Skip to main content

ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் மாதாந்திர தர்பியத்து கூட்டம் களியக்காவிளை கிளை!

களியக்காவிளை கிளையின் மாதாந்திர தர்பியத் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12/06/2022) நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

இக்கூடத்தில் தமிழக மாநில அமீர் முக்கராம் ஹஸ்ரத் ஸலீம் ஸாஹிப் அவர்கள், தப்லீக் செயலாளர் முக்கராம் கலீல் ரஹ்மான் ஸாஹிப், தர்பியத்
செயலாளர் நூர்தீன் ஸாஹிப், துணை பொதுசெயலாளர் நஸீர் ஸாஹிப், ஊடகத்துறை செயலாளர் ஜஃபருல்லாஹ் ஸாஹிப் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் முஹம்மது ரஃபி ஸாஹிப், அஜ்மல் ஸாஹிப், ஸபீர் ஸாஹிப், அத்தாஸ் ஸாஹிப் உள்ளிட்ட பல கிளைகளைச் சார்ந்த உறுப்பினர்களும் வருகைத் தந்து சிறப்பித்தார்கள்.

கிளை தர்பியத் செயலாளர் ஜனாப் ஸஜி ஸாஹிப்பின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் களியக்காவிளை ஜமாத்தின்
கிளை 
உறுப்பினர் ஜலீஸ் சாஹிப் அவர்கள் குர்ஆன் திலாவத் செய்தார்கள். மேலும் களியக்காவிளை கிளை உறுப்பினர் மற்றும் ஸிராஜ் மக்கீன் ஜவஹரத்துல் கமால் மாநில தர்பியத் செயலாளருமான சஃப் னா சாஹிபா அவர்கள், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை)அவர்களின் "துர்ரே ஸமீன்" என்னும் கஸீதா தொகுப்பிலிருந்து "ஹம்தோம் ஸானா உஸிகோ" என்ற நஸம் பாடினார்கள்.
நன்னடத்தை என்ற தலைப்பில் தலைமை உரையாற்றிய ஜனாப் ஸஜி ஸாஹிப் பேசுகையில், "இந்நூற்றாண்டின் இறைத் தூதரை ஏற்றுக் கொண்ட நாம் உலகிலேயே மிகச் சிறந்த அதிர்ஷ்டசாலிகள் என்றும், காலகட்டத்தின் கலீஃபத்துல்லாஹ் அவர்களின் உதடுகளிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அடிபணிவதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உண்மை அடியாராக மாற வேண்டும் என்று கூறினார்கள். அதனைத் தொடர்ந்து கிளைத் தலைவர் மற்றும் தப்லீக் செயலாளருமான ஜனாப் அஸீம் அஹமது ஸாஹிப் அவர்கள், "ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் அவர்களின்
ரிஸாலத்திற்கு முந்தைய கால (தூய) வாழ்க்கை; என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள். பின்னர் மாநில தப்லீக் செயலாளர் முக்கராம் கலீல் ரஹ்மான் ஸாஹிப் பேசினார்கள். அவர்கள் பேசுகையில், இப்போது தப்லீக் மற்றும்
தர்பியத் துறையில் (விஷயத்தில்) களியக்காவிளை கிளை முன்னணியில் இருப்பதாகவும், ஒவ்வொரு கிளையும் அவ்வாறே முன்னோக்கி செல்ல வேண்டும் என்று கூறியதோடு திருக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து நல்லொழுக்கம் போதனைகளைக் குறித்து சுருக்கமாகவும் அருமையாகவும் உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து மாநில தர்பியத் செயலாளர் ஜனாப் நூர்தீன் ஸாஹிப் அவர்கள் "தர்பியத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கம் குறித்து பேசியதோடு ஒவ்வொரு கிளைகளிலும்
இத்தகைய மாதாந்திர கூட்டத்தின்போது வழக்கமான திலாவதே குர்ஆன், நசம் மற்றும் சொற்பொழிவுகளுக்கு மேலதிகமாக அதாவது வழக்கமான திலாவத்தே குர்ஆன், நஸம் மற்றும சொற்பொழிவுகள் கூடாமல் வுளு, அதன் நோக்கம், பலதரப்பட்ட தொழுகை, அதன் முறைகள் மற்றும் பிஃக் தொடர்பான ஹதீஸ்கள் போன்றவை நடத்துவதற்கான புதிய வகுப்பு திட்டம் குறித்தும் விளக்கினார்கள். பின்னர் மாநில துணை பொதுச் செயலாளர் ஜனாப் நஸீர் ஸாஹிப்,
நம்பிக்கையாளர்களின் ஒற்றுமை குறித்து ஹதீஸின் போதனைகளின் அடிப்படையில் மிக அழகாகவும் மனம் கவரும் வாகையிலும் உரையாற்றினார்கள். தொடர்ந்து "ஸஹாபாக்களின் வாழ்க்கை" என்ற தலைப்பில் ஜனாப் முஹம்மது ரஃபி
ஸாஹிப் பேசியதை அடுத்து மதிப்பிற்கும் மரியாதைக்கும் கண்ணியத்திற்குமுரிய மாநில அமீர் முக்கராம் ஹஸ்ரத் சலீம் சாஹிப் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் தர்பியத் என்றால் என்ன? அதற்கு பொருள் - "கற்பது" என்பதல்ல மாறாக "கற்பித்தல்" என்பதாகும். என்றும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புறமிருந்து வந்த உண்மையான ஆன்மீகத்தை ஏற்று கொண்ட பிறகு, மிக உயர் தரமான இடத்தை அடைந்த நீங்கள் உங்கள் ஆத்மாவை (ரூஹ்) ஷைத்தானின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க "தர்பியத்"
மிக அவசியம் என்றும் அமீர் ஸாஹிப் அவர்கள் கூறினார்கள். நமது ஆத்மா அடைந்திருக்கும் உயர்ந்த இடத்தை பாதுகாக்க நாம் ஒரு ஆன்மீக வளையத்தை உருவாக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஷைத்தான் உங்களை அவ்விடத்தில் அமரவிடாமல் தூக்கி வீசி விடுவான் என்றும் ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் அவர்களின் போதனைகளின் ஒளியில் அமீர் ஸாஹிப் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். மேலும், "நான் நம்பிக்கைகொண்டுள்ளேன், அதனால் எனக்கு தர்பியத்தின் தேவையில்லை எனது எல்லா தவறு மற்றும் குற்றங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்" என்று கூறுவது முற்றிலும் முட்டாள்தனம் என்றும் நீங்கள் நம்பிக்கைகொண்ட பிறகு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுன்னத்தை பேணி நடக்காத வரை, நீங்கள் நல்லொழுக்கம் கொண்டவராக மாறாத வரை உங்கள் ஆன்மீகத்தை பாதுகாப்பது மிகக் கடினம் என்றும் ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் அவர்களின் போதனைகளை மேற்கோள் காட்டி அமீர் சாஹிப் அவர்கள் கூறினார்கள். தொடர்ந்து
மனிதனின் இயல்பான நிலைக்கும் நல்லொழுக்க ஆன்மீக நிலைக்கும் இடையிலுள்ள நெருங்கிய தெடர்பு குறித்து திருக் குர்ஆன் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் போதனைகளின் அடிப்படையில் பல்வேறு விளக்கமளித்த அமீர் ஸாஹிப் அவர்கள் தனது உரையின் இறுதியில் "இளைஞர்களுக்கான அறிவுரைகள்" என்ற தலைப்பில் ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய ஜும்ஆ பேருரையை மேற்கோள் காட்டி வழங்கிய அறிவுரை, கூட்டத்தில் கலந்துகொண்ட சகோதர சகோதரிகளுக்கு ஆன்மீக நிறைவைத் தரும் களமாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ் ஸும்மா அல்ஹம்துலில்லாஹ். "களியக்காவிளை கிளை பொருளாளர்" ஜனாப் ஐவர் ஸாஹிப் அவர்கள்
நன்றியுரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மாநில தர்பியத் செயலாளர் ஜனாப் நூர்தீன் சாஹிப் அவர்களின் தலைமையில் அஹது மற்றும் துஆ நடைபெற்றதையடுத்து விருந்து உபசரிப்புடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ். இந்த நிகழ்ச்சி அனைத்தையும் மதிப்புற்குரிய மாநில ஊடகத்துறை செயலாளர் ஜனாப் ஸபருல்லாஹ் ஸாஹிப் அவர்கள் நேரடியாக பதிவு செய்தார்கள். மேலும் ஜூம் மூலம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஜமாஅத்துல் சஹீஹில் இஸ்லாம் உறுப்பினர்கள் கண்டுகளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...