Skip to main content

இறை வஹீ - 05 மார்ச் 2022

05 மார்ச் 2022 சனிக்கிழமை அன்று இக்காலத்தின் இமாம், மஸீஹ், மஹ்தி மற்றும் முஸ்லிஹ் மவூதுமாகிய மொரீஷியஸைச் சார்ந்த ஹஸ்ரத் முஹையுத்தீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மது அஸீம்(அலை) அவர்கள் பெற்ற இறை வஹி - இறை வெளிப்பாடுகள்.

"மூன்றாம் உலகப் போர் மிக அருகில் உள்ளது." இந்த செய்திகளை அறிவிப்பதற்காக பறவைகள் என்னிடம் வந்துள்ளன. அதில் அதிகமான மக்கள் மரணித்துப் போவார்கள். இரத்த ஆறுகள் ஓடும். ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்ததைப் போன்றே ஓர் ஆண் ஐம்பது பெண்களுக்குப் பொறுப்பாவான் (என்ற காலம் நெருங்கி உள்ளது)

ஏவுகணைகளும் குண்டுகளும் உலகம் முழுவதும் பரவி விடும். பலர் தங்கள் உயிரை விட நேரிடும். எல்லா ஆண்களும் போருக்குச் செல்ல வேண்டும் (என்ற நிலை ஏற்படும்).

நீண்ட காலத்திற்கு முன்பு, குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களிடம் அச்சமும் மிகுந்த மரியாதையும் இருந்தது. ஆனால், இன்றோ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோரைக் கொள்கின்றனர். சிலர் தங்கள் பெற்றோரிடம் மோசமான வார்த்தைகளை கூறுகின்றனர், அவர்களை தங்கள் வீடுகளில் இருந்து உதைத்துத் தள்ளுகின்றனர். இப்போது, ஆண்கள் குறைவாக இருப்பார்கள் - இனப் பெருக்கம் இருக்காது.

அல்லாஹ்வையும் அவனது கலீஃபத்துல்லாஹ்வையும் தவிர ஆணின் அதிகாரத்தில் உள்ள (அல்லது சக்திக்கு உட்பட்ட) எந்த ஆணைக் கொண்டும், பெண்ணின் அதிகாரத்தில் உள்ள (அல்லது சக்திக்கு உட்பட்ட) எந்த பெண்ணைக் கொண்டும் இந்த உலகத்தை மாற்றி (அமைத்து) விட முடியாது.

எனது சஹாபாக்களே!, உங்களது பெற்றோருக்கும், உங்களது கலீபத்துல்லாஹ்வுக்கும் எதிராக உங்கள் குரலையும், கைகளையும் உயர்த்தாதீர்கள். மனிதர்களால் அல்லாமல், அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலீஃபாவாகிய உங்களது கலீஃபாவிற்குக் கீழ்ப்படியாமல் இருந்து விடாதீர்கள்!

இறை வெளிப்பாட்டை விட்டும் வெளியேறிச் சென்றவர்களைப்

பாருங்கள்!, அவர்களின் முகத்தில் ரூஹானி - ஆன்மீக (ஒளி) இருக்காது.

காற்றானது இந்த செய்திகளை கொண்டு வருகின்றது. காற்று மிகவும் கடுமையாக வீசுகிறது. ஒரு நாள், அவர்கள் கலீஃபத்துல்லாஹ்வின் அருட்களை பெற்றுக் கொள்ள வருவார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது மிகவும் தாமதமாகிவிடும். (அப்போது) அவர்கள் பரிதாபமான நிலையில் இருப்பார்கள். மிகவும் கடுமையாக உழைக்கும் பல நல்ல சஹாபாக்கள் இருக்கிறார்கள் என்பதையும், (அதற்கு) மாறாக, சிலர் எதுவுமே செய்யாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் அல்லாஹ் எனக்கு புரிய வைக்கிறான்.

அஸீமின் பேழைக்குள் (கப்பல்) வந்து விடுங்கள். இந்தப் பேழைக்குள் நுழைபவர்கள் மட்டுமே காப்பாற்றப் படுவார்கள். கலீஃபத்துல்லாஹ்வை இழிவு படுத்தியவர்கள் அழிக்கப்படுவார்கள்!. (இந்நிலையில்) நீங்கள் 700,000 முறை மன்னிப்பு கோரினாலும் கூட அல்லாஹ் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்! நீங்கள் கலீஃபத்துல்லாஹ்விற்கு உதவி செய்ய வேண்டும். அவரைக் குறித்து புறம் பேசவோ, குறை கூறவோ செய்யாதீர்கள்!. ஃபஸ்பீர் ஸப்ரன் ஜமீலா. (அழகிய பொறுமையை மேற்கொள்ளுங்கள்!)

(கலீஃபத்துல்லாஹ்வே!) அல்லாஹ் உங்களுக்கு பொறுமை குறித்த வசனங்களை (இறை வஹீயை) வழங்குவான்.

கலீஃபத்துல்லாஹ் அவர்கள் இறை வெளிப்பாட்டின் அடிப்படையில் கூறினார்கள்: எனது ஸஹாபாக்களும் கூட நெருப்பை (கடும் சோதனைகளை) கடந்து செல்வார்கள். இது குறித்து கவலைப் படாதீர்கள்! அதன் பிறகு, கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் துன்பம்- துயரங்களில் இருக்கும் தமது ஸஹாபிகளுக்காக அதிகமான துஆக்களை செய்தார்கள். ஆனால், அவர்களில் சிலர் அந்த துஆக்களின் பலனையும், ஆற்றலையும் அடையாளம் கண்டிருக்க வில்லை என்பது குறித்து அன்னார் வருத்தம் அடைந்தார்கள். பழங்களையும், காய்கறிகளையும் மட்டுமல்லாது விலங்குகளையும் கூட வைரஸ்கள் தாக்கும். உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் இறை வெளிப்பாடுகளின் அடிப்படையில் கூறினார்கள்: இப்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று (நான்) கூறும்போது மக்கள் என்னைப் பார்த்து சிரிப்பார்கள். (ஆனால் ஒரு நேரம் வரும் அப்போது மக்கள் தண்ணீரை அருந்த வேண்டும் என்பதற்காக) கலீஃபத்துல்லாஹ் தனது உமிழ்நீரை அதில் ஊற்றி சுத்திகரிப்பார்கள். அதனால் மக்கள் தண்ணீரை அருந்த முடியும். பலரும் நாத்திகர்களாக மாறிவிட்டனர். பெரும்பாலான அஹ்மதிகளும் தங்களது கலீஃபாவை அல்லாஹ்வை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக எடுத்துக் கொள்கிறார்கள். இருண்ட காலம் வந்து கொண்டிருக்கிறது. (அப்போது) மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிகளிலும் எந்த மருந்தும் கிடைக்காது. மக்கள் தாவர மருந்துகளின் பக்கம் (மீண்டும்) திரும்ப வேண்டி இருக்கும். அல்லாஹ் தனக்கும், அனது நபி- (தூதரு)க்கும் கீழ்ப்படிபவர்களை நேசிக்கிறான். அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். தீன் - மார்க்கப் பணிகளில் கடினமாக ஈடுபடுங்கள்.

அல்லாஹ் நம்மீது கருணை காட்டுவானாக! (இன்ஷா அல்லாஹ்! ஆமீன்!)

Popular posts from this blog

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன்பு) என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன். அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன். அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன். பிறகு, வாகனங்கள், சொகுசு வாகனங்களும் கூட ஒதுக்கி வைக்கப்படும் ஒரு காலம் வரும் என்றும், அதனால் குதிரைகளும், பிற விலங்குகளும் போக்குவரத்து முறைகளாகவும், அதன் மதிப்பு/முக்கியத்துவம் அதிகரித்து விடும் என்றும் இது குறித்து நான் முன்பே கூறியிருந்தேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். Then, I saw myself in a place where a tall [imposing] and great [in personality] woman in white appeared before me. She was the wife of a great prophet of Allah and was born in Hindustan [India]. Her name was Saraswati but in the dream I addressed her as Hajra [both names] and realised that she was the wife of Hazrat Ibrahi...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.