Skip to main content

அருளுக்குரிய ரமலான்!

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

நம்பிக்கை கொண்டோர்களே ரமலான் புனிதமிக்க மாதமாகும். மேலும், இது எத்தகைய மாதம் என்றால் இம்மாதத்தில் தான் அல்லாஹ் சுபஹானஹுதாலா தனது படைப்பினமான மனித குலத்திற்கு எல்லையற்ற மகிழ்ச்சியை வழங்குவதற்கு தொடர்ந்து முயற்சிக்கின்றான்.

மேலும், நோம்பு நம்மை முழுவதும் சுத்திகரிப்பதாகும். இன்னும் இதன் மூலம் அவனின் இருப்பை பற்றியும் அவனின் வெளிப்பாடுகள் எங்கும் நிறைத்திருப்பதை பற்றியும் அறிந்து

கொள்வதற்கான விழிப்புணர்வை உருவாக்க ஒரு சிறந்த வழிமுறையாகும். நோம்பு

நோற்பதால் ஒரு அடியானின் தக்வா (இறையச்சம்) அதிகமாகின்றது. இந்த

இறையச்சமே உண்மையில் ஷைத்தானின் தீய திட்டங்களினால் ஏற்படும் எல்லாவித துன்பகளிலிருந்து அந்த அடியானை பாதுகாக்கின்றது.

அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவருக்கு அவன் ஏதேனும் ஒரு வழியை ஏற்படுத்துவான். அவர் எதிர்பாராத இடத்திலிருந்து அவன் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்விடம் நம்பிக்கை வைப்பவருக்கு அவனே போதுமானவன் நிச்சயமாக அல்லாஹ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவான். அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் ஓர் அளவை நியமித்துள்ளான். (அல்புகரான் 65:3-4)

இன்றைய காலத்தில் அநேக முஸ்லிம்கள் நோம்பு சம்பந்தமாக குறிப்பாக அதை கடைபிடிப்பதன் சம்பந்தமாக ஒரு தவறான எண்ணத்தில் உள்ளார்கள்.

நோன்பாளியாக இருக்க இன்றைய காலகட்டத்தில் இவர்கள் ஒருவிதமான மந்தத்தன்மையுடன் எந்த வேலையும் செய்யாமல் அதிகமான நேரத்தை தூக்கத்தில் கழிக்கின்றனர். தங்களை படைத்த இறைவனாகிய அல்லாஹ்வின் மீது உண்மையிலேயே அச்சம் கொண்டவர்களாக நோம்பை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் இந்த நாட்களில் எப்போதும் உற்ச்சாகமாக திருக் குர்ஆனை ஓதுபவர்களாகவும், குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் தொழக்கூடியவர்களாகவும் மற்றும் இறைவனை அதிகமாக நினைவுகூர்ந்து "திக்ர் செய்பவர்களாகவும் இருப்பர்.

ஆனால், சிலரோ தொழுகைக்குரிய நேரத்தில் மட்டும் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டு தொழுகை முடித்ததும் மீண்டும் தூங்க சென்றுவிடுகின்றனர். இவ்வகையான இரண்டாவது தூக்கத்தினால் இவர்கள் சோம்பேறியாகி அழகிய அமல்கள் மூலம் தங்களை தூய்மைப்படுத்தி அருள் பொழியும் பொன்னான மாதத்தை இழந்து நிற்கின்றனர். இறைவனின் பேரருளில் மகிழ்வதை விட்டு இந்த அருட்கொடையை இழக்கின்றனர். ஒரு நம்பிக்கையாளரை பொறுத்தளவில் ரமலான் மாதம் என்பது முன்பைவிட தீவிரமாக செயல்படும் மாதமாகும். ஏனென்றால், மாதத்தில் அந்த அடியான் உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பதாலும் இன்னும் உணவு

உண்ணும் நேரத்திலிருந்து விடுபட்டு அதிகமான நேரத்தை இறைவழியே செலவிட முடிவதாலும் அதிகமான நேரம் "திக்ரு" செய்வதற்கும், கடமையான வணக்கத்திற்கு

மேல் உபரியான வணக்கத்தில் ஈடுபடுவதற்கும் மிகுதியாக திருகுரான் ஓதுவதற்கும்

நேரம் கிடைப்பதாலும் அந்த அடியான் தனது அகங்காரம், தற்பெருமை மற்றும் தீய நப்ஸ்லிருந்து (கட்டுக்கடங்கா உணர்ச்சிகளிலிருந்து) விடுபட்டு ஒரு சிறந்த மனிதர் ஆகின்றார். மேலும், அவர் முன்பை விட அதிக அடக்கமுடையவராகவும் இன்னும் புறம் பேசுவது அடுத்தவர்களின் குறைகளை துருவித்துருவி ஆராய்வது போன்ற எல்லா விதமான பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான். இந்த வாய்ப்பின் மூலம் தேவை இல்லாத வீண் பேச்சுகளிலிருந்தும் சண்டை சச்சரவுகளில்லிருந்தும் வெறுக்கத்தக்க செயல்களிலிருந்தும் பொறாமை மற்றும் சந்தேகங்களில்லிருந்தும்விட்டு விலகுகின்றான். இந்நாட்களில் நீங்கள் நன்மை செய்வதில் கவனத்தை செலுத்துவதன் மூலம் அந்த ஏக இறைவனிடம் இஸ்திபார் (பாவமன்னிப்பு) கேட்பதன் மூலமும் உங்கள் அனைத்து பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்கும்போது படைத்த உங்கள் இறைவன் உங்கள் நோன்பையும் உங்கள் வணக்கங்களையும் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு பாவமன்னிப்பை வழங்குகின்றான்.

-ஜுமுஆ உரை 11.05.2018

Popular posts from this blog

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன்பு) என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன். அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன். அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன். பிறகு, வாகனங்கள், சொகுசு வாகனங்களும் கூட ஒதுக்கி வைக்கப்படும் ஒரு காலம் வரும் என்றும், அதனால் குதிரைகளும், பிற விலங்குகளும் போக்குவரத்து முறைகளாகவும், அதன் மதிப்பு/முக்கியத்துவம் அதிகரித்து விடும் என்றும் இது குறித்து நான் முன்பே கூறியிருந்தேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். Then, I saw myself in a place where a tall [imposing] and great [in personality] woman in white appeared before me. She was the wife of a great prophet of Allah and was born in Hindustan [India]. Her name was Saraswati but in the dream I addressed her as Hajra [both names] and realised that she was the wife of Hazrat Ibrahi...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.