“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அதிகமான யூகங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் சில யூகங்கள் பாவமாகும். பிறர் குற்றங்களைத் தேடியலையாதீரகள். உங்களுள் ஒருவருக்கொருவர் புறங்கூறாதீர்கள். உங்களுள் எவராது மரணமடைந்து விட்ட தமது சகோதரரின் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? (உங்களைக் குறித்து இவ்வாறு கூறப்பட்டால்) நீங்கள் நிச்சயமா அதனை வெறுப்பீர்கள் மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் அதிகமாகக் கழிவிரக்கத்தை ஏற்றுக்கொள்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். (49:13) . மேலே கூறப்பட்ட திருக்குரான் வசனத்தை மேற்கோள்காட்டிய வர்களாக. ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் இந்த அத்தியாயத்தின் மூலமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் சமூகத்தை அழைத்து, கிப்பத்துக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்கும்படி கவனமூட்டுகிறான். நீங்கள் அறிந்தது போலவே, கிப்பத்து என்பதன் அர்த்தம் புறங்கூறுதல், ஒரு நபருக்கு எதிராகப் பேசுதல், அவரது முதுகுக்குப் பின்னால் அதாவது அவர் இல்லாதபோது அவரை மோசமாக சித்தரித்தல் போன்றவையாகும். இத்தகைய நடைமுறையை அல்லாஹ் கடு...