Skip to main content

நபிமார்களின் வருகை இறுதி நாள் வரைத் தொடரும்!

ஆதமின் மக்களே! எனது வசனங்களை உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடிய தூதர்கள் உங்களிடமிருந்தே நிச்சயமாக உங்களிடம் வரும்போது, இறையச்சத்தை மேற்கொண்டு திருத்திக் கொள்வோருக்கு (வருங்காலத்தைப் பற்றிய) எவ்வித அச்சமும் ஏற்படாது; அவர்கள் (சென்ற காலத்தைப் பற்றிக்) கவலையடையவும் மாட்டார்கள்.(7:36)

ஹஸ்ரத்‌ மிர்ஸா பஷீருத்தீன்‌ மஹ்மூத்‌ அஹ்மத்‌(ரலி) அவர்களின்‌ குர்‌ஆன்‌ விளக்கவுரையான தஃப்ஸீரே கபீர்‌ -ல்‌ வசனம்‌ எண்‌ 7:36க்கு இவ்வாறு விளக்கம்‌ அளித்துள்ளார்கள்‌:-

936. விளக்கவுரை:-

இந்த வசனமும்‌ இதற்க்கு முந்தைய வசனங்களைப்‌ போன்றே முக்கியமாக கவனிக்கப்படத் தகுந்ததாக இருக்கிறது (உ.ம்‌ 7:27,28 & 32).

"ஆதமுடைய மக்களே” என்று இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்‌ வார்த்தைகள்‌, முஹம்மது(ஸல்‌) அவர்களின்‌ காலத்திற்குரிய மக்களுக்கும்‌, இன்னும்‌ பிறக்காத (வருங்காலத்‌) தலை முறைகளுக்கும்‌ பொருந்துமே தவிர கடந்த காலங்களில்‌ வாழ்ந்த மக்களுக்கும்‌ ஆதமை நேரடியாகப்‌ பின்பற்றிய (ஆதமுடைய) மக்களுக்கோ பொருந்தாது. இது எந்தக் கண்ணோட்டத்தில்‌ இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறதென்றால்‌, மனித குலத்தின்‌ எதிர்கால தலைமுறை யினருக்குத்‌ தெரிவிக்க வேண்‌டிய ஒரு முக்கியமான விஷயம்‌ இங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன்‌ பலனாக, ஆதமுடைய மக்கள்‌ இப்பூமியில்‌ வாழும்‌ வரை, இறைவனின்‌ (புறமிருந்து) தூதர்கள்‌ இவ்வுலகில்‌ தோன்றிக்‌ கொண்டேதான்‌ இருப்பார்கள்‌. இதனால்‌, நபி(ஸல்‌) அவர்களை எதிர்ப்பவர்களாலும்‌, அவர்களுக்கு எந்த வீழ்ச்சியும்‌ வரப்போவதுமில்லை; (அதனால்‌) நபித்துவமும்‌ நிற்கப் போவதுமில்லை. ஆதமின்‌ காலத்தில்‌, ஆதமின்‌ சந்ததிகளுக்கு கொடுக்கப்பட்ட பெரிய வாக்குறுதியும்‌ (2:39), அதனடிப்படையில்‌ அல்லாஹ்வின்‌ தூதர்கள்‌ எல்லா காலகட்டங்களிலும்‌ பல்வேறு நாடுகளில்‌ உள்ள வெவ்வேறு சமுதாயங்‌களிலும்‌ தோன்றியதும்‌ யுகமுடிவு நாள்‌ வரை தொடர்ந்து நிறைவேறும்‌.

(இவ்வசனத்தின்‌), "உங்களிடமிருந்து தூதர்கள்‌ உங்களிடம்‌ வந்தால்‌” என்பதற்கு, இறைவனிடமிருந்து தூதர்கள்‌ வரலாம்‌ அல்லது வராமலும்‌ இருக்கலாம்‌ என்று பொருளல்ல. எப்படி யென்றால்‌, "என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வந்தால்‌” (2:39) (என்ற வசனத்தின்‌) வார்த்தைகளுக்கும்‌, என்னிடமிருந்து நேர்வழி வரலாம்‌ அல்லது வராமலும்‌ இருக்கலாம்‌ என்பது பொருளல்ல. உண்மையில்‌, 'ماا' (என்றால்‌/இருந்தால்‌) என்ற வார்த்தையின்‌ நோக்கம்‌ என்னவென்றால்‌, ஒரு தூதருடைய காலத்தில்‌ நீங்கள்‌ வாழ நேர்ந்தால்‌, நீங்கள்‌ அவரை ஏற்றுக் கொள்ளத்‌ தவறிவிடாதீர்கள்‌! என்பதைக்‌ குறிப்பதாகும். எனவே இந்த வார்த்தை காலத்தை முற்றிலுமாக (நாம்‌) நிர்ணயித்து விடாமல்‌ விட்டு விடவேண்டும்‌ என்று பொருள்படும்‌. (அதாவது) இறைவனின்‌ தூதர்‌, ஒரு தலைமுறையிலோ அல்லது இன்னொரு தலைமுறையிலோ தோன்றக்‌ கூடும்‌, ஆனால்‌ (அவ்வாறு) அவர்‌ தோன்றும்‌ போதெல்லாம்‌ அவர்‌ (இறைத் தூதர்‌) ஏற்றுக் கொள்ளப்பட வேண்‌டும்‌." என்னுடைய அடையாளங்களை உங்களுக்கு விளக்கினால்‌" என்ற வசனம்‌ உணர்த்துகின்ற உண்மை என்னவென்றால்‌, முஹம்மது(ஸல்‌), அவர்களுக்கு பிறகு வரும்‌ தூதர்கள் யாவரும்‌ எந்த புதிய சட்டத்தையும்‌ (ஷரியத்தை) கொண்டு வரப்போவதில்லை, ஆனால்‌ இஸ்லாத்தின்‌ சட்டத்தை முழுமையாக பின்பற்றச்‌ செய்வதற்கும்‌, ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும்‌' குர்‌ஆனின்‌ வசனங்களை அவர்கள்‌ விளக்கிக்‌ கூறுவதற்கு அல்லது, ஓதிக்காட்டுவதற்கு (வருகைத் தருவார்கள்‌).

(7:37). மேலும்‌ எம்முடைய வசனங்களை மறுத்து அகங்காரம்‌ கொண்டு அவற்றை புறக்கணிப்பவர்கள்‌, நரகத்திற்குரியவர் களாவர்‌. அவர்கள்‌ அதில்‌ நீண்ட காலம்‌ வரை தங்குவர்‌.

937. விளக்கவுரை:-

இவ்வசனம்‌ முஸ்லிம்களுக்கு ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கையை விடுக்கின்றது; அதாவது அவர்கள்‌ அவர்களிடையே தோன்றப் போகின்ற தூதர்களை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது, அவர்களை நிராகரிக்கவும்‌ கூடாது. நிச்சயமாக இச்சட்டம்‌ திருக்குர்‌ஆனில்‌ மிகச்சிறந்த முறையில்‌ கூறப்பட்டிருக்கின்றது. (ஆனால்‌ அதற்கு பிற்கால இறைத் தூதர்களை நிராகரித்தாலும்‌ தண்டனையிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்‌ என்று பொருள்‌ கிடையாது. மேற்குறிப்பிட்ட வசனங்களின்‌ விளக்‌கத்தின்‌ அடிப் படையில்‌ முஸ்லிம்களாகிய நாம்‌ அனைவரும்‌, இறைவனால்‌ அவனது விருப்பப்படி, தான்‌ தேர்ந்தெடுத்துள்ள காலகட்டத்தில்‌, தான்‌ தேர்ந்தெடுக்கின்ற தூதர்களை அனுப்பும்போது, கண் மூடித்தனமாக நிராகரிக்க முயற்சிக்காமல்‌ அவனது இறை வேதத்தில்‌ அவர்களுக்குரிய உண்‌மைத்துவத்திற்கு சாட்சியாக எதனைக் கூறியுள்ளானோ அவற்றை மட்டுமே அளவுகோலாகக்‌ கொண்டு அவர்களை அடையாளங்கண்டு கொண்டு ஏற்றுக் கொள்வதில்‌ முன்னணியில்‌ நிற்கச்‌ செய்வானாக! ஆமீன்‌!

“நீங்கள்‌ எல்லாரும்‌ இதிலிருந்து வெளியேறுங்கள்‌ என்னிடம் இருந்து உங்களிடம்‌ ஏதாவது நேர்வழி வருமாயின்‌ எனது நேர் வழியினைப்‌ பின்பற்றி நடப்பவர்களுக்கு (எதிர்காலம்‌ பற்றிய எந்த அச்சமும்‌ இருக்காது. (இறந்த காலம்‌ பற்றி) அவர்கள்‌ துயரம்‌ அடைய மாட்டார்கள்‌ என்று நாம்‌ சொன்னோம்‌”. (அல்குர்‌ஆன்‌ 2:39)

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...