Skip to main content

Posts

Showing posts from September 24, 2023

வைரமே வைரத்தை வெட்டும்

ஹிஜ்ரி 1443 முஹர்ரம் மாதம் பிறை 4, 2021 ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை மாலை 6.05 மணியளவில் இறை புறத்திலிருந்து பெற்று இறைச் செய்தியை வழங்கிய படி... ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்கள் அறிவிக்கிறார்கள்.. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானுர் ரஹீம் அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணை காட்டுபவனும் ஆகிய அல்லாஹ்வின் பெயரால்... இவ்வுலகின் அனைத்து தேசங்களிலிருந்து, பூமியில் வாழும் எனது அன்பான மனித இனமே, கேளுங்கள்! முதலில், ஏகனாகிய, ஒரே ஒருவன் நமது உண்மையான படைப்பாளன் மற்றும் பிரபஞ்சத்தின் அனைத்து தற்காலிக மற்றும் போலி தெய்வங்களுக்கும் இறைவனாகிய அந்த ஒரே ஒருவனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவனே (வல்ல இறைவன்), நம்மையும், தாங்கள் பல சோதனைகளை கடந்து சென்றாலும், மக்கள் அவர்களை ஏளனம் செய்தாலும் அவர்கள் மீது பழிகளை சுமத்தினாலும் அவனது கலீபத்துல்லாஹ்வை நேசித்து, அவனது கலீபத்துல்லாஹ்வுக்கு கீழ்படிந்து, அவனது கலீபத்துல்லாஹ்‌வுடன் நெருக்கமாக பணிகளை மேற்கெள்கின்றவர்களையும் (இறைவன்) நேசிக்கிறான். நான் உங்களிடம் அல்லாஹ் (தபாரக)வின் பெயரில் சத்தியம் செய்து கூறிக் கொள்கிறேன்: அல்லாஹ் என்னுடன் ப...

சைத்தானின் திட்டம் மற்றும் அவனது படைக்கு எதிரான இறைவனின் அருள்

“இறை நம்பிக்கை கொண்டவர்களே! முழுமையான உள்ளத்துடன் இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான எதிரி ஆவான்.” மேற்கூறிய திருக் குர்ஆன்- அல் பகரா வசனம் 209 ஐ ஓதிக் காட்டியவர்களாக அனைத்து மனித சமுதாயத்திற்கும், இல்மை அதாவது ஞானத்தை வழங்கும்படியும், இந்த உலகின் இருளிலிருந்து மக்களை அகற்றி, ஒவ்வொருவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தபாரக்தாலாவின் வெளிச்சத்தின் பக்கம் அதாவது ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்கும் பிரார்த்தனை செய்தவர்களாக ஹஸ்ரத் முனீர் அஹமத் அஜீம் (அலை) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்கிறார்கள்:- "ஷைத்தான் அனைத்துப் பொய்களுக்கும் தந்தையாவான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் அறிவின்மை எனும் இருளின் இளவரசனும், இந்த பௌதீக உலகின் தெய்வமும், ஆண்களையும் பெண்களையும் தவறான வழியில் வழிநடத்த, தன்னை ஒளியின் தேவ தூதனாக காட்டிக்கொள்பவனுமாவான். கடந்த காலங்களைப் போலவே இந்த நாட்களிலும், பல குழுக்களின் பல்வேறு மார்க்கத் தலைவர்களும் போலித் தோற்றங்களுடன் தங்களை சர்வவல்லமையுள்ள இறைவனின் தூதர்களாக காட்டிக் கொள்கின்றனர். உண்மை...