இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தவ்ராத் வேதத்தை கொடுத்து அவர்களைப் பின்பற்றி வருவதற்கு கலீபாக்களை ஏற்படுத்தினான். அவர்களின் உம்மத்தில் தாவூது அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம், இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் முதலான "நபிமார்கள் கலீபாக்களாக தோன்றி" இறுதியில் 14ஆம் நூற்றாண்டில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கலீபாவாக தோன்றினார்கள். அதேபோன்று அல்லாஹ் காத்தமன் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கான் வேதமான இஸ்லாத்தை கொடுத்து அவர்களைப் பின்பற்றி வருவதற்கு கலீபாக்களை ஏற்படுத்தினான். அன்னாரின் உம்மத்தில் "பனி இஸ்ராயில் நபிமார்களுக்கு ஒப்பான" "முஜத்தித் மார்கள் கலீஃபாக்களாக" தோன்றி இறுதியில் 14ஆம் நூற்றாண்டில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மஹ்தி ஹஸ்ரத் "அஹமத் அலைஹிஸ்ஸலாம்" கலீஃபாவாக தோன்றினார்கள். இதைப் பற்றியே திருக்குர்ஆன் 24:56ல் கூறுகின்றான். (தூதன் பிப்ரவரி 1960 கொழும்பு; மலர் 34, இதழ் 2 )
وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன் அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன் ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...