ஆட்சிமுறையில் புரட்சி என்பதே இந்த உலகில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் குறிக்கோளாகும். (‘எழுந்து புதிய உலகத்தை உருவாக்குவீராக’ என்பது இதன் அர்த்தங்களில் ஒன்றாகும்'). இன்று நாம் அல்லாஹ்(ஸுப்ஹா)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் (மாற்றமான) எதிர்ப்புணர்வு கொண்டுள்ள மற்றும், அதனால் மனிதகுலத்தின் துன்பத்திற்கு காரணமாகியுள்ள (அத்தகைய) ஆட்சி(களை) கண்டுவருகிறோம். மனிதனின் துன்பங்களுக்கு காரணமானதும், அல்லாஹ் (சுப்ஹான)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள ஆட்சி(களை) இன்று நாம் கண்டுவருகிறோம். ஆகவே, இந்த மோசமான ஆட்சி(கள்) அனைத்தும் சர்வவல்லமையுள்ள இறைவனின் (ஒரு) மனிதரைக் கொண்டு மாற்றப்பட வேண்டும். (வரக்கூடிய) அவர் இறை அறிவுறுத்தலின்படி [அல்லாஹ் (சுப்ஹான)] வின் கீழ் [இந்த உலகத்தை] நீதியுடன் ஆட்சி செய்ய வருவதோடு, அவர் இறைவனால், தன்புறமிருந்து தேர்வு செய்யப்பட்டவர்[உயர்த்தப்பட்டவர்/ தேர்ந்தெடுக்கப்பட்டவர்] ஆவார். அவர் இறை வழிகாட்டுதல்களை மட்டுமேப் பின்பற்றுவார் (அதல்லாமல் வேறெதெனையும் பின்பற்றமாட்டார்...