Skip to main content

ஆன்மீக பிச்சைக்காரர்கள்!

ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) கூறுகின்றார்கள்:-

இறைவனின் தூய உரையாடல் என்னும் அருளைப் பெற்றவர்கள் அவர்கள் மூலம் அசாதாரண நிகழ்ச்சிகள் நிகழ்கின்றன. அவர்களுடைய துஆக்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவர்கள் செய்யும் துஆக்களுக்கு இறைவனிடமிருந்து மிகுதியாக பதில்கள் கிடைக்கின்றன. இவ்விடத்தில் சில அறிவீனர்கள், தாங்களும் உண்மையான கனவுகள் காணுதலும், சில சமயங்களில் தங்களின் 'துஆக்களும்' ஏற்றுக் கொள்ளப்படுவதாலும், சிலவேளை, 'இல்ஹாம்' பெறுவதாலும், எங்களுக்கும் இறைத் தூதர்களான நபிமார்களுக்கும்என்ன வேறுபாடு உள்ளதென்றும் வினவுவார்கள். இதற்குக் காரணம் என்னவெனில், அவர்களின் கருத்தின்படி இறைவனுடைய நபி ஏமாற்றுகிறவராகவோ,ஏமாற்றப்பட்டவராகவோ இருக்கிறார். ஒரு சாதாரண விஷயத்தில் பெருமையடிக்கக் கூடியவர்;மற்றவர்களுக்கும் அவருக்குமிடையே எந்தவித வித்தியாசமுமில்லை. இந்த எண்ணமே ஆணவமுடைய ஒன்றாகும். இதனால் மக்களில் பலர் இக்காலத்தில் அழிவுக்குள்ளா கின்றனர். ஆயினும் உண்மையைத் தேடுகின்றவர்களுக்கு, இப்படிப்பட்ட ஐயங்கள் எழுமானால் தெளிவான பதில் தர முடியும். அதாவது, இறைவன் தன் தனிச்சிறப்பான அருளாலும் அருட்கொடைகளாலும் ஒரு கூட்டத்தை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தன் ஆத்மீக அருளின் பெரும்பகுதியைவழங்கியுள்ளான் என்பது ஐயத்துக்கிடமில்லாத ஒரு உண்மையாகும். எனவே எதிரிகளான இக்குருடர்கள், எப்பொழுதும் நபிமார்களை மறுப்பவர்களாக இருந்த போதிலும் அவர்களை இறைத்தூதர்கள் வென்றே வந்துள்ளனர். மேலும், அவர்களுக்கும்இறைத்தூதர்களுக்குமிடையே ஒரு மாபெரும் வேறுபாடு இருப்பதை, அறிவுடையார் இறுதியில் ஏற்றுக்கொள்ளும் அளவு நபிமார்களிடமிருந்து ஓர் அற்புத ஒளி வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வேறுபாட்டை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் கூற வேண்டுமாயின், "பிச்சை எடுக்கும் ஒருவனிடமும் சில நாணயங்கள் இருக்கும்; ஒரு மாமன்னரின் கருவூலத்திலும் நாணயங்கள் நிரம்பி இருக்கும். ஆனால் அந்த மாமன்னருக்கு ஒப்பானவராகத் தன்னை பிச்சைக்காரன் கூற இயலாது' (லெக்சர் ஸியால்கோட்

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...