ஹஸ்ரத் முஹையுதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:- இந்துக்கள் மற்றும் தமிழர்களுக்கு மத்தியில், குறிப்பாக நாளைய தினமான 3-11-2013 ஞாயிறு அன்று நிகழும் சூரிய கிரகணம் குறித்து அதிகமான அனுமானங்களும் ஊகங்களும் காணப்படுகின்றன. இதற்கான காரணம், மீண்டும் ஒருமுறை தீபாவளியன்று மொத்த சூரிய கிரகணம் நிகழும் என்பதே ஆகும். எனினும் இம்முறை, மொரிஷியஸில் கிரகணம் ஓரளவு கண்களுக்குத் தென்படும். ஆனால், அதே சமயம் கடந்த ஆண்டு (13-14 நவம்பர் 2012) இவ்வாறு அந்த சூரிய கிரகணம் கண்களுக்குத் தென்படவில்லை. எனவே மொரீஷியஸை சார்ந்த இந்து / தமிழ் மத நம்பிக்கையாளர்கள் பின்வருமாறு கேள்வி ஒன்றை எழுப்புகிறார்கள்: இதனால் என்ன நிகழும்? இருண்ட சக்திகளுக்கு எதிராக ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் விடுமுறை நாளான தீபாவளி அன்று சூரிய கிரகணம் அடைவது எதன் அறிகுறி ? என்பதே அவர்களின் கேள்வியாகும். 1762 ஆம் ஆண்டு முதல், விளக்குகள் திருவிழா (தீபாவளி அல்லது தீப ஒளி ) தினத்தில் சூரியனின் மொத்த கிரகணம் வெளிப்படுவது இது நான்காவது முறையாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் : • அக்டோபர் 17, 1762 •...