Skip to main content

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் ஸஹாபிகளின் அழகிய புரிதலுக்கும் தற்போதுள்ள அஹ்மதிகளின் புரிதலுக்கும் உள்ள வேறுபாடு!

ஹைருத்தீன் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் எனது பணிவின் காரணமாக இதைக் கூறவில்லை. மாறாக நான் கூறுவது உண்மையாகும். நான் பாவியாக இருந்தேன். இப்போது நான் கூறும் இந்த விஷயம் உறுதியாக ஆம் உறுதியாக நான் நபித்துவத்தின் ஒளியினாலேயே கூறுகின்றேன். என் தரப்பிலிருந்தும் இதை நான் கூறவில்லை. ஏனென்றால்

ஹஸ்ரத் மஸீஹ் மவ்வூது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்.

நான் இறைவனின் ஒளியாக இருக்கின்றேன். அதன் மூலமே பகல் வெளிப்பட்டது என்று கூறியுள்ளார்கள். எனவே, இது மிக உறுதியான விஷயமாகும். எவர் ஒளியுடன் தொடர்பை ஏற்படுத்துவாரோ

அவருக்கு அந்த ஒளியிலிருந்து நிச்சயமாக பங்கு கிடைக்கும். இந்த விஷயமும் மிகவும் தெளிவாக

இருக்கின்றது. அந்த ஒளி ஒவ்வொருவரது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்பவே கிடைக்கும். ஹஸ்ரத் கைருத்தீன்(ரழி) சாஹிப் தொடர்ந்து கூறுகின்றார்கள்

நமக்கு இல்ஹாம் என்று நாம் எதைக் கூறுகின்றோம்? கஷ்ஃப் என்று எதைக் கூறுகின்றோம்?

உண்மையான கனவுகள் என்பது என்ன? என்பதெல்லாம் தெரியாமல் இருந்தது. இப்போது இறைவனின்

அருளால் இந்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதருடைய கைகளில் எமது கைகளைக் கொடுத்ததால் நமக்கு இல்ஹாம் பற்றிய அறிவு மட்டும் கிடைக்கவில்லை. கஷ்ஃப் பற்றிய அறிவு மட்டும் கிடைக்கவில்லை. உண்மையான கனவுகள் பற்றிய அறிவு மட்டும் கிடைக்கவில்லை. மாறாக, இந்த மூன்றையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ்!

ஆனால் இப்போது இந்த ஜமாத்தின் நிலைமை அந்தே பரிதாபம்!

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...