Skip to main content

இறை வஹீ

09 மார்ச் 2020 அன்று ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்களுக்கு இறங்கிய இறை வஹீ:-

பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்

Wa maa kaana li-nafsin ‘antu’ mina ‘illaa bi-’Iz-nillaah: wa yaj-’alu-rijsa ‘alal-laziina laa ya’- qiluun.

(எல்லா நாடுகளிலும் தன்னுடைய இந்த ஜமாஅத்தை அதாவது ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தை அவன் பரப்புவான் என்பதையும், சான்றுகள் மற்றும் ஆற்றல் மிக்க வாதத்தின் அடிப்படையில் மற்ற அனைவருக்கும் மத்தியில் மேலோங்க செய்வான் என்பதையும் அல்லாஹ் இன்று எனக்கு வெளிப்படுத்தியுள்ளான்.)

"என்னுடைய கலீஃபா முனீர் அஹ்மது அஸீமே! உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள். உமது படைப்பாளனின்பால் மக்களை அழையுங்கள். இதற்காகவே உம்மை அனுப்பியுள்ளோம். நீர் என்னுடைய கலீஃபாவாக இருக்கின்றீர்கள். எனவே படைப்பினங்களை விட்டு விட்டு படைத்த எனக்கே கட்டுப்படுவீராக! அந்த நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் அவை வாசலின் அருகே உள்ளன. இந்த மார்க்கம் மட்டுமே முழு உலகிலும் பிரதானமாக இருக்கும். உலகின் அனைத்து நாடுகளும் உமக்கு கீழ் வந்துவிடும். உம் மீது நம்பிக்கை கொள்ளும் அனைத்து மக்கள் மீதும் நான் அருட்கொடைகளை பொழிவேன். மேலும் எல்லோரும் உங்கள் மீது மிகுந்த மரியாதையை செலுத்துவார்கள். உங்கள் எதிரிகள் அனைவரும் அழிவையும், தோல்வியையும் எதிர்கொள்வார்கள். நான் உம்முடன் இருக்கிறேன். எனக்கு மட்டுமே கிழ்படியுங்கள்”.

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...