இறைவன் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தவ்ராத் வேதத்தை கொடுத்து அவர்களைப் பின்பற்றி வருவதற்கு கலீபாக்களை ஏற்படுத்தினான். அவர்களின் உம்மத்தில் தாவூது அலைஹிஸ்ஸலாம், சுலைமான் அலைஹிஸ்ஸலாம், இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் முதலான "நபிமார்கள் கலீபாக்களாக தோன்றி" இறுதியில் 14ஆம் நூற்றாண்டில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கலீபாவாக தோன்றினார்கள். அதேபோன்று அல்லாஹ் காத்தமன் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு புர்கான் வேதமான இஸ்லாத்தை கொடுத்து அவர்களைப் பின்பற்றி வருவதற்கு கலீபாக்களை ஏற்படுத்தினான். அன்னாரின் உம்மத்தில் "பனி இஸ்ராயில் நபிமார்களுக்கு ஒப்பான" "முஜத்தித் மார்கள் கலீஃபாக்களாக" தோன்றி இறுதியில் 14ஆம் நூற்றாண்டில் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மஹ்தி ஹஸ்ரத் "அஹமத் அலைஹிஸ்ஸலாம்" கலீஃபாவாக தோன்றினார்கள். இதைப் பற்றியே திருக்குர்ஆன் 24:56ல் கூறுகின்றான். (தூதன் பிப்ரவரி 1960 கொழும்பு; மலர் 34, இதழ் 2 )
மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா? அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...