Skip to main content

இஸ்லாமிய கடமைகள் பற்றிய புரிதல் - தொடர் -1

ஒரு சகோதரர் இஸ்லாத்தின் கடமைகள் யாவை? என்ற கேள்வியை கேட்டிருந்தார்; அதற்கு சில சகோதர்கள் பதிலும் கொடுத்திருந்தார்கள். இந்த கேள்விக்கு இன்ஷாஅல்லாஹ், மஸீஹ்(அலை) அவர்களின் ஆன்மிக வழிகாட்டல் மற்றும் மிகச் சிறந்த பதிலை நாம் பார்ப்போம்:

இஸ்லாத்தின் கடமைகள் யாது? என்றால் நாம் அனைவரும் ஐந்து கடமைகள் என்று மிக எளிமையாக கூறிவிடுவோம். ஏன்! ஒரு இஸ்லாமியர் அல்லாத பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு கூட அவன் பாட புத்தகத்தில் இவ்வாறு தான் உள்ளது அல்லவா!!

முதலில் நமது எஜமானர் பெருமானார் (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தது என்ன? என்று பார்ப்போம்..

ஸஹீஹுல் புகாரி, ஹதீஸ் எண்: 4347.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் செல்லும்போது, 'வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் சாட்சியம் பகரும்படி அவர்களை அழையுங்கள். இதில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அல்லாஹ் அவர்களின் மீது ஒவ்வொரு நாளும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்.

அன்னார் மிக தெளிவாக தூதரை ஏற்று ஏகத்துவதற்கு வரும்போதுதான் அவர்கள் மீது மற்ற அமல்கள் கடமையாகின்றது. இதை வாக்களிக்கப்பட்ட மஸீஹ்(அலை) பின்வரும் திருகுர்ஆன் வசனத்தை மேற்கோள் கட்டியவர்களாக..,

அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்குமிடையில் வேற்றுமை பாராட்ட எண்ணி மேலும் (தூதர்களுள்) சிலரை நாங்கள் எற்றுக் கொள்வோம் மற்றுஞ் சிலரை நிராகரிப்போம் எனவும் கூறி, இதற்கிடையில் எதேனுமொரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள விரும்புகின்றவர்கள். உண்மையில் இவர்களே முற்றிலும் நிராகரிப்பவர்களாவர். நிராகரிப்பவர்களுக்கு இழிவு படுத்தக் கூடிய ஆக்கினையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். (4:151)

இறைவனையும் சில தூதர்களை நம்பிக்கை கொண்டால் போதும் என்று கூறுபவர்களே! ஒரு தூதர் இல்லாமல் மனிதன் ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதை ஏகத்துவத்தின் இரசியத்தை விளக்கியவாறு அன்னார் கூறுகின்றார்கள் :-

ஏகத்துவம் கற்களில் மறைந்து இருக்கின்ற அந்த நெருப்பை போன்றே வைக்கப்பட்டுள்ளது என்பதே இதில் உள்ள ரகசியம் ஆகும். தூதர், நெருப்பு மறைந்திருக்கும் கல் போன்றவர் ஆவார், அந்த கல்லின் மீது தனது கவனத்தை செலுத்துகின்ற அடியின் மூலமாக அந்த நெருப்பு வெளியில் கொண்டு வரப்படுகின்றது எனவே தூதர் என்ற இந்த கல் இல்லாமல் ஏகத்துவத்தின் நெருப்பு ஏதோ ஒரு உள்ளத்தில் உருவானது என்பது ஒருபோதும் சாத்தியமானது. ஏகத்துவத்தை தூதர்கள் மட்டுமே பூமிக்கு கொண்டு வருகின்றார்கள் அவர்கள் மூலமாகவே இது பெறப்படுகின்றது இறைவன் மறைவானவனாக இருக்கின்றான். அவன் தனது முகத்தை தூதர் மூலமாக காட்டுகின்றான்.

பாருங்கள்!! தூதர் மீது நம்பிக்கை கொள்ளாமல் இரட்சிப்பை எவ்வாறு பெற இயலும்? தூதர் மீது நம்பிக்கை கொள்ளாமல் வெறுமனே ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வதால் என்ன பலன்? "தௌஹீது" என்ற பெயரே காலத்தின் நபி அதாவது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா(ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு கட்டுப்பட்டு நடக்காமல் ஒருபோதும் கிடைக்காது.

எந்த ஒரு நபர் முழுக்க முழுக்க காய்ந்துபோன தௌஹீதின் மீது நம்பிக்கை வைத்து தூதர் இல்லாமல் தன்னிறைவு பெற்றவராக தன்னை கருதிக் கொள்பவர் இறை இரட்சிப்பை பெறாத துர்பாக்கியசாலி ஆவார் என்று அன்னார் நம்மை எச்சரிக்கின்றார்கள்.... இன்ஷாஅல்லாஹ். தொடரும்...

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...