Skip to main content

30 ஜூன் 2021 புதன்கிழமை அன்று காலை 10.50 மணிக்கு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்களால் பெறப்பட்ட இறைவெளிப்பாடுகள்.

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ 

நான், கலீஃபத்துல்லாஹ், ரசூலுல்லாஹ் என்ற முறையில், தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு எதிரானவன் அல்ல.

அது நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்துகின்ற பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடுவது மிகவும் முக்கியமானது என்பதே எனது கருத்தாகும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை செயல் படுத்துவதற்கு நான் எதிரானவன் அல்ல. அதற்கு மாறாக, இந்தக் காலத்தில் அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியான் என்ற முறையில் உலகம் முழுவதும் அவனது ஏகத்துவத்தை பரப்பி மக்களை முழுமையான இருளிலிருந்தும் அகற்றி இறை ஒளியின் பக்கம் அழைப்பதற்காக

என்னை எழுப்பிய எனது படைப்பாளனிடத்தில் நான் மிகவும் திருப்திக் கொண்டவனாகவும், அங்கீகரித்தவனாகவும் நன்றி யுணர்வுக் கொண்டவனாகவும் இருக்கிறேன்.

இருளில் இருந்து வெளியே வர மக்களுக்கு உதவுவது என்பது எல்லா வகையிலும் அதாவது சிலை வழிப்பாட்டின் அனைத்து வடிவங்களான, போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல், பொறாமை, வெறுப்பு, தகராறு, ஊழல், ஏழை மக்களின் இரத்தத்தைக் கொண்டு தன்னை மேம்டுத்திக்‌ கொள்ளும் பொருட்டு அதிகாரத்தின் மீதான தாகம், ஆணவம், கருமித்தனம், கொடுங்கோன்மை, சூதாட்டம், குற்றங்கள், திருட்டுகள் இன்னும் பல, பட்டியல் மிக நீளமானது, (இவைகள் அனைத்தில்) இருந்தும் அகற்றுவதாகும்.

கம்பியில்லா தகவல் தொடர்பு(wire less) உட்பட தொழில் நுட்பங்களின் இராஜ்யம் வழங்குகின்ற கடைசி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நான் ஆமோதிக்கிறேன்.

இது, இந்தக் கடைசி வகை உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்துகின்ற (அதே) வேளையில், நாம் நிரந்தரமான சங்கடங்களையும் எதிர்கொள்கிறோம்,​​ கம்பியில்லா உபகரணங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள், முகநூலை (ஃபேஸ்புக்) தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உமிழப்படும் (வெளியாகும்) அலைக்கதிர்கள்(waves) குறித்து நமது சொந்த ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளையும் செய்த பின்னர், இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கானதும், நச்சுத் தன்மைக் கொண்டதும், கெடுதியை விளைவிக்கக் கூடியதும் ஆகும் என்று இறைவன் எனக்கு கற்பித்துள்ளான்.

(குறிப்பாக காதுகள், மூளை, நரம்பு மண்டலம் மற்றும் தாம்பத்தியத்தின் மூலம் சந்ததிகள் உருவாவதற்காகவும், அதாவது, கருத்தரிப்பதற்காகவும் இன்னும் நமதுப் பாதுகாப்பிற்காகவும் இறைவன் நமக்கு பரிசாக வழங்கியுள்ள நமது உயிரணுக்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிக்கும்). இறைவன் எனக்கு எதனைக் கற்பித்துள்ளானோ அதனை நான் முழுமையாக நம்புகிறேன்.

பகுதி 2:

கலீஃபத்துல்லாஹ்வே! தயக்கமின்றி எழுந்து நிற்பீராக! இந்த செய்தியை உலகம் முழுவதும் குறிப்பாக உமது ஸஹாபாக்களுக்கு வழங்குவீராக! இந்த இறைச் செய்தியை நிராகரிப்பவர்கள் உண்மையில் உம்மிடம் இருந்து அல்ல, (மாறாக) அல்லாஹ்விடம் இருந்து திரும்பிக் கொண்டவர்கள், உமது படைப்பாளனாகிய என்னிடம் (இருந்தே திரும்பிக் கொண்டவர்கள் ஆவர்)

கவலைப்படாதீர்! மிக விரைவில் நான் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வேன். அல்லாஹ் (ஸுப்ஹான) வின் கடுங்கோபத்தை ஈர்த்துக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வுக்கும் அவனது கலீஃபத்துல்லாஹ்-ரசூலுல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள். எனது நேசத்திற்குறிய கலீஃபத்துல்லாஹ்- ரசூலுல்லாஹ்வின் இதயத்திற்கும், உணர்வுகளுக்கும் ஒருபோதும் ஊறு விளைவிக்காதீர்கள்.

சோதனைகளின் நெருப்பு இங்கு இந்த உலகத்திலும், அதேப் போன்று மறுமையிலும் அவர்கள் மீது ஒளிரப்படும்.

உங்களது முழுமைப் பொருந்திய தந்தையாகிய, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களைப் போன்றே இந்த உன்னதமானக் கடமையைத் தொடர்ந்து உறுதியுடன் நிறைவேற்றுவீராக! உமது இதயத்தின் கண்ணீரைத் தொட்டு (உணர்ந்த) அனைவரோடும் அமைதியாகவும், பொறுமையுடனும் இருப்பீராக!. என் மீது நம்பிக்கை வைப்பீராக!, உமது படைப்பாளன் உண்மையையே கூறுகிறான். அவன் அல் ஹக் ஆவான். இது நான் ஆவேன்! அல்லாஹ், அவனே அவர்களின் கண்களில் இருந்து இரத்தம் வழிந்தால்,(அக்)கண்ணீரை உருவாக்குபவன்.

صبر کرو وقت آنے دو

"ஸப்ர் கரோ, வக்த் ஆனே தோ"

"பொறுமையுடன் இருப்பீராக!,(அதற்குரிய) நேரம் வரட்டும்"

(இறைவெளிப்பாடு காலை 11:25 மணிக்கு முடிவடைந்தது)

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...