Skip to main content

தப்லீக் பற்றி காலத்தின் இமாம் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்!

இன்றைய காலத்தில், முஸ்லிம்கள் என்ற முறையில் நம்மைப் பற்றி நாமே பெருமையாக உணர்கிறோம் என்ற உண்மை இருந்த போதிலும், இந்த மாபெரும் இழப்பை நிறுத்திட நாம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. மறுபுறம், இந்த சூழ்நிலையில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டால், நமது உண்மையான
பணி, நமது வாழ்வின் உண்மையான குறிக்கோள், இஸ்லாத்தை பரப்புதல் ஆகும் என்பதை நம்மால் உணர முடியும்; முஸ்லிம்கள் என்ற முறையில் நமது இருப்பு, நமது வெற்றி, நமது பெருமை மற்றும் நமது இறுதி வெற்றி அதனுள் தான் அடங்கி உள்ளது. ஆனால் (இன்று)அதற்கு நேர்மாறான நிலை இருப்பதும் உண்மையாகும். நாம் இந்த முக்கியமான பணியை புறக்கணிக்கும்போது, நாம் ஒழுக்க ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்து விடுவோம். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி என்னவென்றால் நமது சோம்பேறித்தனம் மற்றும் கடந்த காலத்தில் நாம் செய்த தவறு ஆகியவை குறித்து நாம் உண்மையாக தௌபா (அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு) கோர வேண்டும், மேலும் இந்த தப்லீக்கின் முயற்சியை [பணியை] புதுப்பிக்கவும், அதை நமது முதல் வேலையாக ஆக்கிக் கொள்ளவும் இப்பொழுதே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது மட்டுமே அல்லாஹ்(தபார)வின் அருளும் கருணையும் நம்மீது ஏராளமாக பொழிந்து, இந்த தற்காலிக உலகிலும், மறு உலகத்திலும் நமக்கு வெற்றியையும் மனநிறைவையும் பெற்றுத்தரும் என்று நம்மால் எதிர்பார்க்க முடியும்.

(மற்ற) அனைத்தையும் நமக்குப் பின்னால் விட்டுவிட வேண்டும்-இந்த பணிக்காக வணிகம், தொழில் மற்றும் நமது நேரம் முழுவதையும் செலவிட வேண்டும் என்பது இதற்கு அர்த்தமல்ல: நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த உலகின் பணிகளுக்கு நாம் அதிகபட்ச கவனத்தையும் நேரத்தையும் அர்ப்பணிப்பதைப் போன்று இந்த (அருளுக்குரிய) பணியைச் செய்வதற்கும் நாம் அதிகபட்ச நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் புனிதப் பணியைச் செய்வதற்கு ஒரு குழுவினர் தயாராக இருக்கும்போது, ​​ஏற்கனவே இந்த முயற்சியில் [அதாவது தப்லீக் பணியில்] ஈடுபட்டிருந்த தங்களது வட்டாரத்தில் உள்ள தோழர்கள் அல்லது மற்ற சகோதரர்களுடனும் அவர்களுக்கு தொடர்பு ஏற்படுகின்றது. மேலும், ஒவ்வொரு வாரமும் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுங்கள்.

அடுத்த படி: இந்த பணியைச் செய்பவர்களிடமிருந்து எப்போதும் ஆலோசனையை பெற்றுக் கொண்டு, அவர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று முழு நாட்களையும் அண்டை வட்டாரத்தில் செலவிட வேண்டும். ஆனால் பிறகு இன்ஷா அல்லாஹ் இது கூடிய விரைவில் நடைமுறைப் படுத்தப்படும், அவர்கள் ஒரு மாதம் முழுவதும் அல்லது இன்னும் சிறப்பாக ஒவ்வொரு வருடமும் நாற்பது நாட்கள் தொலைதூரத்தில் இந்தப் பணியைத் தொடர்கிறார்கள். இறுதியாக, இந்த தப்லீக் முயற்சிக்கு, பொருத்தமான சூழலில் வாழ்நாளில் ஒரு முறை, நான்கு முழு மாதங்களையும் செலவிடுவதை நம்மிடம் வேண்டுகிறது. உண்மையான இஸ்லாத்தை கற்றுக் கொள்ளவும் ஷரீஅத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட "வாழ்க்கை வழியை" ஏற்றுக் கொள்ளவும் இந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வழியில், நமது முயற்சிகள் முன்னேறி இறுதியில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள், தொழிலாளி மற்றும் முதலாளி, நகரவாசிகள் மற்றும் நாட்டில் வசிப்பவர்கள், படிக்க முடிந்தவர்கள் மற்றும் படிக்க முடியாதவர்கள்‌ ஆகிய அனைவரையும் சென்றடையும். இப்பணியில் அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்றாக இணைந்து அல்லாஹ்(தபாரக) மற்றும் அவனது திருத் தூதர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) ஆகியோர் கட்டளையிட்ட கூடிய இந்த உண்மை இஸ்லாத்தின் மூலம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.

இன்ஷாஅல்லாஹ் ஆமீன்

ஜுமுஆ பேரூரை 24.06.2022

Popular posts from this blog

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன்பு) என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன். அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன். அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன். பிறகு, வாகனங்கள், சொகுசு வாகனங்களும் கூட ஒதுக்கி வைக்கப்படும் ஒரு காலம் வரும் என்றும், அதனால் குதிரைகளும், பிற விலங்குகளும் போக்குவரத்து முறைகளாகவும், அதன் மதிப்பு/முக்கியத்துவம் அதிகரித்து விடும் என்றும் இது குறித்து நான் முன்பே கூறியிருந்தேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். Then, I saw myself in a place where a tall [imposing] and great [in personality] woman in white appeared before me. She was the wife of a great prophet of Allah and was born in Hindustan [India]. Her name was Saraswati but in the dream I addressed her as Hajra [both names] and realised that she was the wife of Hazrat Ibrahi...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.