Skip to main content

சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் இறை அருளின் நோக்கம்!

ஹஸ்ரத் முஹையுதீன்

அல் 
கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) போதிக்கின்றார்கள். 

அல்லாஹ் தனதுத் தூதருடைய உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்காக, இறை வெளிப்பாட்டைத் தாராளமாக ஒரு சத்தியத்தைத் தேடுபவருக்கு கிடைக்கச் செய்கின்றான். அத்துடன், அவரை "பரிசுத்த ஆவியுடனும் பேச வைக்கின்றான்". இவ்வாறு பரிசுத்த ஆவியை அவர் அடைவதன் மூலம்,
அவருக்கு அல்லாஹ்வின் மீதும், அவன் அனுப்பிய தூதரின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டு, அந்நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்க்கும் அதுக் காரணமாக அமைகின்றது. எனினும் இத்தகைய அருட்கொடையைப் பெற்றவர்கள், அல்லாஹ்வுடைய தூதரின் மீது பொழியப்படும் இவ்வாறான இறை வெளிப்பாடுகளுக்கு சாட்சியாகவும் இருக்கின்றார்கள். அத்துடன், அல்லாஹ்வுடைய தூதருடைய உண்மைத்துவத்தையும், இறை வெளிப்பாடுகளையும் உறுதிப்படுத்தும் வகையில் தாங்களே அவ்விறை வெளிப்பாடுகளைப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். அவ்வாறு இருந்தபோதிலும், சிலரோ இவ்வாறு பெறப்படும் அவ்விறை வெளிப்பாடுகள் அனைத்தையும் தங்கள் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள வெறும் மாயை என்பதாகக் கருதி, அவை அனைத்திலிருந்தும் தங்களுடைய முகங்களை அவர்கள் திருப்பிக் கொள்கின்றார்கள். இதுவொரு மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். இவ்வாறான மக்களே மக்களில் மிகவும் துரதிர்ஷ்டமானவர் ஆவார்கள். ஏனெனில், அவர்கள் சத்தியத்தை உணர்ந்துக் கொண்டதன் பிறகும், அச்சத்தியத்தை அசத்தியம் என்றும் மாயை என்றும் கூறுகின்றார்கள். இதனையே, இறை சத்தியத்திலிருந்து தங்கள் முதுகுகளை திருப்புவதற்கு ஒரு சாக்காகவும் கூறுகின்றார்கள்.

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...