Skip to main content

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு இறங்கிய இறைவஹீ

அல்லாஹ் (ஸுப்ஹானஹுதாலா) நமக்கு கூறுகின்றான் :

ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாமை சார்ந்த என் அடியார்களே!

உங்கள் இறைவனிடமிருந்து வரும் உண்மை இதுவாகும். இந்த உண்மையை நிராகரித்தவர்களை நினைத்து அச்சமடையவேண்டாம். அவர்கள் மறுப்பாளர்கள். என் விருப்பத்தைப் பெற நீங்கள் எனக்கு மட்டுமே முற்றிலும் அஞ்சிக் கொள்ளுங்கள். என்னுடைய மாபெரும் அருளால் உங்களுக்கு நேர்வழியைக்காட்ட என்னுடையத் தூதர் உங்களிடையே உள்ளார். இன்னும் அவர் உங்களிலிருந்தே வந்துள்ளார். மேலும் உங்களிடையே உள்ள அவர் எமது செய்தியையும், எமது வசனங்களையும், எமது வஹீயையும் உங்களுக்கு அறிவித்து எமது மறைவான ஞானத்தை உங்களுக்குக் கற்றுக்கொடுத்து உங்களைத் தூய்மைப் படுத்துகின்றார். இதற்கு முன்னர் நீங்கள் அறியாமலும் பகிரங்க வழிகேட்டிலும் இருந்தீர்கள்.

மேலும் நான் உங்கள் மேல் பொழிந்த அருளை எண்ணிப்பாருங்கள், எனவே நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள் ஒருபோதும் நன்றிக் கெட்டவர்களாகிவிடாதீர்கள். இன்னும் எனது உதவிக்காக பொறுமையுடனும் துஆ உடனும் இரவும் பகலுமாக துதித்துக் கொண்டிருங்கள். இதில் உறுதியுடன் இருங்கள். நிச்சயமாக நான் உங்களை அச்சம், பசி, ஏழ்மை, உங்கள் குடும்பம் உங்கள் விவசாயம், உங்கள் வேலை மற்றும் உங்கள் சூழல் மூலமாக சோதிப்போம். எவர் பொறுமையுடனும், பயபக்தியுடனும் உறுதியுடனும் இருக்கிறாரோ அவருக்காக எனது மாபெரும் அருளால் என்னுடையத் தூதை அனுப்பி உங்களை நேர்வழிப் படுத்துகின்றேன். எவர் நம்பிக்கைக் கொண்டு அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகின்றாரோ அவரை அல்லாஹ் நேசிக்கின்றான், ஆமீன்.

நாள் - 29.06.2018

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...