Skip to main content

உண்மை இஸ்லாம்

இஸ்லாம் இரண்டு நிலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது :-

ஒன்று மறைவான அம்சத்தையும், இரண்டாவதாக வெளிப்படையான நிலையையும் உள்ளடக்கியது. அதாவது முதல் நிலையை பொருத்தளவில், அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் மீது ஈமான், நேசம், நம்பிக்கை மற்றும் உண்மைத் தன்மையை குறிக்கின்றது. இரண்டாவது நிலை, முதல் நிலையை வெளிப்படையாக பிரதிபலிக்கக் கூடிய, இன்னும் குறிப்பாக இதில் எந்த அளவிற்கு நாம் மதிப்பு மற்றும் பற்றுதலுடன் இருக்கின்றோம் என்பதை நமது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அமல்களும், மேலும் புனித திருக்குர்ஆன் கூறும் சுன்னத்துகள், ஹராம் மற்றும் ஹலால் ஆகியவற்றை பேணுவதையும் குறிக்கிறது. இங்கு நாம் உணர வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் ஒரு போதும் மறைவானவற்றில் இருந்து வெளிப்படையான நிலையை பிரிக்க முடியாது. இன்னும் கூறவேண்டும் என்றால் இவ்விரண்டையும் சேர்த்துதான் முழுமையானதொரு இஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது

இத்துடன் எனது இந்த ஜும்ஆ குத்பாவை நிறைவு செய்கின்றேன். இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் நாடினால் இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் தொடர்வேன், மேலும் அல்லாஹ் உங்களுக்கு இந்த ஜும்ஆ சொற்பொழிவை புரிந்து கொள்ளும் ஆற்றலை வழங்குவானாக.இதன் மூலம் மனித குலம் மட்டுமல்லாமல், அழகிய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லீம்களும், உண்மை இஸ்லாத்தின் மாண்பு மற்றும் மனிதகுலத்தின் மதிப்பை அறிந்து கொள்ள முடியும். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் .. வெறும் நாவினால் பேசுவதற்கும் அதை நடைமுறை படுத்துவதற்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது. ஏன் இவ்வாறு கூறுகின்றேன் என்றால் நீங்கள் உண்மையான முஸ்லீம்கள் என்று கூறினால் அந்த அழகிய இஸ்லாத்தின் மதிப்பு உங்களிடமிருந்து பிரதிபலிக்க வேண்டும் . வெறும் உதட்டளவில் நான் முஸ்லீம் அல்லது இந்த நூற்றாண்டின் கலீஃபத்துல்லாஹ்வை ஏற்றுக் கொண்டேன் என்று கூறுவதற்கு சில நொடிகள் போதும். ஆனால் அதை நடைமுறை படுத்துவதில் தான் அந்த மேலான சிறப்புள்ளது. அந்த ஏக இறைவன் உங்கள் மீது மேலான அருளை பொழிந்து இந்த நூற்றாண்டின் தூது செய்தியை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளான். மேலும் உங்களை இந்த நூற்றாண்டில் அந்த அழகிய இஸ்லாத்தை பிரதிபலிக்கும் ஆற்றலையும் ஒரு பேரருளாக வழங்கியுள்ளான். எனவே இப்போது உங்களின் கடமை நீங்கள் உங்களுடன் போராடி, உங்களுக்குள் இறைவன் நாடும் அந்த அழகிய இஸ்லாத்தை மிளிர செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு உண்மையான முஸ்லீம் சகோதர, சகோதரிகளாக ஒரே அணியாக நின்று, இந்த அழகிய உண்மை இஸ்லாத்தை உலகத்தின் எல்லை வரை எட்ட வைத்து, இந்த மகிமை மிக்க இஸ்லாத்தை வெற்றியின் பக்கம் முன்னேற செய்ய வேண்டும் இன்ஷாஅல்லாஹ் ஆமீன்.

-ஜுமுஆ பேரூரை 21.01.2022-ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...