Skip to main content

காலத்தின் இமாமின் அறிவுரை!

எனது அன்பிற்குரிய ஸஹாபிகளே,
முஸ்லீம் பெருமக்களே, மற்றும் ஒட்டு மொத்த மனித சமுதாயமே மிகவும் பணிவுடனும், அமைதியுடனும் இஸ்லாத்தில் நுழையுங்கள். உங்கள் செயல்களால் இந்த அழகிய மார்க்கத்தின் மாண்பை இழக்கச் செய்து விடாதீர்கள். மேலும் உங்கள் செயல்களை உங்கள் உள்ளத்தின் இறையச்சத்துடன் செய்யுங்கள். இவ்வாறு இறையச்சம் எனும் தக்வாவுடன் செய்யும் போது தீமைக் கலவாத நன்மையானச் செயல்களைச் செய்யும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்கின்றது.

இஸ்லாம் ஒரு பரிபூரண மற்றும் சிறந்த வாழ்வியல் தத்துவமாகும். இந்த மார்க்கம் நம்மை சீர்ப்படுத்துவதுடன், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் இறைவன் என்ன நாடுகிறானோ அதைநோக்கி வழி நடத்துகிறது. ஏனென்றால் இந்த மார்க்கத்தில் இறைவனுடையக் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்படுவதன் மூலம், நமது வாழ்வை அர்ப்பணித்து இந்த மார்க்கத்தை உலகத்தில் மிளிரச் செய்கின்றோம். மேலும் இறைவனுடன் வேறு எதையும் இணைவைக்காதீர்கள். அல்லாஹ் ஒருவனே உண்மையான இறைவனாவான். இஸ்லாம் என்னும் மார்க்கத்தின் பாதையில் ஞானம், கருணை மற்றும் இறையச்சத்துடன் பயணம் செய்யுங்கள். மேலும் இறையச்சம் மற்றும் அவனது அன்பின் மூலம் அவனது பாதுகாப்பு என்னும் கதவைத் திறந்து உங்கள் வாழ்வின் அனைத்து ஷைத்தானிய ஈர்ப்பிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இன்னும் இஸ்லாத்தை உங்களிடம் ஆணித்தரமாக வேரூன்றச் செய்து பிறருக்கு முன், அழகிய முன்னுதாரணத்தை வெளிப்படுத்துங்கள். இதற்காக உங்களின் நப்ஸுடனும் சண்டையிடுங்கள். மேலும் நீங்கள் இறைவனுக்காவும் அவனதுத் திருப்தியை நாடி சண்டையிடுங்கள். இன்னும் எப்போதும் இறைவனையே முதன்மைப் படுத்துங்கள். இதன் மூலம் பெயரளவில் முஸ்லிம்களாக இருக்காமல் உண்மையான முஸ்லீம்களாகி விடுங்கள். அப்போது மற்றவர்கள் மிகுந்த மதிப்பையும், போற்றுதலையும் உங்கள் மீதுக் கொள்வார்கள். ஏனென்றால் நீங்கள் உண்மையான முஸ்லீம்களாக ஆகும் போது அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் உங்கள் மீதுத் திருப்திக் கொள்கின்றான். இன்னும் இறைவன் உங்களை நேசித்தால் அவன் உங்களுக்காக அவனது எல்லையற்றக் கருணையை உங்கள்மீது இறக்கி, உங்களுக்காக அவனது சொர்க்கத்தின் வாசலைத் திறப்பான். ஏனென்றால் நமது இறைவனின் உன்னதமானக் கருணை எல்லையற்றதாகும்.

எனவே, எனது அன்பிற்குரியவர்களே... நீங்கள் அனைவரும் உண்மையான முஸ்லீம் ஆகிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கேட்டு அதை நடைமுறைப் படுத்துங்கள். ஒருபோதும் சாத்தானின் பித்ததுகளிலும், இணைவைப்பதிலும் வீழ்ந்து ஷிர்க்கிற்கு அடிமையாகி விடாதீர்கள். இன்னும் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கேட்டு அதை நடைமுறைப் படுத்துங்கள். மேலும் உங்களின் ரூஹுவை அல்லாஹ்விற்கு எதிரானப் பொய்யிலிருந்துப் பாதுகாத்து அவனது உண்மையின் பக்கம் அழைத்துச்செல்லுங்கள்.

வாருங்கள் இறைவனின் பேரருளின் பக்கம். மேலும் ஷைத்தானின் பக்கம் சாய்வதிலிருந்து விலகுவதன் மூலம் உண்மையான இரட்சிப்பை அடையுங்கள் இன்ஷாஅல்லாஹ்.. மேலும் அல்லாஹ் உங்களதுத் தேடலைப் பூர்த்திச்செய்து, அவனதுத் திருப்தியையும் உண்மையானத் தவ்ஹீதையும் உணர அருள்புரிவானாக! இதன் மூலம் உங்களின் ஒவ்வொரு நாளும் முழுமையான இஸ்லாத்தில் வாழச் செய்வானாக! இன்ஷாஅல்லாஹ் ஆமீன்.

ஜுமுஆ பேரூரை 20.05.2022 - ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...