Skip to main content

இந்த நூற்றாண்டில் அருளுக்குரிய இந்த ரமலானின் கடைசி 10 இரவில் இரண்டு லைலத்துல் கத்ர்

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) கூறுகின்றார்கள்:-

என் அருமை ஸஹாபிகளே! மற்றும் அனைத்து முஸ்லீம் பெருமக்களே! திருகுர்ஆன் மற்றும் சுன்னத்தை பின்பற்றுவது தலையாய முக்கியத்துவம் என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். இதிலும் முக்கியமாக அந்த ஏக இறைவன் நமக்கு மற்றுமொரு ரமலான் மாதத்தை அடையச்செய்து அதை சாட்சி ஆக்கியுள்ளான், எனவே இத்தகைய அருளுக்குரிய *இரவையும் பகலையும் வீணாகக்கழித்து விடாதீர்கள்* இந்த நேரங்களில் உங்கள் இபாதத்துகளை அதிகப்படுத்தி அந்த மேலான கண்ணியம்மிக்க இரவுகளின் அருள்களை நீங்கள் பெறுவீர்கள் என்று திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களிடம் விருப்பமும் அல்லாஹ்வின் மீது திட்டமாக நம்பிக்கையும் இருக்கும் என்றால், அல்லாஹ் சுபஹானஹு தாலா நிச்சயமாக அவனது அருளை உங்கள் நம்பிக்கையின் மீது வைத்து, அவனுடைய கருணையையும் அருள்களையும் அவனது மேலான மன்னிப்பையும் பெறக்கூடியவர்களாக ஆக்கிவிடுவான். இன்னும் அவன் உங்களுக்கு நரக நெருப்பிலிருந்து மேலான பாதுகாப்பு அளிப்பான், இத்தகைய பாதுகாப்பு நீங்கள் உங்களுடைய நப்ஸ்சை கட்டுப்படுத்தும்போது அதாவது உங்களுடைய பொறாமை மற்றும் உண்ர்ச்சிகளை கட்டுப்படுத்தும்போது மேலும் அது உறுதி செய்யப்படுகின்றது. இன்னும் அல்லாஹ் உங்கள் மீது அவனுடைய கருணையை பொழிய செய்து உங்களுள் உள்ள ஷைத்தானை வெல்ல செய்வான் இன்ஷாஅல்லாஹ். அன்றியும் இந்த விஷயத்தில் நமது எஜமானார் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் முன்மாதிரியை பின்பற்றி அன்னார் தன்னுள் உள்ள ஷைத்தானை முஸ்லீம் ஆக்கியது போல், நாமும் முயன்று அதன் மூலம் நரகத்தின் கதவுகளை என்றென்றும் அடைத்துவிட்டு, நமக்காக சொர்க்கத்தின் கதவுகளை எப்போதும் திறக்க செய்வானாக! இன்ஷா அல்லாஹ். ஆமீன்.

இன்னும் ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்! நாம் வாழ்ந்துகொண்டு இருக்கும் இந்த காலமும் அதாவது நூற்றாண்டும் கூட ஒரு லைலத்துல் கத்ரே ஆகும். “ரூஹுல் குத்தூஸினால்" பலப்படுத்தப்பட்டு அதன் மூலம் இறை செய்தியை பெற்று, இந்த உலகத்தில் சமாதானத்தையும் இறைவனின் ஏகத்துவத்தை மீண்டும் மக்களின் இதயத்தில் மீட்டெடுக்க தோன்றிய ஒருவரை ஏற்று அவரின் தோழமைக்குள் வருவதிற்கான பொன்னான வாய்ப்பை பெற்ற ஒருவர் எப்படிப்பட்ட அதிஷ்டத்திற்குரியவராக இருக்கின்றார் என்பதை எண்ணிப்பாருங்கள். அனைத்து முஸ்லிம் களுக்கும் எனது அருமை சகாபிகளுக்கும் *லைலத்துல் கத்ர் முபாரக்* வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.

எனது சகாபிகளுக்கு அந்த ஏகஇறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா இரண்டு லைலத்துல் கத்ரின் அருள்களை வழங்குவானாக! ஆமீன். ஒன்று நீங்கள் வாழும் காலத்தில் அல்லாஹ்வின் நபியை ஏற்று சாட்சியாக இருந்த அருளுக்காகவும் இரண்டாவது இந்த அருளுக்குரிய ரமலான் மாதத்தில் இறைவனின் அருளாக தோன்றும் "லைலத்துல் கத்ரை" நீங்கள் பெறுவதன் மூலமும் ஆகும். ஆக இந்த இரண்டு லைலத்துல் கத்ரை பெறக்கூடிய பாக்கியம் கொண்ட மக்களாக ஆக்குவானாக! ஆமீன்!

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...