Skip to main content

Posts

Showing posts from September 17, 2023

அல் ஹுஜூராத் (புறங்கூறுதல்) எச்சரிக்கை!

“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள்‌ அதிகமான யூகங்களிலிருந்து விலகிக்‌ கொள்ளுங்கள்‌. ஏனெனில்‌ சில யூகங்கள்‌ பாவமாகும்‌. பிறர் குற்றங்களைத்‌ தேடியலையாதீரகள்‌. உங்களுள்‌ ஒருவருக்கொருவர்‌ புறங்கூறாதீர்கள்‌. உங்களுள்‌ எவராது மரணமடைந்து விட்ட தமது சகோதரரின்‌ மாமிசத்தை உண்ண விரும்புவாரா? (உங்களைக்‌ குறித்து இவ்வாறு கூறப்பட்டால்‌) நீங்கள்‌ நிச்சயமா அதனை வெறுப்பீர்கள்‌ மேலும்‌ அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்‌. அல்லாஹ்‌ அதிகமாகக்‌ கழிவிரக்கத்தை ஏற்றுக்கொள்பவனும்‌, மேன்மேலும்‌ கருணை காட்டுபவனுமாவான்‌. (49:13) . மேலே கூறப்பட்ட திருக்குரான் வசனத்தை மேற்கோள்காட்டிய வர்களாக. ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்  இந்த அத்தியாயத்தின் மூலமாக அல்லாஹ்‌ நம்பிக்கையாளர்களின்‌ சமூகத்தை அழைத்து, கிப்பத்துக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி கவனமூட்டுகிறான்‌. நீங்கள் அறிந்தது போலவே, கிப்பத்து என்பதன்‌ அர்த்தம்‌ புறங்கூறுதல்‌, ஒரு நபருக்கு எதிராகப் பேசுதல்‌, அவரது முதுகுக்குப்‌ பின்னால்‌ அதாவது அவர்‌ இல்லாதபோது அவரை மோசமாக சித்தரித்தல்‌ போன்றவையாகும்‌. இத்தகைய நடைமுறையை அல்லாஹ்‌ கடு...

இறை வழியில் பொருள் தியாகம் பற்றி இஸ்லாமிய மஸீஹ்மார்களின் கூற்றுகள்

வல்ல இறைவனின் மேலான அருளை பெற்ற நன்மக்களாக இம்மையிலும் மறுமையிலும் திகழ  ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றுகள்:   "அல்லாஹ்வின் வழியில் உங்களது எல்லா ஆற்றல்களையும் சக்திகளையும் வாழ்நாள் இருக்கின்ற வரை அர்ப்பணித்து விடுங்கள். அதன் மூலம் அந்த தூய வாழ்வின் வாரிசாகி விட வேண்டும்." (அல் ஹகம் தொகுதி 4 எண் 29; 16 ஆகஸ்ட் 1900 பக்கம் 3; மல்ஃபூஸாத் தொகுதி 2 பக்கம் 90) உண்மையிலேயே உணவளிப்பவன் இறைவனாக இருக்கின்றான். எந்த நபர் அவன் மீது நம்பிக்கை வைக்கின்றாரோ அவர் ஒருபோதும் ரிஸ்கிலிருந்து விலக்கி வைக்கப்பட மாட்டார். அவன் எல்லா வகையிலும் ஒவ்வோர் இடத்திலிருந்தும் தன் மீது நம்பிக்கை வைக்கின்ற நபருக்கு ரிஸ்கை எட்ட வைக்கின்றான். என் மீது நம்பிகை வைப்பதற்கு நான் வானத்திலிருந்து பொழிவேன். அவர்களது பாதங்களிலிருந்து (தேவைப்படுபவற்றை) வெளியில் வரச் செய்வேன் என்று இறைவன் கூறுகின்றான். எனவே, ஒவ்வொரு நபரும் இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்." (மல்ஃபூஸாத் தொகுதி 9 பக்கம் 390) எந்த நபர் முக்கியமான பணிகளுக்காக பொருளைச் செலவு செய்கின்றாரோ அவர் பொருளைச் செலவு செய்வதால் அவரது பொர...

உண்மையான நம்பிக்கையாளர்கள்

ஹஸ்ரத் கலிஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள். "உண்மையான நம்பிக்கையாளர்கள், தாங்கள் ஒரு நாள் தங்கள் எஜமானனான அல்லாஹ்விடம் திரும்ப வேண்டி உள்ளது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வார்கள்; மேலும் அவர்களுக்காக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரம்புகளை மீறிச் செல்லாமல் தங்களின் சக்திக்கும் திறனுக்கும் உட்பட்ட அனைத்தையும் அவர்கள் செய்கின்றனர்; அதனால் அவர்கள் பூமியில் தங்களின் மீதான அனைத்து சோதனைகள் மற்றும் தேர்வுகள் அதாவது பரீட்சைகள் ஆகியவற்றில் பறக்கும் வர்ணங்களுடன் தேர்ச்சி அடைகின்றனர். மேலும், அவர்கள் அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளையும் அவன் விதித்துள்ள வரம்புகளுக்கு உட்பட்டு அவர்கள் நடைமுறைப்படுத்தப் பார்க்கின்றனர். மேலும் அவர்களின் நம்பிக்கையானது முஸ்லிம்கள் என்ற நிலையில், அல்லாஹ் அவர்களுக்கு புனிதமாக்கியுள்ள அனைத்திலும் தங்களின் மரணத்தை சந்திக்கின்ற வரை உறுதியாக நிலைத்திருக்கும் நம்பிக்கையுடன் வாழ்ந்து, ஓர் ஆன்மீக வாழ்வையும் அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள். அது அவர்களுக்கு அல்லாஹ்வின் திருப்தியில் நிலை பெற்ற - நிரந்தர வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அவர்கள் நம...

இறை புறத்தின் உண்மையான தலைவர் (கலீபா)யார்?

“அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும், அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப் படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்க மாட்டார்கள். இதன் பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்களாவார்கள்.”(24: 56) மேலே கண்ட இறை வசனத்தை ஓதி கட்டியவர்களாக.. ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹமது அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்... "அல்லாஹ் நம்மை நல்லவர்களென தீர்ப்பளிப்பதற்காக அவனிடம் நாம் துஆ செய்ய வேண்டும். அவனுடைய அருளும் கருணையும் இல்லாமல் நாம் ஒன்றுமற்றவர்களாவோம். துரதிர்ஷ்டவசமாக மற்றவர்களின் நம்பிக்கையை தீர்மானிக்கும் உரிமம் தங்களுக்கு உள்ளதாக அறிவிக்கும் சிலர் உள்ளனர். எவ்வாறெனில் எல்லா தூதர்களையும், சீர்திருத்தவாதிகளையும் இன்னும் வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களையும் ஏற்...

இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் மற்றும் உண்மையான வழிகாட்டல் பகுதி -2

(02 ஜூன் 2023 ~12 துல்கஹ்தா - ஹிஜிரி 1444 ) உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ் (அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றைப் ஓதிய பிறகு, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம் மற்றும் உண்மையான வழிகாட்டல்- பகுதி -2 என்ற தலைப்பில், இறை வெளிப்பாட்டின் மூலம் பெறப்பட்ட தனது குத்பாவின் பக்கம் கவனம் செலுத்தினார்கள். يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ ۖ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا நாம் எல்லா மக்களையும் அவர்களது (அவரவர்களுடைய) இமாம்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அவர்கள் தம் ஏடுகளை (மனமகிழ்ச்சியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கள் அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (17:72) அல்ஹம்துலில்லாஹ் ஸும்ம அல்ஹம்துலில்லாஹ், நான் உங்களுக்கு முன் தற்போது ஓதியக் காட்டிய வசனத்தின் விளக்கம் குறித்...