Skip to main content

கேள்வி இஸ்லாமிய கடமைகள் யாவை? பதில் தொடர் -5

தொடர்ச்சியாக மஸீஹ் (அலை) அவர்கள் நமக்கு இது தொடர்பாக போதிப்பதை பார்ப்போம்:-

சகோதரர்களே! நான் எந்த புதிய மார்க்கத்தையும் புதிய போதனையையும் கொண்டு வரவில்லை. இன்னும் சொல்வதென்றால் நான் உங்களிடம் இருந்து வந்துள்ள உங்களைப் போன்ற ஒரு முஸ்லிமாக இருக்கின்றேன். முஸ்லிம்களாகிய நாம் செயல்படுத்துவதற்கு அல்லது செயல்படுத்துவதற்காக பிறருக்கு வழிகாட்டுவதற்கு திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் இல்லை. *ஜனாப் காத்தமுல் முர்சலீன் அஹ்மதே அரபி* ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தவிர நாம் பின்பற்றி நடப்பதற்கும் அல்லது மற்றவர்களை பின்பற்ற வைப்பதற்கும் வேறு எந்த ஒரு வழிகாட்டியும் பின்பற்றத் தகுந்தவரும் இல்லை. இதை நான் கூறும் நிலையில் ஒரு மார்க்கப்பற்றுள்ள முஸ்லிமுக்கு இறை அறிவிப்பின்(இறைவஹீ) அடிப்படையில் உள்ள எனது இந்த வாதத்தின் மீது நம்பிக்கை வைப்பதில் அபாயத்திற்குறிய என்ன இடம் இருக்கின்றது? எனது இந்த கஷ்ஃபும் இல்ஹாமும் தவறானது என்றும் எனக்கு எதுவெல்லாம் கட்டளையிடப்பட்டுள்ளது அதை புரிந்து கொள்வதில் எனக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் கற்பனையாக வைத்துக் கொண்டாலும் இதில் ஏற்றுக் கொள்பவர்கள் மீது என்ன குற்றம் இருக்க முடியும்?

மேலும், அவர் கூறும் போது வானத்தில் இருந்து உங்களுக்கு ஒரு புதிய இறை வெளிப்பட்டு இறங்கவில்லையென்றால் "உங்கள் தொழுகை வெறும் சடங்காகவும் உங்கள் நோன்பு பட்டினியாகவும் தான் இருக்கும்" என்று நமக்கு போதித்துள்ளார்கள்.

மேலும், அவர்கள் கூறும்போது புதிய ஷரியத் சட்டத்தை கொண்டுள்ள வஹி இனி அவசியம் இல்லை அது முடிவடைந்து விட்டது. ஆனால், "ஹஸ்ரத் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு அந்த "இல்ஹாம்" கிடைக்கின்றது." அது ஒரு போதும் நிற்காது நமக்கு கிடைக்கும் இந்த "இல்ஹாம்" நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உண்மை நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த மிகப்பெரிய சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இழிவடைந்து அவமானமும் அடைவார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

மக்கள் அனைவரும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு அல்லது மஸீஹ் மஊது அலைஹிஸ்ஸலாத்து வஸல்லம் அவர்களுக்குப் பிறகு ஒரு நபியின் தேவை என்ன உள்ளது? என்று வினவுகின்றார்கள்.

இதற்கு பதில் மிகவும் எளிமையானது, எப்பொழுதெல்லாம் "இறைவனின் இந்த தொன்மையான சட்டம் தாக்கப்படும்மோ அப்போதெல்லாம் இறைவன் தன் வல்லமையால் தனது இருப்பை தனது நபிமார்கள் மூலம் தனது அடியார்களுக்கு தனது இருப்பை வெளிப்படுத்துகின்றான்".

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு தோன்றும் நபிமார்களைப் பற்றி மஸீஹ் மவூது (அலை) அவர்கள் கூறும் பொழுது:- இறைவனுடன் உரையாடுதல் என்று பெயர் வைக்கின்றீர்களோ அதுவே அதிக அளவில் கிடைக்கும் போது அதற்கு இறை கட்டளைக்கு ஏற்ப நான் அதற்கு நுபுவ்வத் என்று பெயர் வைக்கின்றேன்.

மேலும், ஒருவர் தமக்கு "நபிமார்கள் மற்றும் ரசூல்மார்களின் தேவையில்லைஎன்று கூறுவது மிகவும் ஆணவமான எண்ணமாகும். இது ஈமானின் இழப்பிற்கு வழிவகுக்கின்றது இப்படிப்பட்ட எண்ணம் உள்ள ஒரு மனிதர், "நான் தொழுகின்றேன்", "நோன்பு வைக்கின்றேன்", நான் "கலிமா சொல்கின்றேன்" என்று கூறுவதால் அவர் தன்னைத்தானே ஏமாற்றி கொள்கின்றாரே தவிர வேறு ஒன்றும் இல்லை. உண்மையான ஈமான் பற்றிய ஞானம் அவருக்கு இல்லாததே இதற்கு காரணம்.

என் சகோதரர்களே இந்த கூற்றை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

மேலும் அன்னார் தொடர்ச்சியாக கூறும் இந்தக் கருத்தையும் உங்கள் கருத்தில் கொள்ளுங்கள்.

ஒரு மனிதனைப் படைத்தவன் இறைவன் என்றாலும் அதற்கு ஒரு தந்தை தேவைப்படுகின்றார் உடல் சம்பந்தமான ஒரு பிறப்பிற்கு ஒரு தந்தை இருப்பது அவசியமானதாக இருப்பதைப் போன்று ஆன்மீக தொடரில் ஆன்மீகத்தில் பிறப்பிற்கும் ஒரு தந்தை அவசியமானதாகும். ஆகவே, விழித்தெழுவீர்! இஸ்லாத்தை வெளித்தோற்றத்தில் மட்டுமே வைத்துக்கொண்டு உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் நம் இறைவன் என்ன எதிர்பார்க்கின்றான் என்பதை அவனுடைய திருமறை வசனங்களில் படித்து ஆழ்ந்து சிந்தியுங்கள் என்று கூறுகின்றார்கள்.

எனவே சகோதரர்களே! "இறைவனுடன் உரையாடுதல்" என்ற இந்த அருளை எப்பொழுதெல்லாம் தாக்கப்படும்மோ அல்லது ஏதாவது ஒரு சாக்கு போக்கு கூறி அதை தற்காலிகமாக நிறுத்தப்படுமோ அப்போது நமது இறைவன் தனது இருப்பை வெளிப்படுத்தாவிட்டால் உயிருள்ள இறைவன் என்று எவ்வாறு கூறஇயலும்?

இன்ஷாஅல்லாஹ் தொடரும்...

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...