால், வேசிகளின் குழுவைச் சேர்ந்த மிகவும் துர் நடத்தையுடைய தன் இளமையை முழுவதும் தீய நடத்தையிலேயே கழித்த ஒரு பெண், சில நேரத்தில் உண்மையான கனவைப் பார்த்து விடுகிறாள் என்பது அனுபவத்தில் அறிந்த உண்மை என்பதுவரை நான் ஏற்றுக் கொள்கிறேன். இத்தகைய பெண் இரவில் குடித்து விட்டு அந்நிய ஆணுடன் படுக்கையில் கிடக்கும் போது கூட ஏதாவதொரு கனவைப் பார்க்கிறாள். அது உண்மையாகி நிறைவேறியும் விடுகின்றது என்பது இன்னும் ஆச்சரியமான விஷயமாகும். (ஆதாரம்:-குறிக்கோள் பற்றிய விளக்கம் பக்கம் 73)

ஆனால் இரண்டாவது வகை அறிவிக்கும் படியான வஹீ மார்க்கத்தின் உயிர் ஆகும். இந்த அருள் இப்போது இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்திற்கும் கிட்டாது.

மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

இறைவனிடமிருந்து இல்ஹாமை அதாவது இறைவெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை உண்மையான மார்க்கமாகிய உம்மதே முஹம்மதிய்யாவில் நிலைத்து நிற்பவர்களுக்கு அவன் அளிக்கிறான். இறைவனின் சக்திக்கு மட்டும் உட்பட்ட, மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான். எவர் உண்மையான உள்ளத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, நபிகள் நாயகம் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான முழுமை பெற்ற நபி என்றும், எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன் நபிய்யீன் என்றும் உறுதி கொள்கின்றாரோ, அத்தகு நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை இறைவன் அளிக்கின்றான். யூதர்கள், கிறித்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் ஆகியோருக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிட்டாது. எனினும் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்கு அது அப்போதும் கிடைத்தது, இப்போதும் கிடைக்கிறது, இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தைக் கொண்டுள்ள வஹி அவசியம் இல்லாததால் அது முடிவு பெற்று விட்டது. எனினும் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு அந்த இல்ஹாம் கிடைக்கிறது. அது ஒருபோதும் நிற்காது. நமக்குக் கிடைக்கும் இந்த இல்ஹாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உண்மை நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இழிவும் அவமானமும் அடைகிறார்கள். (பராஹீனே அஹ்மதிய்யா தொகுதி 3 பக்கம் 216 அடிக்குறிப்பு 11)

மிகத்தெளிவாக அன்னார் அறிவிக்கும் படியான வஹீ தான் இஸ்லாத்தின் உயிர் என்றும்., வாதம் செய்யாத வஹீ தனி மனிதனுக்கு பொதுவாக அதாவது ஜிப்ரீலிய ஒளியின் நாற்பத்து ஆறில் ஒரு பங்கை இன்னும் சொல்ல போனால் இதுபோன்ற இறை வெளிப்பாடு மற்றும் கனவு ஒரு வேசிக்குக்கூட கிடைக்கின்றது என்று கூறுகின்றார்கள். ஆனால் அந்தோ! பரிதாபம்! இந்த முல்லாக்கள் அவர்களது கலீஃபாவை எந்த நிலைக்கு அழைத்து செல்கின்றனர் பாருங்கள்..,

மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது;

நிச்சயமாக உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன். (திருக்குர்ஆன் 108:4)

திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பை அதாவது இறைவஹீயை பெறும் கூட்டத்தினரே ஆன்மீக சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும். அவர்களின் எதிரிகளால் பெற இயலாது, என்பது தெளிவாகின்றது.

இன்னும் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது(ரலி) அவர்கள் கீழ்காணும் வசனத்திற்கு விளக்கம் அளிக்கும்போது,

அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன். அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன். (திருக்குர்ஆன் 92: 2-4 )

வருகின்ற முஜத்தித் ஆன்மீக ஆண்கள் என்ற பொருள் தருகின்ற, அதாவது முஜத்தித்மார்கள், நபிமார்களை போன்று ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (ஆதாரம்:-HQ, 92: 2-4, pp. 2835)

மற்றுமொரு வியக்கத்தக்க ஆட்சேபனை என்னவென்றால், "இந்த மூட முல்லாக்கள் இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் வாதம் செய்வதில்லை" என்ற கூற்றை முன் வைக்கின்றனர். ஆனால் திருகுர்ஆன் மற்றும் மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றின் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த கூற்றும் தவறானது என்பதை அறியலாம்.

மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்கள் ஹகீகத்துல் வஹீயில் அன்னாரின் வருகையின் முதல் அடையாளமாக நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் வருகையை பற்றி குறிப்பாக "நூற்றாண்டின் தலைமையில் தோன்றும் இத்தகைய முஜத்தித் மார்கள் தத்தமது காலத்தில் வாதம் செய்துள்ளனர்." என்று தெளிவாக குறிப்பிட்டுளார்கள். (HaqIqatul-WaHI—The Philosophy of Divine Revelation page no:241)

எனவே திருமறை மிக தெளிவாக இறை வஹீயை வைத்து வாதம் செய்பவரே "ஆன்மீக ஆண்" என்று கூறுகின்றது. அப்படியானால், இந்த முல்லாக்கள் கருத்தின் படி அவர்களது கலீஃபாவின் நிலை கேள்விக்குறியே?!

எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர், எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா? (அல்குர்ஆன் : 47:14)

கிலாஃபதுன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - விளக்கம்

"கிலாஃபத்ன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத்" என்று கூறி பெருமானார்(ஸல்) அவர்கள் அமைதி ஆகி விட்டார்கள்" என்பதற்கான உண்மை விளக்கம்:

இன்னும், இந்த முல்லாக்கள் கட்டவிழ்க்கும் மற்றுமொரு சுயவிளக்கம் என்னவென்றால்; இந்த நபிமொழிக்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் அமைதியாகிவிட்டார்கள். எனவே, இதற்கு பிறகு இந்த கிலாஃபத் (கலீஃபத்துர் ரஸுல்) தான் தொடரும் என்ற கற்பனையை அப்பாவி மக்களிடையே பரப்புகின்றனர். இதற்கு மாறாக, நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இது ஒரு முடிவல்ல தொடர் என்பதையே இந்த நபிமொழியில் உணர்த்துகின்றார்கள். அது எங்ஙனம்? இந்த நிஜாமிகளின் கூற்றை போல் அன்னார் ஒருபோதும் இறுதி நபிக்கொள்கையை போதிக்கவில்லை. (நஊதுபில்லாஹி மின் தாலிக்)

இக்கூற்றை இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள அல்லாஹ் தனது இறைவேதத்தில் இவ்வாறு கூறுகின்றான்:-

அல்லாஹ் மேகத்திலிருந்து தண்ணீரை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான். பின்னர் அவன் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட புற்பூண்டை வெளிப்படுத்துகின்றான். பிறகு அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அவன் அதனைப் பதராக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நற்போதனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 39: 22)

இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது(ரலி) அவர்கள் கூறுகின்ற விளக்கம் என்னவென்றால், பூமியானது ஆன்மீக ரீதியாக வறட்சியடைந்து விடும்போது, இறைவன் இறை வஹீயின் வடிவத்தில் மழையை இறக்குகிறான். பின்னர் அ(ந்த பூமியான)து ஒரு புதிய வாழ்க்கையைப் பெற்று, பல்வேறு நிறங்களையும், சுவைகளையும், தனித்துவ குணங்களையும் கொண்ட பூக்களும், பழங்களும், வளர்ச்சியடைகின்றன.

அதாவது, ஓர் ஆன்மீக சீர்திருத்தவாதி (முஜத்தித்) தோன்றுகின்ற போது, நற்குணம் கொண்ட மற்றும் இறைவனுக்கு அஞ்சுகின்ற மனிதர்களின் சமூகம் பிறக்கின்றது. மேலும், பயபக்தியுள்ள மற்றும் கற்றறிந்த ‘உலமா’ (மார்க்க அறிஞர்களுக்குக்கூட) இறைவனுடைய வார்த்தையை அவர் கற்பிக்கின்றார். பிறகு ஒரு நீண்ட இடைவெளி (ஏற்பட்டு அதனால்) இறைவனுடைய வார்த்தை மறக்கப்பட்டும், அவனுடைய கட்டளைகள் மீறப்பட்டும், கீழ்ப்படியாமையும் உருவாகி விடுகின்றது. அப்போது மீண்டும், பூமியானது வறண்டு, காய்ந்து போய், ஒரு நெருப்பில் எறியப்படுவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கக்கூடிய உலர்ந்த எரிபொருளைப் போன்ற தீய மனிதர்களின் ஒரு தலைமுறையானது மீண்டும் உருவாகி, நல்ல மனிதர்களின் இடத்தைப் பிடித்துக் கொள்கின்றது. இவ்வாறாக இந்த சுழற்சி செல்கின்றது. (அதாவது மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றது)

இறைவன் மிகத்தெளிவாக ஆன்மீக வறட்சி ஏற்படும்போது, அவன் தனது அருள் மழையை வஹீயின் மூலம் தனது ஆன்மீக சீர்த்திருத்தவாதியின் மீது இறக்கி மீண்டும் பூமியில் ஆன்மீக வசந்த காலத்தை உருவாக்குகின்றான். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் இந்த நிகழ்வு ஏற்படுகின்றது.. அதாவது, இது ஒரு சுழற்சியாகும். மேலும், இந்த இடத்தில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இது ஒரு சுழற்சியாகும் இதே நிகழ்வு தான் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்கள் கிலாஃபத்தே ரஸூலின் காலத்தை பற்றி கூறும்போது ஒரு நபிக்கும் அவருக்கு பின் தோன்றும் நபிக்கும் இடையில் இந்த கிலாஃபத்தே ரஸூலின் நிலையை பற்றி முஸ்னத் அஹ்மதில் தொகுக்கப்பட்ட ஹதீஸீல் அன்னார் மௌனமாகி விட்டார்கள் என்று வருகின்றது. ஏனென்றால், இதுவும் ஒரு சுழற்சியாகும். இந்த நபிமொழி நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒவ்வொரு நுபுவத்திற்கும் நிகழக் கூடியதாகும்.

மேலும், இந்த நபிமொழியின் உண்மை வடிவமே இந்த நூற்றாண்டில் அல்லாஹ்வின் பெரும் கருணையாக வெளிப்பட்டுள்ளது. அதாவது, இந்த நபிமொழி உம்மத்தே முஹ்மதிய்யாவில் தோன்றும் ஒரு நபிக்கும் அடுத்து வரும் நபிக்கும் இடையிலான கிலாஃபத்தின் நிலை என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம். அவ்வாறில்லை என்றால் மற்ற பிரிவு முஸ்லிம்கள் போல் இறுதிநபி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அபாய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிந்து கொண்டாம்.

மேலும், ”எனக்கும் மஸீஹிக்கும் இடையே நபியில்லை” என்ற நபிமொழிக்கேற்ப நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் மஸீஹ் மட்டுமே நபி என்ற அந்தஸ்தை பெறுகின்றார். இன்னும் மூஸா(அலை) அவர்களின் கிலாஃபத் மஸீஹ் உடன் முடிவடைந்து விட்டது. ஆனால், நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை அதாவது கிலாஃபத் மறுமைவரை தொடரக்கூடியதாகும். எனவே, அன்னாரின் உம்மத்தில் இறுதியாக தோன்றக்கூடிய கலீஃபாவான மஸீஹ் இருக்கின்றார். இந்த இடத்தில் மிக குறிப்பாக நாம் அறியவேண்டியது என்னவென்றால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் ஒருவர் என்றால் அது மூஸா(அலை) அவர்களின் கிலாஃபத்தை போல் முற்று பெற்றுவிடும். ஆகையால், உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் என்ற வார்த்தையின் அர்த்தம் "மஸீஹ் ஒருவரல்ல; பலர்." என்பதாகும், இன்னும் தெளிவாக கூறினால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் இறுதி கலீஃபா மஸீஹாக இருக்கின்றார். அவர் ஒருவர் அதாவது ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) மட்டும் தான் என்று கருதினால், நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை, மூஸா(அலை) அவர்களின் இரண்டாவது வல்லமை போல் முற்று பெற்றுவிடும்! மாறாக, வரக்கூடிய மஸீஹ் ஒருவர் அல்ல பலர் என்றால் நபி(ஸல்) அவர்களின் அருளுக்குறிய கிலாஃபத் தொடரக் கூடியதாகவும் மஸீஹ்மார்களின் வருகை முற்று பெறவில்லை என்பதால் பகுதி அதாவது நிழல் நுபுவ்வத்தின் கதவு என்றென்றும் திறந்தே இருக்கும். இன்ஷா அல்லாஹ் சகோதரர்களே!

Copyright @ 2013 Sahih Al Islam .