Skip to main content

Posts

Showing posts from June 26, 2022

ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய விரோதப்போக்கு(இஸ்லாமோஃபோபியா)

இந்தியாவிலும், மற்ற பல்வேறு நாடுகளிலும் மிகக் குறிப்பாகவும், இரக்கமின்றியும் பிரான்ஸ் நாட்டிலும் பள்ளிக்கூடங்களில் உள்ள சிறுமிகளும், பெண்களும் ஹிஜாபைக் கடைப்பிடிப்பது குறித்துக் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை யானவர்கள், ஹிஜாப் (முக்காடு) அணிவது பொதுப் பள்ளிக் கூடங்களின் கொள்கைக்கு முரணானதாக, அதாவது அரசு நிதியுதவி-(பெறும்)பள்ளிகள் மதம் சம்பந்தமான விஷயத்தில் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது. கலீஃபத்துல்லாஹ் என்ற நிலையில், ஒரு முஸ்லீம் மாணவி தலையின் மேல் அணியும் "முக்காடு" போன்ற ஒரு சிறிய விஷயத்திற்காக ஏன் இவ்வளவு பரபரப்பு என்பது எனக்குப் புரியவில்லை. முஸ்லீம்களும் [அந்தந்த நாடுகளின்] மாநில நிதிகளுக்கு விகிதாச்சார அளவில் வரிச் செலுத்தி உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! என் கருத்துப்படி, பள்ளி வழக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது ஒழுக்கத்திற்கு அச்சுறுத்தலாகவோ இல்லாதவரை பள்ளிகள் மாணவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை மதிக்க வேண்டும். இருப்பினும், நாம் பிரான்ஸை உதாரணமாகப் பார்த்தால், அதிகரித்து வரும் வேலையின்மையை அவர்கள் வெளிப்படை...

நபி மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வின் வாக்குறுதி

இந்தத் தலைப்பு மனிதகுலம் அனைத்திற்கும் மற்றும்  உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கும் பொதுவாகவும், அனைத்து அஹ்மதிகளுக்கும் குறிப்பாகவும் உள்ள மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். நாம் சூரா அன்-நூர்(ஒளி)யை சரியாகப் படித்தால், அது உண்மையில் எல்லா மக்களுக்கும், குறிப்பாக அனைத்து முஸ்லிம்களுக்கும், அனைத்து அஹ்மதிகளுக்கும் ஒளியைத் தருகின்ற ஒரு சூரா-அத்தியாயம் ஆகும், ஏனெனில் அல்லாஹ்(சுப்ஹா) கூறுகின்றான்: «வஃதல்லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வஅமிலுஸ்-ஸாலிஹாத்தி லயஸ்தஃக்லிஃபன்னஹும் ஃபில் அர்ளி கமஸ்தஃக்லஃபல்லதீன மின் கப்லிஹிம். » "அல்லாஹ் உங்களுள் (அவனது ஏகத்துவத்திலும், அவனது தூதுச் செய்தியிலும்) நம்பிக்கைக் கொண்டு, நற்செயலாற்றுபவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரைக் கலீஃபாக்களாக்கியது போன்று இப்பூமியில் நிச்சயமாக கலீஃபாக்களாக்கி வைப்பதாகவும்... வாக்குறுதி அளித்துள்ளான்...” சூரா அல்-நூர் வசனம் 24 : 56, ஆகவே, (எந்த) ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி, இது ஒரு அசாதாரண ஒளியை (வெளிச்சத்தை) அளிக்கின்றதொரு அத்தியாயமாகும், எனவே, நீங்கள் அதன் வசனங்களைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது நீங்கள் ...