Skip to main content

எது மார்க்கத்தின் அருள்?

உண்மையில் இஸ்லாத்தின் வெற்றி மற்றும் அருள் என்பது கூட்டம் கூட்டமாக மக்கள் பையத் செய்வதோ அல்லது அனைத்து நாடுகளிலும் பள்ளி கட்டுவது மட்டுமா? அல்லது பல்வேறு நாடுகளின் பார்லிமென்டில் உரையாற்றுவதா!? எது மார்க்கத்தின் அருள்?

ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் நமக்கு விட்டு சென்ற போதனையை கவனமாக கேளுங்கள் சகோதரர்களே!

இறைவா! உனது அருள்களை பெற்றவர்களின் நேரான உறுதியான பாதையை எங்களுக்கு காட்டித்தருவாயாக! (திருக்குர்ஆன் 1:6-7)

இங்கு இறைவன் குறிப்பிடும் "அருள்" என்பதன் பொருள் இல்ஹாம் மற்றும் கஷ்ஃப் போன்ற இறைஞானமே ஆகும்.

சகோதரர்களே! மஸீஹ் (அலை) கூறிய "அருள்" உங்களிடம் உள்ளதா? உங்கள் தலைவர்களையும் பொறுப்பாளர்களையும் விடுங்கள் தங்கள் வாழ்க்கையை இஸ்லாத்திற்காக அர்பணிப்பதாக கூறும் உங்கள் மௌலவிகளிடம் உள்ளதா? ஏன் சிந்திக்க மறுகின்றீர்கள்?

மேலும் இதற்கு நேர் எதிர் மாறாக மஸீஹ்(அலை) கீழ் காணும் இறை வசனத்திற்கு விளக்கம் அளிக்கும்போது:-

"எங்கள் இறைவன் அல்லாஹ் எனக் கூறி, இக்கொள்கையில் நிலைத்திருப்பவர்களிடம், நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; கவலையடையவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு வானவர்கள் இறங்குவார்கள்)". (41:31)

இது நம்பிக்கை கொண்டோருக்கு இறைஅறிவிப்பை உறுதி செய்கின்றது, என்று அன்னார் நமக்கு போதித்தது மறந்தது ஏன்?

இந்த உண்மையை ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் கேட்டால் அவர்கள் நயவஞ்சகர்கள், பொய்யர்கள், காய்த்து போன கிளைகள் (நஊதுபில்லாஹ்)

காலத்தின் இமாமை ஏற்றுக்கொண்டதன் மூலம் நாங்கள் உறுதியாக உங்களிடம் கூறுகின்றோம் இந்த "அருள்" எங்களிடம் உள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கு பிறகும் எங்களை பொய்யர்கள் என்று நீங்கள் கருதினால் இன்னும் உங்களிடம் இந்த அருள் உள்ளது என்று நீங்கள் ஆணித்தரமாக நம்பினால் வாருங்கள். உங்கள் மௌலவிகளுடன் இறைவனின் நீதி மன்றத்திற்கு முன் சத்தியம் செய்வோம். இன்ஷாஅல்லாஹ்!

பொய்யர்களை அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் சுபஹானஹுதாலா அழிக்கட்டும். முடியவில்லை என்றால் இறைவனின் இந்த அருளை ஏற்றுகொள்ளும் பாக்கியத்தை பெறுங்கள். இன்ஷாஅல்லாஹ்! ஆமீன்

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...