Thursday, September 21, 2023

அல் ஹுஜூராத் (புறங்கூறுதல்) எச்சரிக்கை!

“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள்‌ அதிகமான யூகங்களிலிருந்து விலகிக்‌ கொள்ளுங்கள்‌. ஏனெனில்‌ சில யூகங்கள்‌ பாவமாகும்‌. பிறர் குற்றங்களைத்‌ தேடியலையாதீரகள்‌. உங்களுள்‌ ஒருவருக்கொருவர்‌ புறங்கூறாதீர்கள்‌. உங்களுள்‌ எவராது மரணமடைந்து விட்ட தமது சகோதரரின்‌ மாமிசத்தை உண்ண விரும்புவாரா? (உங்களைக்‌ குறித்து இவ்வாறு கூறப்பட்டால்‌) நீங்கள்‌ நிச்சயமா அதனை வெறுப்பீர்கள்‌ மேலும்‌ அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்‌. அல்லாஹ்‌ அதிகமாகக்‌ கழிவிரக்கத்தை ஏற்றுக்கொள்பவனும்‌, மேன்மேலும்‌ கருணை காட்டுபவனுமாவான்‌. (49:13).

மேலே கூறப்பட்ட திருக்குரான் வசனத்தை மேற்கோள்காட்டிய வர்களாக. ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் 

இந்த அத்தியாயத்தின் மூலமாக அல்லாஹ்‌ நம்பிக்கையாளர்களின்‌ சமூகத்தை அழைத்து, கிப்பத்துக்கு எதிராக

எச்சரிக்கையாக இருக்கும்படி கவனமூட்டுகிறான்‌. நீங்கள் அறிந்தது போலவே, கிப்பத்து என்பதன்‌ அர்த்தம்‌ புறங்கூறுதல்‌, ஒரு நபருக்கு எதிராகப் பேசுதல்‌, அவரது முதுகுக்குப்‌ பின்னால்‌ அதாவது அவர்‌ இல்லாதபோது அவரை மோசமாக சித்தரித்தல்‌ போன்றவையாகும்‌. இத்தகைய நடைமுறையை அல்லாஹ்‌ கடுமையான வார்த்தைகளில்‌ கண்டித்துள்ளான்‌. மக்கள்‌ அவற்றை பற்றி நன்கு உணர்ந்து கொண்டால்‌, அவர்கள்‌ ஒரு போதும்‌ இத்தகைய செயல்களில்‌ ஈடுபட துணியமாட்டார்கள்‌. கிப்பத்‌ என்ற தீமையானது அதாவது பாவமானது, அது உங்களை அதன்பால்‌ ஈர்த்துக்‌ கொள்கிறது. நீங்கள்‌ பலவீனமடைந்து அதில்‌ வீழ்ந்து விடுகின்றீர்கள்‌. அல்‌ ஹுஜுராத்‌ என்ற அத்தியாயத்தைப்‌ பற்றி நீங்கள்‌ நுட்பமாக படித்துக்கொண்டால்‌, அதன்‌ உள்ளடக்கங்களை கண்டு நீங்கள்‌ அஞ்சி நடுங்கிவிடுவீர்கள்‌. அதாவது அல்லாஹ்‌ இறை நம்பிக்கையாளர்களுக்கு எதிராக எதனைக்‌ கொண்டு எச்சரித்துள்ளானோ அதன்‌ காரணமாக நீங்கள்‌ பயந்து விடுவீர்கள்‌

நீங்கள்‌ சூரா ஹூஜுராத்‌தை படிக்கும்‌ போது, அதில்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌.

நம்பிக்கை கொண்டவர்களே!, (யார்‌ மீது ஈமான்‌ கொள்ள வேண்டும்?) அல்லாஹ்வின்‌ மீது நம்பிக்கை, அவனது கட்டளைகள்‌ மீது நம்பிக்கை மற்றும்‌ அவனது அறிவுறுத்தல்கள்‌ மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டவர்கள்‌ யார்‌? அல்லாஹ்‌ உங்களிடம்‌ கூறுகிறான்‌. சந்தேகங்களை தவிர்த்துவிடுங்கள்‌, இதுபோன்ற சந்தேகங்கள்‌, ஐய உணர்வுகள்‌ போன்றவை அதிக பட்சமும்‌ உங்களை பாவங்களின் பக்கம் அழைத்துச் செல்கிறது. இது மிகவும்‌ மோசமான பழக்கமாகும்‌. இதிலிருந்து நீங்கள்‌ விடுபட வேண்டும்‌. உண்மையில்‌ சந்தேகங்களில்‌ சில பாவமாகிறது.

மக்களை மிகவும்‌ சந்தேகிக்கும்‌ தீய பழக்கத்தைக்‌ கொண்டவர்களும்‌ உள்ளனர்‌. இது மிகவும்‌ ஆபத்தானது. பிறரின்‌ தனிப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ள அவர்கள்‌ அநேக கேள்விகளை முன்வைக்கின்றார்கள்‌. பிறரின்‌ எல்லாவற்றையும்‌ விரிவாக அவர்களுக்கு அறிந்து கொள்ள வேண்டும்‌. அவர்களின்‌ அச்செய்கையானது மிகவும்‌ வேதனை விளைவிப்பதாகும்‌. மேலும்‌ அவர்களின்‌ சொந்த விஷயங்களைப்பற்றி யாருக்கும்‌ தெரியப்படுத்தாமல்‌ கவனித்துக்‌ கொள்கின்றனர்‌. அதே சமயம் மற்றவர்களின்‌ அனைத்து காரியங்களைக்‌ குறித்தும்‌ தெரிந்து கொள்ள அவர்கள்‌ விரும்புகின்றனர்‌.

இவ்வாறு, அவர்கள்‌ மற்றவர்களை உளவுபார்கின்றனர்‌. உளவு பார்த்ததிலிருந்து கிடைத்த தகவல்களை அவர்கள்‌ தங்களுக்கு வேண்டியவர்களிடம்‌ பரப்புகின்றனர்‌. மேலும்‌ அவர்கள்‌ அவ்விஷயங்களை மிகைப்படுத்தி மோசமாக்கி விடுகின்றனர்‌. அதிகாரப்பூர்வமற்ற வழிகளில்‌ தெரிந்து கொண்டதைப்‌ பரப்புவதில்‌ மும்முரமாக பங்கேற்கின்றனர்‌. இவ்வழியில்‌ அவர்கள்‌ மக்களை வெறுப்பு மற்றும் சண்டை சச்சரவுகளின்‌ பக்கம்‌ தூண்டுகின்றனர்‌. சந்தேகம்‌ கொள்வது, உளவு பார்ப்பதோடு ஓர்‌ ஆழமான தொடர்பைக்‌ கொண்டிருப்பதால்‌ இது மிகவும்‌ கொடிய பாவமாகும்‌. மேலும்‌ இத்தகைய மக்கள்‌, சந்தேகம்‌ என்னும்‌ நோய் கொண்ட நபர்கள்‌, உளவுபார்ப்பவர்கள்‌ மிகவும்‌ ஆபத்தானவர்கள்‌.

மற்றொரு புறம்‌, பாருங்கள்‌ ஒரு நல்ல நபர்‌ குளித்து விட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்வார்‌. அவர்‌ எல்லா வகையான அசுத்தங்கள்‌, தூசி மற்றும்‌ தவறான தீய பரிவத்தனைகளிலிருந்து வெகு தொலைவில்‌ இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும்‌

செய்வார்‌. சுத்தமாக இருப்பதன்‌ மதிப்பை அவா்‌ உணர்ந்திருப்பதால்‌ தன்னை அவர்‌ சுத்தமாக வைத்திருக்கிறார்‌. ஆகவே அது போன்றே நீங்களும் உங்களின்‌ நம்பிக்கையையும்‌ சுத்தமாக வைத்திருக்க வேண்டும்‌. சந்தேகம்‌, உளவுப்பார்வை மற்றும்‌ புறங்கூறுதல்களிலிருந்து நீங்கள்‌ வெகு தொலைவில்‌ இருக்கவேண்டும்‌. உங்களின்‌ முன் ஓதிய சூரா ; ஹுஜுராதின்‌ இவ்வசனம்‌ குறிப்பாக, யாரையும்‌ நீங்கள்‌ புறங்கூறாதீரகள்‌, எவரையும்‌ மோசமாக பேசாதீர்கள்‌ என்பதை நினைவூட்டுகிறது. அதாவது அவர்‌ இல்லாத நேரத்தில்‌ அவருக்கு எதிராகப் பேசாதீர்கள்‌. சந்தேகம்‌, அவநம்பிக்கைப்‌ போன்ற பழக்கங்களை கொண்டுள்ள மக்களும்‌ இருக்கின்றனர்‌. உளவு பார்க்க பழகியவர்கள்‌ மிக விரைவில்‌ ஒரு முடிவுக்கு வருகின்றனர்‌. அதாவது இன்னின்ன விஷயங்கள்‌ நடந்திருக்கலாம்‌ என்று அவர்கள்‌ விரைவான முடிவுக்கு வந்துவிடுகின்றனர்‌.

மேலும்‌ உளவு பார்த்து பழகிய, அந்த வகையான நபர்‌ தனது எல்லா அவநம்பிக்கைகளுடனும்‌, சந்தேகங்களுடனும்‌ தன்னைப் பாவங்களில்‌ மிக ஆழமாக புதைத்துக்‌ கொள்கின்றார்‌. இது மிகவும்‌ ஆபத்தானது. அதனால்தான்‌ தஜஸ்ஸுஸ்‌ (உளவுபார்த்தல்‌) போன்ற தீமைகளுக்கு எதிராக சூரா: அல்‌ ஹுஜுராத்தில்‌ [49 - ம்‌ அத்தியாயம்‌] அல்லாஹ்‌ நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளான்‌.

இத்தகைய தீமைகளுக்கு எதிராக அல்லாஹ்‌ நம்‌ அனைவரையும்‌ பாதுகாப்பானாக! ஆமீன்‌. அல்லாஹ்‌ உங்களை நேரான பாதையில்‌ நீதியுடனும்‌, தக்வாவுடனும்‌ வழிநடத்திச் செல்வானாக! கிப்பத் மற்றும்‌ அதைப்‌ போன்று இவ்வசனத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள மற்றுமுள்ள அனைத்து தீமைகளிலிருந்தும்‌, திருக்‌குர்ஆனில்‌ குறிப்பிடப்படுள்ள ஒட்டுமொத்த தீமைகளிலிருந்தும்‌ வெகு தொலைவில்‌ இருப்பதற்கு அல்லாஹ்‌ நமக்கு உதவிபுரிவானாக!

இன்ஷா அல்லாஹ்‌ ஆமீன்‌.

ஆதாரம் : 13.9.2019 ஜும்மா குத்பா

தலைப்பு : அல் ஹுஜூராத் (புரங்கூறுதல் )

இறை வழியில் பொருள் தியாகம் பற்றி இஸ்லாமிய மஸீஹ்மார்களின் கூற்றுகள்

வல்ல இறைவனின் மேலான அருளை பெற்ற நன்மக்களாக இம்மையிலும் மறுமையிலும் திகழ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுகள்:

  "அல்லாஹ்வின் வழியில் உங்களது எல்லா ஆற்றல்களையும் சக்திகளையும் வாழ்நாள் இருக்கின்ற வரை அர்ப்பணித்து விடுங்கள். அதன் மூலம் அந்த தூய வாழ்வின் வாரிசாகி விட வேண்டும்." (அல் ஹகம் தொகுதி 4 எண் 29; 16 ஆகஸ்ட் 1900 பக்கம் 3; மல்ஃபூஸாத் தொகுதி 2 பக்கம் 90)

உண்மையிலேயே உணவளிப்பவன் இறைவனாக இருக்கின்றான். எந்த நபர் அவன் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ அவர் ஒருபோதும் ரிஸ்கிலிருந்து விலக்கி வைக்கப்பட மாட்டார். அவன் எல்லா வகையிலும் ஒவ்வோர் இடத்திலிருந்தும் தன் மீது நம்பிக்கை வைக்கின்ற நபருக்கு ரிஸ்கை எட்ட வைக்கின்றான். என் மீது நம்பிகை வைப்பதற்கு நான் வானத்திலிருந்து பொழிவேன். அவர்களது பாதங்களிலிருந்து (தேவைப்படுபவற்றை) வெளியில் வரச் செய்வேன் என்று இறைவன் கூறுகின்றான். எனவே, ஒவ்வொரு நபரும் இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்." (மல்ஃபூஸாத் தொகுதி 9 பக்கம் 390)

எந்த நபர் முக்கியமான பணிகளுக்காக பொருளைச் செலவு செய்கின்றாரோ அவர் பொருளைச் செலவு செய்வதால் அவரது பொருளில் குறைவு ஏற்பட்டு விடும் என்று என்னால் நம்ப முடியாது. மாறாக, அவரது பொருளில் அபிவிருத்தி ஏற்படும். எனவே, இறைவன்

மீது நம்பிக்கை வைத்தவாறு முழுமையான நல்லொழுக்கத்துடனும், எழுச்சியுடனும், தைரியத்துடனும் இவ்வழியில் செயலாற்ற வேண்டும். இதுவே தொண்டு செய்வதற்கான நேரமாக இருக்கின்றது. இதற்குப் பிறகு அந்த நேரம் வரவிருக்கின்றது. அப்போது தங்க மலையையே இவ்வழியில் செலவு செய்தாலும் இந்த நேரத்தில் செலவு செய்யப்படும் பைசாக்களுக்கு சமமாக அது இருக்காது. எனவே, இறைவன் தொடர்ச்சியாக எனக்கு இதனை வெளிப்படுத்திக் காட்டியுள்ளான். அதாவது, உண்மையாகவும் உறுதியாகவும் தமது பிரியத்திற்குரிய பொருளை இவ்வழியில் செலவு செய்பவரே இந்த ஜமாஅத்தைச் சார்ந்தவராகக் கருதப்படுவார். நீங்கள் இரண்டு பொருள்களை நேசிக்க முடியாது என்பது வெளிப்படையான விஷயமாகும். நீங்கள் பொருளையும் நேசித்து இறைவனையும் நேசிப்பது என்பது உங்களால் சாத்தியமற்றதாகும். ஒன்றை மட்டுமே நீங்கள் நேசிக்க முடியும். எனவே, இறைவன் மீது அன்பு கொள்கின்ற அந்த நபர் நற்பாக்கியம் பெற்றவர் ஆவார். உங்களில் எவர் இறைவன் மீது நேசம் வைத்தவாறு தனது பொருளை அவனது வழியில் செலவு செய்வாரோ அவரது பொருளில் மற்றவர்களை விட அதிகம் பரக்கத் வழங்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். ஏனென்றால், செல்வம் தானாக வருவதில்லை. மாறாக, அது இறைவனின் நாட்டப்படியே வருகின்றது. எனவே, எந்த நபர் இறைவனுக்காக தனது செல்வத்தின் சில பகுதிகளை விட்டு விடுகின்றாரோ அவர் கண்டிப்பாக அதைப் பெற்றுக் கொள்வார். ஆனால், எவர் செல்வத்தின் மீது நேசம் வைத்து இறைவனின் வழியில் அவர் செய்ய வேண்டிய தொண்டை செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கண்டிப்பாக அந்த செல்வத்தை இழந்து விடுவார். என்று எண்ணாதீர்கள். மாறாக, உங்களை இந்த தொண்டிற்காக அழைத்திருப்பது அவனது அருளாகும். நான் மீண்டும் மீண்டும் கூறுகின்றேன். இறைவன் உங்களது தொண்டுகளுக்கு அணுவளவு கூட தேவையுடையவன் அல்ல. எனினும் உங்களுக்கு தொண்டு செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இருப்பது அவன் உங்கள் மீது செய்திருக்கும் அருளாகும்." (மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 496-497)

"கருமித்தனமும் ஈமானும் ஒரே உள்ளத்தில் ஒன்று சேர முடியாது என்று நான் உறுதியாகக் கருதுகின்றேன். எந்த நபர் உண்மையான உள்ளத்துடன் இறைவன் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ அவர் தனது பெட்டியில் அடைப்பட்டுக் கிடக்கின்ற அந்த செல்வத்தை மட்டும் தனது செல்வமாகக் கருதுவதில்லை. மாறாக, அவர் மேலான இறைவனின் எல்லா கருவூலங்களையும் தமது கருவூலங்களாகக் கருதுகின்றார். இதனால் ஒளியினால் இருள் விலகுவது போன்று செல்வத்தை தடுத்து வைக்கும் நிலை அவரை விட்டு விலகிச் சென்று விடுகின்றது. நீங்கள் ஏதாவதொரு நன்மையான பணியைச் செய்வீர்கள் என்றால், அந்த நேரத்தில் ஏதாவது தொண்டு செய்தால் அதன் மூலம் உங்களது ஈமானில் சாட்சி முத்திரையைப் பதிக்கின்றீர்கள். உங்களது வாழ்நாள் இதனால் அதிகரிக்கும். உங்களது செல்வங்களில் அருள் வழங்கப்படும்." (மஜ்முஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 498)

"நமது பார்வையில் இன்று மிகப்பெரும் தேவையாக இருப்பது இஸ்லாத்தின் வாழ்வாகும். இஸ்லாம் எல்லா வகையான தொண்டிற்கும் தேவையுடையதாக இருக்கின்றது. அதன் தேவையை விட வேறு எந்த தேவைக்கும் நாம் முன்னுரிமை வழங்க முடியாது. இன்று மிகப்பெரும் தேவை நம்மால் இயன்ற வரை இஸ்லாத்திற்குத் தொண்டு செய்வதாகும். எந்த அளவு ரூபாய்கள் இருக்கின்றதோ அவற்றை இஸ்லாத்தை உயிர்பிப்பதற்காகச் செலவு செய்ய வேண்டும்." (மல்ஃபூஸாத் தொகுதி 2 பக்கம் 327)

"தம்மை பைஅத் செய்தவர்களில் ஒருவராகக் கருதுகின்ற ஒவ்வொரு நபரும் தமது செல்வத்தின் மூலமாகவும் இந்த இயக்கத்திற்குத் தொண்டு செய்வதற்கான நேரம் இப்போது வந்து விட்டது. பைஅத் செய்துள்ள ஒவ்வொருவரும் தனது விரிவான நிலைமைக்கு ஏற்ப உதவி செய்ய வேண்டும். அதன் மூலம் இறைவனும் அவருக்கு உதவுவான். ஒவ்வொரு நபரது உண்மையும் அவரது தொண்டின் மூலமாக அடையாளங்கண்டு கொள்ளப்படும். அன்பர்களே! இது மார்க்கத்திற்காகவும் மார்க்கத்தின் நோக்கங்களுக்காவும் தொண்டு செய்ய வேண்டிய நேரமாகும். இதனை அரிதாகக் கருதுங்கள். பிறகு ஒருபோதும் இந்த சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்காது." (கிஷ்தி நூஹ். ரூஹானீ கஸாயின் தொகுதி 19 பக்கம் 83)

"செல்வத்தை நேசிக்காதீர்கள். ஏனென்றால், அந்த நேரம் வந்து கொண்டிருக்கின்றது. அப்போது நீங்கள் செல்வத்தை விடாமல் இருந்தாலும் அது உங்களை விட்டு விடும்." (மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 3 பக்கம் 318)

பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் :

நமது ஜமாத்தை (ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) சேர்ந்த மக்கள் எப்போதும் இந்த அருளின் பக்கம் நினைவு கூற்ந்தவர்களாக இந்த தியாகத்தின்
அருள்களையும் பயன்களையும் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எனது சகோதரர்களே நமது மறைவானவற்றை அவனை தவிர யார் அறிந்து கொள்ள முடியும்! எனவே நாம் இந்த தியாகத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற முழு விழிப்புணர்வு மற்றும் உண்மையான உணர்வும் நம்மிடையே உருவாக வேண்டும். நாம் உளப்பூர்வமாக நல்ல எண்ணத்தில் இந்த தியாகத்தில் ஈடுபடுத்திக் கொண்டால் அந்த ஏக இறைவனின் அருளுக்கும் அன்பிற்கும் பாத்திரமாகலாம். இதை சொற்களால் கூறுவது கடினமான விஷயமாகும். இன்னும் சில வேளைகளில் மக்கள் பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கும்போது நம்மை சிலர் தொந்தரவு செய்வதிலிருந்து தவிர்க்க அல்லது குழந்தைகள் அடம்பிடிப்பதை நிறுத்தும் நோக்குடன் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுப்பது போல பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கின்றனர், ஆனால், எனது அன்புக்குரியவர்களே! நீங்கள் பிறருக்கு கொடுக்கும் போது கூட மகிச்சியுடனும் உங்கள் இதயத்தை உருக செய்யும் மன உருக்கத்துடனும் மனநிறைவுடன் இந்த உலகம் நமக்கு தற்காலிகமானது என்றும் நமக்கு நிரந்தரமான மறுமை உள்ளது என்ற உண்மையை முழுவதும் உணர்ந்தவராக கொடுங்கள். இது உங்கள் மனிதாபிமானத்தை தட்டி எழுப்பக் கூடியதாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் இதை உளப்பூர்வமாக புரிந்து கொண்டு ஆத்மார்த்தமாக இறைவனுக்காக இவ்வகை நற்செயல்களை செய்தால் அந்த ஏக இறைவாகிய அல்லாஹ் சுபஹானஹு தாலா அதற்கு பகரமாக அந்த அடியானை அவனது தயவாளும் கருணையாலும் சிறந்த முறையில் பொருந்தி கொள்வான். அந்த வானங்களையும் பூமியையும் உங்களை படைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வை தவிர உங்களை நேசிப்பவன் யார்? இன்னும் அவன் எப்படிபட்டவன் என்றால் அனைத்தும் அழிந்தாலும் அவன் ஒருவனே நம்முடன் என்றென்றும் இருப்பான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எனது அருமையானவர்களே!.

இஸ்லாம் ((ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) என்ற இந்த உடல் ரூஹுல் குத்தூஸினாலும் உங்கள் அனைவரின் தியாகங்களாலும் ஒளிரூட்டப்பட்டு அந்த ஒளியூட்டப்பட்ட ஒளி பாய்ந்து வெளிச்சத்தை பரப்பும் போது அதன் முன்னேற்றத்தை எவராலும் தடுக்கமுடியாது இவ்வாறு செய்வதற்கு அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் நமக்கு உதவிபுரிவனாக! ஆமீன் சும்ம அமீன் யா ரப்புல் ஆலமீன்!!

ஆதாரம் : 06.4.2018 ஜும்மா குத்பா

தலைப்பு : பொருள் தியாகம்

Wednesday, September 20, 2023

உண்மையான நம்பிக்கையாளர்கள்

ஹஸ்ரத் கலிஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்.

"உண்மையான நம்பிக்கையாளர்கள், தாங்கள் ஒரு நாள் தங்கள் எஜமானனான அல்லாஹ்விடம் திரும்ப வேண்டி உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வார்கள்; மேலும் அவர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரம்புகளை மீறிச் செல்லாமல் தங்களின் சக்திக்கும் திறனுக்கும் உட்பட்ட அனைத்தையும் அவர்கள் செய்கின்றனர்; அதனால் அவர்கள் பூமியில் தங்களின் மீதான அனைத்து சோதனைகள் மற்றும் தேர்வுகள் அதாவது பரீட்சைகள் ஆகியவற்றில் பறக்கும் வர்ணங்களுடன் தேர்ச்சி அடைகின்றனர். மேலும், அவர்கள் அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளையும் அவன் விதித்துள்ள வரம்புகளுக்கு உட்பட்டு அவர்கள் நடைமுறைப்படுத்தப் பார்க்கின்றனர். மேலும் அவர்களின் நம்பிக்கையானது முஸ்லிம்கள் என்ற நிலையில், அல்லாஹ் அவர்களுக்கு புனிதமாக்கியுள்ள அனைத்திலும் தங்களின் மரணத்தை சந்திக்கின்ற வரை உறுதியாக நிலைத்திருக்கும் நம்பிக்கையுடன் வாழ்ந்து, ஓர் ஆன்மீக வாழ்வையும் அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள். அது அவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியில் நிலை பெற்ற - நிரந்தர வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

அவர்கள் நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள் மற்றும் அவர்கள் ஒரு ஆன்மீக வாழ்க்கையைப் பெறுகிறார்கள், அது அவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியில் நித்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வினால் பிரத்தியேகமாக நம்பிக்கையாளர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளார்கள். தாங்களாகவே தங்களுக்கு நம்பிக்கை உள்ளதென கூறிக்கொள்ள முடியாது; ஏனெனில் அல்லாஹ்வே நம்பிக்கையின் சரியான அளவை
அறிந்தவனாவான் என்பது அவர்களுக்குத் தெரியும்; மேலும் மக்களின் நம்பிக்கையை தீர்மானிப்பதற்கான உரிமம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் நம்பிக்கையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும், அதனை ஒரு நிச்சயமற்ற மற்றும் பலவீனமான நிலையில் இருந்து ஒரு திடமான மற்றும் உறுதியான நிலைக்கு கொண்டு செல்லவும் அவர்கள் அறிவார்கள். இந்த மக்கள் அல்லாஹ்வின் திருப்தியை அடையும் வரை ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு அவர்கள் முன்னேறிச் செல்வார்கள். இவ்வுலகமே அவர்களை எதிர்த்துநின்றாலும் கூட அவர்களது நோக்கம்,தேவை மற்றும் விருப்பம் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே பெறுவதாகும். அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வேண்டுவது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே; ஏனெனில் அல்லாஹ் மட்டுமே ஒரு நாள் அவர்களுக்கு தீர்ப்பளிப்பான், மக்கள் அவர்களுக்கு தீர்ப்பளிக்கப்போவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். எனவே, இந்த எண்ணம் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலளித்தது, மேலும் அவர்களின் இதயத்தை மிகவும் இலேசானாதாக அதாவது எந்த கவலைகளும் அற்றதாக உணர்கின்றார்கள், மற்றும் ஓர் அமைதி அதாவது ஸகீனா அவர்களின் இதயங்களை வலுப்படுத்தி அனைத்து கவலைகளையும் மங்கச் செய்துவிடுகின்றது. இந்த வகையான நம்பிக்கையாளர்கள்தான் உண்மையில் வெற்றி பெறுவார்கள்."

ஆதாரம் : 31.7.2015 ஜும்மா குத்பா
தலைப்பு : பயபக்தியும் அல்லாஹ்விற்கு அடிபணிதலும்

இறை புறத்தின் உண்மையான தலைவர் (கலீபா)யார்?

“அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும், அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப் படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்க மாட்டார்கள். இதன்பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்களாவார்கள்.”(24: 56)

மேலே கண்ட இறை வசனத்தை ஓதி கட்டியவர்களாக..

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹமது அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்...

"அல்லாஹ் நம்மை நல்லவர்களென தீர்ப்பளிப்பதற்காக அவனிடம் நாம் துஆ செய்ய வேண்டும். அவனுடைய அருளும் கருணையும் இல்லாமல் நாம் ஒன்றுமற்றவர்களாவோம். துரதிர்ஷ்டவசமாக மற்றவர்களின் நம்பிக்கையை தீர்மானிக்கும் உரிமம் தங்களுக்கு உள்ளதாக அறிவிக்கும் சிலர் உள்ளனர். எவ்வாறெனில் எல்லா தூதர்களையும், சீர்திருத்தவாதிகளையும் இன்னும் வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களையும் ஏற்றுக்கொண்ட  பிறகும்  கூட, தன்னை சிறந்த முஸ்லிம்களைப் போன்று  பாசாங்கு செய்கின்ற மக்கள், அல்லாஹ்  தனது மற்றொரு  மஸீஹை, மறைவானதை அவரிடம் வெளிபடுத்தி ஓதிக்காட்டவும், அவனது அடையாளங்களை காண்பிக்கவும் அவர்களுக்கு மத்தியில் அனுப்பினால், துரதிஷ்டவசமாக அவர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்கின்றார்கள்,  அவர்கள், தற்காலிகமான இவ்வுலகியல் அதிகாரம்  உடையவர்களுடன் அதிகம் தம்மைப் பிணைத்துக் கொள்வதற்கு முற்படுகின்றார்கள், இதனால் மக்கள் அவர்களை தொடர்ந்து வழிபடுகின்றனர் / இணை வைக்கின்றனர்.

இந்த வகையான மக்களும்,  தலைவர்களும் எந்தவொரு இறை அறிவிப்பையும் பெறாத நிலையிலும் கூட, அல்லாஹ்வின் அனைத்துத் தூதர்களும் செய்ததைப்போன்று,  தாங்கள் அல்லாஹ்வின் புறமிருந்து வந்துள்ளதாக

தங்களது பணியை அறிவிக்காமலேயே, அவர்களை அல்லாஹ்வின் தூதர்களாக்கிக் கொள்கிறார்கள். மக்கள் அவர்களை தேர்ந்தெடுக்கின்றனர், ஆனால்“ மக்கள், அமீர் மற்றும் ஆமிலா – நிர்வாகக் குழுவின் குரல் இறைவனின் குரலாகும் என மக்களை நம்ப வைக்கின்றார்கள். அவர்களுக்கு கிடைத்த அதிகாரம் மற்றும் பதவி அவர்களை குருடர்களாக்கி மக்கள் கூட்டம் தம்முடன் இருப்பதால் எதற்கும் கவலைபடத் தேவையில்லை எனவும், தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும் நினைத்துக் கொள்கின்றனர். 

ஆனால் நிச்சயமாக, அல்லாஹ் இதை வெறுக்கிறான், நிச்சயமாக இந்த வகையான மக்கள் மற்றும் தலைவர்கள் மக்களுக்கு தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதில் தொடர்ந்தால், அவர்களிடமிருந்து சத்தியத்தை மற்றும் உண்மையான இறைப் போதனைகளை  மறைக்க முயன்றால், பிறகு, இந்த வகையான  தலைவர்கள், தங்கள் செயல்களின் விளைவுகளை அல்லாஹ்விடம் சந்திக்க வேண்டி வரும். அவர்கள் மறுமையில் மட்டுமல்ல இவ்வுலகிலேயே, அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் உண்மைத் தன்மைக்கான ஆன்மீக வெளிப்பாடு தெளிவாகும் வரை துன்பப்படுவார்கள். அதன் பிறகு,  இறைவன் புறமிருந்து வந்த அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர் யார்?, பரிசுத்த ஆவியால், ரூஹுல் குதுஸ்சினால்  உதவியளிக்கப்பட்டவர் அல்லது அல்லாஹ்வினால் தனது தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு மட்டுமே வழங்கும் மறைவான ஞானத்தை அறியாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? என்பது பற்றியும் மக்களிடையே எந்த ஐயமும் இல்லாமலாகிவிடும்.

அல்லாஹ் அவனது வழிகாட்டுதலுக்காக தாகத்துடன் இருக்கும் அனைத்து உள்ளங்களையும் திறந்து அவர்கள் உண்மையை கண்டு உணர்ந்ததன் பின் ஏற்றுக்கொள்வதற்கும் அவர்களுக்கு வழிகாட்டட்டுமாக! நயவஞ்சகர்கள். அல்லாஹ்வின் பாதையை கோணலாக்க விரும்புபவர் மற்றும் மக்களை தவறாக வழிநடத்தி செல்வோர் திருப்தி அடையாவிட்டாலும் உண்மையே நிச்சயம் வெற்றி கொள்ளும். இன்ஷா-அல்லாஹ். ஆமீன்."

ஆதாரம் : 31.7.2015 ஜும்மா குத்பா

தலைப்பு : பயபக்தியும் அல்லாஹ்விற்கு அடிபணிதலும்

Sunday, September 17, 2023

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் மற்றும் உண்மையான வழிகாட்டல் பகுதி -2

(02 ஜூன் 2023 ~12 துல்கஹ்தா - ஹிஜிரி 1444 )

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ் (அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றைப் ஓதிய பிறகு,

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் மற்றும் உண்மையான வழிகாட்டல்- பகுதி -2

என்ற தலைப்பில், இறை வெளிப்பாட்டின் மூலம் பெறப்பட்ட தனது குத்பாவின் பக்கம் கவனம் செலுத்தினார்கள்.

يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ ۖ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا

நாம் எல்லா மக்களையும் அவர்களது (அவரவர்களுடைய) இமாம்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அவர்கள் தம் ஏடுகளை (மனமகிழ்ச்சியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (17:72)

அல்ஹம்துலில்லாஹ் ஸும்ம அல்ஹம்துலில்லாஹ், நான் உங்களுக்கு முன் தற்போது ஓதியக் காட்டிய வசனத்தின் விளக்கம் குறித்த எனது தலைப்பின் இரண்டாம் பகுதியை இன்றும் தொடர்கிறேன்.

அல்லாஹ் கூறுகிறான்: "எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அவர்கள் தம் ஏடுகளை (மனமகிழ்ச்சியுடன்) படிப்பார்கள்" - நம்பிக்கை கொள்வதன் பரீட்சையில் அதாவது சோதனையில் வெற்றியடைவதற்கும், அனைத்து சோதனைகளையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் குர்ஆன் கூறும் உருவகம் இதுவாகும். வலது கையில் பெறுவது இறையருளின் சின்னத்தைக் குறிக்கின்ற அதே சமயம், இடது கையில் பெறுவது தண்டனையைக் குறிக்கிறது. மேலும் மனித உடலில், வலது பக்கமானது இடதுபுறத்தை விடவும் மேன்மையை அனுபவிக்கிறது, ஏனெனில் வலது பக்க திசுக்கள் பொதுவாகவே இடதுபுறத்தை விடவும் வலிமையானவையாகும்.

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி ஒருவரது செயல்களின் பதிவேட்டை ஒருவரது வலது கையில் கொடுப்பது என்பதானது, அது அவரது செயல்களுக்கு ஒப்புதல் தெரிவிக்கின்ற, ஒரு சாதகமான மற்றும் அருள் பாலிக்கப்பட்ட பதிவேடாக இருக்கும், என்பதனைக் குறிக்கின்றது. மேற்கொண்டு வலது கை வலிமை மற்றும் சக்தியைக் குறிக்கிறது. சர்வவல்லமையுள்ள அல்லாஹ் திருக்குர்ஆனில் சூரா அல்-ஹாக்காவில், இறைத் தூதர் தனது இறை வெளிப்பாடுகள் குறித்து பொய் கூறியிருந்தால், நிச்சயமாக அவன் வலது கையால் அவரைப் பிடித்திருப்பான், அவரது நாடி நரம்பை அறுத்திருப்பான் என்று தெளிவாகக் கூறியுள்ளான்.

ஆகவே, இது அல்லாஹ்வின் தீர்க்கதரிசியாகிய ஒருவரது உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான தெளிவான வாதமாகும், ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் பொய்களைப்
பரப்புபவர்களாக இருந்திருந்தால், அல்லாஹ்வின் வலிமைமிக்க கரமானது அவரதுத் தொண்டையைப் பிடித்துத் தரித்திருக்கும், அதனால் அவர் நிச்சயமாக ஒரு பலவந்தமான மரணத்தைச் சந்தித்திருப்பார், மேலும் அவரது அனைத்து வேலைகளும், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மேற்கொண்ட அவரது முக்கியமான பணிகளும் ஒரு பொய் நபியின் தலைவிதியில் ஒன்று மற்றதாக துண்டு துண்டாகப் போயிருக்கும். மேலும், நபித்துவத்திற்கு உரிமை கோரும் அனைவருக்கும் இது பொருந்தும். இன்னும் (அல்லாஹ்வின் பெயரால்) பொய்யை புனைந்து கூறுகின்ற, பொய்யாக வாதம் செய்பவர்கள் அனைவருக்கும் இறைவனின் அதேத் தண்டனை காத்திருக்கிறது.

ஆகவே, நம்பிக்கை கொண்டவர்கள் தங்களது பதிவேடுகளை வலது கைகளில் கொண்டிருப்பது என்பதானது, அவர்கள் நல்லொழுக்கத்தை உறுதியுடனும், தீர்மானத்துடனும் பற்றி பிடித்திருப்பதைக் குறிக்கின்ற அதே வேளையில், நிராகரிப்பவர்கள் தங்களது பதிவேடுகளை இடது கைகளில் கொண்டிருப்பது என்பதானது, அவர்கள் தேவையான வலிமையுடனும், மிகுந்த ஆர்வம் மற்றும் வைராக்கியத்துடன் நல்லொழுக்கத்திற்காகப் பாடுபடவில்லை என்பதைக் குறிக்கின்றது. அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:

وَمَن كَانَ فِي هَٰذِهِ أَعْمَىٰ فَهُوَ فِي الْآخِرَةِ أَعْمَىٰ وَأَضَلُّ سَبِيلًا

" எவர் இவ்வுலகில் குருடராக இருக்கிறாரோ, அவர் மறுமையிலும் குருடராகவே இருப்பார். இன்னும் அவர் நேரிய பாதையை விட்டு மிகவும் வழிதவறியவராகவும் இருப்பார்."

அதாவது, அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்டு கொள்ளாமல், அவனையும், அவன் தேர்ந்தெடுத்து அனுப்பும் தூதரையும் நம்ப மறுப்பவர்கள் மறுமையில் குருடர்களாகவே இருப்பார்கள், மேலும் இந்தக் குருட்டுத்தன்மையானது அவர்களை இஸ்லாமாகிய அல்லாஹ்வின் பாதையிலிருந்தும், உண்மையான நேர்வழியில் இருந்தும் வெகு தூரம் வழிதவறச் செய்து விடுகிறது.

ஆகவே, நியாயத்தீர்ப்பு நாளில், ஒளியைப் பெற்ற மக்கள் தங்களது பதிவேட்டைப் பெற்றுக்கொண்டு , அவற்றைப் படித்துப் பார்ப்பார்கள். பிறகு, அல்லாஹ்வின் அருள்களுக்காக மகிழ்ச்சியுடன் நன்றி செலுத்துவார்கள். ஒளியை இழந்து, அறியாமை எனும் இருளை அடைந்த மக்களின் நிலை என்ன? அவர்கள் ஏற்கனவே இவ்வுலக வாழ்வில் குருடர்களாகவே இருந்தார்கள், அதனால் மறுமை நாளின் போதும் அவர்கள் இறைவனது முகத்தின் ஒளியைப் பெற மாட்டார்கள். அதற்கு மாறாக, அவர்கள் எவ்வளவு காலம் பயணித்திருக்கின்றார்களோ, அவ்வளவு தூரம் அவர்கள் இறைப் பாதையிலிருந்தும் விலகிச் சென்றிருப்பதைக் கண்டுகொள்வார்கள்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்காமல், அவற்றால் பயனடையாதவர்களை குறித்து "குருடர்கள்" என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அத்தகைய மக்கள், மறுமை வாழ்விலும் கூட ஆன்மீக குருடர்களாகவே இருப்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளதாவது, எவனொருவன் அவனது நினைவு கூறுதலை விட்டும் விலகிக் கொள்கிறானோ, அதாவது அவனுடைய திருக்குர்ஆனின் மீது நம்பிக்கைக் கொள்ளாமலோ அல்லது அதன் போதனையின்படி செயல்படாமலோ இருப்பானோ, அப்படிப்பட்டவன் வழிதவறிச் செல்வான். எவர் அல்லாஹ்வை நினைவுகூருவதை விட்டும் விலகிச் செல்கிறாரோ அவர், வருந்துகின்ற கடினமானதொரு வாழ்வை பெற்றுக் கொள்வார். மேலும் மறுமை நாளில் அல்லாஹ் அவர்களைக் குருடர்களாகவே எழுப்புவான்.

இவ்வுலக வாழ்வில் அல்லாஹ்வை புறக்கணித்து, மறந்து போன நிலைக்கு சென்று, தனது ஆன்மீக வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகின்ற அல்லது தடை செய்யக் கூடிய வாழ்க்கையை மேற்கொள்பவன், அதன் காரணமாக வானத்தின் ஒளியை தாமாகவே இழந்து போய், மறுமையில் அவரது இரண்டாவது பிறப்பின் போது - அதாவது உயிர்த்தெழுதலின் போது குருடராகவேப் பிறப்பார்.

இது ஏனென்றால், அடுத்த உலகில் அதாவது மறுமையில் மிகவும் ஆன்மீக வளர்ச்சியடைந்த ஆன்மாவிற்கு ஓர் உடலாக செயல்படும் அவரது இந்த வாழ்வின் அவரது ஆன்மாவானது, குருடாகி விட்டது; அவர் இவ்வுலகில் பாவகாரமான ஒரு வாழ்க்கையை நடத்தியதே இதற்குக் காரணமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை தெளிவானப் பார்வையில் வழங்கும் அந்த நாளில் - இறைவனின் நினைவூட்டல் அதாவது திருக் குர்ஆன் வந்த போது, அதன் பக்கம் தமது கண்கள் மூடியிருந்தவர்களுக்கு, அதனை செவி மடுப்பதை சகித்துக் கொள்ள முடியாதவர்களுக்கு, அவ்வாறான மக்கள் நிச்சயமாக பெரும் வேதனையில் இருப்பார்கள். ஒரு நபி அல்லது தீர்க்கதரிசி கொண்டு வருகின்ற ஒவ்வொரு செய்தியும் வடிவத்தில் புதியதாக இருந்தாலும், அதன் பொருளிலும், அதன் சாராம்சத்திலும் அதேப் பழைய செய்தியை தான் கொண்டு வருகிறார்.

இறைவனிடம் இருந்து வருகைத் தருகின்ற இறை நேசர்கள், மறைந்திருக்கும் பொக்கிஷங்களை வெளிப்படுத்தக் கூடிய அல்லது எதிர்காலத்தை வெளிப்படுத்தக் கூடிய அல்லது ஆண்களிடம் இருந்து வேறுபட்ட இயல்புடைய எதையேனும் வாதம் செய்பவர்களை போன்று பாசாங்கு செய்யக் கூடிய இழிவான ஜோதிடர்களைப் போன்றல்ல. அவர்கள் சத்தியத்தின் இறைவனது மாபெரும் பொக்கிஷங்களைக் கையாளுகிறார்கள், அத்தகையப் பொக்கிஷங்கள் அவர்களுடையதல்ல, மாறாக அல்லாஹ்வுக்கே உரியதாகும்.

அவர்கள் உயர்ந்த விஷயங்களில் அதிக நுண்ணறிவைக் கொண்டுள்ளனர், ஆனால் அந்த நுண்ணறிவு அவர்களின் சொந்த ஞானத்தால் கிடைத்தது அல்ல, மாறாக, இறைவனின் தூண்டுதலாலேயே கிடைத்ததாகும்; அவர்கள் மற்ற மனிதர்கள் கொண்டிருப்பதைப் போன்றே சதையையும் இரத்தத்தையும் கொண்டவர்கள். மேலும் அவர்களின் வார்த்தைகள் மற்றும் போதனைகளின் உன்னதத் தன்மையானது இறைவனின் கிருபையின் மூலம் அவர்களிடமும், அவற்றைக் கேட்பவர்களிடமும் தோன்றி விடுகிறது. ஆகவே, இறைவனிடம் இருந்து வருகைத் தருகின்ற இறை நேசர்களை சாதாரண மனிதர்களுடன் ஒப்பிட்டு விடாதீர்கள்.

மனிதகுலத்தின் இரத்தத்தையே அவர்கள் பகிர்ந்து கொண்டபோதிலும், அவர்களின் ஆன்மீக இயல்பானது மிகவும் வேறுபட்டதாகும். இறைவனே தனது தூதர்களைத் தேர்ந்தெடுக்கிறான். ஆகவே குருட்டுத்தன்மையானது அவர்களது பண்பின் ஒரு பகுதியாக இருப்பதில்லை, ஏனென்றால் ஷைத்தான்களுக்கு அவர்கள் இரையாகி விடாதவாறு அல்லாஹ் அவர்களை பாதுகாக்கின்றான். ஆகவே, "பார்வைகொண்டவர்களின்" கருத்து மற்றும் பகுப்பாய்வு என்பது "குருடர்களில்" இருந்தும் மிகவும் வேறுபட்டதாகும். இறைநேசர்கள், மனிதர்களாகவே இருந்தபோதிலும் கூட சாமானியர்களிடம் இல்லாத ஓர் உயர்ந்த ஒளியை தம்முடன் சுமந்து செல்கிறார்கள். அவர்கள் மனிதர்களாகவே இருந்தபோதிலும் கூட , அவர்கள் மற்ற மனிதர்களைப் போல் அல்லாமல், அவர்கள் பெரும் மதிப்பிற்க்குத் தகுதியானவர்கள். ஆயினும், அவர்கள் வணக்கத்திற்குரியவர்கள் அல்ல, ஏனென்றால் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் ஆவான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிராகரிப்பாளர்களுக்கு முன்னால் ஓதிய இறை வெளிப்பாடுகளின் மீது அவர்கள் நம்பிக்கை கொள்ளாமல், நபி(ஸல்) அவர்கள் அதன்மூலம் அவ்வாறான வார்த்தைகளை சேகரித்து, அவற்றை ஒவ்வொரு வார்த்தையாக உருவாக்கி இறை வெளிப்பாடுகளாக வெளியிடுகிறார் என்று கூறி, அவர்கள் நபி(ஸல்) அவர்களை தொந்தரவு செய்து வந்தார்கள், திருக்குர்ஆன் போன்ற வார்த்தைகளின் தொகுப்பை எவராலும் ஒருபோதும் உருவாக்கிவிடமுடியாது; மனிதனின் வேறு எந்த ஒரு தொகுப்பும் குர்ஆனின் அழகு, ஆற்றல் மற்றும் ஆன்மீக நுண்ணறிவுக்கு சமமாக இருக்கவே முடியாது. இறைத் தூண்டுதல் இல்லாமல், ஒரு நபர், தனது சொந்த இலக்கிய மற்றும் தத்துவப் பயிற்சியைக் கொண்டு, திருக் குர்ஆன் போன்ற ஒரு வேதத்தை உருவாக்கிட முடியும் என்று கருதுவது முற்றிலும் சாத்தியமற்றதாகும்.

ஆகவே அல்லாஹ்விடமிருந்து ஓர் இமாம் வரும்போது, அவர் ஒரு ஒளியுடன் வருகை தருகின்றார். அதனைக் கொண்டு உண்மையான நம்பிக்கையாளர்கள் தங்களது அறிவைக் கொண்டு கருத்தூன்றி சிந்திக்க வேண்டும். இன்னும் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். அதன் காரணமாக அல்லாஹ் அவர்களுக்கு அவனுடைய தூதரின் உண்மைத்தன்மையை அடையாளம் கண்டு கொள்ளும் ஆன்மீக நுண்ணறிவை வழங்குவான். இந்த தூதர் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் ஆவார். (இந்த) பூமியில் அவனுடைய கலீஃபா ஆவார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கலீஃபா(தலைவர்) அல்ல. மாறாக, அல்லாஹ்வால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கலீஃபாவும், அல்லாஹ் தனது ரூஹுல் குத்தூஸ் ஐக் கொண்டு அனுப்பப்பட்டவரும் ஆவார்.

ஆகவே, ஒரு நபர், குறிப்பாக உண்மையை நேர்மையுடன் தேடக் கூடிய மற்றும், ஓர் உண்மையான நம்பிக்கை கொண்டவராக ஆக வேண்டும் என்று விரும்பக் கூடிய(ஒரு)வர், தூதரை அடையாளம் கண்டு கொள்வதற்காகவும், அல்லாஹ்வின் வழிகாட்டுதலையும் அருளையும் பெறவேண்டும் என்பதற்காகவும் தனது ஆன்மீக நுண்ணறிவை (ஆழ்ந்த அறிவுத் திறனை) பயன்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் அத்தாட்சிகள் மற்றும் அவனது இறைவெளிப்பாடுகள் ஆகியவற்றின் முன் குருடராகிவிடாதவாறு அவர் (தன்னை) பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும், நம்பிக்கை கொண்டதற்கு பிறகும் கூட அல்லாஹ்விடமிருந்து வரக் கூடிய உண்மையின் மீது ஷைத்தானிடமிருந்து வரக் கூடிய சந்தேகங்கள் அவரது யக்கீன் -நிச்சய உறுதியில் / உறுதிப்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

நாம் பௌதீக பார்வையை இழந்த பார்வையற்ற நபர் ஒருவர் - அறுவைசிகிச்சை செய்துக் கொண்டு பார்க்கும் திறனை மீண்டும் அவர் பெற்றுக் கொள்கிறார் என்பதை பார்க்கும் போது, அவ்விஷயமானது ஓர் அறிவுபூர்வமாக சிந்தனையை தன்னகத்தேக் கொண்டுள்ளது, அதாவது ஒரு நபர் தனது (ஆரம்ப) கால நம்பிக்கை குறைபாட்டிற்கு பிறகு, எந்த சமயத்திலும் நம்பிக்கை மற்றும் ஆன்மீக தெளிவைப் பெற முடியும். அது போன்றே, வேறொருவர் நம்பிக்கை கொண்ட பிறகும் (கூட), ஈமானை இழந்து குருடராகி நேர் வழியை இழக்க நேரிடும் என்பதும் உண்மையாகும்.

ஆகவே நேர்மையான நம்பிக்கையாளர்கள் ஷைத்தானுக்கு பலியாகி விடாமல் (தங்களை) பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் உண்மையின் மீது உங்களை நிலைநிறுத்திக் கொண்டு, உங்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அனுப்பியுள்ள இறைச் செய்திகள் மற்றும் தூதருடன் இணைந்திருக்க வேண்டும்.

ஒரு நம்பிக்கையாளர், ஒரு நம்பிக்கை கொண்டவருக்கு அவசியமான அனைத்து சீர்திருத்தங்களுடனும் சோதனைகளின் நெருப்பைக் கடந்து செல்லாத வரை அவர் ஒரு உண்மையான நம்பிக்கையாளர் ஆகமுடியாது. அல்லாஹ் அவரை சோதிப்பான், மேலும் உண்மையில் நேர்மையாளர்கள் (ஆக இருப்பவர்கள்), அவர்கள் ஒருபோதும் உண்மையைக் கைவிட்டுவிட மாட்டார்கள், எப்போதும் நேரான பாதையின் மீதே இருப்பார்கள். அல்லாஹ் நம்பிக்கையாளர்களை எல்லா வகையிலும் சோதிக்கிறான். ஆரம்பத்தில் தெளிவினை [ஆன்மீக நுண்ணறிவினை] கண்டவர்களும் இருக்கிறார்கள், ஆயினும் அவர்கள், பிறகு குருடர்களாக மாறி விடுகிறார்கள், அதே சமயம், குருடர்களும் இருக்கிறார்கள், ஆயினும் அவர்கள், பிறகு தெளிவினைப் பெற்று, அல்லாஹ்வின் பாதையை கைவிட்டு விடுவதில்லை. உண்மையின் பாதையில் அவர்கள் பல சிரமங்களை சந்தித்த போதிலும், அல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக அல்லாஹ் அவர்களை அவர்களின் சோதனைகளில் வெற்றி பெறச்செய்கிறான். அல்லாஹ் அவர்களிடம் அனுப்பிய இமாமை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டு, அவரைப் பின்பற்றியவர்களாய் இம்மையிலும் மறுமையிலும் இரட்சிப்பை அடைகிறார்கள்.

ஆகவே, இன்று அல்லாஹ் தனது தூதராகிய கலீஃபத்துல்லாஹ்வை உங்கள் மத்தியில் அனுப்பியிருக்கும் போது, ஷைத்தான் உங்களைக் குருடாக்கி உங்களை இந்தப் பாதையில் இருந்தும் விலகிவிடாமல் இருக்கச் செய்வது உங்கள் ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். அல்லாஹ்விடம் உண்மையுடன் இருப்பவருக்கு அல்லாஹ் நிச்சயமாக வழிகாட்டி, தீய துன்பங்களிலிருந்தும் அவரைப் பாதுகாத்து, அவனிடமிருந்து வருகின்ற உள்ளார்ந்த அமைதியை அதாவது ஸகீனாவை வழங்குவான்,

இது அல்லாஹ் மீதான அவரது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. இன்னும், எந்த சந்தேகமும் இல்லாமல் அவருக்கு உறுதியையும் வழங்குகிறது. ஏனென்றால், அல்லாஹ் அவருக்காக ஒதுக்கியிருப்பது என்பதானது உலகம் கொண்டிருக்கும் அனைத்துப் பொக்கிஷங்களையும் விட சிறந்ததாகும். இன்ஷா அல்லாஹ்.

ஆகவே, என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் - அதைப் போன்று, மற்ற முஸ்லிம்களும், உண்மையைத் தேடக்கூடிய மற்றவர்களும் - அல்லாஹ் தனது வழிகாட்டிகளின் வருகையைப் பற்றிய நற்செய்தியை- திருக்குர்ஆனில் அவர்களுக்கு வழங்கியுள்ள உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். அல்லாஹ்வே அந்த வழிகாட்டிகளை, அந்த இமாம்களை அனுப்புகிறான், ஏனெனில் அவர்களே இஸ்லாத்தின் மகிமையை அதன் சிகரத்திற்கு உயர்த்தக் கூடிய அத்தகைய சீர்திருத்தவாதிகளாக இருக்கின்றார்கள். இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

Copyright @ 2013 Sahih Al Islam .