Skip to main content

காத்தமுல் குலபா ஹஸ்ரத் மஸீஹ் அலை அவர்களின் அழகிய வழிகாட்டல்

ஹாத்தமுல் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ்(அலை)  அவர்களின் அழகிய வழிகாட்டல்

“ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அதே மாதிரியான கஷ்டங்கள் நமது ஜமாஅத்திற்கும் ஏற்பட்டுள்ளன. புதிதான, முதன்முதலான கஷ்டம் என்னவென்றால், ஒருவர் இந்த ஜமாஅத்தில் சேரும்போது உடனே அவருடைய நண்பர்கள், உறவினர்கள், சகோதரர்கள் தனித்து பிரிந்துவிடுகிறார்கள். எதுவரையென்றால், சில நேரங்களில் பெற்றோர்கள், சகோதர, சகோதரிகளும் எதிரியாகி விடுகின்றார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறுவதைக் கூட ஆகுமானதாகக் கருதுவதில்லை. ஜனாஸா தொழ விரும்புவதில்லை.

இவ்விதமான பல கஷ்டங்கள் ஏற்படுகின்றன. சில பலவீனமான இயல்பைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.அவர்கள் அத்தகைய கஷ்டங்களின்போது நடுங்கிப் போய்விடுகிறார்கள். ஆனால் இந்தமாதிரியான கஷ்டங்கள் வருவது அவசியமாகும் என்பதை நினைவிற் கொள்ளுங்கள். நீங்கள் நபிமார்களையும், ரஸூல்மார் களையும் விட மேலானவர்கள் அல்ல. அவர்களுக்கும் இந்த மாதிரியான கஷ்டங்கள் வந்தன. இறைவன் மீதுள்ள ஈமான் உறுதியாவதற்கும், தூய மாற்றமடைவதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கும் துஆக்களில் ஈடுபடுவதற்கும்தான் இவை வருகின்றன. எனவே நீங்கள் எல்லாநபிமார்கள், ரஸூல்மார்களையும் பின்பற்றுங் கள்; மேலும் பொறுமையின் வழிகளை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. உண்மையை ஏற்றுக் கொண்டதனால் உங்களை விட்டுப் பிரிகின்ற நண்பர் உண்மையான நண்பர் அல்லர். இல்லையென்றால், அவர் உங்களுடன் இருந்து உங்களுக்கு ஒத்துழைப்பும் கொடுத்திருப்பார். நீங்கள் இறைவனால் நிலைநாட்டப்பட்ட ஜமாஅத்தில் இணைந்த ஒரே காரணத்திற்காக உங்களை விட்டுப் பிரிகின்ற வர்களுடன் நீங்கள் சண்டையிடாதீர்கள் அல்லது குழப்பம் செய்யாதீர்கள். மாறாக அல்லாஹ் தன் அருளினால் உங்களுக்கு வழங்கிய அதே அகப்பார்வையையும், இறை ஞானத்தையும் அவர்களுக்கும் வழங்குமாறு, அவர்களுக்காக மறைமுகமாக துஆ கேளுங்கள். நீங்கள் உங்கள் தூய முன்மாதிரியினாலும், அழகிய நடத்தையினாலும், நீங்கள் நல்லவழியை மேற்கொண்டுள்ளீர்கள் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். பாருங்கள். நான் உங்களுக்கு இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் தெளிவு படுத்துவதற்காகத்தான் நியமிக்கப் பட்டிருக்கிறேன். அதாவது, எல்லாவிதமான குழப்பமான இடங்களிலிருந்து விலகியிருங்கள். ஏச்சுப் பேச்சுகளைக் கேட்டும் பொறுமையாக இருங்கள். தீமைக்கு, நன்மையைக் கொண்டு பதிலடி கொடுங்கள். எவராவது குழப்பம் செய்யத் திட்டமிட்டால் நீங்கள் அந்த இடத்திலிருந்து நழுவிச் சென்று விடுவது சிறந்ததாகும். மேலும் மென்மையாக பதில் கொடுங்கள். பலமுறை இப்படியும் நடக்கின்றது. ஒருவர் மிகவும் ஆவேசத்துடன் எதிர்க்கின்றார். குழப்பத்தை உருவாக்கும் முறையை எதிர்ப்பில் கையாள்கின்றார். அதனால் கேட்பவர்களுக்கு வெறியைத் தூண்டும் அளவுக்கு அதுஇருக்கிறது. ஆனால் முன்னால் இருந்து மென்மையாக பதில் கொடுக்கும்போது, ஏச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கும்போது எதிரிக்கே வெட்கம் ஏற்பட்டு விடுகிறது. அவர் தான் செய்தது பற்றி வெட்கப்படுகின்றார்; நாணம் கொள்ள ஆரம்பித்து விடுகின்றார். பொறுமையை கைவிட்டு விடாதீர்கள் என நான் உண்மையாகவே, உண்மையாகவே உங்களுக்குக் கூறுகின்றேன். பொறுமை எத்தகைய என்றால், பொறுமையினால் நடக்கும் வேலைபீரங்கிகளாலும் நடக்க முடியாது.
பொறுமைதான் உள்ளங்களை வெற்றி கொள்கின்றது” (மல்ஃபூஸாத் தொகுதி 4 பக்கம் 157)

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...