Skip to main content

கேள்வி: இஸ்லாமிய கடமைகள் யாவை பதில்: தொடர் 6 (இறுதி தொடர்)

மேலும் வாக்களிக்கபட்ட மஸீஹ் (அலை) நம்மை பார்த்து எச்சரிக்கின்றார்கள் :-

"சூரா பாத்திஹா வில்" இறைவன் எது குறித்து துஆ செய்யும்படி கற்ப்பித்துள்ளானோ அதையே அவன் உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறான். அந்த துஆ "நீ எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக; அதாவது நீ அருள் புரிந்த மக்களின் வழி". எனவே நபிமார்களிடத்திலும் இறைத் தூதர்களிடத்திலும் இருக்கின்ற அந்த அருட்கொடைகள் உங்களுக்கும் கிடைக்க வேண்டுமென ஐங்காலத் தொழுகையிலும் 'துஆ' செய்யும்படி வற்ப்புறுத்திக் கூறப்பட்டிருக்க நபிமார்களும் ரஸுல்மார்களும் இல்லாமல் அந்த அருட்கொடைகளை எவ்வாறு உங்களால் பெற இயலும்?* எனவே அந்த அருட்கொடைகளை நீங்கள் அடையவும் உறுதி, நம்பிக்கை ஆகிய தகுதிகளை நீங்கள் பெறவும் அவ்வப்போது இறைத் தூதர்கள் வரவேண்டியது கட்டாயமாகிறது. ஆகவே இறைவனுடன் போரிட்டு அவனின் தொன்மையான இச்சட்டத்தை முறியடித்து விடுவீர்களா? நான் ஒரு தந்தையின் மூலமாக பிறக்க வரும்பவில்லை என்று விந்து கூற முடியுமா? காற்றின் உதவியால் கேட்க விரும்பவில்லை என்று காதுகளால் கூற முடியுமா ? மேலும், இறைவனின் ஒரு தொன்மையான சட்டத்தை தாக்குவதைவிட வேறு அறிவீனம் என்ன இருக்க முடியும்?.

அன்னாரின் வருகைக்கு பிறகு இந்த கதவு விசாலமாக திறக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்..

ஆனால், இப்பொது இந்த அருளை மீண்டும் சில சாக்குபோக்குகள் கூறி அடைக்க முற்படும்போது இறைவனின் அருளாக நாம் வாழும் இதை காலத்தில் ஹஸ்ரத் முனீர் அஹமத் (அலை) அவர்கள் தன்னை சூரத்துல் ஃபாத்திஹா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ள துஆவின் படி உங்களுக்கு அருளாக அந்த ஏக இறைவன் அனுப்பியுள்ளான் என்று வாதம் செய்கின்றார்கள்.

https://sahih-al-islam.blogspot.com/2014/08/surah-al-fatiha-on-divine-guidance.html?m=1

அன்னார் கூறும்போதும் இறைவன் அவனது இருப்பை தனது நபிமார்கள் மூலமாக அடியார்களுக்கு உணர்த்துகின்றான்.

உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும். (அல்குர்ஆன்: 6:106)

என்று திருமறையும் நமக்கு தெளிவாக உணர்துகின்றது .

மேலும், மஸீஹ் மஊது (அலை ) அவர்கள் கூறும்போது :-

ஏக இறைவனின் இரட்சிப்பை அடைய விரும்பும் சகோதரர்களே! இஸ்லாத்தின் கடமையின் உண்மையான அர்த்தத்தை புரிந்து நம்மை படைத்த இறைவனின் வாரிசு ஆகுங்கள் ஒருவேளை உங்கள் நமபிக்கை சரி என்றால் "ஓரிறை கொள்கை கொண்ட ஒரு யகூதி கூட இறைஇரட்சிப்பை பெறமுடியம்" ஒரு சிலை வழிபடுபவர் அதை இறைவன் என்றும் அது பேசாது என்று கூறுகின்றான் அதே போலவே உருவமற்ற இறைவன் பேசாமல் இருக்கின்றான் என்பதை எவ்வாறு எடுத்துகொள்வது? சற்று சிந்தியுங்கள்..!

இதை பற்றி மஸீஹ் (அலை) கூறும்பொழுது:-

இறைவனை மண்ணில் புதையுண்ட ஒரு உயிரற்ற சடலமாகக் அவனைக் கண்டு பிடிக்கும் பொறுப்பு மனிதனிடமே இருப்பதாக கருதுவது மாபெரும் தவறாகும். ஒரு மனிதனின் முயற்சியால் கண்டுபிடிக்கப்படுகின்றவன் தான் இறைவன் என்றால் அத்தகைய இறைவனிடமிருந்து நம்மால் எதையும் எதிர்பார்க்க முடியாது ஆனால் உண்மையில் இறைவன் இத்தகைய மகத்துவம் உள்ளவன் என்றால் அவன் ஆதிகாலம் தொட்டே என்றென்றும் "நான் இருக்கின்றேன்"என்று மக்களை தன் பக்கம் அழைத்துக் கொண்டே இருக்கின்றான்.

ஆகவே சகோதர்களே உண்மை இஸ்லாத்தின் இந்த கருத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள்!

இஸ்லாத்தின் கடமை எவை என்ற கேள்விக்கு ஒரு பள்ளி சிறுவனின் பாட புத்தகத்தில் இருப்பதை போன்று நாம் கருத்தில் கொண்டால், மஸீஹ் (அலை)அவர்களின் அவர்களின் இந்த போதனைகளை என்ன செய்வது இது கவலை கூறிய விஷயம் அல்லவா?

எனவே இஸ்லாத்தின் கடமைகளை ஆன்மிக ரீதியாக "லா இலாஹ இல்லல்லாஹ்" என்பது உண்மையான உயிருஉள்ள இறைவன் மீது நம்பிக்கை கொண்டு அதில் நிலைத்து நின்று பிறகு அமல்களுக்கான கடமைகள் செய்வதாகும். இன்ஷாஅல்லாஹ்.. ஆமீன்!

நீங்கள் எந்த முஸ்லீம் பிரிவு சகோதரராக இருந்தாலும் அல்லது மாற்று மத சகோதர்களாக இருந்தாலும் இந்த கட்டுரையால் உங்கள் மனம் வருத்த பட்டால் தயவு செய்து இறைவனுக்காக எங்களை மன்னியுங்கள்! ஒரு வேலை இதில் உண்மை உள்ளது என்று நினைத்தால் உங்கள் ஆன்மிக சகோதரகளுக்கு பகிருங்கள்., இன்ஷாஅல்லாஹ்.. உங்கள் மீதும் எங்கள் மீதும் அந்த ஏக இறைவன் அருள்புரிவானாக! ஆமீன் சும்ம ஆமீன். யா ரப்புல் ஆலமீன்.

-ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் -தமிழ்நாடு

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...