Skip to main content

மாநில அளவிலான தப்லீக் கூட்டம் 2023 கோவை

மாநில அளவிலான தப்லீக் கூட்டம் 2023 கோவை

இரண்டாம் அமர்வு 

2.15 மணியளவில்

வல்ல இறைவன் துணையுடன்...

1. ஜனாப். முக்தாருதீன் சாஹிப் கோவை, மாநில நாயிப் அமீர் அவர்கள் தலைமையில்

2. ஜனாப். கலீல் ரஹ்மான் சாஹிப் கோட்டார் அவர்கள் மாநில தப்லீக் செயலாளர் மற்றும்

3. ஜனாப். ஷா நவாஸ் சாஹிப், மாநில பொருளாளர் ஆகியோருடைய துணை தலைமையில்


ஜனாப். நூர்தீன் சாஹிப் அவர்கள் மேலப்பாளையம் திருக்குரான் திலாவத் ஓதினார்கள்

ஜனாப். அனீஸ் சாஹிப் அவர்கள் கோவை, அஹத் (உறுதிமொழி ) வாசித்தார்கள்

ஜனாப். காஜா மைதீன் சாஹிப் அவர்கள் சென்னை நஸம் (கவிதை - ஹமாரே துவா ஸுன்) மிகவும் உணர்ச்சி பொங்க வழங்கினார்கள்.

ஜனாப். நூர்தீன் சாஹிப் அவர்கள் மேலப்பாளையம் திருக்குரான் திலாவத்


ஜனாப். அனீஸ் சாஹிப் அவர்கள் கோவை, அஹத் (உறுதிமொழி)

ஜனாப். காஜா மைதீன் சாஹிப் அவர்கள் சென்னை நஸம் (கவிதை - ஹமாரே துவா ஸுன்)

வரவேற்புரை

ஜனாப். கலீல் ரஹ்மான் மாநில தப்லீக் செயலாளர் வரவேற்புரை வழங்கி நபிமார்கள் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பியல்புகள் சிலவற்றை வழங்கினார்கள்

ஜனாப். கலீல் ரஹ்மான் மாநில தப்லீக் செயலாளர் வரவேற்புரை

உரை

ஜனாப். சதாம் உசைன் அவர்கள் கோவை

"இறைவன் பேசக்கூடியவன்" என்ற தலைப்பில் இறைவன் எப்போதும் பேசக்கூடியவன் என்பதை குரான் ஆதாரத்துடன் எடுத்து கூறி, இப்போதும் அவனது நல்லடியார்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறான் என்பதை யதார்த்தத்துடன், நமது சகோதர, சகோதரிகள் பெற்ற கனவு, கஷப் காட்சிகள் சிலவற்றை உதாரணத்துடன் நீண்டதொரு உரை நிகழ்த்தினார்கள்.

ஜனாப். சதாம் உசைன் அவர்கள் கோவை, உரை - "இறைவன் பேசக்கூடியவன்"

மதியம் 3.30 தேநீர் இடைவேளை

மதியம் 3.45

ஜனாப். சாபீர் சாஹிப் பாலக்காடு கேரளா, அவருடைய இனிமையான குரலில் சிறப்பானதொரு நஸம் வழங்கினார்கள்.

ஜனாப். சாபீர் சாஹிப் பாலக்காடு, கேரளா - நஸம் 

மாலை 4 மணி 

பிற பிரிவு ஜமாத்திலிருந்து வந்திருந்த விருந்தினர்கள் தங்கள் அனுபவங்கள், மற்றும் சந்தேகங்களை தெரிவித்தனர்.

மாலை :4.30

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹமது அஜீம் (அலை) அவர்கள் இந்த கூட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து வழங்கிய சிறப்பான வாழ்த்துறையின் தமிழாக்கம் ஜனாப். சலீம் சாஹிப் மாநில அமீர் அவர்கள் வழங்கினார்கள்.

ஜனாப். ஸலீம் சாஹிப் மாநில அமீர் - கலீஃபதுல்லாஹ் வழங்கிய வாழ்த்துறையின் தமிழாக்கம்

மாலை 4.45

 பையத் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக கோவையை சார்ந்த ஜனாப். ரஃபிக் சாஹிப் அவர்கள், இந்த நூற்றாண்டின் கலீபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்களை ஏற்று, பையத் (உடன்படிக்கை) செய்து கொண்டு, அருளுக்குறிய நூஹ் (அலை) அவர்களின் கப்பலில் பயணத்தை தொடர்ந்தார்கள். வந்திருந்த ஜமாத் சகோதரர்கள் அனைவரும் அந்த பையத் (உடன்படிக்கையை) செய்து கொண்டதின் மூலம் தங்கள் உடன்படிக்கையை புதுப்பித்து கொண்டனர்.

ஜனாப். ரஃபிக் சாஹிப், கோவை - பையத் (உடன்படிக்கை) செய்த நிகழ்ச்சி

துவா மற்றும் முஸஃபா (வாழ்த்து) உடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் தமிழ் நாட்டின் அனைத்து கிளை சகோதரர்களும், கேரளா ஜமாத்தை சார்ந்தவர்களும் இஸ்லாத்தின் பிற பிரிவை சார்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர். வல்ல இறைவனும் அவனுடைய மலக்குகளுடன் இந்த அருளுக்குறிய கூட்டத்தை ஆசீர்வதித்தான். என்ற நம்பிக்கையுடன். நிறைவு செய்தோம். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த மேலான இறை பணிக்காக இரவும் பகலும் அரும்பாடு பட்ட ஜமாத் சகோதர்கள் அனைவருக்கும் வல்ல இறைவன் மேலான நற்கூலியை வளங்குவானாக... குறிப்பாக மாநில அமீர் ஜனாப். சலீம் சாஹிப், கோவை ஜமாத் அமீர் ஜனாப். அப்துல் ரஹ்மான் சாஹிப், ஜனாப். அனீஸ் சாஹிப் மற்றும் ஜனாப். அலாவுதீன் சாஹிப் ஆகியோர் தங்களின் பல பணிகளுக்கு மத்தியில் இறை பணிக்காக அதிக தியாகங்களை செய்துள்ளனர். அவர்களுடைய தியாகங்களை வல்ல இறைவன் ஏற்று கொள்வானாக.. ஆமீன்...

மாலை 5.30

உலகில் எத்தனையோ கூட்டங்கள் அன்றாடம் நடைபெறுகிறது. ஆனால் எத்தனை தடைகள்..., சோதனைகள்.., வந்தாலும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனின் திருப்பொருத்தம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு உண்மை இஸ்லாத்தின் வழியில் ஒன்று கூடிய ஆன்மீக பறவைகள் இந்த செய்தியை எடுத்து கொண்டு... இதே ஆன்மீக தாகம் கொண்ட இன்னும் பல பறவைகளை ஒன்றிணைத்து... மீண்டும் விரைவில் கூட... வல்ல இறைவன் அருள் பிரிவானாக...!!! ஆமீன்...!!! சும்ம ஆமீன்...!!!யா ராப்புளாலமீன்...!!!

வஸ்ஸலாம்.. ஜஸாக்கல்லாஹ்... ஹைர்...

Popular posts from this blog

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன்பு) என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன். அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன். அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன். பிறகு, வாகனங்கள், சொகுசு வாகனங்களும் கூட ஒதுக்கி வைக்கப்படும் ஒரு காலம் வரும் என்றும், அதனால் குதிரைகளும், பிற விலங்குகளும் போக்குவரத்து முறைகளாகவும், அதன் மதிப்பு/முக்கியத்துவம் அதிகரித்து விடும் என்றும் இது குறித்து நான் முன்பே கூறியிருந்தேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். Then, I saw myself in a place where a tall [imposing] and great [in personality] woman in white appeared before me. She was the wife of a great prophet of Allah and was born in Hindustan [India]. Her name was Saraswati but in the dream I addressed her as Hajra [both names] and realised that she was the wife of Hazrat Ibrahi...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.