Wednesday, June 29, 2022

ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய விரோதப்போக்கு(இஸ்லாமோஃபோபியா)

இந்தியாவிலும், மற்ற பல்வேறு நாடுகளிலும் மிகக் குறிப்பாகவும், இரக்கமின்றியும் பிரான்ஸ் நாட்டிலும் பள்ளிக்கூடங்களில் உள்ள சிறுமிகளும், பெண்களும் ஹிஜாபைக் கடைப்பிடிப்பது குறித்துக் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை யானவர்கள், ஹிஜாப் (முக்காடு) அணிவது பொதுப் பள்ளிக் கூடங்களின் கொள்கைக்கு முரணானதாக, அதாவது அரசு நிதியுதவி-(பெறும்)பள்ளிகள் மதம் சம்பந்தமான விஷயத்தில் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது.

கலீஃபத்துல்லாஹ் என்ற நிலையில், ஒரு முஸ்லீம் மாணவி தலையின் மேல் அணியும் "முக்காடு" போன்ற ஒரு சிறிய விஷயத்திற்காக ஏன் இவ்வளவு பரபரப்பு என்பது எனக்குப் புரியவில்லை.

முஸ்லீம்களும் [அந்தந்த நாடுகளின்] மாநில நிதிகளுக்கு விகிதாச்சார அளவில் வரிச் செலுத்தி உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! என் கருத்துப்படி, பள்ளி வழக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது ஒழுக்கத்திற்கு அச்சுறுத்தலாகவோ இல்லாதவரை பள்ளிகள் மாணவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை மதிக்க வேண்டும். இருப்பினும், நாம் பிரான்ஸை உதாரணமாகப் பார்த்தால், அதிகரித்து வரும் வேலையின்மையை அவர்கள் வெளிப்படையாக எதிர்கொண்டனர், இன்னும் அரபுத் தொழிலாளர்களின் குடியேற்றம் பற்றி அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தனர். மேலும் அவர்களின் நகரங்களிலும், பள்ளிகளிலும் ஹிஜாபின் காட்சியானது அவர்களின் பாதுகாப்பின்மை உணர்வை அதிகப்படுத்தியது.

அந்த பாதுகாப்பின்மையானது இஸ்லாத்தின் மீது ஒரு கடினமான அச்சமாக உருமாறியது, இதை நாம் இஸ்லாமிய விரோதப் போக்கு(இஸ்லாமோஃபோபியா) என்று அழைக்கிறோம் - (இது) உலக மக்கள் தொகையின் அங்கமாக இருக்கின்ற முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரின் இதயத்திலும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்குவதற்கு இஸ்லாத்தின் எதிரிகளால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுக் கையாளப்படும் சூழ்ச்சி முறையாகும். இஸ்லாம் குறித்த இந்த அச்சம் மற்றும் பாதுகாப்பற்ற நிலை‌யானது, அதாவது இஸ்லாமோஃபோபியா என்பது அவர்களின் (அதாவது எதிரிகளின்) பணியை நிறைவேற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டுவருகின்றது. பல கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் தலையில் முக்காடு அணிந்துள்ளனர், என்ற உண்மையை இவர்கள் அலட்சியம் செய்கிறார்கள், இது ஒரு சிறிய கூற்று வேறொன்றும் இல்லை, ஆனாலும் அவர்கள் தலையில் முக்காடு அணிகிறார்கள், (அதற்காக) அவர்களிடம் எதுவும் பேசப்படுவதோ அல்லது அவர்கள் அச்சப்படுவதோ இல்லை என்ற நிலையில் இருக்கிறோம்.

புடவை அணிந்த ஒரு பெண், கண்ணியமாகவும், கலாச்சாரமாகவும் இருக்க முயற்சி செய்து தனதுச் சேலையைக் கொண்டு அவளதுத் தலையை மூடிக்கொண்டால், அவர்களைப் பற்றி எதுவும் கூறப்படுவதில்லை. ஆனால் முஸ்லீம் சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்கள் உடலை அந்நியர்களின் பார்வைகளிலிருந்தும் பாதுகாக்க முயற்சிக்கும் போது, சுதந்திரமற்றவர்கள், கைதிகள், அறிவற்றவர்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மை கொண்ட பாலினங்கள் என்று அவர்கள் முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.

பிரான்சிலும் அதேப் போன்று சிறிது சிறிதாக மற்ற நாடுகளிலும் (ஹிஜாப்) தடை செய்யப்பட்டதில் இருந்து. அரபு சமூகங்களில் மேற்கத்திய மதச்சார்பின்மை வேரூன்றுவதால் அது (ஹிஜாப்) மறைந்துவிடும் என்பது பல அரேபியர்கள் மற்றும் அரபி அல்லாதவர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளாக இருந்தபோதிலும், அரபு நாடுகளில் உள்ள அதிகமதிகமான இளம் வயதினர் மற்றும் உள்ளூர் முஸ்லிம்களும் ஹிஜாப் அணிகிறார்கள்.

அதிகமதிகமான முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்ற விரும்பும் இஸ்லாமிய நடைமுறைகளின் அத்தகைய ஒரு மறுமலர்ச்சியானது - முஸ்லிம்களால் தங்களின் பெருமை மற்றும் அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவேப் பெரும்பாலும் கருதப்படுகிறது. இவை இரண்டும் குடியேற்றக் கோட்பாடு ஆதிக்கத்தால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில், இதை பழமைவாதப் பாரம்பரியமாக அல்லது மேற்கத்திய எதிர்ப்பு உணர்வின் விளைவாகக் கண்டுகொண்டுப் புரிந்துக் கொள்ளப்பட்டது, மெய்ஜி சகாப்தத்தின் போது மேற்கத்திய கலாச்சாரத்துடனான முதல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஜப்பானியர்கள் தாங்களே அனுபவித்த ஒன்றாகும்; அவர்களும் பாரம்பரியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மேற்கத்திய உடைக்கு எதிராக எதிர்வினையாற்றினர் (செயல்பட்டனர்). தங்கள் வழிகளில் பழமைவாதமாக இருக்க வேண்டும் என்றும் புதியது மற்றும் அறிமுகமில்லாத எதையும் அது நல்லதா அல்லது கெட்டதா என்று பார்க்க கூட நேரம் ஒதுக்காமல் அதற்கு எதிராக செயல்படும் மனப்பான்மை மக்களில் உள்ளது. நல்லதாக இருக்கும் மாற்றங்கள் இருப்பதைப் போன்றே தீயதாக இருக்கக் கூடிய மாற்றங்களும் உள்ளன.

மேற்கத்திய உணர்வுகளைப் பொறுத்தவரை, முஸ்லீம் பெண்கள் பாரம்பரியத்திற்கு அந்தளவுக்கு அடிமையாக இருக்கின்ற காரணத்தால் (தான்)அவர்கள் ஹிஜாப் அணிகிறார்கள் என்ற உணர்வுகள் முஸ்லிம் அல்லாதவர்களிடையே இன்னும் நீடிக்கின்றன, அதனால் அது அடக்குமுறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பெண்களின் விடுதலை மற்றும் சுதந்திரம் என்பது, அவர்கள் முதலில் ஹிஜாபை அகற்றாத வரை சாத்தியமற்றது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கானக் காரணம் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இஸ்லாத்தைப் பற்றிய அறிவு சிறிதளவு அல்லது கொஞ்சமும் இல்லாத முஸ்லிம் பெயர் தாங்கிகளால் இத்தகைய ஒரு ஞானமின்மை பகிரப்படுகிறது. அவர்கள் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.

மதச்சார்பின்மைக்கு மிகவும் பழக்கப்பட்டவர்களாய் இருந்துக் கொண்டு, மதம் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கான நடைமுறையை (அங்கும் இங்குமாக) [குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கிகள் உட்பட தங்களின் அசல் போதனைகளை கைவிட்டுவிட்ட இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து மதங்களில் இருந்தும்] எடுத்துக் கலந்து கொண்டவர்களால், இஸ்லாம் உலகளாவியதும், நிலையானதுமாகும் என்பதை அவர்களால் [நவீனகால முஸ்லீம்களில் பெயருக்கு மட்டும் முஸ்லிம்களாக இருப்பவர்களால்] புரிந்துக் கொள்ள முடியவில்லை. இவை தவிர, அரேபியர்கள் அல்லாத உலகெங்கிலும் உள்ள பெண்கள், இஸ்லாத்தைத் தழுவி 'பாரம்பரியம்' என்று தவறாக வழிநடத்தப்பட்ட உணர்வினால் அல்லாமல் மார்க்கத் தேவைக்காக ஹிஜாப் அணிகிறார்கள். பெண்களுக்கான ஹிஜாப் என்பது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதன் அடையாளமும் இறைநம்பிக்கையின் வெளிப்பாடும் ஆகும்.

ஹிஜாப் மற்றவர்களுக்கும் அந்தந்த பெண்களுக்கும் தாங்கள் சொந்த உடல்களில் பாதுகாப்பாக இருப்பதைக் [நன்மையான மற்றும் பாதுகாப்பான உணர்தலை] காட்டுகிறது மேலும் அது [அதாவது. ஹிஜாப் மற்றும் முழுமையான இஸ்லாமிய ஃபர்தா என்பது] உலகத்தில் உள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் எதிராக ஒரு பெண் மற்றும் சிறுமி தங்களைத் தாங்களே இறை பாதுகாப்பின் கீழ் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதற்கான ஒரு உறுதிமொழியாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று நாம் என்ன பார்க்கிறோம்? தங்கள் அழகை வெளிப்படுத்துகின்ற வெட்கமில்லாத பெண்களைப் போல் அந்தப் பெண்களும் சிறுமிகளும் அவர்களின் ஹிஜாபைக் கழற்றி தங்கள் அழகை வெளிப்படுத்திக்காட்டிடக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த ஹிஜாப் அணிவது முற்றிலும் தன்னார்வமானது என்ற உண்மையை முஸ்லிமல்லாதவர்கள் அங்கீகரிக்கவில்லை. மேலும் இது ஒரு பெண் இறைக் கட்டளைகளுக்கு அடிபணிதலுக்கான ஓர் அடையாளமாகும். ஏனெனில் முஸ்லீமாக இருப்பதன் பொருள் என்னவென்றால் நீங்கள் உங்களை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முழுமையாக சமர்ப்பித்தல் என்பதாகும். ஒரு பெண்ணை ஹிஜாப் அணிய எவராலும் கட்டாயப்படுத்த முடியாது. ஒரு பெண் உண்மையான நம்பிக்கையாளராக இருந்தால் இந்த நடைமுறையை செயல்படுத்துவது என்பது பெண் அவளிடமிருந்து (தானாகவே) வர வேண்டும். அவள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றவில்லை என்றால்,அவள் அல்லாஹ்வின் முன் அதற்காகப் பதிலளிக்க வேண்டும்.

ஒரு ஹதீஸின் கூற்றுப்படி: "எந்த ஒரு பெண் தனது உடையை தன்னுடைய சொந்த வீட்டில் அல்லாமல் வேறொரு வீட்டில் கழற்றுவாளோ, அல்லாஹ்வும் தன்னுடைய பாதுகாப்பின் திரையை அவளிடமிருந்து விலக்கிக் கொள்கிறான்." (அஹ்மத், அல்-ஹகீம், தபரானி, பைஹகி).

அல்லாஹ் பெண்களை ஒழுங்காக, கண்ணியமான முறையில் உடை அணியுமாறும் மேலும் அவளது அழகை [அதாவது,அவளுடைய உடல் அங்கங்களை] வெளிப்படுத்தக் கூடாது என்றும் கட்டளையிடுகிறான். இதனால், இஸ்லாமிய ஃபர்தாவின் பாதுகாப்பில், அவர்கள் தங்களது தீனை நடைமுறைபடுத்தவும் மேலும் கண்ணியமான முறையில் சமுதாயத்தில் வேலை செய்ய [இயல் வதற்கும்] [தங்களின் கணவர்கள் மற்றும் வீடு/குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக அவர்கள் எப்போதாவது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்] அவர்கள் சுதந்திரமாகவும் இருக்கிறார்கள். இவ்வாறு, இந்த கண்ணியமான உடை மற்றும் அவர்களது நன்னடத்தையின் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் அழகை வெளி ப்படுத்திக்காட்டுகிறார்கள்.

பொதுவாக ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய ஃபர்தா என்பது, அல்லாஹ்வின் இருப்பின் யதார்த்தத்திற்கு சாட்சியாகவும் அதனை அங்கீகரிக்கவும் மக்களுக்கு உதவுகிறது, மேலும் இந்த நடைமுறையை விதித்தவன் அல்லாஹ்வே. இதன் பின் விளைவுகளுக்கு அஞ்சாமல் அந்த இறை கட்டளைகளை பின்பற்றும் அனைத்து முஸ்லீம் பெண்களையும், சிறுமிகளையும் அல்லாஹ் அவனே பாதுகாப்பான். ஏனெனில் முதன்மையாக அல்லாஹ்வின் திருப்திக்காகவும் தங்கள் சுய மானத்தை [ஹயா] காப்பாற்றிக் கொள்ளவும் அவர்கள் இதனைச் செய்கிறார்கள்.

நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு முறை தன் மகள் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களிடம் "பெண்களுக்கு சிறந்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அன்னார் (ரலி) அவர்கள் "ஆண்களைப் பார்க்கக் கூடாது, (ஆண்கள்) அவர்களால் பார்க்கப்படவும் கூடாது" என்று பதிலளித்தார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்தப் பதிலை கேட்டு மகிழ்ச்சி அடைந்து "நீ உண்மையிலேயே என் மகள் ஆவாய்" எனக் கூறினார்கள்.

ஒரு பெண் வீட்டிலேயே இருப்பதும், அந்நிய ஆண்களுடன் தொடர்புக் கொள்வதை முடிந்தவரைத் தவிர்ப்பதும் அவளுக்கு சிறந்தது என்பதை இது காட்டுகிறது. ஒரு முஸ்லீம் பெண் தன் கணவனின் தனிப்பட்ட உடைமை என்பதால் தன்னை மறைத்துக் கொள்கிறாள் என்று நினைப்பது சிந்தனையில் ஏற்பட்டத் தவறாகும். உண்மையில், அவள் தனதுக் கண்ணியத்தை பாதுகாத்திடவும் எந்த அந்நியர்களாலும் ஆக்கிரமிக்கப்படுவதையும் மறுக்கிறாள் என்பதாகும்.

அது முஸ்லீமல்லாத பெண்கள் (மற்றும் இஸ்லாத்தின் போதனைகளை விட்டும் வெளியேறிய விடுதலைப் பெற்ற (வர்களாய் கருதிக் கொள்ளும்) முஸ்லிம் பெண்கள்) தங்களின் தனிப்பட்ட அழகுகளை அனைவரும் பார்க்கும் வகையில் வெளிப்படுத்தியதற்காக (உண்மையில்) பரிதாபப்பட வேண்டும்.

வெளியில் இருந்து ஹிஜாபைக் கவனிக்கும் போது, ​​அது மறைத்து வைத்திருப்பதைப் பார்ப்பது சாத்தியமற்றதாகும். வெளியே இருந்துக் கொண்டு உள்ளேப் பார்ப்பதற்கும், உள்ளே இருந்துக் கொண்டு வெளியேப் பார்ப்பதற்கும் இடையேயான இடைவெளியானது, இஸ்லாம் பற்றிய புரிதலில் உள்ள வெற்றிடத்தை ஓரளவு விளக்குகிறது. ஒரு வெளிநபர்/ அந்நியர் இஸ்லாம் முஸ்லிம் சிறுமிகளையும், பெண்களையும் கட்டுப்படுத்துவதாக ஒரு வெளிநபர்/ அந்நியர் கருதலாம். இருப்பினும், அதை [அதாவது. ஹிஜாபை] அனுபவிப்பவர்கள் அது அவள் இஸ்லாத்தில் பிறந்த ஒரு முஸ்லீம் சிறுமியாகவோ அல்லது அல்லாஹ்வால் வழிநடத்தப்பட்ட பிறகு அதாவது அல்லாஹ் அவர்களின் இதயங்களைத் திறந்த பிறகு இஸ்லாத்திற்குத் திரும்பும் பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்குள்ளே அமைதி, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை உள்ளன. எனவே அவர்கள், தாமே இஸ்லாத்தை உண்மையாகவும் முழுமையாகவும் தேர்ந்தெடுத்து, மேற்கத்திய நாடுகள் பெண்களுக்காகவும் அவர்கள் சமூகத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் [அவர்கள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்]

என்பதற்காகவும் கண்டுபிடித்த 'பெயர் தாங்கிய சுதந்திரத்திற்கு' அடிபணிய அவர்கள் மறுக்கிறார்கள். மேற்கத்தியம் முன்வைத்துள்ள சுதந்திரத்தின் உருவமானது வெறும் ஒரு மாயையாகும். உண்மையான சுதந்திரம், விடுதலை என்பது ஆன்மீகத்தில், இறைக் கட்டளைகளை பின்பற்றி அந்நியர்களின் உலகில் கண்ணியமான விதத்தில் உங்களைத் தற்காத்துக்கொள்வதில் தான் காணப்படுகிறது.

ஹிஜாப் உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான அடக்குமுறையின் அடையாளமாக இருந்திருந்தால், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் உலகின் பிறப் பகுதிகளில் உள்ள அதிகமானப் படித்த பெண்பிள்ளைகளும், பெண்களும் இந்த பெயர் தாங்கிய "சுதந்திரம்" மற்றும் "விடுதலை" என்று அழைக்கப்படுவதைக் கைவிட்டு விட்டு ஏன் இஸ்லாத்தைத் தழுவுகின்றார்கள்?

பல முஸ்லிமல்லாதவர்கள் மற்றும் சில முஸ்லிம்களுக்கு மத்தியில், ஹிஜாப் அல்லது இஸ்லாமிய முக்காடு, பெண்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. "தனிமை" மற்றும் "பிரித்தல்" என்பது முக்காடின் சூழலில் பயன்படுத்தப்படும் சிலச் சொற்கள் ஆகும், அவை முஸ்லீம் பெண்களை ஆண் அந்நியர்களின் பார்வையில் இருந்து திரையிட்டு பாதுப்பதற்காக பயன்படுத்தப் படுகின்றது.

இஸ்லாம் பெண்களை ஆண்களின் அடிமைத்தனத்திற்குள் வைத்து பராமரிக்கவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். மாறாக, இஸ்லாமிய ஃபர்தா அவளை விடுவித்தது. சில சமூகங்களில் முன்பு பெண்களுக்கு மறுக்கப்பட்ட வாரிசுரிமைத் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்கள் தொடர்பாக அவர் ஓர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார், எனவே இஸ்லாமிய நெறிமுறைகளின்படி, ஒரு பெண்ணுக்கு செல்வம் / சொத்துக்கள் மற்றும் சமூகத்தின் கட்டமைத்தல் மற்றும் பரிணாம வளர்ச்சியில் தனது கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்கவும் முழு உரிமை உள்ளது. மேலும் அவள் சமூகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்காக அல்லாஹ் அவளை அடக்கத்தின் மூலம் பேணி நடக்குமாறு அறிவுறுத்தியுள்ளான்.

இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்ட சமூகத்தின், மற்றும் அவளைக் கடைப்பிடிக்க, சமூகத்திலிருந்து அவளைப் பாதுகாக்க அல்லாஹ் அவளுக்கு அறிவுறுத்திய அடக்கத்தின் மூலம். இவ்வாறு அல்லாஹ் அவளை இஸ்லாத்தில் ஆயத்தப்படுத்தியுள்ளான், அதனால் அவள் தனது தீனைப் பாதுகாப்பாக கடைப்பிடிக்க சுதந்திரமாக இருக்கிறாள், மேலும் இஸ்லாம் அவளது அனைத்து முஸ்லிம் உரிமைகளையும் பாதுகாக்கிறது. ஆக, இஸ்லாத்தின் பாதையிலும், பெண்ணின் உரிமைகளிலும், இஸ்லாம் பெண்ணுக்கு வகுத்துள்ள கண்ணியத்தின் வரம்புகளை மதிக்கும் வரை, ஹிஜாப் ஒரு பெண்ணுக்குத் தடையாக இருக்காது. முக்காடு (ஹிஜாப்) அடக்கத்துடன் ஒத்துப்போகிறது, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: "அடக்கமும் நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன, (இவற்றில்) ஒன்று உயர்த்தப்பட்டால், மற்றொன்றும் உயர்த்தப்படும்." (அல்-ஹகீம்)

முக்காடு (ஹிஜாப்) மற்றும் - ஒரு பொதுவான விதியாக - இஸ்லாமிய ஃபர்தா அல்லாஹ்வுக்கும் அவனது நபிக்கும் கீழ்ப்படிவதைப் பிரதிபலிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுகிறது:

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا

"அல்லாஹ்வும் அவனது தூதரும்(ஏதாவது) ஒன்றில் தீர்ப்பு வழங்கி விட்டால், (அதன் பின்னர்) நம்பிக்கைக் கொண்ட எந்த ஆணுக்கும், நம்பிக்கைக் கொண்ட எந்தப் பெண்ணுக்கும், தங்கள் பிரச்சினைக்குத் தங்கள் விருப்பத்திற்கேற்பத் தீர்ப்பளிப்பதற்கு உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுபடாதவர், நிச்சயமாக மிகத் தெளிவான வழிகேட்டில் சென்று விடுகின்றார். (அல் அஹ்ஸாப் 33: 37.

ஆன்மீகத்தில் தங்கள் சுதந்திரத்தை/ விடுதலையைத் தேடுகின்ற அனைத்துப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அல்லாஹ் உதவிப் புரிவானாக! மேலும் அவனது கட்டளைகளை (எழுத்துக்கு எழுத்து) அதன் சொற்பொருளின் படி பின்பற்றவும் இவ்வுலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நல்லொழுக்கத்தின் முன்மாதிரியாக ஆவதற்கும் அல்லாஹ் உதவி செய்வானாக. அல்லாஹ் இந்த உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவானாக. இதைச் செயல்படுத்த, முதலில் நமக்குள் அமைதி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதுமாகும், இந்த அமைதியானது நம் வீடுகளிலும், குடும்பங்களிலும் சுற்றுப்புறங்களிலும், நாம் வாழுகின்ற சமூகத்திலும் உலகத்திலும் பரவுகிறது. உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, அல்லாஹ் உதவி செய்வானாக!, அல்லாஹ்வால் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு இஸ்லாத்தை அழிப்பதற்கு, வன்முறையின் மூலம் கட்டுப்படுத்தி உலகில் இஸ்லாமிய விரோதப் போக்கை (இஸ்லாமோஃபோபியாவை) வலுப்படுத்த கொடுங்கோலர்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவு அவர்கள் முயற்சி செய்யட்டும். ஆனால் இன்ஷா அல்லாஹ், ஆன்மீகப் புரட்சியின் அலை வெடித்துக்கிளம்பும் (கிளர்ந்தெழும்). அங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இஸ்லாத்தின் உண்மைத் தன்மையை அங்கீகரித்து (ஒப்புக்கொண்டு) இஸ்லாத்தை அவர்களின் அன்றாட வழக்கமாக [அவர்களின் வாழ்க்கை/வாழும் முறையாக] நடைமுறைப்படுத் வார்களாக! இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் இஸ்லாத்தை வலுப்படுத்தி முஸ்லிம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உதவுவானாக! அதனால் ஒன்றாக நாம் வெற்றி பெறலாம், அது வன்முறையைத் தொடர்ந்து அமைதியின் வெற்றியாகவும், வெறுப்பை தொடர்ந்து அன்பின் வெற்றியாகவும் ஆகட்டுமாக!. இன்ஷா அல்லாஹ், ஆமீன்

Tuesday, June 28, 2022

நபி மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வின் வாக்குறுதி

இந்தத் தலைப்பு மனிதகுலம் அனைத்திற்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கும் பொதுவாகவும், அனைத்து அஹ்மதிகளுக்கும் குறிப்பாகவும் உள்ள மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். நாம் சூரா அன்-நூர்(ஒளி)யை சரியாகப் படித்தால், அது உண்மையில் எல்லா மக்களுக்கும், குறிப்பாக அனைத்து முஸ்லிம்களுக்கும், அனைத்து அஹ்மதிகளுக்கும் ஒளியைத்தருகின்ற ஒரு சூரா-அத்தியாயம் ஆகும், ஏனெனில் அல்லாஹ்(சுப்ஹா) கூறுகின்றான்:

«வஃதல்லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வஅமிலுஸ்-ஸாலிஹாத்தி லயஸ்தஃக்லிஃபன்னஹும் ஃபில் அர்ளி கமஸ்தஃக்லஃபல்லதீன மின் கப்லிஹிம். »

"அல்லாஹ் உங்களுள் (அவனது ஏகத்துவத்திலும், அவனது தூதுச் செய்தியிலும்) நம்பிக்கைக் கொண்டு, நற்செயலாற்றுபவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரைக் கலீஃபாக்களாக்கியது போன்று இப்பூமியில் நிச்சயமாக கலீஃபாக்களாக்கி வைப்பதாகவும்... வாக்குறுதி அளித்துள்ளான்...” சூரா அல்-நூர் வசனம் 24 : 56,

ஆகவே, (எந்த) ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி, இது ஒரு அசாதாரண ஒளியை (வெளிச்சத்தை) அளிக்கின்றதொரு அத்தியாயமாகும், எனவே, நீங்கள் அதன் வசனங்களைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது நீங்கள் [அதன் தெளிவான அர்த்தங்கள் மற்றும் விளக்கங்களை] காணமுடியவில்லை என்றோ கூறிவிட முடியாது. ஹாரூன்(ஆரோன்), யஷூஆ(யோசுவா), தாவூத்(டேவிட்) மற்றும் சுலைமான் (சாலமன்) போன்றவர்களை [இறைவனின் சாந்தி இவர்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!] மூஸா[மோஸே(அலை)] அவர்களது சமூகத்திற்கு ஃகலீஃபாக்களாக அனுப்பியதைப் போலவே முஸ்லிம் சமூகத்திலும் அவன் தனது ஃகலீஃபாக்களை (பின்தோன்றல்களை) அனுப்புவான் என்பதை அல்லாஹ் (சுப்ஹா) நமக்கு(த் தெளிவாக்கிக்) காட்டுகிறான். மேலும் இந்த ஃகலீஃபாக்கள் புனித குர்ஆனிலும் கூட குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஃகலீஃபாக்கள் அல்ல. ஆகவே, இந்த வசனம், இதற்கு முன்னர் தீர்க்கதரிசிகள் (தோன்றியபோதுக்) கொண்டிருந்த அதே பதவிகளுடன் ஃகலீஃபாக்கள் வருவார்கள் என்றுப் பொருள்படும்..

மிஷ்காத்தில் காணப்படும் ஒரு ஹதீஸில், ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் இந்த வசனத்தைத் தெளிவாக விளக்குகின்றார்கள், அதில் அவர்கள் கூறுகின்றார்கள்: [இது ஒரு நீண்ட ஹதீஸ் - நான் அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பிடுகிறேன்]: “தகூனுன்-நுபுவ்வத்து ஃபீகும் மாஷா அல்லாஹு… ஸும்ம தகூனுஃகலீஃபதுன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத ஸும்ம தகூன முல்கன் அஸ்ஸன்..... ஸும்ம தகூனூ அலா மின்ஹாஜின் நுபுவ்வத்தி ஸும்ம ஸகத.”

மொழிபெயர்ப்பு: அல்லாஹ் நாடுகின்றவரை நபித்துவம் உங்கள் மத்தியில் நிலைத்திருக்கும்; பின்னர் நுபுவ்வத்தின் அடிப்படையில் ஃகலீஃபாக்கள் தோன்றுவார்கள், பின்னர் அநீதி மற்றும் கொடுங்கோன்மையான அரசர்களின் ஆட்சி இருக்கும் ... பின்னர் நுபுவ்வத்தின் அடிப்படையில் [அதாவது நபிக்குப் பிறகு] மீண்டும் ஃகலீஃபாக்கள் வருவார்கள். பிறகு அமைதியாகிவிட்டார்கள். [அதாவது இந்த வார்த்தைகளுடன் அவர்கள் நிறுத்திவிட்டார்கள்]. (மஸாஹிருல் ஹக், தொகுதி. 4 பக். 26)

இந்த வசனம் மற்றும் ஹதீஸின் ஒளியில், புனிதக் குர்ஆனிலிருந்தும், நபிமார்களின் வரலாற்றிலிருந்தும் நாம் உணர்ந்துக் கொள்வது அல்லாஹ்(சுப்ஹா) ஒரு தூதரை உலகுக்கு அனுப்பும்போது, ஒரு செய்தியைக் கொண்டுவருவதும் பிறகு (அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கே) திரும்பிச் செல்வதும் அல்லாஹ்வின் நோக்கமல்ல..

மாறாக, ஒவ்வொரு தீர்க்கதரிசியின் வருகையுடனும் அல்லாஹ்வின் திட்டம் என்னவென்றால், இந்தத் தீர்க்கதரிசி ஒரு மாற்றத்தையும் புரட்சியையும் கொண்டுவருகின்றார். இந்த இலக்கை அடைவதற்குத் தொடர்ச்சியானதொரு அமைப்பு இருப்பது அவசியமாகும். ஏனென்றால் எவரும் என்றென்றும் வாழப்போவதில்லை; அல்லாஹ் அவரை விதைகளை விதைக்க மட்டுமே பயன்படுத்துகிறான். ஆகவே, இந்த விதைக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும், களைகளை அப்புறப்படுத்துவதற்கும், விலங்குகள் அல்லது பூச்சிகள் இந்த விதை மீது தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்கும் [அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வருகையில்] ஒரு தொடர்ச்சி இருக்க வேண்டும், இதனால் அது வளர்ந்து ஒரு செடியாக மாறுகிறது. அவன் அதனைப் பாதுகாக்க வேண்டும், அதன் காரணமாக அது வளர்ந்து அதன் கிளைகளை வெவ்வேறுத் திசைகளிலும் பரவச்செய்து, அங்கே அது கனிகளையும் தந்துவிடும். மீண்டும் அது கனிகளைத் தரத் தொடங்கும் போது, அதனை நாம் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். கனி சுவையாக மாறுவதற்கு முன்பு, பல கட்டங்கள் உள்ளன, இந்தச் செடியானது கடந்துச் செல்லக்கூடிய சோதனைகளான சூறாவளிகள், வறட்சி போன்றவைகளும் உள்ளன. ஆகவே, நீங்கள் ஒரு விதையை நிலத்தில் விதைக்கும் போது, வேலை அத்துடன் முடிந்து விடாது என்பதையும் நீங்கள் காண்கிறீர்கள், ஆனாலும் செய்ய வேண்டிய வேலைகளில் தொடர்ச்சியானதொரு செயல்முறை உள்ளது.

நபித்துவம் அல்லது நுபுவ்வத் அமைப்பு (நீங்கள் இதனை மஸீஹ் என்றோ, கலிஃபத்துல்லாஹ் என்றோ அழைக்கலாம்), இது மனிதனால் அல்ல, அல்லாஹ்வினால் நிலைநாட்டப்பட்ட அமைப்பாகும் என்று திருக்குர்ஆனின் இஸ்திஃக்லாஃப் வசனத்தைப் பற்றியதொரு ஆய்வு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனிதன் அவனுடைய மனநிலையின் காரணமாக,அவன் தன்னை எல்லாவற்றையும் கற்றுக் கொண்டவனாகவும், அறிந்துக் கொண்டவனாகவும் நினைக்கின்றான். (இவ்வாறு) அவன் இறைஅருளின் கதவை மூடிக்கொண்டு, அல்லாஹ்(சுப்ஹா) அவனுக்கு வழங்கியுள்ள ஒளியை அணைத்துவிட முற்படுகிறான். அவன் தன்னைப் படைத்தவனைக் காட்டிலும் தான் மிகவும் கற்றுக்கொண்டவனாக பகிரங்கப்படுத்திக்கொள்கிறான், இறைதூதர்களின் வருகையின் கதவையும், இறைவெளிப்பாட்டின் கதவையும் அடைத்துவிட்டு, தானாகவே இருளில் தொலைந்து விடுகிறான், எல்லாப்பக்கங்களிலும் ஒளியின் கதவுகளை மூடிவிடும்போது, முழுமையான இருளில் வீழ்ந்து விடுகிறான்.

அல்லாஹ்(ஸுப்ஹா) ஓர் அருளுக்குரிய அமைப்பினை நிறுவி, தனது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகத் தன்னிடமிருந்துள்ள வெகுமதியாக அதனை நம்பிக்கையாளர்களுக்கு வழங்கி, அவன் அவர்கள் மீது திருப்திக்கொண்டுள்ளதை நிரூபிக்கும் விதமாக நம்பிக்கையாளர்களுக்கு அருளுக்குரியத் தலைமையைக் கொண்டுள்ள உன்னதமான அமைப்பை வெகுமதியாக வழங்கியிருக்க, முஸ்லிம்களின் நிலையோ இன்று இவ்வாறாக உள்ளது. அல்லாஹ், அவன் வாக்களித்திருக்கின்ற அத்தகையதொரு ஆன்மீகத் தலைமைத்துவ அமைப்பை ஏற்படுத்துகிறான், பின்னர் அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தன்னுடைய பிரதிநிதிகளைத் தேர்வு செய்கிறான்; தக்வா, நம்பிக்கை மற்றும் நற் செயல்களைச் செய்யக்கூடிய நம்பிக்கைகொண்ட சமூகத்திற்கு அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில், அனுப்புகிறான். இவர்கள் அல்லாஹ்வுக்காக அனைத்தையும் தியாகம் செய்துத் தங்களைப் படைத்தவனுக்கு நன்றி செலுத்தும் பணிவான நம்பிக்கையாளர்கள் ஆவார்கள்.

ஆகவே, ஒரு ஃகலீஃபதுல்லாஹ் - அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு ஃகலீஃபா என்று நாம் கூறலாம். அவர் (அல்லாஹ்விடமிருந்து) இறை அறிவிப்பைப் பெற்றுக் கொண்டு, தன்னை அல்லாஹ்விடமிருந்து வந்தவர் என்ற பிரகடனம் செய்வது- நபித்துவத்தின் தொடர்ச்சியையும், அந்த ஒளியின் ஒரு முழுநிறைவான நிழலையும் குறிக்கின்றது. இந்த அம்சத்தில், நபித்துவ ஒளியினுடைய அருளின் முழு வடிவத்தையும், நபித்துவத்தின் இத்தகைய பிரதிபலிப்பில் காணமுடிகின்றது. உண்மையில் ஃகலீஃபத்துல்லாஹ் தான் நம்பிக்கை மற்றும் நற்செயல் செய்கின்ற நம்பிக்கையாளர்களின் சமூகத்திற்க்கு ஒரு சாட்சியாக விளங்குகின்றார்.

எனவே ஃகலீஃபத்துல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு ஒற்றுமை மற்றும் அமைதியின் பாடத்தை கற்பிக்கின்றார்.அவர் பிளவுகளை உருவாக்கவோ, புறக்கணிப்பை ஏற்படுத்தவோ, சகோதர சகோதரிகளின் இதயங்களில் வெறுப்பை உருவாக்கவோ, அல்லது குடும்ப உறவுகளை முறித்து விடாமல், எல்லா மக்களையும் ஒன்றிணைப்பதற்காகவே இருக்கின்றார். அதற்கு மாறாக, ஒரு ஃகலீஃபத்துல்லாஹ் அனைவரையும் அவர்களுக்கிடையேயுள்ள வேறுபாடுகளையும், நம்மிடையேயுள்ள வேறுபாடுகளையும் மறந்துவிடுமாறு அழைக்கின்றார், அங்கு நாம் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறோம் (அல்லாஹ்வின் கயிறு என்பது ஷஹாதா: லா இலாஹா இல்லல்லாஹ்வாகும்), நாம் இந்த ஆன்மீகக்கயிற்றால் இணைந்துவிடுகிறோம், அனைவரும் ஒன்றிணைந்து, அங்கே நாம் ஒரே உடலாக மாறிவிடுகிறோம். அந்த நேரத்தில், இந்த உடலின் ஒரு பகுதி துன்பப்படும்போது, முழு உடலும் பாதிப்படையும். இதையே எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் நமக்குப் புரிய வைத்திருக்கின்றார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் கயிற்றில் நம்மை இணைத்துக் கொள்வோம், அந்த சமயத்தில் நாம் முழு உம்மத்துடன் ஒற்றுமையிலும், அன்பிலும் பிணைக்கப்பட்டுள்ளதைக் காண்போம். மேலும் இன்ஷா-அல்லாஹ். உம்மத்தின் தலைமையில் ஒரு ஃகலீஃபத்துல்லாவுடன் உறுதிமிக்க அடித்தளத்திற்க்குள் நாம் வந்துவிடுவோம். அங்கே எவ்விதமான புறக்கணிப்போ, வாக்குவாதமோ, போரோ இடம்பெறாது. நமது சகோதர சகோதரிகளின் இரத்தம் சிந்தப்பட்டு கொல்லப்படுதலும் இடம்பெறாது, நாம் குடும்ப உறவுகளை முறித்துக் கொள்ளவோ அல்லது வெறுப்பு போன்றவைகளோ இருக்காது. அந்த நேரத்தில், நாம் சப்தமாகவும், தெளிவாகவும் சொல்ல முடியும் [அதாவது இந்த தக்வாவின் விதை, மற்றும் ஷஹாதா - இந்த உறுதியான நம்பிக்கை] நம் இதயத்தில் நடப்பட்டது, அதன் வேர்கள் வளர்ந்து இதயத்திற்குள் ஆழமாக ஊடுருவி, பின்னர் அங்கிருந்து [இம்முழக்கம்] வருகின்றது: “அனைவரிடத்தும் அன்பு; எவரிடத்தும் பகை இல்லை”. அந்த சமயத்தில், பள்ளிவாசல்களில் இந்த சொற்களைக் கொண்டு பெரிய விளம்பரப் பலகைகள்(சைன்போர்டுகள்), டீ ஷர்ட்டுகள் மற்றும், ஸ்டிக்கர் போன்றவற்றிலும் (அவ்வாறு) வைக்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. ஆனால் இந்த முழக்கம், இந்த வார்த்தைகள் இதயத்தில் இடம்பெற்றிருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறு இருப்பதில்லை. நீங்கள் மக்களின் முன் வைப்பதற்க்கு நேர்மாற்றமாக இதயம் கூறுகின்றது. இந்த [நற்செயல்களை] மக்களிடம் காண்பிப்பதற்காகவும், அவர்களை திருப்திப் படுத்துவதற்காகவும் செய்யாதீர்கள், ஆனால் உங்களை படைத்தவனை மகிழ்விப்பதற்காக, அல்லாஹ்வுக்காக மட்டுமே நல்ல செயல்களைச் செய்யுங்கள், அப்போதுதான் அல்லாஹ் (ஸுப்ஹா) அவன் தேர்ந்தெடுத்தவரின் வருகையின் மூலம் நீங்கள் அல்லாஹ்வின் ஆன்மீக அருளைப் பெறக்கூடியவர்களாக உங்களுக்கு வெகுமதி அளிப்பான், மேலும் உங்களைத் தூய்மைப்படுத்த ஆன்மீக மழை வானத்திலிருந்து இறங்கும். இன்ஷா அல்லாஹ்.

நேரம் இல்லாததால், இந்தச் சொற்பொழிவின் தலைப்பை அடுத்த வாரமும் தொடருவேன். இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் முஸ்லிம்களின் இதயங்களைத் திறந்து இந்தச் செய்தியைப் புரிந்து கொள்ளவைப்பானாக! இன்ஷா-அல்லாஹ், ஆமீன்.

Copyright @ 2013 Sahih Al Islam .