Skip to main content

Posts

Showing posts from July 3, 2022

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு இறங்கிய இறைவஹீ

அல்லாஹ் (ஸுப்ஹானஹுதாலா) நமக்கு கூறுகின்றான் : ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாமை சார்ந்த என் அடியார்களே! உங்கள் இறைவனிடமிருந்து வரும் உண்மை இதுவாகும். இந்த உண்மையை நிராகரித்தவர்களை நினைத்து அச்சமடையவேண்டாம். அவர்கள் மறுப்பாளர்கள். என் விருப்பத்தைப் பெற நீங்கள் எனக்கு மட்டுமே முற்றிலும் அஞ்சிக் கொள்ளுங்கள். என்னுடைய மாபெரும் அருளால் உங்களுக்கு நேர்வழியைக்காட்ட என்னுடையத் தூதர் உங்களிடையே உள்ளார். இன்னும் அவர் உங்களிலிருந்தே வந்துள்ளார். மேலும் உங்களிடையே உள்ள அவர் எமது செய்தியையும், எமது வசனங்களையும், எமது வஹீயையும் உங்களுக்கு அறிவித்து எமது மறைவான ஞானத்தை உங்களுக்குக் கற்றுக்கொடுத்து உங்களைத் தூய்மைப் படுத்துகின்றார். இதற்கு முன்னர் நீங்கள் அறியாமலும் பகிரங்க வழிகேட்டிலும் இருந்தீர்கள். மேலும் நான் உங்கள் மேல் பொழிந்த அருளை எண்ணிப்பாருங்கள், எனவே நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள் ஒருபோதும் நன்றிக் கெட்டவர்களாகிவிடாதீர்கள். இன்னும் எனது உதவிக்காக பொறுமையுடனும் துஆ உடனும் இரவும் பகலுமாக துதித்துக் கொண்டிருங்கள். இதில் உறுதியுடன் இருங்கள். நிச்சயமாக நான் உங்களை அச்சம், பசி, ஏழ்மை, உங்கள் குட...

30 ஜூன் 2021 புதன்கிழமை அன்று காலை 10.50 மணிக்கு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்களால் பெறப்பட்ட இறைவெளிப்பாடுகள்.

  بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ   நான், கலீஃபத்துல்லாஹ், ரசூலுல்லாஹ் என்ற முறையில், தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு எதிரானவன் அல்ல. அது நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்துகின்ற பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடுவது மிகவும் முக்கியமானது என்பதே எனது கருத்தாகும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை செயல் படுத்துவதற்கு நான் எதிரானவன் அல்ல. அதற்கு மாறாக, இந்தக் காலத்தில் அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியான் என்ற முறையில் உலகம் முழுவதும் அவனது ஏகத்துவத்தை பரப்பி மக்களை முழுமையான இருளிலிருந்தும் அகற்றி இறை ஒளியின் பக்கம் அழைப்பதற்காக என்னை எழுப்பிய எனது படைப்பாளனிடத்தில் நான் மிகவும் திருப்திக் கொண்டவனாகவும், அங்கீகரித்தவனாகவும் நன்றி யுணர்வுக் கொண்டவனாகவும் இருக்கிறேன். இருளில் இருந்து வெளியே வர மக்களுக்கு உதவுவது என்பது எல்லா வகையிலும் அதாவது சிலை வழிப்பாட்டின் அனைத்து வடிவங்களான, போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல், பொறாமை, வெறுப்பு, தகராறு, ஊழல், ஏழை மக்களின் இரத்தத்தைக் கொண்டு தன்னை மேம்டுத்திக்‌ கொள்ளும் பொருட்டு அதிகாரத்தின் மீதான தாகம், ஆணவம், கருமித்தனம், கொடுங்கோன்மை, சூதாட்டம், குற...