Skip to main content

Posts

Showing posts from August 27, 2023

ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் நோக்கங்கள்- பாகம் 1

ஆட்சிமுறையில் புரட்சி என்பதே இந்த உலகில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் குறிக்கோளாகும். (‘எழுந்து புதிய உலகத்தை உருவாக்குவீராக’ என்பது இதன் அர்த்தங்களில் ஒன்றாகும்'). இன்று நாம் அல்லாஹ்(ஸுப்ஹா)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் (மாற்றமான) எதிர்ப்புணர்வு கொண்டுள்ள மற்றும், அதனால் மனிதகுலத்தின் துன்பத்திற்கு காரணமாகியுள்ள (அத்தகைய) ஆட்சி(களை) கண்டுவருகிறோம். மனிதனின் துன்பங்களுக்கு காரணமானதும், அல்லாஹ் (சுப்ஹான)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள ஆட்சி(களை) இன்று நாம் கண்டுவருகிறோம். ஆகவே, இந்த மோசமான ஆட்சி(கள்) அனைத்தும் சர்வவல்லமையுள்ள இறைவனின் (ஒரு) மனிதரைக் கொண்டு மாற்றப்பட வேண்டும். (வரக்கூடிய) அவர் இறை அறிவுறுத்தலின்படி [அல்லாஹ் (சுப்ஹான)] வின் கீழ் [இந்த உலகத்தை] நீதியுடன் ஆட்சி செய்ய வருவதோடு, அவர் இறைவனால், தன்புறமிருந்து தேர்வு செய்யப்பட்டவர்[உயர்த்தப்பட்டவர்/ தேர்ந்தெடுக்கப்பட்டவர்] ஆவார். அவர் இறை வழிகாட்டுதல்களை மட்டுமேப் பின்பற்றுவார் (அதல்லாமல் வேறெதெனையும் பின்பற்றமாட்டார்...

உம்மத்தின் பரிபூரண முன்னேற்றத்திற்கான செயல்முறையும் புரட்சியும்

ஜூம்ஆ குத்பா நாள் 10-09-21-02 - ஸஃபர்-1443 உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபிகளுக்கும், அனைத்து முஸ்லீம்களுக்கும் தனது ஸலாத்தினை தெரிவித்தப் பிறகு ஹஸ்ரத் ஃகலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹத் தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதியப் பின் “உம்மத்தின் பரிபூரண முன்னேற்றத்திற்கான செயல்முறையும் புரட்சியும்” என்ற  தலைப்பில் தனது ஜுமுஆப் பேருரையை வழங்கினார்கள், நமது  நேசத்திற்க்குரிய இறைத்தூதர் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஒரு கவலை இருந்தது. இ(க்கவலையான)து அல்லாஹ்(தபார)விடம் இரவுகளின் போது பிரார்த்தனை செய்யுமாறு அன்னாரை விழித்திருக்க வைத்தது. அன்னார் தமது (உம்மத்)சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பண்பு-நலனிற்காகவும் அதிகம் கவலையடைந்தார்கள். "அல்லாஹ்வே! எனது உம்மத்தே, எனது உம்மத்தே!" [யா ரப்பி உம்மத்தி! (என்று கூறி!], மன்றாடுவது அன்னாரது வழக்கமாகும். இது உண்மையில் நமது பாசத்திற்குரிய இறைத்தூதர்(ஸல்) அவர்களது நேசத்தின் அழைப்பும் முழக்கமுமாகும்; அன்னாரது உம்மத் மீதான அன்னாருக்கிருந்த ஆழமான நேசமானது அன்னாரை எப்போதும் அல்லாஹ்விடம் "உம்மத்தி, உம்மத்தி" என்று கூறி பிரார்த்திக்கச...

ஹஜ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நீடித்த மரபு

  பிஸ்மில்லா ஹிர் ரஹ்மான் நிர்ரஹீம் நபித்துவத்தின் முத்திரை இமாம் புஹாரி அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸில், ஹஜ்ரத் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்கள். நமது எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள்: “எனக்கு முன் சென்ற மற்ற நபிமார்களை ஒப்பிடுகையில், ஒரு மனிதன் ஒரு வீட்டை மிகவும் அழகாக வும் நேர்த்தியாகவும் கட்டினான், அதில்  ஒரு மூலையில் ஒரு செங்கலின் இடத்தைத் தவிர." மக்கள் அதைப் பார்த்து அதன் அழகைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள், ஆயினும், (அவர்கள்), ‘இந்த செங்கல் அதற்குரிய இடத்தில் வைக்கப்படாதா!!’ என்றும் கூறுகின்றனர். ஆகையால், நான் தான் அந்த செங்கல் ஆவேன், மேலும் நான் நபிமார்களின் முத்திரை ஆவேன்”என்றும் கூறினார்கள் . எம்பெருமானார் திரு நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தான் கடைசி செங்கல் ஆவார்கள், தீன் (மார்க்கத்தின்) வீட்டை முழுமையாக்குகின்றார்கள்  என்பதில் எந்த சந்தேகமுமில்லை. உண்மையில், அன்னார் தோன்றியதால் (வருகையினால்) அவர்களே கட்டுமானத்தை முழுமைப் படுத்தினார்கள், ஏனெனில் அன்னார் மூலமாகவே அல்லாஹ் நமது மார்க்கத்தை, இறுதி மார்க்கத்தை நமக்கு வழங்கி, நம்...

இறுதி காலங்களின் அடையாளங்களின் மீது (பாகம் 1)

 (24 செப்டம்பர் 2021~16 ஸஃபர் 1443 ஹிஜ்ரி) உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்துமுஸ்லிம்களுக்கும்) தனது ஸலாத்தை தெரிவித்தப் பின்னர் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹது, தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதிய பிறகு “இறுதி காலங்களின் அடையாளங்களின் மீது ” என்ற தலைப்பில் தனது சொற்பொழிவை வழங்கினார்கள்.. فَهَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَہُم بَغۡتَةً۬‌ۖ فَقَدۡ جَآءَ أَشۡرَاطُهَا‌ۚ فَأَنَّىٰ لَهُمۡ إِذَا جَآءَتۡہُمۡ ذِكۡرَٮٰهُمۡ () எனவே இவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில் தங்களின் மீது திடீரென்று (தீப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எ திர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும். (47:19) ஒரு (குறிப்பிட்ட) காலத்திற்காக அல்லது ஒரு இடத்திற்காக என்று வரையறுக்கப்படாத தனித்தன்மை கொண்ட ஒரே வேதம் திருக் குர்ஆன் மட்டுமே; (திருக் குர்ஆன்) பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹஸ்ரத் எம்பெருமானார் நபி கரீம் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதும்...