Skip to main content

எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் இறைதூதர்கள் தோன்றியுள்ளார்கள்:

முனீர் அஹ்மது அஸீம் (அலை)
காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) அவர்களின் வழிகாட்டல்:

இறைவன் எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் தனது இறைதூதர்களை அனுப்பியுள்ளான். எவ்வாறு, சூரியன் ஒட்டு மொத்த உலகிற்கும் ஒளியை ஏற்படுத்துவதைப் போன்றே, இறைவெளிப்பாட்டின் ஒளியானது பூமியின் எல்லை வரை இருளை நீக்கி எப்போதும் ஒளியூட்டுகின்றன. அதாவது, இப்போது ஒரு குறிப்பிட்ட மக்களிடையே இறைவெளிப்பாட்டின் ஒளியை நம்மால் காணமுடியவில்லை என்றால் அதற்காக அவர்களுக்கிடையே எந்த நபிமார்களும் தோன்றவில்லை என்று பொருளல்ல. மாறாக, இந்த மக்கள் யாவரும் தங்களது பாரம்பரிய மரபுகளையும், நம்பிக்கையையும் தங்களிடையே வைத்து கொண்டு அவர்களின் (நபிமார்கள்) செய்திகளை தங்களிடமிருந்து காணாமல் அழிந்து போகவிட்டுவிட்டனர் என்பதே உண்மையாகும். மேலும், இத்தகைய கோட்பாட்டின் அடிப்படையில்தான் எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் இறைதூதர்கள் என்ற அடிப்படையில் அந்த ஏக இறைவன் தூதர்களையும், நபிமார்களையும், சீர்திருத்தவாதிகளையும் இன்னும் குறிப்பாக கூறினால் இந்திய நாட்டில் தோன்றிய நபிமார்களான கிருஷ்ணர்(அலை), ராமர்(அலை), மற்றும் புத்தர்(அலை) போன்ற அனைத்து இறை நேசர்களின் உண்மைத்துவமும் அமைந்துள்ளது. இன்னும் உங்களுக்கு விளக்கமாக கூறுவதென்றால் அவர்களின் வாதங்களை நிராகரிப்பது என்பது, உலகளாவிய அளவில் இறைவனுடைய இருப்பையே நிராகரிப்பதற்கு சமமாகும். ஏன் சிலரை மட்டும் ஏற்றுக்கொண்டு சிலரை நிராகரிக்கின்றார்கள்? ஏன் அனைவரும் இறைவன் புறமிருந்து வருவதாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார்கள்? மேலும், இத்தகைய கோட்பாடுகள், எந்தவொரு பிரிவின் போதனைகளிலோ, அல்லது எந்தவொரு மார்க்கத்தின் போதனைகளிலோ காணப்படும் கருத்தானது அல்ல. இருப்பினும் இம்மக்கள் இவ்வாறு நடப்பதற்கான காரணம், இறைவெளிப்பாடுகள்யாவும் அவர்கள் பின்பற்றும் அந்தந்த குறிப்பிட்ட மார்க்கங்களின் தோற்றுனர்களுடன் நின்று போய்விட்டதாகவே பெரும்பாலான மக்கள் நம்புவதே ஆகும். இத்தகைய வெளிப்பாடுகள், ஏனைய மார்க்கங்களில் உள்ள நல்லடியார்களுக்கு அருளப்படுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். அது எவ்வாறெனில், இவ்வுலகில் இறைவனின் இருப்பு பற்றிய சித்தாந்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, மனிதகுலத்தின் நலனுக்காக அந்த மார்க்கங்களின் தோற்றுனர்கள் ஆற்றியச் சேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களையே போற்றிப்புகழ்ந்து வணங்குகின்றனர்.

-ஜுமுஆ 06.02.2015

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...