Skip to main content

அல் ஹுஜூராத் (புறங்கூறுதல்) எச்சரிக்கை!

“நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள்‌ அதிகமான யூகங்களிலிருந்து விலகிக்‌ கொள்ளுங்கள்‌. ஏனெனில்‌ சில யூகங்கள்‌ பாவமாகும்‌. பிறர் குற்றங்களைத்‌ தேடியலையாதீரகள்‌. உங்களுள்‌ ஒருவருக்கொருவர்‌ புறங்கூறாதீர்கள்‌. உங்களுள்‌ எவராது மரணமடைந்து விட்ட தமது சகோதரரின்‌ மாமிசத்தை உண்ண விரும்புவாரா? (உங்களைக்‌ குறித்து இவ்வாறு கூறப்பட்டால்‌) நீங்கள்‌ நிச்சயமா அதனை வெறுப்பீர்கள்‌ மேலும்‌ அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்‌. அல்லாஹ்‌ அதிகமாகக்‌ கழிவிரக்கத்தை ஏற்றுக்கொள்பவனும்‌, மேன்மேலும்‌ கருணை காட்டுபவனுமாவான்‌. (49:13).

மேலே கூறப்பட்ட திருக்குரான் வசனத்தை மேற்கோள்காட்டிய வர்களாக. ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் 

இந்த அத்தியாயத்தின் மூலமாக அல்லாஹ்‌ நம்பிக்கையாளர்களின்‌ சமூகத்தை அழைத்து, கிப்பத்துக்கு எதிராக

எச்சரிக்கையாக இருக்கும்படி கவனமூட்டுகிறான்‌. நீங்கள் அறிந்தது போலவே, கிப்பத்து என்பதன்‌ அர்த்தம்‌ புறங்கூறுதல்‌, ஒரு நபருக்கு எதிராகப் பேசுதல்‌, அவரது முதுகுக்குப்‌ பின்னால்‌ அதாவது அவர்‌ இல்லாதபோது அவரை மோசமாக சித்தரித்தல்‌ போன்றவையாகும்‌. இத்தகைய நடைமுறையை அல்லாஹ்‌ கடுமையான வார்த்தைகளில்‌ கண்டித்துள்ளான்‌. மக்கள்‌ அவற்றை பற்றி நன்கு உணர்ந்து கொண்டால்‌, அவர்கள்‌ ஒரு போதும்‌ இத்தகைய செயல்களில்‌ ஈடுபட துணியமாட்டார்கள்‌. கிப்பத்‌ என்ற தீமையானது அதாவது பாவமானது, அது உங்களை அதன்பால்‌ ஈர்த்துக்‌ கொள்கிறது. நீங்கள்‌ பலவீனமடைந்து அதில்‌ வீழ்ந்து விடுகின்றீர்கள்‌. அல்‌ ஹுஜுராத்‌ என்ற அத்தியாயத்தைப்‌ பற்றி நீங்கள்‌ நுட்பமாக படித்துக்கொண்டால்‌, அதன்‌ உள்ளடக்கங்களை கண்டு நீங்கள்‌ அஞ்சி நடுங்கிவிடுவீர்கள்‌. அதாவது அல்லாஹ்‌ இறை நம்பிக்கையாளர்களுக்கு எதிராக எதனைக்‌ கொண்டு எச்சரித்துள்ளானோ அதன்‌ காரணமாக நீங்கள்‌ பயந்து விடுவீர்கள்‌

நீங்கள்‌ சூரா ஹூஜுராத்‌தை படிக்கும்‌ போது, அதில்‌ அல்லாஹ்‌ கூறுகிறான்‌.

நம்பிக்கை கொண்டவர்களே!, (யார்‌ மீது ஈமான்‌ கொள்ள வேண்டும்?) அல்லாஹ்வின்‌ மீது நம்பிக்கை, அவனது கட்டளைகள்‌ மீது நம்பிக்கை மற்றும்‌ அவனது அறிவுறுத்தல்கள்‌ மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டவர்கள்‌ யார்‌? அல்லாஹ்‌ உங்களிடம்‌ கூறுகிறான்‌. சந்தேகங்களை தவிர்த்துவிடுங்கள்‌, இதுபோன்ற சந்தேகங்கள்‌, ஐய உணர்வுகள்‌ போன்றவை அதிக பட்சமும்‌ உங்களை பாவங்களின் பக்கம் அழைத்துச் செல்கிறது. இது மிகவும்‌ மோசமான பழக்கமாகும்‌. இதிலிருந்து நீங்கள்‌ விடுபட வேண்டும்‌. உண்மையில்‌ சந்தேகங்களில்‌ சில பாவமாகிறது.

மக்களை மிகவும்‌ சந்தேகிக்கும்‌ தீய பழக்கத்தைக்‌ கொண்டவர்களும்‌ உள்ளனர்‌. இது மிகவும்‌ ஆபத்தானது. பிறரின்‌ தனிப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்ள அவர்கள்‌ அநேக கேள்விகளை முன்வைக்கின்றார்கள்‌. பிறரின்‌ எல்லாவற்றையும்‌ விரிவாக அவர்களுக்கு அறிந்து கொள்ள வேண்டும்‌. அவர்களின்‌ அச்செய்கையானது மிகவும்‌ வேதனை விளைவிப்பதாகும்‌. மேலும்‌ அவர்களின்‌ சொந்த விஷயங்களைப்பற்றி யாருக்கும்‌ தெரியப்படுத்தாமல்‌ கவனித்துக்‌ கொள்கின்றனர்‌. அதே சமயம் மற்றவர்களின்‌ அனைத்து காரியங்களைக்‌ குறித்தும்‌ தெரிந்து கொள்ள அவர்கள்‌ விரும்புகின்றனர்‌.

இவ்வாறு, அவர்கள்‌ மற்றவர்களை உளவுபார்கின்றனர்‌. உளவு பார்த்ததிலிருந்து கிடைத்த தகவல்களை அவர்கள்‌ தங்களுக்கு வேண்டியவர்களிடம்‌ பரப்புகின்றனர்‌. மேலும்‌ அவர்கள்‌ அவ்விஷயங்களை மிகைப்படுத்தி மோசமாக்கி விடுகின்றனர்‌. அதிகாரப்பூர்வமற்ற வழிகளில்‌ தெரிந்து கொண்டதைப்‌ பரப்புவதில்‌ மும்முரமாக பங்கேற்கின்றனர்‌. இவ்வழியில்‌ அவர்கள்‌ மக்களை வெறுப்பு மற்றும் சண்டை சச்சரவுகளின்‌ பக்கம்‌ தூண்டுகின்றனர்‌. சந்தேகம்‌ கொள்வது, உளவு பார்ப்பதோடு ஓர்‌ ஆழமான தொடர்பைக்‌ கொண்டிருப்பதால்‌ இது மிகவும்‌ கொடிய பாவமாகும்‌. மேலும்‌ இத்தகைய மக்கள்‌, சந்தேகம்‌ என்னும்‌ நோய் கொண்ட நபர்கள்‌, உளவுபார்ப்பவர்கள்‌ மிகவும்‌ ஆபத்தானவர்கள்‌.

மற்றொரு புறம்‌, பாருங்கள்‌ ஒரு நல்ல நபர்‌ குளித்து விட்டு சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்வார்‌. அவர்‌ எல்லா வகையான அசுத்தங்கள்‌, தூசி மற்றும்‌ தவறான தீய பரிவத்தனைகளிலிருந்து வெகு தொலைவில்‌ இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும்‌

செய்வார்‌. சுத்தமாக இருப்பதன்‌ மதிப்பை அவா்‌ உணர்ந்திருப்பதால்‌ தன்னை அவர்‌ சுத்தமாக வைத்திருக்கிறார்‌. ஆகவே அது போன்றே நீங்களும் உங்களின்‌ நம்பிக்கையையும்‌ சுத்தமாக வைத்திருக்க வேண்டும்‌. சந்தேகம்‌, உளவுப்பார்வை மற்றும்‌ புறங்கூறுதல்களிலிருந்து நீங்கள்‌ வெகு தொலைவில்‌ இருக்கவேண்டும்‌. உங்களின்‌ முன் ஓதிய சூரா ; ஹுஜுராதின்‌ இவ்வசனம்‌ குறிப்பாக, யாரையும்‌ நீங்கள்‌ புறங்கூறாதீரகள்‌, எவரையும்‌ மோசமாக பேசாதீர்கள்‌ என்பதை நினைவூட்டுகிறது. அதாவது அவர்‌ இல்லாத நேரத்தில்‌ அவருக்கு எதிராகப் பேசாதீர்கள்‌. சந்தேகம்‌, அவநம்பிக்கைப்‌ போன்ற பழக்கங்களை கொண்டுள்ள மக்களும்‌ இருக்கின்றனர்‌. உளவு பார்க்க பழகியவர்கள்‌ மிக விரைவில்‌ ஒரு முடிவுக்கு வருகின்றனர்‌. அதாவது இன்னின்ன விஷயங்கள்‌ நடந்திருக்கலாம்‌ என்று அவர்கள்‌ விரைவான முடிவுக்கு வந்துவிடுகின்றனர்‌.

மேலும்‌ உளவு பார்த்து பழகிய, அந்த வகையான நபர்‌ தனது எல்லா அவநம்பிக்கைகளுடனும்‌, சந்தேகங்களுடனும்‌ தன்னைப் பாவங்களில்‌ மிக ஆழமாக புதைத்துக்‌ கொள்கின்றார்‌. இது மிகவும்‌ ஆபத்தானது. அதனால்தான்‌ தஜஸ்ஸுஸ்‌ (உளவுபார்த்தல்‌) போன்ற தீமைகளுக்கு எதிராக சூரா: அல்‌ ஹுஜுராத்தில்‌ [49 - ம்‌ அத்தியாயம்‌] அல்லாஹ்‌ நமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளான்‌.

இத்தகைய தீமைகளுக்கு எதிராக அல்லாஹ்‌ நம்‌ அனைவரையும்‌ பாதுகாப்பானாக! ஆமீன்‌. அல்லாஹ்‌ உங்களை நேரான பாதையில்‌ நீதியுடனும்‌, தக்வாவுடனும்‌ வழிநடத்திச் செல்வானாக! கிப்பத் மற்றும்‌ அதைப்‌ போன்று இவ்வசனத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள மற்றுமுள்ள அனைத்து தீமைகளிலிருந்தும்‌, திருக்‌குர்ஆனில்‌ குறிப்பிடப்படுள்ள ஒட்டுமொத்த தீமைகளிலிருந்தும்‌ வெகு தொலைவில்‌ இருப்பதற்கு அல்லாஹ்‌ நமக்கு உதவிபுரிவானாக!

இன்ஷா அல்லாஹ்‌ ஆமீன்‌.

ஆதாரம் : 13.9.2019 ஜும்மா குத்பா

தலைப்பு : அல் ஹுஜூராத் (புரங்கூறுதல் )

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...