Skip to main content

ஆலிம்களே! அஹ்மதி மௌலவிகளே! உங்களிடம்தான் கூறுகின்றார்கள்!

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஆலிம்களை நோக்கி கூறுகின்றார்கள்:

"நான் என்னை எதிர்க்கின்ற உலமாக்களிடமும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் கூறுவேன், ஏசுவதும், தர குறைவாக பேசுவதும் நல்ல பண்பாடாகாது. அது வெட்கக்கேடானது. ஆயினும், இதுவே உங்களின் இயல்பானால் அது குறித்துக் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

நீங்கள் என்னை ஒரு பொய்யன் என்று கருதினால் பள்ளி வாயில்களில் கூடி கூட்டாகவோ, தனித்தனியாகவோ எனக்கெதிராக துஆ செய்யுங்கள்.

நான் ஒரு பொய்யன் என்றால் நிச்சயமாக உங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் எனக்கெதிராக துஆ செய்து கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய நாவுகள் புண்ணாகும் வண்ணம் நீங்கள் வேண்டினாலும், உங்கள் மூக்கு தேய்ந்துவிடும் அளவுக்கு சஜ்தாவில் விழுந்து அழுது துஆ செய்தாலும்,

கண்ணீர் வழிந்து கண்கள் அழுகி போகும் நிலை ஏற்பட்டாலும்,

காக்கை வலிப்பு ஏற்படும் அளவுக்கு நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு துஆ செய்து வந்தாலும் நிச்சயமாக உங்களின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

ஏனெனில், நான் இறைவன் புறமிருந்து வந்தவனாவேன்.

எனக்கெதிராக எவர் சாபமிடுவாரோ அது அவரிடமே திரும்பும். பாருங்கள்!

நூற்றுக்கணக்கான நல்லறிஞர்கள் உங்களிலிருந்து வந்து நமது ஜமாத்தில் இணைகின்றனர்.

வானத்தில் ஓர் ஓசை எழுப்பப்டுகிறது.

வானவர்கள் தூய இதயமுள்ளவர்களை என் பக்கம் கொண்டு வருகின்றனர்.

இந்த ஆன்மீக நடவடிக்கைகளை மனிதனால் தடை செய்ய இயலுமா?

உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள்.

நபிமார்களுடைய எதிரிகள் செய்த எல்லா முறைகளையும் தந்திரங்களையும் நீங்களும் செய்து பாருங்கள்.

எதையும் விட்டு வைக்காதீர்கள்...

பின்னர் உங்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை பாருங்கள்.

இறை அடையாளங்கள் மழையைப் போல் இறங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் நற்பேரிழந்த மனிதன் தொலைவில் நின்று மறுப்பு தெரிவிக்கிறான்.

எவருடைய உள்ளத்தில் முத்திரையிடப் பட்டுள்ளதோ அவர்களுக்கு என்ன மருத்துவம் பார்க்க முடியும்? இறைவா நீ இந்த சமுதாயத்தின்மீது கருணை கட்டுவாயாக! ஆமீன்." (அர்பயீன்)

Popular posts from this blog

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன்பு) என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன். அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன். அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன். பிறகு, வாகனங்கள், சொகுசு வாகனங்களும் கூட ஒதுக்கி வைக்கப்படும் ஒரு காலம் வரும் என்றும், அதனால் குதிரைகளும், பிற விலங்குகளும் போக்குவரத்து முறைகளாகவும், அதன் மதிப்பு/முக்கியத்துவம் அதிகரித்து விடும் என்றும் இது குறித்து நான் முன்பே கூறியிருந்தேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். Then, I saw myself in a place where a tall [imposing] and great [in personality] woman in white appeared before me. She was the wife of a great prophet of Allah and was born in Hindustan [India]. Her name was Saraswati but in the dream I addressed her as Hajra [both names] and realised that she was the wife of Hazrat Ibrahi...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.