Skip to main content

மறைவானவற்றின் ஞானம் நபி, மற்றும் ரஸுல்மார்கள் மூலமே கிடைக்கும்!

நபி ரசூல் நம்மிடையே தோன்றாமல் மறைவானவற்றின் ஞானம் எவ்வாறு கிடைக்கும்?

ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்கள் போதிக்கின்றார்கள்:-

எங்களை நேரான பாதையில் நடத்துவாயாக. நீ அருட்கொடை அளித்தவர்களின் பாதையில்.

என்ற வசனத்தின் பொருள் தான் என்ன?(அடிக்குறிப்பு 1 காண்க)

கடந்த காலத்தில் நபி, சித்தீக் ஆகியவர்கள் பெற்றிருக்கும் எல்லா வகையான வெகுமதிகளும் இந்த உம்மத்தும் (முஹம்மதிய்ய உம்மத்) பெற்றுக் கொள்ளும் என்ற வாக்குறுதி இங்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நபித்துவமும், முன்னறிவிப்புகளும் இந்த வெகுமதிகளில் உள்ளவையாக இருக்கின்றன. இதனாலேயே எல்லாத் தீர்க்கதரிசிகளும் நபி என்று அழைக்கப்பட்டார்கள். நபி, ரஸுலை தவிர வேறு எவருக்கும் மறைவான விஷயங்கள் அறிவிக்கப்படுவதை திரு குர்ஆன் நிராகரிக்கின்றது. ஏனெனில்

தான் தேர்ந்தெடுத்த தூதரை தவிர இறைவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை (72:27,28) என்ற வசனத்திலிருந்து விளக்குகின்றோம். எனவே இரகசியத்தின் தெளிவான ஞானத்தைப் பெறுவதற்கு நபியாக வேண்டியது மிகவும் அவசியம். மேலும் அன் அம்த அலைஹிம் (உன்னுடைய அருளைப் பெற்றவர்கள்) என்ற வசனம், இதற்கு சாட்சி பகர்கின்றது. அதாவது இந்த உம்மத் மறைவான விஷயத்தின் தெளிவான ஞானத்தைப் பெறுவதிலிருந்து விலக்கப்படவில்லை என்பதை உணர்த்துகிறது. மறைவான விஷயத்தின் செய்தியை நபியும் ரஸுலுமே பெற முடியும். (ஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது. பக்கம் 12, 13)

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...